நெய்வேலி பாரதிக்குமாரின்   மனித வலியுணர்த்தும்  எழுத்துகள்

This entry is part 20 of 20 in the series 29 ஜனவரி 2023

எஸ்ஸார்சி ’நட்சத்திரங்களைத்துணைக்கு அழைப்பவள்’ என்னும் சிறுகதை நூல் நெய்வேலி பாரதிக்குமார் ஆக்கத்தில் வெளிவந்துள்ளது.  கதை சொல்லும் நேர்த்தியில்  பாரதிக்குமாரின்  சிறுகதைகள் வாசகனை நெகிழ்ச்சியுற வைக்கின்றன.  பாரதிக்குமார் தமிழகத்தின்  பல்வேறு  இலக்கிய அரங்குகளில் தனது இலக்கியப்பங்களிப்புக்காகப் பாராட்டப் பட்டுள்ளார். அவர் தொடர்ந்து  எழுத்துலகில் சாதித்துக்கொண்டிருப்பவர். வெற்றியாளர்.  பாரதிக்குமாரின் ‘நடசத்திரங்களைத்துணைக்கழைப்பவள்’ 23 சிறுகதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பு. இதனை இருவாட்சி( இலக்கியத்துறைமுகம்) பெரம்பூர் சென்னை11 வெளியிட்டுள்ளது. இந்நூலை  தனது சகோதரர்  குறியாமங்கலம் செல்வத்திற்கும் திருமதி மீனாட்சி செல்வத்திற்கும்  பாரதிக்குமார் சமர்ப்பித்துள்ளார். தனது வாழ்வில் அரிய மகிழ்வான நெகிழ்வான தருணங்களை உருவாக்கித்தந்தவர்கள் அவர்களே என்று எழுத்தாளர்,  வாசகர்க்கு அறிவிக்கிறார்.  பின்புலமாகி […]

வேரில் பழுத்த பலா

This entry is part 19 of 20 in the series 29 ஜனவரி 2023

குரு அரவிந்தன் வீடு வெறிச்சிட்டுக் கிடந்தது. காலையில் எழுந்து நிலானி பள்ளிக்குச் சென்று விட்டாள். செல்லும்போது ஓடி வந்து வழமைபோல கட்டி அணைத்து முத்தம் தந்துவிட்டுச் சென்றாள். உடம்பு வளர்ந்து விட்டதே தவிர மனசளவில் எந்தவொரு கவலையும் இல்லாத குழந்தையாகவே இருந்தாள். தெளிந்த நீரோடையாய் நகர்ந்த எங்கள் குடும்ப வாழ்க்கையில் சிறு தடுமாற்றம், காரணம் சென்ற வாரம் மகள் வயதிற்கு வந்து விட்டாள் என்ற உண்மைதான். கற்பனை உலகிலிருந்த என்னை நிஜவாழ்க்கைக்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருந்ததும் […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4

This entry is part 18 of 20 in the series 29 ஜனவரி 2023

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் […]

தேர் வீதியும் பொது வீதியும்…

This entry is part 17 of 20 in the series 29 ஜனவரி 2023

செந்தில்… சந்தைக்குப் பல வழிகள்… தனியார் கடைப் பொருளுக்கு  பொது வீதியன்றி… வேறுவழியில்லை… சன்னிதானத்திற்க்கு ஏது வழி? எதற்க்காக இத்தனை வழிகள்? தெற்க்கு வீதி, வடக்கு வீதி, கிழக்கு வீதி, மேற்கு வீதி…சந்தை களைகட்டுகிறது…கோவில் சன்னிதானத்திற்க்கு செல்லும் வழிகள் ஆயினும்… கடை விரித்தும்கருத்துளம் கொள்வாரின்றிசந்தை விட்டு சயனக்கிரகம் வீற்றிருக்கும்உண்மைப் பொருள் ஓங்குயர்பெருமாள் நோக்கிதான்  நகரும் எவ்வழியும்.. தனி வழி ஏதும் இல்லைவைகுந்தப் பெருமாளுக்கு என்றுணர்த்தத்தான்இப்படி பலப்பல பொது வழிகள்… உண்மைக்கு ஏது ஒரு வழி…படிகள் இல்லா உலகிற்க்குதிசைகள் இல்லா […]

நித்தியகல்யாணி

This entry is part 16 of 20 in the series 29 ஜனவரி 2023

அமீதாம்மாள் மகள் வீட்டில் எல்லாருக்கும் கொரொனா விமானத்தைத் தவறவிட்டு தவிக்கிறான் மகன் தைவானில் மனைவி தாலிக்கொடியில் தாயத்தைக் காணோம் இலக்கியப் பரிசுக்கு என் நூல் தேர்வு இணையத் திருட்டில் என் இரண்டாயிரம் காணோம் பள்ளியில் விபத்தாம் மருத்துவமனையில் பேத்தி நன்கொடைக்கான என்நூல் வெளியீட்டில் பத்தாயிரம் திரண்டது மாத்திரை போதாதாம் சர்க்கரைக்கு இனி இன்சுலினாம் கிழிபட்டு கிழிபட்டு தைக்கப்படுகிறது வாழ்க்கை வாசலில் நித்தியகல்யாணி எல்லாநாளுமே புதுப்புதுப் பூக்களால் சிரிக்கிறது

சருகு

This entry is part 15 of 20 in the series 29 ஜனவரி 2023

முரளி அகராதி காய்ந்து உதிர்ந்ததால் சருகுகள் சவமாய் காற்றினால் காதல்வயப்பட்டு கடத்திச் செல்லப்படுவதாகவே உயிர்பிக்கப்படுகிறது

முத்தப் பயணம்

This entry is part 14 of 20 in the series 29 ஜனவரி 2023

முரளி அகராதி நெடுநேரம் கொண்ட முத்தத்தில் கணநேரம் யோசிக்கலானேன். இப்படியே இருந்த இடத்திலே வெகுதூரம் பயணிக்கலானோம். இலக்கில்லை என்றறிந்தும் வழிமறக்க வகைசெய்யக் கூடும். இறுதிவரை வழி தேடியே நிதம் வாழ வேண்டும்.

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?

This entry is part 13 of 20 in the series 29 ஜனவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா ஆப்பம் சுட்டுத் தின்ன முதலில்  அகிலம் ஒன்று உருவாக வேண்டும். எப்படித் தோன்றியது நமது அற்புதப் பிரபஞ்சம் ? தற்செயலாய் உண்டானதா ? தானாய்  உருவாக வில்லை யா ? சூனியத்தில் வடிவாக வில்லை, நியூட்டன் புற இயக்கி முடுக்க கரும் பிண்டம், கருஞ்சக்தி இருந்தன மறைவாய். பூகோளம்.  சூரிய மண்டலத்தில் பயிரினம் விளைந்திடவும் உயிரினம் உருவாக பூமி மட்டும் ஏன் சீராக அமைப்பானது காரண நிகழ்வு நியதியால். பூரணத் திறனுடை மானுடம், பூமியில் மட்டும் தோன்றியது […]

புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்

This entry is part 12 of 20 in the series 29 ஜனவரி 2023

நோயல் நடேசன் கவிஞர் இந்திரனது  ‘தமிழ் அழகியல்’ ‘புத்தகத்தைப் படிக்கும் வரை நான் தமிழில் அழகியலை முழுமையான  ஒரு பகுதியாகச் சிந்திக்கவில்லை . ஆனால் , உலகத்தின் பல வசதியான  நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்தாலும் துபாயில் உள்ள நட்சத்திர விடுதிகள்தான்  என்னைக் கவர்ந்தன.  அதற்கான காரணத்தை யோசித்தேன்.  அரேபியா இஸ்லாமியர்களிடம் எப்பொழுதும் இன்ரீரியரர் டிசையின் ( interior design)  நன்றாக இருந்தது. உருவங்கள் அற்று அவர்கள் சிந்திப்பதாலோ? தெரியவில்லை. அதேபோல் லண்டனில் உள்ள  கட்டிடங்களுக்கும் பாரிசில் உள்ள […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் வெளியீடு- அறிக்கை

This entry is part 11 of 20 in the series 29 ஜனவரி 2023

அன்புடையீர்,                                                                                          9 ஜனவரி 2023       சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் 22 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: ’தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள்’ – புத்தக அறிமுகம் – எஸ்ஸார்சி ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு– தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்-10] நேரம் எனும் கள்வன் – உத்ரா இந்தியாவும், சீனாவும் – நட்பும், பிணக்கும்– ஒரு அரிசோனன் (சீனா-சீனா தொடர்- பாகம் 2) உத்தரகாசி– லதா குப்பா […]