பூமி உருவான ஆரம்ப காலங்களில் காடு மிகவும் வேறுபட்டு காணப்பட்டது. முதல் மனிதர்களுக்கு உண்பதற்கு வெறும் இலைகளும் நாவற்பழங்களும் மட்டுமே கிடைத்தன. அகௌடி காட்டின் நடுவிலே நடந்து சென்றான். அவன் மிகவும் ருசியான வித்தியாசமான உணவினைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனாலும் அவனுக்கு இலைகளும் நாவற்பழங்களை விட்டால் வேறெதுவும் கிடைக்கவில்லை. அன்று அவன் எவ்வளவு தூரம் நடந்து இருப்பான் என்று சொல்ல முடியாத அளவு வெகு தொலைவு நடந்துவிட்டிருந்தான். அன்று அவனுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அவன் […]
ஜாசின் ஏ.தேவராஜன் ” அம்மா!” என்னவோ சொல்ல வந்த மேனகா சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள். “என்னது? என்னவோ சொல்ல வந்து,பட்டுனு நிறுத்திட்டே? விசயத்தச் சொல்லு…” தங்கம்மா அன்பு ததும்பக் கேட்டாள். ” ஒன்னுல்லம்மா… நீங்க தனியா சிரமப்படுறீங்களே…நான் கொஞ்ச நாளைக்கு எங்கேயாவது வேலைக்குப் போகலாம்னு நினைக்கிறேன்.போனா…உங்களுக்கும் ஒத்தாசையா இருக்குமே…!” சொன்னால் தன் அம்மா ஒத்துகொள்ள மாட்டாளென்று மேனகாவுக்குத் தெரியும்.இருந்தும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. தங்கம்மா அவள் முகத்தைப் பார்த்தாள்.`ஏம்மா…இப்படியொரு முடிவுக்கு வந்தே?’என்ற கேள்வி அங்கே தொக்கி நின்றாலும்,அவள் […]
இந்த வழ்க்கையை வாழ்ந்து தீர வேண்டியிருப்பதால் கட்டிலில் காட்சிப் பொருளாய் நான்…மக்கள் என்னைப் பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அவர்களின் கழுத்தைப் பார்க்கிறேன். இல்லை; அது இல்லை. ஐயோ… அது வேண்டும். கட்டாயம் வேண்டும். எப்படிச் சொல்வது? புரிந்து கொள்வார்களா? அவர்களுக்குச் சொல்ல என்னிடம் நிறைய இருக்கிறது. என் கண்கள் அவர்களைப் பார்த்து ஆயிரமாயிரம் பேசுகின்றன. அவர்கள் என் பார்வைக் குத்தலிலேயே நான் சொல்ல நினைப்பதையெல்லாம் உணர்ந்து கொண்டிருப்பார்கள். நினைவுகளின் ஆழத்தில் விழுவதும் பின் எழுவதுமாக இருக்கிறது என் கவனத்தவளை. […]
எரிக் நோவா 44. வெள்ளித்தகடுபோல பிரகாசித்த நீரில் தூரத்தில் இரண்டொரு படகுகள் தெரிந்தன. அவை நிற்கின்றனவா போகின்றனவாவென்று சொல்வது கடினம். ஒரு படகுக்கு மேலே கூட்டமாகக் சாம்பல்நிறக் கடற் காகங்கள். அவை எழுப்புபிய ஒலிகள் காற்றில் கலந்திருந்தன. பறவைகளில் ஒன்றிரண்டு படகைத் தொடுவதுபோல சறுக்கிப் பாய்ந்தன. பின்னர் விரட்டப் பட்டவைபோல மேலே ஏறவும் செய்தன. எந்திரப்படகொன்று வடக்கிலிருந்து தெற்காக கரைக்கு வெகு அருகில் கடந்துபோனது. அதிலிருந்த ஒருவன் கைகளை அசைத்தான். பதிலுக்கு நானும் கை அசைக்கலாமாவென்று உயர்த்தியபொழுது […]
ராஜேந்திரன் மறுபடியும் காணாமற் போய் விட்டான். அவன் அடைக்கப் பட்டிருந்த காப்பகத்தில் ஏதோ கவனக் குறைவு. இதைக் கேள்விப்பட்ட காரணமோ என்னவோ குறித்த நேரத்தில் அன்றைய முக்கியமான வேலைகள் முடிக்க முடியாமற் தள்ளிப் போயின. இது அவள் இயல்பே இல்லை. இன்னொருவரின் செயலோ செயலின்மையோ தன்னுள் எதிரொலிப்பதை அவள் அனுமதிப்பதே இல்லை. மதியத்துக்குப் பின் எல்லா வேலைகளையும் ரத்து செய்யச் சொன்ன போது உதவியாளர் “உடம்பு சரியில்லையா?” என்ற போது மட்டும் இயல்பாக அவளை முறைக்க இயன்றது. […]
(சூரியன் தோன்றி ஒளி வீசுவதை பிராசில் காட்டில் வாழும் கமயுரா மக்கள் பழங்கதையாக கூறிவது) உலகம் உருவான ஆரம்ப காலத்தில், காடு ஒளியில்லாமல் இருண்டு இருந்தது. சூரியனின் தங்கக் கதிர்கள் மரங்களின் மேல் இருந்த பறவைகளின் ராஜ்யத்தில் சிக்கிக் கொண்டன. மக்கள் இருளிலேயே எழுந்து இருளிலேயே தூங்கச் சென்றனர். தங்களைச் சுற்றி இருப்பவர்களைக் காணவும் முடியாது தவித்தனர். சூரியக் கடவுளை ஒளி தரக் கேட்டு தினம் முறையிட்டனர். ஒரு நாள் “இது நல்லதல்ல.. என்னுடைய ஒளியை எல்லோரும் […]
கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’ என்று உறுதி எடுத்துவிட்டான். ஆனால் ராமனைப் பெற்றவுடன் கௌசல்யா இறந்துவிடவே கௌசல்யாவின் தந்தையே வற்புறுத்தி கேதகியை (இரண்டாம் மகளை) மணமுடித்து வைத்தார். அவளுக்கு பரதன் பிறந்தான். மூன்றாம் மகள் சுமத்திரையும் திருமணமாகி புகுந்தவீடு போனாள். அவளுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தபோது அவளும் இறந்துவிடவே எல்லாப் பிள்ளைகளும் தசரதன் கேதகியிடமே வளர்ந்தார்கள். தசரதனின் முன்னோர்களுடைய ஆஸ்தியான […]
”என்னா துணிச்சல் அந்த பொம்பிளைக்கு.. ராத்திரி 10 மணிக்கு டெம்ப்போ வண்டீல ஏறிக்கிட்டு எவனோடயோ வரா… இவள்ளாம் ஒரு பொம்பிளையா…” “அண்ணே… அந்தம்மா வண்டியில நூலு பைய ஏத்திக்கிட்டு அலைஞ்சு, திரிஞ்சு வருது பாவம்….அதப்போயி…” “என்னடா பேசுத..நீ.. நம்ம சாதி சனம் என்ன பேசும்.. தனியா ஒரு பொம்பிளை இப்புடி சுத்திப்புட்டு வந்தா..” “அண்ணே..போதும்னே…நிப்பாட்டுங்க…. அந்த அக்கா வந்துடப்போவுது பாவம்.. காதுல கேட்டா விசனப்படும்” “ என்னடா.. சொம்மா ஃபீலிங்க் […]
வாசலில் பைக் சத்தம் கேட்டு, ரவி, படித்துக்கொண்டிருந்த நாவலை விரித்த நிலையில் குப்புற மேஜை மீது வைத்துவிட்டு எழுந்து சென்று கதவு திறக்கையில், மஞ்சு, மகேஷின் பைக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். பைக்கின் ஹெட்லைட் ஒளிவீசிக்கொண்டிருந்ததில், எதிர் வீட்டு வாசலில் சடகோபனும், அவர் பையன் சுந்தரும், மனைவி வசந்தியும், மகள் வினோதினியும் நின்றிருந்தது தெரிந்தது. சடகோபனும் அவர் மனைவியும் எப்போதும் போல் சினேகமாய் சிரித்தார்கள். “ஹாய், ரவி” “ஹாய் மகேஷ், பாத்து ரொம்ப நாள் ஆச்சு. எப்படி இருக்கீங்க?” […]
1939 ஜனவரி 29 வெகுதான்ய தை 16 ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழை ரயிலடியே அதிசயித்து நிற்க நடேசன் ரயிலேறினார். யாராக்கும் புள்ளிக்காரன், ராஷ்ட்ரியக் காரனோ, மதராஸியிலே வல்ல சம்மேளனம் ஏதும் ஒத்து சேரும் பரிபாடியோ? அம்பலப்புழ நீலன் வக்கீலோட குமஸ்தன். வக்கீல் குமஸ்தன்மாரே, வரூ, நமக்கும் உக்ரனாயிட்டு ஒரு ஹர்த்தால் நடத்தலாம் என்று அஜெண்டா குறிச்சு ஆளனுப்பி வரவழைத்திருப்பார்கள். பாண்டிப் பிரதேச ஜனங்களுக்கு இதெல்லாம் சுபாவத்தில் இல்லாத விஷயம். இங்கே இருந்து அங்கே ஒண்ணும் ரெண்டுமாகப் போய்ச் சேர்ந்த […]