அது சம்பவித்துக் கொண்டிருந்தது அருகிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்தேன் உடல் கிடத்தி வைக்கப்பட்டு உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிடியை இழக்க அது சம்பவித்துக் கொண்டிருந்தது அது சம்பவித்து முடிவதில் ஏதோ ஓர் எதிர்ப்பு இருப்பதாக என்னால் உணர முடிந்தது எனினும் அது கால்களின் விரல்களில் துவங்கி மேல்நோக்கி கைப்பற்றிக்கொண்டே செல்வதற்கான அடையாளங்களைக் காண முடிந்தது அது கடந்து சென்ற வழியெல்லாம் நரம்பு நெகிழ்ந்து அசைவிழக்க உஷ்ணம் குறையத் தொடங்குவதைக் குறிக்கத் தவறவில்லை நான். மரணப் படுக்கையில் பார்வை பிரத்தியேகமானது […]
பவள சங்கரி. உடலோடும் உணர்வோடும் விளையாடுவதே வாடிக்கையாகப் போய்விட்டது. சூடுபட்ட பூனையானாலும் சொரணை கெட்டுத்தான் போய்விடுகிறது. மடிமீதும் மார்மீதும் கையணைப்பினுள்ளும் தஞ்சம் புகுவதே வாடிக்கை.ஆகிவிடுகிறது. வெட்கமுமின்றி துக்கமுமின்றி தேடித்திரிதலே அன்றாடப் பிழைப்பாய் இருக்கிறது. எவர் கொடுத்தாலும் மறுக்க இயலாத ஏழ்மையாகிவிடுகிறது. உண்ணும்போதும் உறங்கும் போதும் கூட பிரிய மனம் மறுக்கிறது. நம்மையே நையப்புடைத்தாலும் விட்டு அகல முடியாமல் தவிக்கிறது உள்ளம். ஓங்கி ஒலித்தாலும் இதமாக வருடினாலும் தாங்கிப் பிடிக்கிறது தன்னையே. வண்ணங்களும் எண்ணங்களும் வேறுவேறாய் ஆனாலும் அகல […]
தாகூரின் கீதப் பாமாலை – 2 புண்பட்ட பெருமை மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வசந்த காலம் நழுவிச் சென்ற அந்த நாட்களில் எந்தப் பாட்டும் பாட வில்லை. பகற் பொழுதுப் பூக்கள் உதிர்வுடன் போகுல்* மரங்களின் பூமி விரிந்த போது பூக்கள் மலர்ச்சிக்கு இறுதிக் காலம் வருவ தென்று ? இந்த வசந்த காலத்தில் மல்லிகை விழித்தெழ வில்லையா ? தேன் அமுது உறிஞ்சித் தேனீக்கள் ரீங்கார […]
உலகத்தின் உயிர்ப்புக்களில் எழுப்பப் பட்டு விடுகின்ற போலிகளுக்கு நிஜங்கள் தோற்றுப் போகும் மனங்களெல்லாம் நிச்சயம் பிணம்தான். புத்தி மந்தமாகிப் போய் சோகமே உருவாகி எதுமேயின்றி வெறுமைக்குள் வறுமைப் படுத்தப் பட்டு கல்வியெல்லாம் அகற்றப்படும் அநத நாள் வருமே அது பற்றியதான பயம் எனக்கிருக்கிறது. “கொலைகள் மலிந்த காலம் வரும்” அப்போது இவ்வுலகம் மாறும். வாழ்வியலின் பிணைப்புக்குள் உருட்டப் பட்டு சின்னக் கைகளுக்குள் சிக்கி விடுகின்ற பொழுதுகள் பற்றியதான அச்சம் என்னை மேலும் அச்சப்படுத்துகிறது. அந்த நாள் வருடம் […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். […]
வித்தொன்றை சிதைத்துப் பார்த்தேன் எதுவும் இல்லாமல் போனது… இன்னொன்றை மண்ணுள் புதைத்துப் பார்த்தேன் மரமாக வந்து கதை பேசியது… இலைகளையும் பூக்களையும் உனக்குள் எப்படித்தான் சுமந்தாயோ என்றேன்.. மண்ணைப் போட்டு மூடினாலும் உன்னை மீறி வரும் சக்தி எங்கே என்றேன்… மறுபடியும் வித்தொன்றை சிதைத்தொருக்கால் பார்த்தேன்… மாய வரம் ஏதேனும் அங்குள்ளதுவா தேடினேன் – “வித்திலைகள்” மட்டும் தான் எனைப் பார்த்து முறைத்தன…., மற்றதெல்லாம் எனை விட்டு என் கண்ணை மறைத்தன… பூவின் நிறமேதும் அங்கு இல்லை.., […]
எழுதாமல் பல பக்கங்கள் காலியாகவே இருக்கின்றன. எழுதுவதற்காக இருந்தவன் எழுதாமல் போனதால் பலன் பெற்றனவோ அந்தப் பக்கங்கள். எழுதுபவன் எழுதாததால் வெள்ளை உள்ளத்துடன் வெற்றிடம் காட்டி விரைந்து அழைக்கிறதோ அந்தக் காகிதப் பக்கங்கள். காகிதத்தின் மொழி அறியாமல் காகிதத்தில் எழுத முயல்கையில் எங்கோ இருந்து வந்தக் காற்று காகிதத்தை அடித்துப் போயிற்று. காற்று அந்தக் காகிதத்தில் தன் கவிதையைக் கொட்டி கொட்டி உரக்கப் பாடியது. நிச்சயமாக அந்தக் காகிதம் காற்றின் கவிதையில் காலம் முழுவதும் நிறைந்திருக்கும். குமரி […]
கிளைகளுக்கு நீரூற்றிக்கொண்டே வேர்களை வெட்டியெறியும் ஒரு தோட்டக்காரன்! மனச் சருகு மிதிபடும் சத்தம் இரும்புச் சப்பாத்துக்களின் செவிகளை எட்டவேயில்லை! கெல்லிக் கெல்லி – என் கணுக்களைச் சிதைக்கிறாய் – மீள உயிர்த்தலைத் தவிர்த்திடும் நஞ்சினைப் புதைக்கிறாய்! கொத்திக் குதறும் – உன் மண்வெட்டிக் கைப்பிடிக்கு எந்தன் முதுகெலும்பையே இரவலாய்க் கேட்கிறாய்! காதலின் கருணையின் காணிக்கை என்று சொல்லி – என் நாளையை, வாழ்தலை கனவுகளைப் பறிக்கிறாய், நீ ! சுவர்களை, மதில்களை உயரமாய் எழுப்பியோர் இருள்வெளிக் குகையுளெந்தன் […]
இத்தனை தூரம் கவிதையற்று வந்தவன் மனதில் தீக்குச்சி உரசிய சிரிப்பில் நீ விதைத்த வார்த்தைகள் வனவாச காலத்து முடிவைச் சொன்னது. கழைக்கூத்தாடியின் கவனமாய்ப் பின்னிய வார்த்தைகள் கொண்டு எழுதாமலேயே போன அந்தப் பத்தாண்டுகளின் சூன்யம் ஞாபகத் துளைகளில் வழிகிறது. காலத்தின் மிரட்டல் கேட்டு வாழ்க்கைக் காட்டில் பயணமே உறைந்திருந்தது. இளமையின் வாசலில் காத்திருந்த கேள்விகளில் நெஞ்சக்கூட்டினுள் ஸ்னேகம் சுமந்து நின்றதில் நினைவே மிச்சம் என்றாலும் எனக்குள் திரும்பிய கவிதை அரும்புகள் வாடிப்போயிருக்கவில்லை. முகவரி தொலைத்த காலப்புறாவின் கால்களில் […]
போகும் வழியில் புரிந்து போனது.. சமுதாயம்..ஜனநாயகம்.. சமத்துவம்..கற்றுத்தந்தது.. வழியிலொரு ஆலமரம்..! சுமை தாங்கும் நிம்மதியில் தான்.. எத்தனை விழுதுத்தூண்கள்..! மரத்தின் விழுதுகளா…? அத்தனையும் மதவிழுதுகள்… தாங்குகிறது இந்தியா..! நடுப்பரப்பை பிடிக்கவென்றே… பறவையாய் விரித்தது கிளைகள்.. அத்தனையும் சாதிக்கிளைகள்… விழுதுகளை தாங்குமா….கிளைகள்..? மரத்தின் நடுமுதுகில்… எதையோ…எதிர்த்து கொத்திவிடும் மரங்கொத்தி… பொந்துக்குள்ளே .புதையலாய் நாகம்..! ஊரஊர தேயாத பாதை நீ…! கலவரக் கட்டெறும்பின் கட்டாயப் படையெடுப்பு..! கிளைகொன்றாக… வண்ணக் கொடிகள்.. தாவும் குரங்குகள் சண்டையிட்டு விளையாட ஊழல் அரசுகள்… வந்துபோன […]