நாடகம் – ஸ்தீரி பருவம்-   அ. மங்கை.

This entry is part 1 of 8 in the series 4 ஏப்ரல் 2024

ஜெயானந்தன். அ.மங்கையின் புதிய நாடகப் படைப்பாக “ ஸ்தீரி பருவம், மலர்ந்துள்ளது. போரின் கொடூரத்தையும், பேரழிவையும் பெண்களின் பார்வையில் பார்க்கப் படுகின்றது. மகாபாரத்தின், ஸ்தீரி பருவத்தின் காட்சிகளை மேடையின் பின்புறத்தில் டிரஸ்கி மருதுவின் கைவண்ணத்தில் ஓவியங்களாக அமைத்து, நாடக நடிகர்கள் உடைகள் வெண்மையில் கொடுத்துள்ளனர். அமைதிக்கான நிறமாக வெண்மையே ஓளிரட்டும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்பதே , மங்கையின் எண்ணமாக தெரிகின்றது. மகாபாரதப்போர், இன்னும் முடியவில்லை. அது ஈழப்போராக, உக்ரைன்-ரஷ்யப் போராக, இஸ்ரேல்- காஸா போராக தொடர்கின்றது என்று சொல்லும், […]

தமராகித் தற்றுறந்தார் வாழி!    

This entry is part 2 of 4 in the series 25 பிப்ரவரி 2024

                                       சோம. அழகு       வயதாக வயதாக (ரொம்ப ஒண்ணும் இல்ல… ஒரு 32 தான்!) வாழ்க்கை பற்றிய… அதாவது மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டமே மாறுகிறது. மகிழ்ச்சி, நிறைவு, நிம்மதி போன்றவை புதிய இலக்கண மாற்றம் பெறுகின்றன. யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கிறது என்பதை விட யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கவில்லை அல்லது யாரையெல்லாம் நமக்குப் பிடிக்கவில்லை என்பது நம்மை இன்னும் தெளிவுற வரையறுப்பதாக அவதானிக்கிறேன். ஏனெனில் நம் மீது உமிழப்படும் வெறுப்பிற்கான காரணங்களும் அக்காரணங்களை நமக்கெதிரான பதாகைகளாக உயர்த்திப் […]

ஒருவருள்  இருவர்

This entry is part 3 of 4 in the series 7 ஜனவரி 2024

ஆர் வத்ஸலா அடிப்படை மரியாதை அதீத புரிந்துணர்வு பொறுப்புணர்வு மன முதிர்ச்சி என ஒரு நல்ல மருத்துவருக்கு உரித்தான அனைத்து குணங்களையும் கொண்டிருக்கிறாய் நீ உனது பணியிடத்தில் வீடு திரும்பியதும் வெள்ளை கோட்டுடன் அவற்றையும் மாட்டிவிடுகிறாய் ஆணியில்

நாவல்  தினை              அத்தியாயம் நாற்பத்துநாலு பொ.யு 5000

This entry is part 3 of 6 in the series 17 டிசம்பர் 2023

                                                             பூர்த்தி விடிந்தபிறகு தான் கரப்புகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. கிட்டத்தட்ட முழு இனப் படுகொலை.  அரசாங்கத்தில் வெவ்வேறு நல்ல பதவிகளில் இருக்கும் மூத்த,  நிறம் மங்கிய கருப்புகள்  அரண்மனை வாசலில் பழைய மோட்டார் வாகனங்களின் சக்கரங்கள் முன்னும் பின்னும் நகர நசுக்கப்பட்டு ரத்தவாடையோடும் தசை நாற்றத்தோடும் தெரு முழுக்க அங்கங்கே சாணகம் போல் ஒட்டியிருந்தன. வீடுகளுக்குள் இருந்து இழுத்து வரப்பட்ட கரப்பு இனப் பெண்கள் விஷவாயு சுவாசிக்க வைக்கப்பட்டு உடல் முறுக்கி இறந்தன. பள்ளிகளுக்குள் […]

புவி மையத்து அணு  உலை எரிமலை, பூகம்பம் எழுப்புகிறது

This entry is part 1 of 3 in the series 10 டிசம்பர் 2023

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் மையத்தில்அசுர வடிவில், பூர்வஅணுப்பிளவு உலை ஒன்று இயங்கிகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருக்கருவை இடையே மீள்பெருக்கும்வேகப் பெருக்கி அணு உலை !உட்கரு உள்ளேகட்டுப் பாடுடன் இயங்கியும்நிறுத்தம் அடைந்தும்விட்டு விட்டு வேலை செய்வது !வெளிக் கருவிலேகனல் குழம்பைச் சமைத்துக்கொதிக்க வைக்குது !  கனல் குழம்புகுவல யத்தைக்குத்தூசி போல் குடைந்துபீறிட்டெழும் எரிமலைகள் !தாறு மாறாய்ஏறி, இறங்கி ஊர்ந்திடும்தாரணியின் குடல் தட்டுகள் !அங்கிங் கெனாதபடிபொங்கிப் பீறிடும்பூதக் கனல் […]

நாவல்  தினை        அத்தியாயம் நாற்பத்துமூன்று  பொ.யு 5000

This entry is part 2 of 3 in the series 10 டிசம்பர் 2023

   வானம்பாடியின் பயோ தொலைபேசி உள்ளங்கையில் அழைத்தது. காலை நான்கு மணிக்கு குழலனின் அழைப்பு அது.  அவனோடு பேசாமல் இரண்டு நாட்கள் அவளுக்கும் குயிலிக்கும் கடந்திருக்கின்றன. எல்லாம் குயிலியும் வானம்பாடியும் ஒரு வாரமாகக் கட்டில் பகிர்ந்து கொண்டதை குழலன் பகடி செய்த பிறகுதான்.  வானம்பாடியின் கட்டிலில் சிறு ஒலி ஏதோ வந்ததில் தொடங்கியது இது. ராத்திரி முழுக்க அவள் புரண்டு படுக்கும் போது வந்த ஒலி என்று ஆறடி தூரத்தில் அடுத்த கட்டிலில் துயின்றிருந்த குயலி சொல்ல, […]

நாவல்  தினை              அத்தியாயம் நாற்பத்திரண்டு பு.யு 5000

This entry is part 1 of 2 in the series 3 டிசம்பர் 2023

   சகல இன சஞ்சீவனி ஏற்றுமதிக்காக உருவாக்கி வாங்குவார் இல்லாமல் போன கண்கவரும் தகரக் குடுவைகள் கோகோ பானக் குடுவைகள் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  மாட்டு ஈக்களின் இறகுகளும், கால்களுமாக மிதந்து கொண்டிருக்கும் திரவம் கறுப்பு வண்டல் கீழே தேங்கியிருக்க மேலே அழுக்கு நெடியும் நிறமுமாக காய்ச்சிக் கிளறப்பட்டபடி எங்கணும் நிறைந்திருந்தது.  சில குடுவைகளில் இருந்து திரவம் கசிந்து அவை வைத்திருக்கும் இடம் முழுக்க பாதாளச் சாக்கடை வாடை தூக்கலாக மேலெழும்பிக் கொண்டிருந்தது.  மெல்ல ஊரும் வாகனங்கள் […]

நாவல்  தினை         அத்தியாயம் நாற்பத்தொன்று  பொ.யு 5000

This entry is part 2 of 5 in the series 26 நவம்பர் 2023

   கோகர்மலை நாடு அமைதியாக இருந்தது. சகல இன சஞ்சீவனி எந்தத் தெருவிலும் யார் வீட்டிலும் உண்டாக்கப்படவில்லை. ஈக்களும். மாட்டு ஈக்களான உண்ணிகளும் சுவர்களில் ஈஷியிருந்தன. பறக்கத் தெரியாதவை போல் அவை சிறகுகளை மெல்லிய ரரரரர ஒலியெழ அதிர வைத்து  செவிப்புலன் மூலம் சூழும் போதையில் அமிழ்ந்திருந்தன.  தெருவில் சாக்கடை போல் சகல இன சஞ்சீவனியை பிரயோஜனமற்றது என்று பலரும் பானைகளில் ஏற்றி உடைத்து புளிவாடை எங்கும் மூக்கில் குத்த, பாதை வழுக்கச் செய்திருந்தனர்.  கூட்டம் கூட்டமாக […]

நாவல்  தினை              உத்தராங்கம்  அத்தியாயம் நாற்பது பொது யுகம் 5000

This entry is part 1 of 3 in the series 19 நவம்பர் 2023

                                                            சகல இன சஞ்சீவனி எங்களுக்கு வேண்டாம். அதைக் கொடுத்த  பெருந்தேளரசரும் எங்களுக்கு வேண்டாம்.  காலையில் இருந்து நடுராத்திரி வரை சாரிசாரியாகச் சகல இனங்களும் தேளரண்மனை முன் கோஷம் முழங்கின. மற்ற இனங்களை விடவும் மும்முரமாகத் தேள் இனம் இந்த அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டது.  கரடியின் தலைமையில் துயிலரங்கத்துக்கு முன் பத்து பன்றிகளும், இருபது கழுதைகளும் பத்து நாய்களும் கோஷம் முழக்கி கற்களை விட்டெறிந்தன.  கரடியின் பொதுக்கூட்டச் சொற்பொழிவில் இருந்து – குழலன் என்ற […]

நாவல்  தினை       அத்தியாயம் முப்பத்தொன்பது  பொ.யு 5000

This entry is part 1 of 3 in the series 12 நவம்பர் 2023

   நீலன் வைத்தியர் நடு ராத்திரிக்கு எழுந்தார். பேய் உறங்கும் நேரம் அது.  இவர் அசல் நீலன். காஸ்மாஸ் பிரபஞ்சத்தின் அங்கமான நம் புவியுலகின்  ஒரே நீலன் வைத்தியர் இவர்தான். இவரை போலி செய்து அண்மையில் இறந்துபோனவர் ஆல்ட் எஸ் பிரபஞ்சத்து பிரதி நீலன். கசாப்புக் கடைக்காரராக இங்கே வந்து ராசியான வைத்தியராகப் பரபரப்பாக நடமாடுகிறவர் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து பிரதி நீலன்.  ஆல்ட் க்யூ பிரதி நீலனுக்கு, அசல் நீலன் உயிரோடு இருப்பது தெரியாது. அவருக்கு […]