3 கவிதைகள்

This entry is part 3 of 5 in the series 16 மார்ச் 2025

வசந்ததீபன் (1)  உதிர்ந்த இலை உலர்ந்த கனவு உடைந்து சிதைகின்றன கல் தீபத்தை ஏற்ற முனைந்தேன் துளிர்த்த ஒளி  சட்டென்று காணாமல்போகிறது காற்றை தின்றிட துடிக்கிறேன் பேருந்து புறப்பட்டு விடும் நீர்ததும்பும்   விழிகளோடு நினறிருக்கிறாய் நிரப்ப முடியாத இடைவெளிகள் பெருக்கெடுக்கிறது ஆதியில் வார்த்தை இருந்தது  அப்புறம் காணாமல் போனது மீண்டும் ஆடுகளின் பேச்சாய் மீண்டது பாடல்களின் வரிகளில்   புதைந்து போன   கவிதையே…!  இசையின் அலைகளுக்களுக்குள் கரைந்து போனதேன்…?   பாம்பு நல்லதாம் கொன்றவர்கள் கணக்கில்லை அது இறந்ததற்கு வருத்தப்படணுமா […]

மேன்மை தாங்கிய மெய்கள்

This entry is part 1 of 5 in the series 16 மார்ச் 2025

ரவி அல்லது உடைகள்மாறும் பொழுதுஅதுஉலவுவதற்கு சாத்தியமாக அமைந்தது.உணவுகள் மாறும்பொழுதுஉற்சாகமாக இருந்தது.நினைவுகளைஞாபகிக்க முடியாமல்நடப்பவைகள்யாவும்நிரம்பியபொழுதுநாகரீகமெனத் தோன்றியது.அழுத்த விசைகளுக்குஆட்கொண்டபொழுதுஅடுத்த தலைமுறைவளர்ந்து நின்றுஅயலகனாகஆச்சரியம் தந்தது.அவ்வப்பொழுதுதானஊர்ப் பயணங்கள் அங்கேயும்ஒன்ற முடியாதஅவஸ்தைகளைக் கொடுத்தது.அயலகத்தின் பிரஜையாகமாறிப்போன பொழுதும்அவர்கள்அந்நியராகவேப்பார்த்ததுஅச்சத்தைக் கொடுத்தது.ஆதிச் சரடைஅடையும் ஆசைகள்துளிர்த்த போதுபெயர் மட்டுமேதங்கிகண்ணாடிக்குள்சிக்கிய மீன்காவந்தில் இருப்பதான பொழுதாகநீந்தி நீந்திவெளிவர முடியாதுவாழ்க்கையாவருக்கும்மாறிப்போனது.இப்பாடுகளுக்கிடையில்‘மாப்ளை வேலை என்னாச்சு.’ ‘மகளுக்கு மாப்பிள்ளை என்னாச்சு ‘ போன்றகேள்விகளுக்குபதில் சொல்லியேமத்திய வயதைக்கடந்தவர்களுக்குவெளிச் சொல்ல முடியாதவேதனையில்அன்றாடங்கள்மிகைஅலுப்பைக் கூட்டுகிறது. -ரவி அல்லது.ravialladhu@gmail.com நன்றி:அயலக வாழ்க்கையைஅங்கலாய்த்து அங்கிருக்கும்நண்பர் தேனி பாபு அவர்கள் கவிதை எழுதச்சொன்னதற்கு.

சுவைக்க வைத்த பாவிகள்

This entry is part 2 of 5 in the series 16 மார்ச் 2025

ரவி அல்லது ஆசையாக எட்டிப் பார்க்கிறது. சுவை மொட்டுக்கள் உள் நாக்கிலும் எச்சிலூற.  குரலெடுத்து கூவினாலும் குயிலை ரசிக்க முடியவில்லை கண்ணி வைக்கும் மனதைத் தாண்டி கறியின் சுவை கண் முன் நிழலாடுவதால்.  *** –ரவி அல்லது.  ravialladhu@gmail.com

கவிதைகள்

This entry is part 1 of 3 in the series 9 மார்ச் 2025

– கு.அழகர்சாமி (1) பாறையின் விழி என்னை நான் உடைந்து போக விடுவதில்லை கண்ணாடியாய். உடைக்கப்பட்டாலும் உடைவேன் ஒரு பாறையாய் ஊற்றின் விழி திறந்து.  (2) முடிபு இன்னும்  முடிக்கப்பட வேண்டியிருக்கிறது அது. முடிக்கப்பட்ட அளவில் முடிந்திருக்கிறது முடிக்கப்பட வேண்டியதும். முழுதும் முடிந்த எதுவும் ஒரு வகையில் முடிக்கப்பட்ட அளவில்- முடிக்கப்பட வேண்டியது போதுமென்றே- முடிந்ததே. முடிக்கப்பட்ட அளவில் முடிந்து கனவு முடிந்திருக்கவில்லையென்றால் முழுதும் கனவு முடியாது இன்னும் விடியாது கனவாக முடிந்திருக்குமோ நனவு? (3) ஒரு […]

ஆடுகளம்

This entry is part 2 of 3 in the series 9 மார்ச் 2025

கடைசி வரை அவன் சொல்லவில்லை. காலி மைதானத்தின் நடுவில் அமர்ந்துக்கொண்டு தலையை கிழக்கும் மேற்காக  அசைத்துக்கொண்டு  உற்சாகத்தில்  துள்ளி குதித்தான்.  ம்…ம்…ஓடுங்கள். .ஓடுங்கள் என்று  விசில் அடித்தான்.  கோல் என்று துள்ளி குதித்தான். ஆடுகள் மேய்க்கவந்த  மலைச்சி  யாருமற்ற  மைதானத்தைப் பார்த்தாள்  கையசைத்து துள்ளிக்குதிக்கும் இவனைப்பார்த்தாள்.  அவளும் அவன் உற்சாகத்தில்  கலந்துக்கொண்டு  துள்ளிக்குதித்தாள்.  வறண்டுப்போன  மலச்சிக்கும்  மகிழ்ச்சி வந்தது.  கொஞ்ச நேரத்தில்  மனநல காப்பக வேனில்  அவனை ஏற்றினார்கள்  அவளையும் தான்.  மலச்சி  சத்தோஷமாக ஏறிக்கொண்டாள்.  எங்கிருந்தாலும்  […]

நன்றி

This entry is part 7 of 7 in the series 23 பிப்ரவரி 2025

உங்களிடமிருந்து  நான்  நிறையக்கற்று கொள்கின்றேன். மனம் நிறைந்த  அன்பைத்தருகின்றீர்கள்.  மற்றவர்களின்  இதயத்தை திறக்க  சாவியைத்தருகின்றீர்கள்.  கள்ளத்தனங்களின்  கால் தடங்களை காண்பிக்கின்றீர்கள்  அறிவுப்பாதைகளின்  ரேகைகளில் ஒளிந்துள்ள  ஒளியை காண்பித்தீர்கள்.  தில்லுமுல்லு நிறைந்த  உலகைக்காண்பித்து  ஏமாந்த  எழுத்தாளர்களின்  கண்ணீர் காவியங்களை காண்பித்தீர்கள்.  பதிவிரதா தர்மத்தை காண்பித்து  கூடவே  பரத்தையர் தெருக்களில்  நுழைந்த  சீமான்களின் கதைகளையும் சொல்கின்றீர்கள்.  நாலு வர்ண தெருக்களை சொல்லி  நந்தன் கதையையும் சொன்னீர்கள்.  மிட்டு மிராசுகளின்  ஜல்லிக்கட்டு வண்டிகளையும் காட்டி  தாசிகள் சதைகளின்  சரித்திரத்தை சொல்லி  அழிந்து […]

இரக்கத்தைத் தின்ற இத்யாதிகள்

This entry is part 1 of 7 in the series 23 பிப்ரவரி 2025

ரவி அல்லது வேகமாக சாலைகளில் பறந்து கொண்டிருக்கும் மனிதக் கூடுகளைப் பற்றி  பெரிதாக  அலட்டிக் கொள்ளத்தேவையில்லை அவைகள் நிலையாமையில் கால்கோள்வதால். அவைகளின் நிறம் குணம் பெயர் யாவுமே தனித்த அடையாளத்திற்காக முயன்று கொண்டே இருக்கும் ஏதாவதொரு வகையில். நிலை மாறும் பொழுதினில் ஏதோவொரு  சுய தேவையின் பொருட்டில் யாருமற்ற இடத்தில்  ஏதோவொன்றை வீசி விடுகிறது அற்ப காரணங்களுக்காக அனிச்சைக் கூடுகள் அவ்வப்பொழுது வீசுவதையே வழக்கமாக்கியதால் புரியாதப் புறாக்கள் மட்டும்  இரையிடமென பொருள் கொண்டு தனக்கான தங்குமிடமாக்கியது பார்த்து […]

மனிதக் கோப்பையினாலொரு மானுடப்பருகல்

This entry is part 2 of 7 in the series 23 பிப்ரவரி 2025

ரவி அல்லது யாவைச் சுற்றியும் நிறைந்திருக்கும்  நிம்மதியை திளைக்கப் பழகிடாத துயரத்தில்  கோப்பையைத் தூக்கியபடி கொடுந்துயரில்  பார தூரம் பயணிக்கின்றேன் நிரப்பிவிடுவார்கள் நிம்மதியையென பருகிப் பரவசங்கள் கொண்டுவிட. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அனைவரும் சொர்க்கப் பானமென சுவைக்க நிரப்புகிறார்கள் வழி வழியாக  நம்பியதை இட்டு. மொட்டு குடிக்க வந்தவன் நிரம்பி வழிவதறியாமல். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com

 வாழ்வு

This entry is part 3 of 7 in the series 23 பிப்ரவரி 2025

                                                                                     வளவ. துரையன்                                மீண்டும் மீண்டும்                                 கூடு கட்ட நல்ல                                 குச்சிகள் தேடும் காகம்                                எத்தனை பேர் வந்தாலும்                                 ஏறச்சொல்லி                                 முன்னாலழைக்கும்                                 நகரப் பேருந்து                                கொடுத்ததைப் பாதுகாத்து                                 அப்படியே அளிக்கும்                                 குளிர்சாதனப் பெட்டி                                குழல்விளக்கினைக்                                 கருப்பாக்க நினைக்கும்                                 கரப்பான பூச்சிகள்                                பெட்டியைத் திறந்தாலே                                 ஆள்கடத்தல் தீவிபத்து                                 அரசியல் கூச்சல்கள்                                ஒழுகும் தூறல்களுக்கிடையே                                 ஒதுங்க இடம் தேடும்                                 ஒரு நாய்க்குட்டி                                கிழக்கின் மருத்துவமனைக்கும்                                 மேற்குக் காட்டிற்கும்                                 இடையில்தான் மெதுவாக                                 நகர்கிறது வாழ்வு

கானல் நீர்

This entry is part 4 of 7 in the series 23 பிப்ரவரி 2025

                                 .                                                       வளவ. துரையன்                          மாரியம்மன் கோயில்                          வாசலில் வானம் தொட்டு                           வளர்ந்திருந்த வேப்ப மரங்கள்                          தான் பூத்த மகிழ்ச்சியைத்                           தலையாட்டிக் காட்டி வரவேற்கும்                           கரும்புச் சோலைகள்                           மேதிகள் கூட்டம்                           குளித்துக் கலக்குகின்ற                           குளம் போன்ற குட்டைகள்                          கதிரவனை மறைத்து மறைத்துக்                          கண்ணாமூச்சி காட்டும்                           சிறு குன்று                          களத்தில் தூற்றிய                           நெல் மூட்டைகளைக்                           கழுத்தொடிய இழுக்கும்                           காளைகள்                          மேலிருந்து பட்டென்று                           விழுந்து வாவி மீனை                            வாரியெடுத்துச் சென்று                           வட்டமிடும் கருடன்கள்                          இப்பொழுது எல்லாம்                           இவற்றை வரைந்து பார்த்தால்                           வண்ண […]