மூலம் : வால்ட் விட்மன் (1819-1892) (புல்லின் இலைகள்) தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா ஓ காப்டன் ! என் காப்டன் ! ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் ! கப்பல் தளங்கள் தப்பின சூறா வளியை ! தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு ! அருகில் துறைமுகம், ஆலய மணி ஓசை ! வெற்றி கொண்டா டுவர் மக்கள் எல்லாம் ! ஓ நெஞ்சே ! நெஞ்சே ! நெஞ்சே ! ஓடுது பார் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வெகு நாட்க ளுக்கு முந்தி இருண்ட பல நடுநிசிகளில் முணுமுணுத்தேன் நானுன் காதிலே பல்வேறு சம்பவங்கள்; பற்பல ரகசியப் பாடல்கள் நான் படைத்து வைத்தவை ! “நினைவில் உள்ளதா அவை ?” யென்று வினாவ மட்டும் தான் நான் வந்துள்ளேன் மீண்டும் . இந்த நள்ளிரவின் இதயத்திலே இரண்டறப் பின்னி நிலைத் துள்ளன எனது பாடல்கள் ! ஆதலால் […]
இரா. ஜெயானந்தன். கூரைவேய்ந்த பள்ளியைக் காணோம் குடுமி வைத்த வாத்தியைக் காணோம் உயர்ந்து வளர்ந்த மரங்களைக் காணோம் ஏறி விளையாடிய கிளைகளைக் காணோம். ஈமொய்த்த எலந்தை பழங்களைக் காணோம் தோல் சுருங்கியை பாட்டியைக் காணோம் டவுசரில் ஒட்டுப்போட்ட சுகுமாரானைக் காணோம் இங்கு படிந்த ஓட்டைப் பேனாக்களை யும் காணோம். கிட்டிபுல் விளையாடிய மைதானத்தைக் காணோம் கிளிக்கொண்டைப் போட்ட கிரிஜாவைக் காணோம் தேடி தேடி, ஓடி ஓடி பார்த்தேன் உன்னையும், என்னையும் காணோம்.
தாகூரின் கீதப் பாமாலை – 41 அவள் தந்த பிரிவுப் பரிசு. மூலம்: இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எந்தன் கழுத்தைச் சுற்றி அணிந்திருக்கும் இந்த மலர்மாலை எனக்கவள் தந்த பிரிவுப் பரிசு ! கால் எட்டு வைக்கும் ஒவ்வொரு கணமும் இங்கு மங்கும் அசைந் தாடும் என் இதயத்தின் அருகிலே ! இந்தக் கணமும் அடுத்த தருணமும் அந்த மாலை நறுமணம் வீசிடும் தேனீக்கள் ரீங்காரக் கிளைகளின் அடியில், வசந்தத் தென்றலில் ! […]
1.காலம் ஒரு கணந்தான்…! part 1 மெழுகுவர்த்தியாய் உருகி வெளிச்சங்கொடு… “சோனாமாரி”யிலும் அணையாதே! மேக கணங்களாய் உழை… மழைத்துளிகளாக சேவை செய்… பூமியைப்போல பொறுத்திடு… அகழ்வாரை அன்போடு நோக்கு… மின்னலிடம் வெளிச்சங் கேள்… இடியைத் தாங்கும் இதயம் பெறு… காற்றிலே கீதம் அமை… கைப்பிடிக்குள் உலகம் எடு… கால வெள்ளத்தோடு கல்லாக உருளாதே, பாறையாய் நில்லு., சந்தோஷச் சிறகில் பறவையாய்ப் பற… பனித்துளியாய் வாழ இலையிடம் இடங்கேள்… சூரியன் சுட்டாலும் அழியாமல் வாழ்… தேனீயாய் சுற்று… எறும்பாய் […]
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 46) விழிக்கும் நெஞ்சுக்கும் போர் மூலம்: வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் […]
காத்திருக்கிறாள் கன்னியவள் கனிவான மணமகனுக்காக… கண்ணில் ஓர் காதலுடன் கையில் மாலையுடன் சுயம்வர மண்டபமதில்… காமம் வென்ற (வர)தட்சணை சாபம் என்றாகிப்போக கன்னி கழியாமல் கண்ணீருடன் வாடிய மாலையுடன் காத்திருக்கிறாள் கன்னியவள்! ஏனிந்த கவர்ச்சிப் பருவம் எதற்கிந்த வரட்டு கௌரவம்? யாருக்காக இந்த வரம்? எதற்கிந்த சுயம்வரம்? சீந்துவாரில்லாமல்…… தெருவெங்கும் கழுகுப் பார்வைகள் மனமத அம்புகள் அர்ச்சனைக்காக மலர்ந்து தட்சணையின்றி கருகி கூசிக் குறுகும் கன்னி மனம். என்றேனும் வருவாய் மாலை சூடுவாய் நம்பிக்கை இழக்காமல் காத்திருக்கும் […]
ஊரை விட்டு உறவை விட்டு வந்தது போல் ஒரு வெறுமை. மனம் தனிமையின் குழிகளை வெட்டிக் கொண்டிருக்கும். கண்களில் விரிந்து கடந்த கால நினைவுகள் மண் மேடிட்டுக் கிடக்கும். ஓய்வு பெற்று எத்தனை காலம்? குழியில் விழுந்து கிடக்கும் கால நிழலை மேலும் குழி வெட்டி மனம் பிடிக்கப் பார்க்கும். ’மற்றவர்கள் தன்னை மறந்து விட்டார்களோ?’ பாறையாய்க் கேள்வி தடுக்கும். ’கொஞ்சம் காலமாகத் தான் பேச நினைத்த நண்பரோடு பேசினாலென்ன?’ ஒரு நினைப்பு ஈரமாகும். நினைப்பு நீளும் […]
குரும்பையூர் பொன் சிவராசா மூடிய விழிகள் தூக்கமில்லா உள்ளம் கனவுகள் அல்ல கனத்த இதயம் பேசியது என்னுடனே அந்த நடு ராத்திரியில் நல்லவர் போல் வேசம் வல்லவர் போல் நடிப்பு பகட்டான வாழ்க்கை தற்பெருமைப் பேச்சு இரந்து வேண்டும் பட்டங்கள் பதவிகள் அரசியல் வாதியையும் அதி பணக்காரரையும் அண்டிப் பிழைக்கும் அவலம் அடுத்தவன் துன்பத்தை அசை போட்டு மகிழும் மனிதர்கள்….. மூடிய விழிகள் தூக்கமில்லா உள்ளம்
ஆயிரம் முகில்கள் கடக்கும் – ஆனால் ஒன்றுதான் மழையை இறக்கும் ஆயிரம் பார்வைகள் தொடுக்கும் – ஆனால் ஒன்றுதான் காதலைப் பதிக்கும் சிக்கி முக்கியாய் உரசும் அந்தத் தீப்பொறியில் காதல் உயிர்க்கும் மின்னல் ஒன்று சொடுக்கும் காதல் மின்சாரம் உடம்பெங்கும் நிறைக்கும் ஆயிரங் காலத்துப் பயிராய்க் காதல் கழனியெலாம் முளைக்கட்டிச் செழிக்கும் இது அன்றையக் காதல் *********** ஒரு குறுஞ் செய்தியில் பிறக்கும் மறு குறுஞ் செய்தியில் இறக்கும் இது இன்றையக் காதல் அமீதாம்மாள்