என் முகம் தேடி….

This entry is part 20 of 29 in the series 20 மே 2012

சிவப்பும் மஞ்சளுமாய் பழுத்த இலைகள் பாதையோரத்தில் பாதங்களைத் தொடும் தூரத்தில் ரொம்ப தூரம் நடந்துவிட்டேன் ஒவ்வொரு விடியலும் வெவ்வேறு முகங்களுடன் தனியாகவே நடக்கின்றன என்னைத் தொலைத்தப் பாதையில். ஒவ்வொரு முகத்திலும் என் முகத்தின் சாயலைத் தேடி களைத்துப் போய்விட்டேன் எங்காவது தாகத்துடன் என் முகம் தவித்துக் கொண்டிருக்கலாம். வழிப்போக்கன் சிந்திய எச்சில் பருக்கையைத் எடுத்து தின்று விக்கிக்கொண்டிருக்கலாம். மஞ்சள் கயிற்றோடு மாங்கல்ய பெருமையை பேசிக் கொண்டிருக்கலாம். எது எனக்கான முகம் என் முகம் காட்டுவதோ உன் கண்ணாடி […]

எம் சூர்யோதயம்

This entry is part 13 of 29 in the series 20 மே 2012

நாம் துவங்கிய தருணமதில் திட்டம் ஏதும் தீட்டாமலே இச்சை கொண்டேன் உம்மீது ஆயினும் காதல் இல்லை உம்மீது என்பதே சத்தியம். உமக்குள்ளே ஊடுறுவி நுழைந்துவிட்டேன் இக்கணம். எம் மனமேடையிலிருந்து முற்றிலும் சரிந்தேவிட்டானவன். உம்மைத்தவிர யாதொன்றும் எம் சிந்தையுள் கொண்டிலேம். உம்மைப்பற்றிய எம்மொழியே எம்மை கலங்கச்செய்கிறது. பொய்மை ஏதுமில்லாத வாய்மையே அனைத்தும் உய்த்துணராத ஒப்புதலாகக் கொண்டு விலகி விடாதே ஆம், ஆம் நீர் எம்மோடே இருக்க, வேண்டி நிற்கிறேன் யான் துப்பு ஒன்றும் உமக்குத் தப்பாமல் தருகிறேன் உரைப்பேன் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 20)

This entry is part 5 of 29 in the series 20 மே 2012

++++++++++++++++++++ ஒரு மாதின் காதலன் ++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]

தாகூரின் கீதப் பாமாலை – 14 இளமங்கைக்குப் புரியமா ?

This entry is part 3 of 29 in the series 20 மே 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இதுபோன்ற நாளொன்றில் அவளுக்கு எடுத்துச் சொல்ல ஏதுவானது வானிருண்டு முகில் திரண்டு பேய் மழை கொட்டும் வேளையில் ! இதுபோன்ற நாள் ஒன்றில் என் மனம் திறந்து காட்ட ஏதுவானது பரிதி மேகத்தில் மறைந்து ஒளிமங்கிய போர்வைக் குள்ளே இடி முழக்கும் முகிலுக்கும் தடமிட்டுச் சடசடக்கும் சப்த மழைக்கும் இடையே ! வேறெவர் காதிலும் வீழாது இந்த வார்த்தை ! ஏகாந்தம், நிசப்த அந்தரங்கம். […]

வெயில் விளையாடும் களம்

This entry is part 41 of 41 in the series 13 மே 2012

வையவன் வெயில் விளையாடும் களத்து மேட்டில் பதரடிக்கும் போது தலை காட்டலாமே தவிர முளைக்கச் சுதந்திரமில்லை புல்லுக்கு.

இந்நிமிடம் ..

This entry is part 40 of 41 in the series 13 மே 2012

இந்நிமிட குப்பிக்குள் பழைய நினைவுகளை புதிய நினைவுகளை திணிக்க திணிக்க திமிறி ஓடுகிறது அமைதி.. இந்நிமிட கொள் அளவில் வைக்க வேண்டியதை மட்டும் வைத்து எடுக்க எடுக்க -இந்நிமிடம் அடுத்த ,அதற்கடுத்த நிமிடம் .. மாற்று நிறங்களின் தறி பாவில் ஊடு நூலாக – வளைந்து புகுந்து அமைதியை நெய்ந்து தருகிறது இந்நிமிடங்கள்… – சித்ரா (k_chithra@yahoo.com)

”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது

This entry is part 39 of 41 in the series 13 மே 2012

”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது சற்றுக் கடினம். அவர்கள் நம்மைப் போல் தான் இருப்பார்கள். ”ஒழுக்கங்கள்” பற்றி அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதனால் தான் அவர்கள் “ஒழுக்கமானவர்கள்”. அவர்களுக்கு ஆண்கள் பெண்கள் ஒழுக்கங்கள் மேல் அதிக அக்கறை. அடிப்படையில் ஆண்கள் பெண்கள் எலும்புக் கூடுகள். எலும்புக் கூடுகள் ஒழுக்கமானவை. அப்படியே ஆண்கள் பெண்கள் ஒழுக்கங்கள் இருக்க வேண்டும் இப்படியெல்லாம் ஒழுக்கங்களுக்கு அவர்கள் வியாக்கியானம் இருக்கும். விளக்கிப் பதில் சொல்ல வீணாகும் நேரமென்று விமர்சனங்களை அவர்கள் அனுமதிப்பதில்லை ”ஒழுக்கமானவர்கள்” […]

வேழ விரிபூ!

This entry is part 34 of 41 in the series 13 மே 2012

வள்ளி படர்த்திய வெள்வீக்கிழங்கின் மண்குழி உழற்றும் கொடும்பல் கேழல் எல்வளை நீள அளைஇ ஒளிக்கும் எலிகள் தின்ற காய்நெல் பழனம் பாசடை பைம்புனல் குண்டுநீர் ஆம்பல் குவித்தன்ன காட்டி விரிகிளர் ஊட்டும் நீள்விழிக்காடு தீப்பெய்த நீழல் நடுக்குறூஉம் காட்சி நலன் அழி செய்ய‌ மாவதிர ஓட்டிய மணித்தேர் வெற்ப‌ன் கடிவிசை வலிப்ப கதழ்பரி மள்ளல் துள்ளல் கூட்டி ஆறுவடுப்படுத்தி அலரி ஆட்டிய அந்துணர் உள்ளி நுண்சிறை வண்டினம் நுவல் இமிழ்தந்து நுண்சொல் உரைப்ப நுழைபு மெய் விதிர்த்தான். […]

நன்றி நவிலல்

This entry is part 31 of 41 in the series 13 மே 2012

கோமதி நடராஜன் உடல்வலிமையும் ,மனவலிமையும், நிறைந்திருந்த நாளில், பூமியில் பதிந்த, மலையைப் பெயர்த்துத் தரச்சொன்னார், நெம்பி எடுத்துத் தந்தேன். வேரோடியிருந்த , மரத்தைப் ,பிடுங்கித் தரச் சொன்னார், கிள்ளி எடுத்துக் கொடுத்தேன். மனமும் சோர்ந்த , உடலும் களைத்த , இன்று தரையில் கிடந்த ஊசியைக் கேட்டார், ”ஊசிதானே ,உன்னால் ஆகாதா ”என்றேன் மலையையும் மறந்தார் மரத்தையும் மறந்தார் ”உன்னால் ஒரு பிரயோசனமில்லை” என்றவாறு அகன்றார்.

தாகூரின் கீதப் பாமாலை – 13 ஆணவம் நொறுங்கும் போது !

This entry is part 29 of 41 in the series 13 மே 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலின் வலைகள் விரிந்துள்ளன பூதள மெங்கும் ! அவற்றில் எவர் வீழ்வார் என்று அறிவது யார் ? ஆணவம் யாவும் நொறுங்கும் போது தானாய்ப் பொழியும் கண்ணீர்த் துளிகள் என்பதை அறிவது யார் ? இன்ப மயமான இவ்வுலகில் உன் தேவைகள் வேண்டுவாய் நிரந்தர மாக ! சன்மானம் தர வேண்டும் உன்னை நீயே என்று நீ அறிய மாட்டாய் ! தருணம் ஒன்று […]