கறுப்பு, வெள்ளைப் பணங்கள் உரமாகி கழனிகளில் கான்கிரீட் காடுகளின் வளர்ச்சி அமோகமானதால், கவலைக்குக் கூட மோட்டுவளையைப் பார்க்கமுடியாத கவலை.. மரக்கிளைகள் மறைந்துபோனதால், தொங்கும் மின்விசிறிக்கும் தலைக்கும் துப்பட்டா இணைப்புக் கொடுத்து தற்கொலையாக்கும் துயரம்.. தூதுப்புறாக்கள் மனிதனின் பசிப்பிணிக்கு மருந்தாகிப்போனதால், பல சேதிகள் பலான சேதிகளாய் கைபேசியால் பரிமாறப்படும் பரிதாபம்.. குடியிருப்புக்களில் இடக்குறைவால், முடக்கோழிகளாய் முதியோர்கள் முதியோர் இல்லங்களுக்குக் கடத்தப்படும் கொடுமை.. சாதிக் கணக்கெடுத்து சாதிக்கு சங்கம் வைத்து சாதிக்காய் சண்டையிட்டு சாதியால் விலைபேசி ஜனநாயகம் காக்க நிற்கும் […]
தெற்குச் சீமையின் வற்றிப் போன மாரை சப்பிச் சுவைத்து கடித்து சுரக்கும் எச்சிலில் பசியைத் தணித்துக் கொண்ட வரலாற்றை முதுகில் சுமந்து கொண்டு அகதியாய் புலம் பெயர்ந்த நகரமிது. கால்கடுக்க நின்று பட்டன் தைக்கும் பணியாளாக-நிறைமாத கர்ப்பிணி மனைவியை அனுப்பி வைத்தும் வயதிற்கு வந்தத் தங்கையைக் கம்பெனி வேனில் ஏற்றி விட்டு போனவள் போனவளாகத் திரும்ப வேண்டுமெனும் வயிற்று நெருப்பை அணைக்க வழியில்லாதும் சாவை பார்த்துக் கிடக்கும் சீக்காளி அம்மாவிற்கு மருந்து வாங்கக் காசில்லாதும் வாழ வந்த […]
(1) இது இறந்தவர்கள் பற்றிய க(வி)தை . அதனால் மர்மங்கள் இருக்கும். இறந்தவர்கள் மர்மமானவர்கள் அல்ல. இருப்பவர்களுக்கு சாவு பயமானதால் இறந்தவர்கள் மர்மமானவர்கள் இருப்பவர்களுக்கு இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இருப்பவர்களின் சாவை இறந்தவர்கள் நினைவுபடுத்துகிறார்கள். (2) இரண்டாம் எண் அலுவலக அறையில் இருந்தவர் ’ரெக்டம்’ கான்சரில் செத்துப் போனார். இரண்டாம் எண் அறைக்குப் புதிதாய் வந்தவரும் இரண்டே மாதங்களில் ’லங்’ கான்சரென்று செத்துப் போனார். முதல் அறையில் இருந்தவர் சுகமில்லையென்று மாற்றலாகிப் போய் விட்டார். […]
மகனின் வாழ்க்கையில் மறக்க முடியாச் சம்பவங்கள் 3 சம்பவம் 1 முப்பது நாட்களுக்குள் முப்பத்தையாயிரம் வெள்ளி வீடு வாங்கக் கெடு வீவக விதித்தது நெருங்கியது நாள் உலையானது தலையணை இடியானது இதயத் துடிப்பு மகன் வென்றானா? அன்றி வீழ்ந்தானா? சம்பவம் 2 இருதயத் துவாரங்களில் துருவாக அடைப்பாம் சட்டைப் பை தூரத்தில் மரணமாம் அன்றே தேவை அறுவை சிகிச்சை மகன் வென்றானா? அன்றி வீழ்ந்தானா? சம்பவம் 3 மகனின் மகளுக்குத் திருமணம் இரண்டு வாரங்களுக்குள் இருபதாயிரம் தேவை […]
“கி.பி.2012 .05.01” – நேரம் நான்கு மணி – அழகான பொன்வெயில் நேரம் – புறப்படுகிறாள் அவள் கால இயந்திரத்தில் ஏறி… “கி.பி.1512.05.01” காலையில் வந்து சேர்கிறாள் திரும்பி…!! வீடதன் பக்கம் செல்கிறாள்… வீடெங்கே தேடுகிறாள்… தாய்தந்தை எங்கேயெங்கே… ஆளரவம் எதுவுமில்லை… ஆலமரம் மட்டும் சின்னதாய் சிரித்துக் கொண்டு…! அயல் வீடுகளும் காணவில்லை… பக்கத்து தெருவையும் காணவில்லை… அவள் வளர்த்த கிளிகளையும் காணவில்லை கூண்டுடனே…! அவள் வீட்டு முற்றத்திலே நாட்டி வைத்த ரோஜா எங்கே ஆவலுடன் தேடுகிறாள் […]
ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும் நீர்ப்பாம்புகளசையும் தூறல் மழையிரவில் நிலவு ஒரு பாடலைத் தேடும் வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில் மூங்கில்கள் இசையமைக்கும் அப் பாடலின் வரிகளை முகில்கள் மொழிபெயர்க்கக் கூடும் ஆல விருட்சத்தின் பரந்த கிளைக் கூடுகளுக்குள் எந்தப் பட்சிகளின் உறக்கமோ கூரையின் விரிசல்கள் வழியே ஒழுகி வழிகின்றன கனாக்கள் நீர்ப்பாம்புகள் வௌவால்கள் இன்னபிறவற்றை வீட்டுக்குள் எடுத்துவரும் கனாக்கள் தூறல் மழையாகிச் சிதறுகின்றன ஆவியாகி பறவைகளோடு சகலமும் மௌனித்த இரவில் வெளியெங்கும் – எம்.ரிஷான் ஷெரீப்
வெடிக்க வெடிக்க வீழ்ந்தார்கள் வீழுந்து துடிப்பவர்களைத் தொட்டுத்தூக்க ஓடினார்கள் கேட்பாரற்றவர்களை காப்பாற்ற வருபவர்களென்று காத்திருந்து காத்திருந்து வெடிக்கிறது வெடிக்கிறது வெடித்ததே வெடிக்கிறது குருதியில் சதசதக்க சதை சகதியில் கொத்தணிக்குண்டு விதை விதைக்கயிலேயே அறுவடை உயிர் உயிராய் அறுவடைக்குப் பின்னும் அறுவடை அந்த கொத்துக்குண்டின் மிச்சம் தன் கூட்டத்தை இழந்த ஒரு குழ்ந்தையை கொன்றுப்போட்டிருகிறது இன்று. இருந்தவரை கொன்று இடம் பிடிக்க நாளை விதைத்தவனுக்கா அறுவடை? எவரும் வெடிக்க வெடிக்க விழ வேண்டம். போருக்கு பின் அமைதியில் சத்தமாய் […]
++++++++++++++++++++++++++++++ உன்னை யாருக்கு ஒப்பிடலாம் ? ++++++++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணீர்த் துளிகள் நிற்காது சொட்டக் காரண மாகுது என் மனதே ! அதைப் புரியா திருப்பதும் என் மனதே ! திரிகிறேன் உலகில் அறிவிலா மனதுடன் ! அந்த மனதை விட்டு விலக நினைத்தால் வெட்டி விடு ! நியாயமா அது கண்மணி மாற்றவனை நீ மனதில் வைத்திருப்பது ? யார் அறிவது அடுத்தவன் மனதை ? ஆத்மாவின் தாகம் அழுகிறது கடுமையாய் ஓலமிட்டு! […]
பழமுதிர் சோலையில் நூல் விடும் கண்ணீர் ஏன் இந்த சோக இழை? கல் மனம் உருக்கிய மோனத்தின் வெள்ளி நீர்க் கொடியிது. அழகர் மலை இங்கு பாறை விரித்து அமர்ந்து பத்மாசனம் செய்தது. குளிப்பவர்களுக்கு முதுகில் சாட்டையடிகள் தண்ணீர்க்கயிற்றில். மலையே போதையில் புதைந்ததுவோ? பாட்டில்களில் டாஸ்மாக் தீர்த்தம். கள்ளழகனா?கதிர் வேலனா? மெல் ஒலி உதிர்த்து நீர் நடத்தும் பட்டிமன்றம். அடர் இலையில் சுடர் மலரில் நிழல் பரப்பிய சங்கப்பலகையில் திருமுருகாற்றுப்படை இது. கொத்து கொத்தாய் குரங்குக்குட்டிகள் […]