விருப்பங்கள்

This entry is part 35 of 48 in the series 11 டிசம்பர் 2011

என் கருதுகோள்கள் ஒவ்வொன்றாக உதிர தொடங்குகிறது பொய்மையின் உருவில் . வழியெங்கும் அதன் பிம்பங்கள் என்னை துரத்துகிறது உண்மையின் சிந்தனையாய் . குறிப்பிட்டு சொல்ல ஏதும் இல்லாமலே வார்த்தை இயலாமையில் உறைகிறது . அவரவர் நியாயங்கள் பொய்மையும் உண்மையும் உருவில் அலைந்து கொண்டிருக்கிறது . அவர்களுக்கு விருப்பமானவற்றை அணிகிறார்கள் நம்மையும் அணிவித்து விடுகிறார்கள் அவர்களின் வாயிலாகவே. -வளத்தூர் தி .ராஜேஷ் .

காந்தி சிலை

This entry is part 28 of 48 in the series 11 டிசம்பர் 2011

எங்கோ பறந்து வந்து இளைப்பாறி எச்சமிட்டபோதும் அதே புன்னகையுடன் இருக்கிறார் காந்தி தடி இருந்தும் அந்த பேருந்தில் பத்து பதினைந்து காந்தி சிலையாவது பயணித்து இருக்க வேண்டும் நிறுத்தம் வந்ததும் ‘காந்தி சிலை இறங்கு’ என இரு முறை கூவும் நடத்துனர் உச்சி வெயிலிலும் தன் கைத்தடி நிழலில் அரைமணி நேரமாய் ஏதோ படித்து கொண்டிருக்கிறான் இளைஞன் ஒருவன் மெதுவாய் அவன்மேல் காந்தியின் பார்வை பட ஏதோ செய்தி வர அவசர அவசரமாய் புறப்பட்டான் அவன் காதலி […]

இரவின் முடிவில்.

This entry is part 27 of 48 in the series 11 டிசம்பர் 2011

இரவின் முடிவில் புறாக்கள் பறந்தன. நாகங்கள் புற்றுக்குள் இரையோடு பதுங்கின. இரவின் சோம்பலை விரட்ட சூரிய கிரணங்கள் பாய்ந்தன. நதியெங்கும் புனிதங்கள் வாய் மூடிக் கிடந்தன. நிர்வாண சடலங்கள் சிதைகுள் வெந்தன. மழைத்துளி பட்டு பூமிக்குள் நடனம். நதியின் உதிரத்தில் பயிர்களின் ராகம். மௌனமாய் யோகிகள் தவத்தில் மூழ்கினர். வீதியெங்கும் சம்சாரிகள் வீங்கிப்போய் அலைந்தனர். ஆதாம் ஏவாள் மவுனமாய் சிரித்தனர். மீண்டும் சாத்தான் பழத்தோடு அலைந்தன. புழக்கடை கதவை பதிவிரதை சாத்தினாள். இரவின் முடிவில் மீண்டும் தூவினர் […]

புரிந்தால் சொல்வீர்களா?

This entry is part 23 of 48 in the series 11 டிசம்பர் 2011

சக்தி சக்திதாசன் எனக்குள்ளே என்னைப் பரப்பி அதற்குள்ளே அதனைத் தேடி எதற்காக இத்தனை ஏக்கம்? விடைகாணா வினாக்களின் முழக்கம் நினவாலே இசைத்திடும் சங்கீதம் கனவோடு கலந்திடும் சிலநேரம் முடிவோடு தொடக்கம் முடியாமல் ப்கலோடு இரவாகத் தெரியாமல் இது என்ன மாற்றம்? இதுதானா சீற்றம் ? தெரியாத ஊருக்கு ஏனோ புரியாத பயணம் புலராத் பொழுதொன்றில் முடியாத கனவு சுகமான சுமைகளை சுமந்திடும் தோள்கள் கனக்கின்ற எடைகளை களைகின்ற மேடை சொல்லொன்று தீட்டிய ஓவியத்தை கண்ணில்லா மனிதனிடம் காட்டிய […]

எவரும் அறியாமல் விடியும் உலகம்

This entry is part 21 of 48 in the series 11 டிசம்பர் 2011

பா. சத்தியமோகன். விற்காமல் வீசப்பட்ட சுருங்கல் மாலைகள் அதிகாலைத் தெருவில் வதங்கிக் கிடக்கும் கீரை மூட்டை இறக்கிப்போடுவதற்கு கல்யாணிக் கிழவி பேருந்து முன் நின்று இன்றும் கூவுகிறாள் விடை பெற்றுக் கொண்டிருக்கிறது கோடைகாலத்தின் மார்பில் ஒட்டியிருக்கும் குளிர் புலரப் போகும் இந்த உலகம் இன்னும் சற்று நேரத்தில் விரைந்து இயங்கத் துவங்கும் எவர் அறியக்கூடும் – விடிந்து கொண்டிருக்கும் இந்த உலகம் இன்று எதில் எதில் ஆழ்ந்து போகும்? எத்தனை இலட்சம் குழந்தைகளுடன் நகரப்பேருந்து நெரிசல் இயங்கத் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -3)

This entry is part 20 of 48 in the series 11 டிசம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “கடவுள் உனக்குக் கொடையாக அளித்துள்ளார் ஆன்மீக இறக்கைகளை ! அவற்றின் மூலம் நீ காதல் விரி வான்வெளிக் கோட்டையில் விடுதலையாகப் பறக்கலாம். நீ உன் கையாலே உன் இறக்கைகளை வெட்டி, உன் ஆத்மாவை நசுக்கி மண்ணில் நெளியும் புழுவாய் நகர்வது வருந்தத் தக்க நிகழ்ச்சி இல்லையா ?” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ அறிவும். பகுத்தாய்வு நெறியும் அறிவுக் கல்வி இல்லாது […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -2)

This entry is part 19 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இறைவன் திருநாம உச்சரிப்பு (சென்ற வாரத் தொடர்ச்சி) வழிப் பயணிகள் பின்னே நடந்து செல் விளக்கேற்றிய சில விளக்குகள் அணைந்து விட்டன விரைவாக ! விடிவு வரை நீடிக்கும் சில. ஆவி அடங்கும் சில. தீவிர மாய் எரியும் சில ! எண்ணெய் ஊட்டப் பட்டவை எல்லா விளக்கும் ! வீடு ஒன்றில் விளக்கு அணைந்தால் பக்கத்து வீட்டில் பாதிப் பில்லை ! […]

மழையின் முகம்

This entry is part 16 of 48 in the series 11 டிசம்பர் 2011

துளி துளியெனத் தூளியில் ஆடிப் பாடுகிறது மழை. பக்கம் பக்கமாய் மணலில் எழுதி கடலில் சேர்க்கிறது காவியமாய். வரையும் சித்திரம் வளர்கிறது விரிகிறது இலையாய் மலராய் மரமாய்.வனமாய். காங்கிரீட் தளங்களில் விழுந்து எழுந்து காயமும் படுகிறது. கொட்டிக் கொட்டி கண்ணாடியில் முகம் பார்க்கிறது மழை. குமரி எஸ். நீலகண்டன்

வெளிச்சம்

This entry is part 12 of 48 in the series 11 டிசம்பர் 2011

அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி வெளியே தென்படாதது எங்கு, எப்பகுதியலது தேடினாலும் தென்படாதது அலங்காரங்களற்ற விழிகளில் இருளை விடவும் அனேகமானவை வெளிச்சத்தில் மறைந்துபோகும் தென்படாமலேயே – இஸுரு சாமர சோமவீர தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

கோழியும் கழுகும்…

This entry is part 2 of 48 in the series 11 டிசம்பர் 2011

வறுத்தெடுக்க  மனிதன் கொத்திக் குடிக்கப்  பாம்பு இயற்கையும்  சிதைக்க…. உறக்கம் விற்று திசையோடு தவமிருக்கிறது காக்கும் அடைக்காய். ஆகாயக் காவலன் கண்களில் மிஞ்சிப் பொரித்த ஒற்றைக் குஞ்சை உறிஞ்சும் மரணம். அருக்கனையே மறைக்கும் அதிகாரம் வானில் அடங்கினால் அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு. இறகு இத்தினிதான் எம்பி எதிர்க்கிறது இருப்பு இருக்கும்வரை!!! ஹேமா(சுவிஸ்)