வெளிறிய கோடை இலைகளே.. வறண்டு போன நடை பாதைகளே.. நீருடை பூணும் கானல்களே.. ரத்தமற்று சுருங்கிப் போன நதி தமநிகளே.. கருகி விழுந்த பூவிதழ்களே.. எனதிந்த வெற்றுக் காகிதங்களிடம் இனிவரும் வசந்தத்தின் பெயரை மட்டும் சொல்லுங்கள்.. * ***
1. சும்மா கிடந்த காற்றை சுழட்டி சுற்றுகிறது மின்விசிறி தாள்களுக் கிடையே நுழைந்து வழிந்தோடி ஆடைகளை அசைவித்து திரைச்சீலைக்கு பின்னால் ஒளிந்து விளையாடும் குட்டிகள் தீண்டிவிடாமல் எரியும் சுடரொன்று கண்ணாடிச் சுவர்களுக்குள் சிரிக்கிறது சிமிட்டுகிறது 2. காற்றில் கயிறு திரித்து உள்ளே இறங்கினேன் பிடி இறுக இளகிய கயிறு நூலானது நூல் பிடித்து ஆழம் போனேன் சேர்ந்த இடத்தில் பிடி இல்லை நூலும் இல்லை கால நேரம் தெரியவில்லை இடமே இல்லை இமையற்ற கண்ணொன்று விழித்திருந்தது.
“கடைவீதிப் பக்கம் நான் செல்லும் போது திருவாளர் பிதற்றுவாய் ஒவ்வொரு கடை வாசலிலும் நின்று போவோர் வருவோரைப் பற்றி வக்கணை அடிப்பார். பிதற்றுவாயன் அவரைப் பின்பற்றிச் செல்வதையும் நான் அவரது மௌன முகத்திலே கண்டிருக்கிறேன். பொது மக்களுக்கு ஆட்டிப் படைக்கும் அவன் இருக்கை தெரிவதில்லை.” கலில் கிப்ரான். (Mister Gabber) +++++++++++++++ காரணம் (Reasoning) +++++++++++++++ உன்னை நீயே கண்காணித்துக் கொள்வாய் ஓர் எதிரியாய் உன்னைப் பாவித்து ! பிறரை நீ ஆள முடியாது ! […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உலகு முழுதும் சுற்றித் தேடிஓடாதே ஒரு குகையைக் கண்டு ஒளிந்து கொள்ள ! ஒளிந்திருக்கும் கடும் விலங்கு ஒவ்வோர் குகையிலும் ! எலிப் பொந்தில் நீ வசித்தால் ஒரு பூனைக் கால் நகம் உனைப் பிறாண்டி விடலாம் ! உண்மை யான ஓய்வு உனக்கு வருவது நீ இறையுடன் தனியாய் உள்ள போது ! ++++++++++++ உனக்கொரு முகவரி […]
சாதாரணமாக துவங்கிய ஒரு நாளின் பகல் பொழுதில் அலுவலக சிற்றுண்டி சாலையில் கல்லூரி கால நண்பனை 15 ஆண்டுகளுக்குப் பின் எதேச்சையாக சந்தித்தேன் சிரிக்க சிரிக்க பேசினோம் கடற்கரைக்குப் போவது என்று முடிவானது தத்தம் மனைவிக்கு அலைபேசியில் அழைத்து இரவு சாப்பாடு வெளியில் என்றும் தாமதமாக வீடு திரும்புவோம் என்றும் தெரிவித்தோம் குழந்தை, குடும்பம், வேலை, கல்லூரி ஆசிரியர் ராமசாமி, கல்லூரி கால நண்பர்கள் சத்திய நாரயணன், அருண்குமார், கருப்பையா, நண்பிகள் பற்றிய சுவாரசியங்கள் எல்லாம் […]
1) மே பதினெட்டோடு போகட்டும். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ புதைத்துவிட்டால் உயிர்க்காது என்றுதான் நினைக்கிறீர்கள் உயிர்மூச்சில் சிலுவை அறையப்பட்டதை அறியாத நீங்கள். மழையிலும் வெயிலிலும் குளிக்கும் மலரென வாழ இசைத்தீர்கள் பழக்கப்பட்டுவிட்டோம் முட்களையும் பூக்களாக்க பயமில்லை இப்போ வாசனையாகிறது இரத்தவாடைகூட. சுவைக்கும் உணவுக்குமான தூரமாய் எங்கள் தேவைகளை உங்கள் இடைவெளிகளே நிதானித்து கடத்தி இருத்தி தீர்மானிக்கிறது. மாற்றிய சரித்திரமும் மகாவம்சமும் கருவுரும் தலைமுறை தலைசுமக்க காலகாலமாய் விலகாத வெறுப்போடு. எனவே…… வேண்டாம் இனியும் ஒரு நாள் மலரும் நம் […]
10/5/2011 தேர் ஓடிய தடம் …… உற்று உற்று பார்க்கிறோம் இந்த தடத்தை . ஏதோ ஒரு “ஆணை” ஆனை போல ஓடி ஓடி சர்க்கஸ் காட்டியது . கண்ணுக்கு தெரியாத ஒரு சாட்டை ” நான் ஆணையிட்டால்” பாணியில் அதை இயக்கியது . அந்த ஆனை வலம் வந்த போது சில வெங்கலக்கடைகள் கல கலத்தன . தேர்தல் காட்சிகளும் களை கட்டின . சாதாரணமாய் இருந்த அதிகாரிகள் ” ஜேம்ஸ் பாண்டு”கள் ஆகினார்கள். […]
வரும்போதே எரிச்சல் மண்டும். குட்டிப் பிசாசுகள் வாலில்லா குரங்குகளென திட்டிக் கொட்டுவாள் மனைவி. பிள்ளைகள்மீது பிரியம்தானெனினும் அட்டகாசம் பார்க்க அப்படித் தோன்றும். விடுமுறை கழிக்க உறவினர் வீடு சென்ற குழந்தைகள் மறந்து வெளியில் சென்று திரும்புகையில் மவுன வீடு கண்டு பதைக்கும் மனசு. செங்கல் சிமெண்டினால் ஆனது வீடெனினும் துடித்துக் கொண்டிருக்கிறது குழந்தைகள் சப்தங்களில் வீட்டின் உயிர்.
ஒரு மௌனத்தை எவ்வளவு நேரம் சுமப்பது உன் பொய்களையும் கனவுகளையும் போதையாய் புணர்ந்த வலிகளோடு … பெருத்த பாலைவனங்களில் உடைந்த பீரங்கிகள் சொல்லும் மௌனங்களை உரசிப் பார்த்ததுண்டா நீ ? முழுமையின் பிரவாகத்தில் ஒரு புள்ளியை தனக்குள் புதைத்து புளுங்கியதுண்டா நீ ? தனிமை குவிந்திருந்தும் மேலோட்டமாய் ஒரு இரைச்சலுக்குள் சலனப்பட்டதுண்டா நீ ? பாலைவனத்தின் கள்ளிச் செடியில் வடியும் , கடைசி சொட்டு மௌனத்தை புசித்து செல் ! அல்லது ஒரு ஆணின் செருக்கோடு […]
தேடுதல் எளிதாக இல்லை தொலைத்த நானும் தொலைந்து போன நீயும் தனித் தனியாக தேடும் பொழுது எட்டநின்று பார்த்தது காதல் …. களித்த காலம் கழிந்து போனதில் எச்ச விகுதிகளில் தொக்கி நிற்கிறது காலம் மற்றும் நான் தூர்ந்து போன கனவுகள் இன்று சக்கரை பூச்சுடன் தொலைந்து போன புன்னகை உதட்டளவில் பூக்கின்றது சிதறிப் போன கண்ணாடி கனவுகளில் யாருக்கும் காயம் இல்லை உடலளவில் ….