வேலி நாடகம் – சென்னை செப்டம்பர் 19, அலயன்ஸ் ஃப்ரான்ஸேஸ்

This entry is part 27 of 27 in the series 6 செப்டம்பர் 2015

https://www.facebook.com/events/861853690566682/ Theatre First presents வேலி – A Tamil Play Saturday, September 19at 7:00pm in UTC+05:30 Alliance Française of Madras near College Road, Chennai, Tamil Nadu 600006, Chennai, India 600006 Original play in Bengali : ‘Palok’ by Sudipta Bhawmik Directed by : Pranab Basu Translated in English by : Sunipa Basu Produced and Translated in Tamil […]

கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து)

This entry is part 2 of 27 in the series 6 செப்டம்பர் 2015

கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து) மொழியற்ற உலா   தவழும் பூமியை நெருடும் ஈரக் கிரணங்கள் இளங்காலை. முத்துக்கள்  பூத்த மொட்டுக்கள் இலைகள  சூடிக் கொண்டு சிரித்துப் பார்க்கும்;சின்ன வாய் திறந்து வானவில்லைத் தரித்த மரங்கள் தோகை விரிக்கும் வழியெங்கும். வழக்கத்திற்கு வளைந்து கொடுக்காத வானம் முகில்களால் எழுதி எழுதிக் கலைக்கும் மொழியற்ற கவிதைகள்.. பொழுதற்று. வேளைக்கு ஒரு நிறம் பூசித் தன்னழகை விண்ணில் தேடியவாறு அண்ணாந்து கிடக்கும் கடல். காற்றில் தள்ளாடும் மலரென மழலைகள் புல்வெளியில் கூவிக் குதிக்கும் ஆனந்தத்தால் இயற்கையின் […]

கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்

This entry is part 3 of 27 in the series 6 செப்டம்பர் 2015

லதா ராமகிருஷ்ணன் கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவில் ஒரு அருங்கவிதை!) இன்றளவும் தொடர்ந்து கவிதை, கதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். எழுத்தின் மூலமாக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர். அதனாலேயே பல விருதுகளும் அங்கீகாரங்களும் இவரைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. விளக்கு விருது கவிஞர் வைதீஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அம்ருதா இலக்கிய இதழில் கவிஞர் […]

தமிழ் இலக்கண உருவாக்கத்திற்கான கோட்பாடுகளும் சமஸ்கிருத இலக்கணங்களின் தாக்கமும்

This entry is part 4 of 27 in the series 6 செப்டம்பர் 2015

முனைவர்.பா.சங்கரேஸ்வரி, உதவிப் பேராசிரியர், தமிழியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21. ஒரு மொழியில் எழுதப்படும் இலக்கண நூல் அம்மொழியை மட்டும் அடிப்படையாக வைத்துப் படைக்கப்பெறுவதில்லை. அவ்விலக்கண நூல் எழுதப் பெற்ற கால அரசியல், சமூகச் சூழல் ஆகியவற்றோடும் தொடர்புடையவையாகும். உலகின் செவ்வியல் மொழிகளாகவும் தொன்மை மொழிகளாகவும் கிரீக், இலத்தீன், சீனம், எபிரேயம் தமிழ், சமஸ்கிருதம் ஆகியன கருதப்படுகின்றன. இவற்றுள் தமிழும், சமஸ்கிருதமும் இந்தியத் துணைக் கண்டத்தில் செழித்து வளர்ந்தவை. இவ்விரண்டின் இலக்கண, இலக்கிய […]

உயிர்க்கவசம்

This entry is part 5 of 27 in the series 6 செப்டம்பர் 2015

– சேயோன் யாழ்வேந்தன் ஏழைகளின் வாழ்க்கைக்கு பாதுக்காப்பில்லையென்ற இழிநிலை இனி இல்லை “ஹெல்மெட் போட்டுக்கொள்ளுங்கள்” நீங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளின் மீதே அதை அணிந்துகொள்ளலாமென்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது இதோ வழக்கமாய் மேம்பாலத்தினடியில் நிற்கும் சித்தாள் லிப்டுக்காய் காத்திருக்கிறாள் கையில் ஹெல்மெட்டோடு seyonyazhvaendhan@gmail.com

குடிக்க ஓர் இடம்

This entry is part 6 of 27 in the series 6 செப்டம்பர் 2015

வளவ. துரையன் “நாளை இந்த இடத்தை மாத்திட வேண்டியதுதான்” என்றான் வேலு. குடித்து முடித்த தன் தம்ளரைக் கீழே வைத்த மோகன் நிமிர்ந்து பார்த்தான். வேலு தன் கையில் இருந்த தம்ளரில் பாதிதான் காலி செய்திருந்தான். பக்கத்தில் இருந்த பாட்டிலில் சரிபாதி இன்னும் இருந்தது. ஆளுக்கு இரண்டு தம்ளர்; அதுதான் அவர்கள் கணக்கு; கண்கள் சிவக்காமல், கால்களைத் ,தடுமாற வைக்காமல், யாரையும் சந்தேகம் கொள்ள வைக்காமல் இருக்க அந்த அளவுதான் சரியாக இருக்கும் என்று அந்த அளவைக் […]

சுந்தரி காண்டம் 4. ஜதி தாள சுந்தரி

This entry is part 7 of 27 in the series 6 செப்டம்பர் 2015

சிறகு இரவிச்சந்திரன். 0 பதினாறு குடித்தனங்களில் பக்க வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் வீடு ஒன்று உண்டென்றால் அது கமலா டீச்சர் வீடுதான். கமலா டீச்சர் ஒல்லியாக இருப்பாள். சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். ஒல்லி உடம்பு அதை இன்னும் கூடுதல் உயரமாகக் காட்டியது. கமலா டீச்சர் கல்யாணம் ஆகாத முதிர்க் கன்னி. கிட்டத்தட்ட நாற்பது வயதைக் கடந்து கொண்டிருப்பவர். சாமுத்திரிகா லட்சணங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லும் எதையும் அவளிடம் பார்க்க முடியாது. கொஞ்சம் களையான முகத்தைக் கூட […]

ராசி

This entry is part 8 of 27 in the series 6 செப்டம்பர் 2015

-எஸ்ஸார்சி .அவனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன் முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.வீடு வாடகைக்கு -அடைப்பில் ‘வெஜ்’ என வெள்ளைத்தாளில் ஸ்கெச் பேனா கொண்டு எழுதி காம்பவுண்ட் சுவரில் ஒட்டினான்.மறக்காமல் தன் தொலைபேசி எண்ணையும் அதனில் எழுதி வைத்துவிட்டுத்தான் சமுத்திரகுப்பம் சென்றான். அவன் அலுவலகத்தொலைபேசி எண்ணை எழுதி உடன் பி […]

கோணல் மன(ர)ங்கள்

This entry is part 9 of 27 in the series 6 செப்டம்பர் 2015

என்.துளசி அண்ணாமலை “இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ” கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்த இராசாத்திக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது. அந்த வயதுக்கே வரக்கூடிய முட்டிவலி ஒரு நிமிடம் அவளை நகரவிடவில்லை. ஆனால் அதற்குள் மாமியாரிடமிருந்து இரு அழைப்புகள் வந்து விட்டன. “இதோ வந்துட்டேம்மா” என்று குரல் கொடுத்துக் கொண்டே கூடத்துக்கு வர, சன் தொலைக்காட்சியில் சக்தி விடைபெற்றுக் கொண்டிருந்தாள். அடுத்த நிகழ்ச்சியான திரைப்படத்தைக்காண இராசாத்தியின் கணவர் குமரன் […]