அசூரச் சூரியச் சக்தி உற்பத்தி நிறுவகம் இந்திய மாநில எரிசக்தி வாரியத்துக்கு 2000 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையங்கள் அமைக்கத் திட்டம்

This entry is part 5 of 5 in the series 22 டிசம்பர் 2019

Posted on December 22, 2019 New material to pave the way for lead-free solar panels சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க,நூறு மெகாவாட் பேராற்றல் உடையஓரரும் பெரும் மின்கலம்தாரணியில் உருவாகி விட்டதுவாணிபப் படைப்புச் சாதனமாய் !தட்டாம்பூச்சி போல் பறக்கவானூர்திக்குப் பயன்படப் போகுது !பரிதியின் சக்தியால் பறக்கும் !எரி வாயு இல்லாமல் பறக்கும் !பகலிலும் இரவிலும் பறக்கும் !பசுமைப் புரட்சியில் உதித்தது !பாதுகாப்பாய் இயங்குவது !நாற்பது குதிரைச் […]

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 3 of 5 in the series 22 டிசம்பர் 2019

நில் கவனி செல் இந்த நாட்டிலேயே பிறந்துவளர்ந்து முடிந்தும் போகிறவர்கள் வீதியோரங்களில் பிறந்து வீதிவீதியாய் அலைந்து அன்றாடம் பிச்சையெடுத்துப் பிழைக்கும் என்னைப் போன்றவர்கள் ஆயிரமாயிரம் இங்கே. இன்றளவும் எங்களுக்கு வாக்குரிமையில்லை; இந்தியர்களல்லவா நாங்கள்? இன்தமிழர்களல்லவா? இல்லையெனில் நாங்கள் யார்? இது பற்றி யோசிக்க அரசியல்வாதிகளுக்கோ மனிதநேயவாதிகளுக்கோ சமூகப்புரட்சியாளர்களுக்கோ இனவாதப் போராளிகளுக்கோ இந்திய வெறுப்பாளர்களுக்கோ இவரொத்த இன்னுமின்னும் பேருக்கோ ஏன் இன்றுவரை மனமில்லை? ஒருவேளை எல்லா அரசிலும் நாங்கள் இருந்தவாறிருப்பதாலா? சாதி சமய இன நிறங்களைக் கடந்து நாங்கள் […]

செல்லம்மாவின் செல்லப்பிள்ளை

This entry is part 4 of 5 in the series 22 டிசம்பர் 2019

குமரி எஸ்.நீலகண்டன் மகாகவி பாரதியின் பேத்தி டாக்டர் விஜயபாரதி தனது 81 வது வயதில் கனடாவில் காலமானார். பாரதியின் மூத்த மகள் தங்கம்மா பாரதியின் புதல்வி. செல்லம்மா பாரதியின் வாய்வழி பாரதியின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நான் சென்னை வந்த புதிது. விஜயபாரதி குடும்பம் கனடாவிலிருந்து விடுமுறையில் பாரதியின் கவிதைகளின் செம்பதிப்பை வெளியிடும் முயற்சியில் சென்னை வந்திருந்தனர். அப்போது அவர்கள் பாரதி பிறந்த எட்டயபுரத்திற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது அங்கே அவர்கள் சென்ற […]

கனடா தளிர் இதழின் ஆறாவது ஆண்டு விழா

This entry is part 1 of 5 in the series 22 டிசம்பர் 2019

கனடாவில் இருந்து வெளிவரும் தளிர் இதழின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள குயின்ஸ் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இளம் தலைமுறையினருக்காக இவர்கள் நடத்திய இசை, நடனப்போட்டியான ‘சலங்கையும் சங்கீதமும்’ என்ற நிகழ்வின் இறுதிச் சுற்றும் நேற்றையதினம் வெகு சிறப்பாக அந்த மண்டபத்தில் நடை பெற்றது இந்த நிகழ்வில் பார்வையாளர்கள், பெற்றோர்கள் என மண்டபம் நிறைந்த கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் என ஒரு விழாக்கோலம் பூண்ட மாபெரும் நிகழ்வு […]

பெரும்பான்மை கட்சியினரின் ஆட்சியா அல்லது வன்முறை கும்பலின் ஆட்சியா ?தீர்மானிக்க வேண்டிய நேரம்

This entry is part 2 of 5 in the series 22 டிசம்பர் 2019

பெரும்பான்மை கட்சியினரின் ஆட்சியா அல்லது வன்முறை கும்பலின் ஆட்சியா ? தீர்மானிக்க வேண்டிய நேரம் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும், விரிவான விவாதத்திற்கு பின் பிரச்சினைகள் பல கோணங்களில் அலசப்பட்டு, பின் வாக்கெடுப்பின் அடிப்படையில், குடியுரிமை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நாகரீகமான, ஜனநாயக அடிப்படையில், எடுக்கப்பட்ட முடிவு. ஜனநாயக சித்தாந்தத்தின் அணுகுமுறையில், பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற திட்டங்களையே அமல்படுத்தப்பட வேண்டும். மற்றவர்களும் இந்த முறையை ஒப்புக் கொண்டு செயற்பட வேண்டுயது அவசியம். நாட்டில் ஜனநாயகம் தழைக்க இந்த […]

குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.

This entry is part 8 of 8 in the series 15 டிசம்பர் 2019

2014ஆம் வருடத்துக்கு முன்னால், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, கிறிஸ்தவ, பார்ஸி, ஜெயின், புத்த மதத்தை சார்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட மசோதா லோக்சபாவிலும் ராஜ்ய சபாவிலும் நிறைவேறியிருக்கிறது. இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே. கவனிக்கவும், 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை. ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை. […]

குறுங்கவிதைகள்

This entry is part 5 of 8 in the series 15 டிசம்பர் 2019

மனம் போன போக்கில் இறையாலயத்தில் இறையாலயத்தில் இறைத் தொழுகை கசக்கி எறிந்த குப்பைத்தாள் ஒன்று கண்ணெதிரே எறிந்தவர்  ‘இல்லை’ என்கிறார் பார்த்தவர் ‘நீதான்’ என்கிறார் இருவருக்குமிடையே சைகைச் சண்டை சண்டைக்கான குப்பையை என் சட்டைப்பைக்குள் மறைத்தேன் சமாதானம்! சமரசம்!! அமைதி!!! இறையாலயத்தில் இறைத் தொழுகை சட்டை ஒரு சட்டை வாங்கினேன் நீலவான வண்ணம் வானத்துண்டொன்று மண்ணுக்கு வந்ததாம் புகழ்ந்தனர் சட்டையை அடுத்த நாள் வாடிக்கை  வெண்ணுடையோடு வண்ணச் சட்டையை வாளி நீரில் முக்கினேன் வண்ணம் கரைந்தது வெள்ளை  […]

சாது மிரண்டால்

This entry is part 6 of 8 in the series 15 டிசம்பர் 2019

பாவாடை சட்டை அணிந்த சிறுமிகள் நடுவே அழகான பூக்கள் சிரிக்கும்  ‘கவுன்’ அணிந்திருப்பார் சாவித்திரி. நீண்ட முடியுடன் இருக்கும் சிறுமிகள் நடுவே ‘க்ராப்’  வெட்டியிருப்பார் . கோதுமை மாலை, மாங்காய் தோடு என்று பளிச்சென்று இருப்பார், சாவித்திரி என்ற அந்த 10 வயது சிறுமி.  தாஞ்சூர் கிராமத்தில் நான்கு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு நடுவே பண்ணை வீடாகத்தான் சாவித்திரியின் அப்பா மருது அந்த வீட்டைக் கட்டினார்.  அந்த இடத்தின் ரம்மியம் அவரை வெகுவாகக் கவர அதையே வசிக்கும் […]

அமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்

This entry is part 7 of 8 in the series 15 டிசம்பர் 2019

Posted on December 15, 2019 Public Utility Commission Nevada, Approves 1190 MW of New Solar Energy and 590 MW of Additional Energy Storage [December 9, 2019] Renewable energy developer offers 125MW and 300MW solar farm projects in Texas [December 10, 2019] https://us.sunpower.com/commercial-solarhttps://www.youtube.com/watch?v=ZkR6Mb17Iu0சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++ சூரியக்கதிர் மின்சக்தி பரிமாறமுன்னூறு மெகாவாட் ஆற்றல் உள்ளஓரரும் பெரும் மின்சார நிலையம்தாரணியில் […]

இந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்

This entry is part 4 of 8 in the series 15 டிசம்பர் 2019

மிகப் பெரிய பொது உடைமை நாடாக விளங்கிவந்த சோவியத் ஒன்றியத்திலேயே கம்யூனிசம் எடுபடாமல் போயிற்று என்பது அண்மைக்கால வரலாற்று உண்மை என்பதை நாம் அறிவோம். மனிதர்களில் பேரும்பாலோர் நாணயமற்றவர்களாகவும், தன்னலக்காரர்களாகவும் இருக்கின்ற வரையில் எந்த “இசமும்” – அது எவ்வளவுதான் உயர்ந்த “இசமாக” இருந்தாலும் – எடுபடாது என்பதையே இது காட்டுவதாய்க் கொள்ளலாம். எந்த “இச”த்தின் மீதும் தனிப்பட்ட பற்று இல்லாமல் ஆராயத் தொடங்கினால் எல்லா “இசம்”களுமே சிறந்தவையே என்பது புலப்படும்.       முதலாளித்துவமும் சிறந்த ஒன்றே […]