வளவ. துரையன் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு இரவில் வருகையில் சிறு சலசலப்பும் சில்லென்று அடிமனத்தில் அச்சமூட்டும். அதுவும் கட்டைப்புளிய மரம் நெருங்க நெருங்க அதில் ஊசலாடிய கம்சலா உள்மனத்தில் உட்கார்ந்து கொள்வாள். அங்கிருக்கும் சுமைதாங்கிக்கல் அந்த இருட்டில் ஆறு பேர் நிற்பதாகத் தோன்றும். பகலெல்லாம் அதனடியில் பழம்பொறுக்கிச் சீட்டாடும் பாவிகள் எங்குதான் போனார்கள் என்று என்மனம் ஏசும். நடையை வேகமாகப் போட நான் நினைத்தாலும் கால்கள் பின்னலிடும். இத்தனைக்கும் புளியமரம் பக்கத்திலிருக்கும் வேப்பமரம்தான் எங்கள் குலதெய்வம்.
வளவ. துரையன் குப்பையைக்கிளறினால்தான்கோழிக்கு இரைகிடைக்கிறது.அடிமன ஆழத்தைஅவ்வப்போதுகிளறினால்மேலே வருவனசிலநேரம் துன்பங்கள்மட்டுமன்றி இன்பங்களும்.அதிகமாகக் கிளறுவதுஅனைவரது சினத்தையும்அடியோடு எழுப்பிவிட்டுஅருமை உறவும் நட்பும்அழிந்தொழியும் அன்றோ?இருந்தாலும்மேலே மிதக்கின்றபூக்களின்மினுமினுப்பை நம்பலாமா?அடியில்தானேகசடுகளும் அமிழ்ந்துள்ளன.நல்ல கவிதைஇல்லையெனஒதுக்கித் தள்ளியதைநாள்கழித்து இன்னும்நன்றாகக்கிளறிப் பார்த்தால்நற்கவிதையாகத் தோன்றுமாம்.
வளவ. துரையன் மெல்லிய பனிப்போர்வையாய்மேலெழுந்து மூடுகிறதுஉன் நினைவு.இத்தனை நாள்கொட்டியநேரக் கொடுக்குகள்விலகுகின்றன.தவறிவிழுந்தஅக்குட்டிக்குக்கொழுகொம்பொன்றுகிடைத்து விட்டதுஆனால்எதுவும் நடக்கலாம்.விழுவோமா வேண்டாமோஎன்று நினைத்துவிழும் இத்தூறல்கள்நிற்பதற்குள்அது நடந்து விடும்.அந்தச் சுனாமிவருவதற்குள் இப்போதுஅமைதி அலை வீசுகிறது.அதை அனுபவிப்போம்
வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.
நெடுநல்வாடை பத்துப் பாட்டு நூல்களில் ஏழாம் இடத்தில் வைத்து எண்ணப்படுவது நெடுநல்வாடை ஆகும். இதனைப் பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் எனும் புலவர் ஆவார். இந்நூலின் பாட்டுடைத் தலவனாக தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் திகழ்கிறார். இந்நூல் அகவற்பாவால் இயற்றப்பட்டதாகும். மொத்தம் 188 அடிகள்கொண்டு இது விளங்குகிறது. இந்நூலை இயற்றியவரின் இயற்பெயர் கீரன் என்பதாகும். ந என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச்சொல் சேர்த்து நக்கீரன் என வழங்கப்படுகிறது. திருமுருகாற்றுப்படையை இயற்றியவரும் இவரே. இவர் […]
பாச்சுடர் வளவ. துரையன் [திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி” இலக்கிய நோக்கில் எளிய உரை”-நூலாசிரியர் முனைவர் ஏ.வி. ரங்காச்சரியார்—வெளியீடு:அருள்மாரி அருளிச்செயல் ஆய்வகம், ஸ்ரீ வேங்கடார்ய குருகுலம், 151, மேல வீதி, சிதம்பரம், ஸ்ரீமந் நாதமுனிகள் 1200 அவதார ஆண்டு திருநக்ஷத்திர வைபவ வெளியீடு—பக்-409—விலை குறிப்பிடப்படவில்லை] இந்நூலின் தோரண வாயிலில் திருமங்கையாழ்வார் பாடியுள்ள பல்வகை இலக்கணத்துறைகளை முனைவர் ஏ.வி. ரங்காச்சாரியார் அவர்கள் விரிவாக எடுத்து வியந்தோதி இருக்கிறார். மாலை, பிள்ளைத் தமிழ், ஊடல், சாழல். அந்தாதி, […]
வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.
வளவ. துரையன் என் அம்மா அதிகமாகச்சிரிக்கமாட்டாள்.அவர் சிரித்துநான் பார்த்தது இல்லை.தொலைக்காட்சி நகைச்சுவைகள்அவருக்குத் துளிக்கூடச்சிரிப்பை வரவழைக்காது.என் அப்பா மிகவும்சத்தம் போட்டுச் சிரிப்பார்.என் அண்ணனோஎப்பொழுதும் புன்சிரிப்புதான்.அக்காவோஆடிக்கொண்டே சிரிப்பாள்.தாங்க இயலாமல்ஒருமுறை கேட்டதற்குஅம்மாசொன்னார்“நான்தான் சிரிப்பாசிரிக்கறேனே போதாதா?”
வளவ. துரையன் மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது கடந்த காலம் அன்று முதல் பார்வையில் நீ தந்த குளிர்மொழிதான் மனக்குகையில் உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது நினைத்து நினைத்து மறக்க முயல்கிறேன் நினைவுகளைப் போட்டுக் கசக்கிப் பிழிந்து கரும்பறைக்கும் இயந்திரமாக மனம் கசப்பு கொள்கிறது எல்லாம் காலியானாலும் சமையல் பாத்திரத்தின் அடியில் ஒட்டியிருக்கும் ஒரு சிறு சோற்றுப் பருக்கையாய் நீ அமர்ந்து கொண்டிருக்கிறாய் அதனால் பசியாறாது என்று தெரிந்திருந்தும் […]
வளவ. துரையன் வெயிலில் நடந்து வாடும்போதுதான் நினைவுக்கு வருகிறது தோட்டத்துச் செடிக்கு நீர் ஊற்றாதது நடும்போதே நான் சொன்னேன்ல தெனமும் வந்து தண்ணி ஊத்தணும்னு அம்மா கத்துவார் ஆனால் நம்பிக்கை இருக்கிறது திட்டித் திட்டி எனக்குச் சோறு போடுவதுபோல அம்மா அதற்குத் தண்ணீர் ஊற்றி இருப்பார் நான் என்னை நம்பியா வைத்தேன் அம்மாவை நம்பித்தானே அம்மா இல்லையா?