‘கவிதைகள்’ படைப்புகள்
பல்லுயிர் ஓம்பல்
வறுமையில் இருக்கும் என்வயிற்றைக் காலியாக்குகிறேன். குதிரை கனைப்பு தளர்கிறது. வயிறு காலியானால் வாய் எல்லாம் வேள்வி செய்யும் ஒரு குவளை மதுகொண்டு நிரப்பிப்பார் தென்றலில் மயங்காமல் தேடித்தேடிக் கொண்டுவா. பல்லுயிர் ஓம்பப்பழகு. யானையின் துதிக்கையில் தானமாகும் தானியங்கள் களிறுகள் எப்போதும் அசைந்து அசைந்து வயிற்றை [Read More]
மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்
மூலம் : ஜரோஸ்லவ் செய்ஃர்ட் ஆங்கிலம் : எவால்ட் ஓசர்ஸ் தமிழில் : தி.இரா.மீனா கவிஞனாக இருப்பதென்பது வாழ்க்கை நமக்குத் தரமுடிகிற பூமியின் மிக அழகான விஷயங்கள் இசையும் கவிதையும் என்று எனக்கு பலகாலங்களுக்கு முன்பே வாழ்க்கை கற்றுத்தந்தது. நிச்சயமாக காதல் நீங்கலாகத்தான். விருசிலிக்கி இறந்த ஆண்டில் இம்பீரியல் அச்சு மையம் பிரசுரித்த ஒரு பழைய பாடப் புத்தகத்தில் [Read More]
மூட முடியாத ஜன்னல்
எங்கேகின வெளியில் புறாக்கள்? சப்திக்கிறதே சடுதியில் மழை புறாக்கள் சிறகடிப்பது போல். மழையோடு மழையாய் மறைந்தனவா அவை? எப்போதும் என்னறையின் ஜன்னலின் பின் அடையும் அவை காணோம். அறை ஜன்னல் திறந்து பார்க்கலாம். ஆனால், எப்படி அறை ஜன்னல் மறைத்துப் பொழியும் நீர் ஜன்னலைத் திறப்பது? மழை ஓய்ந்தால் நீர் ஜன்னல் திறக்கலாம். மழை ஓயத் திறக்க நீர் ஜன்னல் காணோம். எப்போதும் திறக்காத என் அறை [Read More]
நான்கு கவிதைகள்
பின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென வேண்டி நிற்பதுவே வேண்டலின் மீது படர்ந்திருக்கும் பற்றுத்தான். ஆசையை அழித்து விடு என்று பறைவதில் ஒளிந்திருப்பதும் ஆசையின் ஒலியன்றோ? இயல்பு வனத்தில் மேய்வது இனத்தின் இயல்பு. பிரித்துக் காட்டுவது அறிவின் தாக்கம். விமர்சகன் அந்தக் கண்ணாடியின் முன்நின்றவர்கள் தங்களைப் பார்த்து விட்டு ரசம் போய்விட்டதென்றார்கள். [Read More]
கவிதையும் ரசனையும் – 9
அழகியசிங்கர் இந்தப் பகுதியில் இப்போது எழுதப் போவது பேயோன் கவிதைகள் பற்றி. ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற புத்தகம் 2016ல் வெளிவந்துள்ளது. அதில் அவருடைய எல்லாக் கவிதைகளையும் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள். அதில் ஒரு வேடிக்கையான கவிதையைப் பற்றி இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். [Read More]
இருப்பதோடு இரு
ஒரு வண்டு சிலந்தியிடம் சொன்னது ‘உன்னைப்போல் இருந்துண்ணவே ஆசை எனக்கும் – ஆனால் வலை செய்யும் கலை அறியேனே’ சிலந்தி வண்டிடம் சொன்னது ‘சும்மா இருப்பது சோம் பேறித்தனம் பறந்துண்ணவே ஆசை எனக்கு – ஆனால் றெக்கைகள் இல்லையே’ இறைவனிடம் சென்றன இரண்டும் கேட்ட வரங்களைத் தந்தான் இறைவன் வலைபின்னியது வண்டு பறந்தது சிலந்தி ஒரு நாள் கூடாத இடத்தில் கூடுகட்டி பறவை செத்தது பறக்கக் [Read More]
திருநீலகண்டர்
அவன் உணவு மேஜையில் அவனுக்கென்று தயாரிக்கப்பட்ட விஷ உணவை அவன் அடிக்கடி உண்டு தீர்க்கிறான் அவனைச் சிறைப்படுத்தும் பிரச்சனைகள் பின்னர் அவன் காலடியில் மிதிபடுகின்றன வெட்டப்பட்ட சிறகுகள் அவனுக்கு மட்டும் மீண்டும் வளர்ந்துவிடுகின்றன அவ்வப்போது துயரங்களை உள்வாங்கி அவன் சீரழித்து வாழ்கிறான் கிட்டாதனவற்றின் பட்டியலை அவன் உதறிவிட்டு நடக்கிறான் —- இதோ இன்னும்கூட [Read More]
கோடுகள்
அந்தக் கவிஞன் கோடுகளை முக்கியமாக நினக்கிறான். அவன் இணைகோடுகள் என எண்ணிக் கரம் கோர்த்தவை குறுக்கு வெட்டுக் கோடுகளாய் மாறியது அவனுக்கு ஒரு சோகம். மணமக்களை இணைகோடுகளாய் என்று வாழ்த்துவது என்றுமே சேர முடியாதவர்கள் என்றுதான் பொருள்படும். அப்படி வாழ்த்தப்பட்டவர்கள் இன்று வழக்கு மன்றப்படியில் நிற்கிறார்கள். தண்டவாளங்களும் மேலே தொங்கும் மின்சாரக் கம்பிகளும்தான் [Read More]
நடை
மருத்துவர் அவனைக் காலையில் நடக்கச் சொல்லி விட்டார் நோயில்லை தற்காப்புதான் நடக்கும்போதும் சிந்திக்க வேண்டும் என்பது அவன் எண்ணம் அப்போது புதிய கருத்துகளும் கவிதைகளும் தோன்றும் ஆனால் சரியாக நடக்க வேண்டும் நாம் சரியாக நடந்தாலும் வாகனங்கள் மீது கவனம் தேவை. காலைநடையில்தானே இப்போதெல்லாம் வெட்டுகிறார்கள் வலப்புறம் நடப்பதுதான் சிறந்தது என்பார் ஒரு சிலர் நடை என்றால் [Read More]
மொழி பெயர்ப்பு கவிதைகள் ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ]
மொழிபெயர்ப்பு : மூலம் : ஜிசினா மெல்ப் தமிழில் : தி.இரா.மீனா சில சமயங்களில் மழை பெய்யும்போது இளம்பருவத்தில் தனிமையிலிருக்கும் போது மனிதர்களுக்கு ஏன் ஆடை வேண்டுமென்று வியப்படைந்த தருணங்களை நினைத்து, சில சமயங்களில் மழை பெய்யும் போது எனக்குள் நான் சிரித்துக் கொள்கிறேன். எப்போது நான் பெரியவனாவேன் நாளை நான் பெரியவனாவேன்’ என்று கத்திக் கொண்டே [Read More]