author

உடல்மொழியின் கலை

This entry is part 6 of 8 in the series 22 செப்டம்பர் 2019

_ வெளி ரங்கராஜன் எழுதி சமீபத்தில் வெளியாகியிருக்கும் கலை, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு குறித்து…. லதா ராமகிருஷ்ணன் புத்தக அச்சாக்கம் நேர்த்தியாக இருக்கிறது. குறைவான அச்சுப் பிழைகளுக்காகவும், நேர்த்தியான அட்டை வடிவமைப்புக்காகவும் போதிவனம் பதிப்பகம் பாராட்டுக்குரியது. இந்தக் கட்டுரைத்தொகுப்பில் சிறிய கட்டுரைகளும் நீளமான கட்டுரைகளுமாக 22 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இலக்கியம், நிகழ்த்துகலை சார்ந்த கட்டுரைகள். ஏழெட்டு மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உட்பட. கட்டுரைகளில் வெளி ரங்கராஜனுக்கே உரிய நிதான தொனியும் கருத்துகளை முன்வைப்பதில் அவர் வெளிப்படுத்தும் […]

THE CONDEMNED (2007 American Action Film) and THE BIGG BOSS

This entry is part 3 of 8 in the series 22 செப்டம்பர் 2019

_ லதா ராமகிருஷ்ணன் முன்பொரு நாள் யதேச்சையாக தொலைக்காட்சி ஆங்கில சேனலில் பார்க்கக் கிடைத்த படம் THE CONDEMNED. கதாநாயகன் ஜாக் கான்ராட் மரண தண்டனைக் கைதியாக ஊழல்மிக்க சால்வடார் நாட்டுச் சிறையில் இருக்கிறான். (படம் பார்த்து நிறைய வருடங்களாகிவிட்டன என்பதால் கதையின் விவரங்களைத் துல்லியமாக நினைவிலிருந்து தர இயலவில்லை). ஒரு தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் புதிய பரபரப்பான, ‘உலகெங்கும் முதல் முறையாக’க் காண்பிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி லாபம் தேடும் வியாபார நோக்கோடு ஜாக்கையும், அவனைப் […]

பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்

This entry is part 8 of 10 in the series 15 செப்டம்பர் 2019

_ லதா ராமகிருஷ்ணன் (Treasurer _ Welfare Foundation of the Blind) ‘பார்வையற்றவன்’ என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நண்பரின் சமீபத்திய பதிவு ஒன்று முக்கியமானது. அதில் நிறைய பேருக்குத் தெரியாத, எனில் அவசியம் தெரியவேண்டிய ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார் அவர். அதிலிருந்து சில பத்திகள் கீழே தரப்பட்டுள்ளன: ”தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். அவர்களின் வாசிப்பிற்கு அமேசான் கிண்டில் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது என சொல்லலாம். அச்சு புத்தகங்களை வாசிக்க […]

சொல்லும் செயலும்

This entry is part 1 of 11 in the series 8 செப்டம்பர் 2019

லதா ராமகிருஷ்ணன் ”எங்கள் அலுவலகத்திற்கு ஓர் எழுத்தாளர் (பெண்) வந்திருந்தார். அவர் எங்களை யெல்லாம் பார்த்து எளிமையாக இருக்கச் சொன்னார். ஆனால் அவர் கெட்டிச் சரிகை பட்டுப்புடவையணிந்து தங்க நகை களோடு வந்திருந்தார்” என்று அம்மா வேலையிலி ருந்த சமயம் ஒருமுறை கூறினார். “எழுந்து நின்று கேட்கவேண்டியதுதானே” என்றேன். ’ஏதோ, எங்கள் அழைப்பின் பேரில் விருந்தினராக வந்தவராயிற்றே என்று என்னைப்போல் சிலர் வாளா விருந்தார்கள். நிறைய பேர் அவரை வாயைப்பிளந்து பார்த்துக்கொண் டிருந்தார்கள். ஆனால், எளிமையாயிருப்பவர்கள் எளிமையைப் […]

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 9 of 11 in the series 18 ஆகஸ்ட் 2019

NO MEANS……? ’NO MEANS NO’ என்று ஒரு படம் சொல்கிறதென்கிறார்கள் ’NO MEANS YES’ என்று  நீலம் பச்சை சிவப்பு மல்ட்டி கலர்களில்  90 விழுக்காடு படங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன  காலங்காலமாய். NO என்றும் YES என்றும் விதவிதமாய்ப் பொருள்பெயர்த்தபடி  NOக்கும் YESக்கும் இடையில் வாழ்க்கையை சிக்கவைத்து சீரழித்து வேடிக்கை பார்க்கும் விபரீத விளம்பரங்களும்  வெட்கங்கெட்ட சீரியல்களும் சினிமாக்களும் ’சூப்பர்சிங்கர்’களும்….   2.விழுமியம் வெறும் வசனமாக… மச்சினிச்சியை அக்கா புருஷனின் இச்சைப்பொருளாய் காட்டும் பாட்டுகளும் படங்களும் விதவிதமாய்…  […]

பரவும் தொலைக்காட்சி நாடகங்கள் எனும் தொற்றுநோய்!

This entry is part 2 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

லதா ராமகிருஷ்ணன் விஜய் தொலைக்காட்சி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும் தொடர்நாடகத் தில் கடந்த வெள்ளியன்று திடீரென்று நாடகக் காட்சிகளின் மீது அவ்வப் போது பாம்பு ஊர்வதாய் ஒரு வாக்கியம் வழுக்கிக்கொண்டு சென்றது. அந்த வரியின் சாராம்சம் இதுதான். ‘இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குநிகழ்ச்சி. நாங்கள் எந்தவிதத்திலும் மூடநம்பிக்கைகளுக்குத் துணைபோகிறவர்கள் அல்ல. பகுத்தறிவாளர்கள் சேனல்களில் ஒளிபரப்பப்படும் நாடகங்களில் கடவு ளுக்கு இடமிருக்கிறதோ இல்லையோ(எல்லா நாடகங்களிலும் மருத்துவ மனை, கோயில், சிறை என்று சில இடங்கள் கண்டிப்பாக இடம்பெறும். […]

இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்

This entry is part 1 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

–லதா ராமகிருஷ்ணன் இராமாயணத்தில் கதாநாயகன் இராமன். இராவண னின் நிறைய நற்குணங்களை வால்மீகி எடுத்துக் காட்டி யிருந்தாலும் அவன் சீதையைக் கவர்ந்து சென்றது அந்தக் கதாபாத்திரத்தின் Tragic Flaw என்பதா கவே சித்தரித்திருப்பார். ஆனால், இங்கே ஏனோ நிறைய பேருக்கு இராவண னையே இராமாய ணத்தின் நாயகனாகக் காட்ட ஆர்வம். மனைவியை சந்தேகித்தான் என்று இராமனைக் கட்டங்கட்டி அடிப்பவர்கள், இன்னொருவன் மனைவியைக் கவர்ந்து சென்றதை இராவணனுக்கு சீதைமேல் உள்ள தீராக்காதலாக எளிதாகப் பகுத்து விடுகிறார்கள். சமீபத்தில் ஒரு […]

குழந்தைகளும் கவிஞர்களும்

This entry is part 8 of 8 in the series 21 ஜூலை 2019

லதா ராமகிருஷ்ணன் உங்களால்  பிரியப்பட்டு  பணியாற்றமுடியவில்லை பிடிக்காமல்தான் வேலைசெய்ய முடிகிறதென்றால் உங்கள் வேலையை விட்டுவிடுவதே மேல்.  கலீல் கிப்ரான் (*தமிழில் : லதா ராமகிருஷ்ணன்) கண்ணீர் சிந்தாத விவேகத்திலிருந்து என்னை அப்பால் தள்ளி வை. மனம்விட்டுச் சிரிக்காத தத்துவத்திலிருந்தும் குழந்தைகளின் எதிரில் தலைதாழத் தெரியாத மகிமையிலிருந்தும். (*தமிழில் – லதா ராமகிருஷ்ணன்) Shakespeare and Laozi(சீன தத்துவஞானி)க்குப் பின் கலீல் கிப்ரானுடைய  கவிதைத்தொகுப்பே எல்லாக் காலத்திலும் அதிகம் விற்பனையாகிறது. The Prophet 110 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இங்கே […]

குழந்தைகளும் கவிஞர்களும்

This entry is part 5 of 6 in the series 14 ஜூலை 2019

test லதா ராமகிருஷ்ணன் உங்களால்  பிரியப்பட்டு  பணியாற்றமுடியவில்லை பிடிக்காமல்தான் வேலைசெய்ய முடிகிறதென்றால் உங்கள் வேலையை விட்டுவிடுவதே மேல்.  கலீல் கிப்ரான் (*தமிழில் : லதா ராமகிருஷ்ணன்) கண்ணீர் சிந்தாத விவேகத்திலிருந்து என்னை அப்பால் தள்ளி வை. மனம்விட்டுச் சிரிக்காத தத்துவத்திலிருந்தும் குழந்தைகளின் எதிரில் தலைதாழத் தெரியாத மகிமையிலிருந்தும். (*தமிழில் – லதா ராமகிருஷ்ணன்) Shakespeare and Laozi(சீன தத்துவஞானி)க்குப் பின் கலீல் கிப்ரானுடைய  கவிதைத்தொகுப்பே எல்லாக் காலத்திலும் அதிகம் விற்பனையாகிறது. The Prophet 110 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. […]

இது எனதுகடல் THIS IS MY SEA கவிஞர் எம்.ஏ.ஷகியின் 20 கவிதைகள் மற்றும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இடம்பெறும் இருமொழித் தொகுப்பு

This entry is part 1 of 6 in the series 14 ஜூலை 2019

ஒற்றைப் பெற்றோராய் தனியாய் தன்னுடைய நான்கு குழந்தைக ளையும் பேணிப் பராமரித்து, தனக்குத் தெரிந்த தையற்கலையை வாழ்க்கைத் தொழிலாக வரித்துக்கொண்டு மார்பகப் புற்று நோயின் கொடிய வலி வேதனைகள், சிகிச்சை களைத் தாங்கிக்கொண்டு வாழ்ந்திருந்த கவிஞர் ஷகிக்கு கவிதை எழுதுதல் வலிநிவாரணமாக வும் வடிகாலாகவும் இருந்திருக் கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் கவிஞர் ஷகி 44 வயதே ஆகி யிருந்த நிலையில், அமரரானார். அவருடைய கவிதைகளின் வழி அவர் என்று வாழ்வார். திருமலை ஷகி என்றும் […]