வினாத்தொகுப்பு : பாரதி இளவேனில் ( அன்பாதவன் ) கணினி அச்சு, வலைப்பதிவு : சிறகு இரவிச்சந்திரன் வளவனூர் அ.ப. சுப்பிரமணியன் வளவ.துரையன் ஆனது எப்படி? அறுபதுகளில் நான் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்தபோது முதலில் ஈர்த்தவை மரபுக்கவிதைகள் தாம். அவற்றை எழுதி திண்டிவனம் குயில் இதழுக்கு அனுப்ப நினைத்தேன். அப்போது அறிமுகமான இலக்கிய நண்பர்கள் அனைவரும் திராவிட இயக்கத் தோழர்கள்.எனவே கடவுளின் பெயர் காட்டும் சொந்தப் பெயர் பிடிக்கவில்லை. புனைப்பெயர் வேண்டுமென எண்ணினேன். கிராமத்து […]
எட்டாம் ஆண்டு சிறப்பிதழாக இதழ் எண் 23 மலர்ந்திருக்கிறது. ஒரு பக்கம் தாண்டாத இலக்கிய இதழ் இது. இதழே ஒரு பக்கம் தான் என்று எண்ணி விடாதீர் கள். எந்த ஒரு படைப்பும் ஒரு பக்கத்துக்குள்ளே இருக்க வேண்டும் என்பது வரையறை. வெள்ளைத் தாளில் 24 பக்கங்கள் கொண்ட இதழ். ஒரே ஒரு விளம்பரம் மட்டும் உள் அட்டையில். விருதுநகரிலிருந்து ஜெ. விஜயலட்சுமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ் என்றாலும், முழுமையாக பின்னாலிருக்கும் சூத்திர தாரி செண்பகராஜன். […]
இரு மாத இதழான குறி பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அடுத்த இதழ் பிராம்ப்ட்டாக வந்து விட்டது. பச்சை நிறத்தில் சிகப்பு எழுத்துக்களுடன் அட்டையே அசத்துகிறது. தனியாக நீல பார்டரில் படைப்பாளிகளின் பெயர்கள். சபாஷ். கலைந்த கூந்தலுடன் கூடிய பெண்ணின் கோட்டோவியம் ( வரைந்தவர் ஜீவா ) எடுப்பாக இருக்கிறது. தேடி எடுத்த கதை பகுதியில் சோ. தர்மனின் ‘அஹிம்சை’ வந்திருக்கிறது. மைனா வளர்த்து அது இறந்து போக பைத்தியம் பிடித்தவர் போலாகும் அய்யா, கிளிக்குஞ்சு கிடைத்தவுடன் நார்மலாகிறார். […]
வளவ.துரையன் ஒளிவிடும் இலட்சியவாதம் ’’உண்மை மனிதர்களின் கதைகள்’’ எனும் அறிவிப்புடன் வெளிவந்திருக்கும் ஜெயமோகனின் சிறுகதைத்தொகுப்பு ‘’அறம்’’ புத்தகத்தை நேர்த்தியான முறையில் வெளியிட்டிருக்கும் ‘வம்சி பதிப்பகத்திற்குப் பாரட்டுகள். ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’’என்றுவாழாமல் கிடைத்த வாழ்வை ஒரு இலட்சியத்திற்காக வாழ்ந்து காட்டியவர்கல்ளை அடையாளம் காட்டி இருக்கிறார். எவ்வளவு உயர்ந்த மனிதராக இருப்பினும் அவர் பற்றிய பதிவை பிறந்தது படித்தது செய்தது இறந்தது என்று எழுதினால் வாசிக்கத் தோன்றும்.அப்படி இல்லாமல் அவரின் ஆளுமைகளை வெளிப்படுத்தும் வ வண்ணம் சிறுகதைகளாக […]
நீலகண்டன் எந்தவொரு இருப்பிற்குள்ளும் இன்னுமொரு இருப்பிற்கான வெறுப்பினை வைத்திருக்கும் இந்திய தமிழ் இருப்பினுள் இருந்து ரசூலின் கவிதைகளை வாசிக்க நேரிடுகிறது. வாக்கு,மனம்,காயம்,இவைகளை பெரும்பாலும் இந்துயிசமும்,அதன் அப்பட்டமான உட்கிடக்கையான சாதியும் கைப்பற்றிக் கொண்டதை எதிர்த்துப் போராடும் எனக்கும் அல்லது எவருக்கும் ரசூலின் கவிதைகள் மற்றமைகளுக்கான ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் இன்னுமொரு புதிய அனுபவத்தை தரத் தயாராய் இருக்கின்றன. தன்னிலிருந்து மற்றமையாக உயிர்த்தெழும் பெண்களின் சன்னமான,அதிநுட்பமான நினைவொலிகளை எழுப்பிக் கொண்டே இருக்கக் கூடியவை ரசூலின் கவிதைகள். குமரிமாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ரசூல் […]
தியத்தலாவ எச். எப். ரிஸ்னா (riznahalal@gmail.com) மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக 46 தலைப்புக்களை உள்ளடக்கி 275 பக்கங்களில் காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை என்ற திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் நூலை வாசித்தபோது எனக்குள் ஆச்சரியம். காரணம் (இதுவரை) தமிழில் திறனாய்வு சார்ந்த 23 நூல்களை இவர் வெளியிட்டிருக்கின்றமைதான். முதல் கட்டுரை பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் அவர்கள் சிங்களத்தில் எழுதியதன் மொழிபெயர்ப்பு ஆகும். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். அதைத் […]
“ஆஸ்டின்இல்லம்” சுஜாதாவின் குறுநாவல். பொதுவாய் சுஜாதா கதைகளில் மெசேஜ் இருக்காது என்பார்கள். அதில் பாதி உண்மை. பாதி பொய். சுஜாதா மெசேஜ் சொல்ல வேண்டும் என வலிந்து முனைவதில்லை. சில கதைகளில் நல்லதோர் மெசேஜ் இயல்பாய் இருக்கும். ஆஸ்டின் இல்லம் அத்தகைய ஓர் கதை. ஆஸ்டின் இல்லம் என்கிற பெயர் கொண்ட வீட்டில் ஒரு பெரிய கூட்டு குடும்பம் ஒன்றாக வசிக்கிறது. அந்த வீட்டின் ஓனர் ” பெரியப்பா”. அவரது சொந்தங்கள் பலவும் அந்த வீட்டிலும் அந்த […]
கல்வியின் மகத்துவம் யாரும் அறிந்ததே. புற உலக வாழ்க்கையில் மிகப் பெரிய சக்தி கல்வியறிவே. தெரிதலும், அறிதலும், புரிதலும் அவற்றை மனதில் இருத்தி ஒரு திசையைத் தேர்ந்தெடுத்து மேற் செல்லலும் தரும் பாதுகாப்பு இணையற்றது. இந்தப் பத்திரமே ஒரு சிறை மற்றும் தன்னளவில் ஒரு தேக்க நிலை என்னும் பரிமாணம் தென்படும் தருணம் ஆன்மீகத்தின் துவக்கமாக அமைகிறது. அனேகமாக அது ஒரு கர்வ பங்கம் அல்லது கையறு நிலையினின்று பிறக்கும். அப்படித் துவங்கும் ஆன்மீகம் பிடிபடும் கால […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதர்கள் பலவிதம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் மாறுபடுவர். சிலர் நடத்தையில் வேறுபடுவர். பழக்கவழக்கங்களில் சிலர் வேறுபடுவர். பேச்சாலும், செயலாலும் வேறுபடுவர். ஆனால் எந்நிலையிலும் மாறாது உண்மையாளராக நடப்பவர் சிலரே ஆவார். இவர்களை நீதிமான்கள், அறவோர் என்றும் பழிபாவத்திற்கு அஞ்சுபவர் என்றும் வழங்குவர். சிலரோ, பழிபாவங்களுக்கு அஞ்சாது இழிவான செயல்களில் ஈடுபடுவர். தாம் தவறு செய்தாலும் அதனை ஒத்துக் கொள்ளாது அதற்கு வேறொருவர்தான் காரணம் என்று கூறுவர். தவறினைச் […]
விருதுநகர் அருகிலிருக்கும், மல்லாங்கிணறு என்கிற கிராமத்திலிருந்து, பல ஆண்டுகளாக வருகிறது இந்த இதழ். இலக்கியம் எங்கோ இருப்பவர்களையெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இந்த இதழ் ஒரு சாட்சி. சிற்றிதழ்கள் தனிமனித முயற்சியிலேயே வெளிவருகின்றன. அதனால் விளம்பரம் எதுவும் வரக்கூடாது என்பதில் இன்னமும் பல இதழ்கள் பிடிவாதமாக இருக்கின்றன. அவர்களுக்கு விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நமது கையில் இப்போது இருக்கும் இதழ், 86வது இதழ். இதன் ஆசிரியர் சுந்தர்ராஜ். அவரே ஒரு அச்சகமும் வைத்திருக்கிறார். […]