ஒரு தேன் சிட்டுக்கு காத்து நிற்கின்றேன் மலர்களின் மடியில். வாழ்க்கை என்ன நாம் அழைத்தால் வருவதா! அதன் மடியில் நாம்தான் மண்டியிடுகின்றோம். ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு கதைச்சொல்லும் அதில் ஆனந்தமும் வரும் அழுகையும் வரும் எங்கோ தூரத்தில் தெரியும் வெளிச்சம் சிலருக்கு. அருகே வரும் சிலருக்கு. தினம்தினம் எழுந்து தினம்தினம் விழுந்து பயிரிட வந்துள்ளோம். காத்துக்கிடக்கும் காடும் மலையும் வனமும். நீ சம்சாரியாகவும் போகலாம் சந்நியாசியாகவும் மாறலாம் எல்லாம் ஒரு பெண் கையில் சக்தியாக காத்துக்கிடக்கும் வாழ்க்கை. […]
புரிபடாதவைகள் ஆயிரம் புரிந்தவைகள் சொற்பம் புரிந்தும் புரியாமலும் கடந்து கொண்டிருக்கிறோம் காதல் கொண்ட இரு உடல் எந்திரங்கள் விடுதலைக்கான யுத்தகளத்தில் நிற்கின்றன ஆழ்ந்த மானுடப் புரிதலை ஆயுதங்களாய் ஏந்தியிருக்கின்றன கனவு காண்பது மனசுக்கு நிம்மதி கவிதையில் கரைவது உயிருக்கு சந்தோஷம் கடும் வெயிலில் காலத்தைக் கடந்தாகணும் பறவை மனசுள் மாயக் கூண்டுகள் நிழலுள் தயங்கித் தயங்கி நுழைய எத்தனிக்கும் வெயில் பூவே இதயம் காலியாய் இருக்கிறது காதலாய் கசிந்துருகும் கனவாய் வாழ்வு நினைவுகள் சிறகடிக்கின்றன அம்புகளாய் துயரங்கள் […]
பொங்கும்அன்புநீருற்றாகநிற்காமல் இருந்ததுமனிதமெனவியாபித்து.அள்ளிச் சுவைத்ததில்மேவியநேசத்தைஅறியாமல்அடைத்துத் தாழிட்டவர்களைவெறுக்காமல்விரும்பச் சொல்கிறதுசான்றாக்கி மகிழ வைத்து.
——-வளவ. துரையன் இந்த ஆற்றங்கரையில் இருள் வரப்போகும் இச்சூழலில் என் சொற்களால் ஒரு நிலவை வரைந்து கொண்டிருக்கிறேன் அச்சந்திரனின் கிரணங்கள் வெண்மை பொழியத் தொடங்கிவிட்டன. உறவுகளின் கைவிடுதல்களுக்குப்பின் உள்ளம் எல்லாவற்றையும் குருதி நிறத்திலேயே காண்கிறது. குளுமையான இந்தக் காற்று கூட உடலைச் சிற்றுளிகளால் துளைப்பது போல எரித்துக் கொண்டிருக்கிறது. அறியாச் சிறுவனின் கைநூலை விட்டு அகன்று ஓடிவிட்ட பட்டமொன்று தத்திப் போகிறது. அவன் அருகே வரும்போது அது அவசரமாகப் பறப்பது போலவும் அதன்பின் அமைதியாக ஆழக்கிடப்பது […]
உப்பு, புளி,மிளகாய். (கவிதை) எஞ்சி நின்ற நாலு வார்த்தைகளும் வெளியேறிவிட்டன. கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட வாழ்க்கை உப்பு புளி மிளகாய் எதார்த்தத்தை பதார்த்த மொழியில் பேசின. காலாற நடந்து சென்று காட்டைக்காண முடியவில்லை. தொலைந்துப்போன வில்லைத்தேடி அர்ச்சுனர்களும் அழவில்லை. ஆகாயத்தை அண்ணாந்துப்பார்க்க அடுப்பங்கரை விடவில்லை. பெருங்காய டப்பாவில் எந்த கவிதையை தேட. ஒளவைக்கு என்னமோ அதியமான் கிடைத்தான். நெல்லிக்கனி கொடுத்தவள் முருகனிடம் முறையிட்டாள் திரும்பி வா! தமிழுக்கு உயிர் கொடு. கேட்டான் வேலவன் கிடைத்தது அருந்தமிழ் தவம். முருக்கப்ப […]
ரவி அல்லது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவர்களின் பேச்சுகளில் பகட்டுகளைத்தவிர வேறெதையும் காணமுடியாமல் இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் சலிப்பற்று தேர்ந்த பயிற்சி எடுத்தவர்களாக பேசிக் கொண்டே இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் தன்னை அறிவாளியாக காட்டிக் கொண்டது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் பரிவாளர்களாக தன்னைக் காட்ட முயன்றது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் கூடும்பொழுதெல்லாம் புறம் பேசுவதில் திளைத்து இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது அவர்கள் கூடுமிடத்திலெல்லாம் இவனொரு மௌன மடையனென பேசிக்கொண்டது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அன்றொரு நாள் அவர்களின் […]
.பசுமையும் பதற்றமும் சில துளிகள் மழை பெய்தால் கூட வந்துவிடுகின்றன எங்கிருந்தோ தவளைக் குஞ்சுகள். கூட்டமாக அவை குதித்துத் தாவுகின்றன. கும்மாளமிடுகின்றன. சிறிய முன்னங்கால்களால் உடலைத் தாங்கும் அவற்றின் மகிழ்வுக்கெல்லையில்லை. பழுப்பு நிறப் புள்ளிகளாய் பாய்ந்து பாய்ந்து செல்லும். வாய்க்கால் மழைநீரில் வளைந்து வளைந்து செல்லும் வட்டமிடும் படகுகள். ஓடுகின்றன ஓடுகின்றன வாழ்வின் எல்லை நோக்கி. பார்க்கும் கண்களில் பசுமையும் பதற்றமும் பதுங்கிக் கொள்கின்றன. —-வளவ. துரையன் தேடுதல் ஆடுகளுக்குத் தழை ஒடிப்பவன் கொழுந்துகளைத் தேடுவது போல […]
(*சமர்ப்பணம்: சிறுமீனுக்கு) தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருந்தேன் தொட்டிமீனை அந்தச் சதுரக் கணாடிவெளியினுள்ளான நீரில் சுற்றிச் சுற்றிப்போய்க்கொண்டேயிருந்ததுமூலைகளில் முட்டிக்கொண்டபடி. எதிர்பாராமல் மோதிக்கொள்கிறதா? ஏதோவொரு தெளிந்த கணக்கிலா? அவ்வப்போது நீரின் மேற்பரப்பிற்கு வந்து குட்டிவாய் திறந்து பின் மீண்டும் உள்ளோடி சதுரப்பரப்பின் மையத்திலிருந்த உருளையருகே சென்று அங்கே அதற்கென்று வைக்கப்பட்டிருந்த உணவை ஓரிரு கவளங்கள் அவசர அவசரமாய் விழுங்கிவிட்டு மீண்டும் சதுரமாய் வட்டமிடத் தொடங்குகிறது. சமுத்திரவாசி எத்தனை சிறிய சதுரநீர்ப்பரப்பிற்குள்…. ஆனால், நானுமோர் சமுத்திரவாசிதான் – நிலம் நீராக காற்றாக – […]
ஓடும் நதியில்தான் எல்லா அசடுகளும் ஓடுகின்றன. கற்பை எண்ணி எந்த பத்தினியும் இறங்க வில்லை ஆற்றில். யோனிக்கழுவ ஒரு கை நீர் போதும் கண்ணகிக்கும், மாதவிக்கும் . கோவலன்தான் யாழை வாசிக்கின்றான் பெண்துணை தேட. பூத்துக் குலுங்கும் மலர்ச்சோலை வருணப்பாக்களில் கவிதை படுவதில்லை. பாடும் வண்டும் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் பொங்கி விழும் அருவிகளும் காலடிச்சுவடுகளில் ஜாதகம் தேடுவதில்லை. ஆணோ பெண்ணோ அனைத்து மகிழ காமதேவன் பாடலில் கறுப்பு வெண்மை நிறங்கள் இல்லை. மனோரத தேரில் ஏறி பயணம் […]
ஆர் வத்ஸலா தனியே நின்று மகளை வளர்த்ததால் என்னை தலை சிறந்த தாய் என கூறினார்கள் யாவரும் அதை நானும் நம்பத் தொடங்குகையில் புரிய வைத்தாள் எனது மகள் என்னை விட சிறந்த தாய் உண்டு என தன் மக்களோடு எனக்கும் தாயாகி