கவிதைகள்

- கு. அழகர்சாமி  (1) குளம் (1) குளத்திற்குள் சொற்களை வீசி எறிந்தேன். சொற்களின் அர்த்தங்களைக் கொறிக்க துள்ளி மீன்கள் மேலெழும்பின. அலையலையாய் விரிந்தது என்   நீர்க் கவிதை குளத்தில்- கரை நோக்கி என்னைத் தேடி.  (2) குளத்தில் நீந்தும் மீன்கள்…

பிடிமான மஜ்ஜைகள்

நறுவிசாகச்  சுவைத்த உன் கரிசனத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன் வழி நெடுக அணுக்கமாக. தவறும்பொழுதெல்லாம் இழுத்து வரும் கடிவாளம்  எப்பொழுதோ நீ இட்டதுதான். காலச் சறுக்கின் நிதானிக்காத திசைமாறலில் வெகு தூரம் பயணித்துவிட்டாலும் வியாபித்திருக்கும் அந்நியோன்னியப் புரிதல்களை யாதொன்றும் அபகரிக்கவில்லை என்பதே நேசத்தின்…

காட்சி

பா.சத்தியமோகன் பரபரக்கும் சனிக்கிழமைசென்னை சாலைநகரப் பூங்கா ஓர மணல் குவியலைகொம்பினால் மாடு குத்தி முட்டுவதாய்விரட்டுகிறார்கள்அதற்கோ இருகொம்பு நடுச்சதை அரிக்கிறது.***

யோகி (கவிதை)

அந்த வீதியில்தான்  நடந்து சென்றான்.  அதே வீதியில்தான் பள்ளிக்கு சென்றான்.  அதே வீதியில்தான்  சைக்கிள் பழகினான்.  அதே வீதியில்தான்  நண்பர்களும் இருந்தார்கள்.  அதே வீதியில்தான்  காதலியும் இருந்தாள்.  அதே வீதியில்தான்  பிள்ளையார் கோவிலும்  மசூதியும், சர்ச்சும் இருந்தது.  அதே வீதியில்தான்  வாழ்க்கையும்…

மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்

அன்றாடத்தின் அத்தனை அலுவல்களுக்கிடையிலும் அமிலமென அரித்துச் சொட்டுகிறது வலிகள் தந்த வார்த்தைகள் எங்கிருந்து எப்படி வருகிறதெனும் பாதைகள் அறிய முடியாத பரிதவிப்பில். பிறரின் வார்த்தைகளைக் கொண்டு  முகவாடலை  மறைக்க எத்தனிக்க யாதொரு முகமூடிகளற்ற தவிப்பில் கழிகிறது கணங்கள் கொட்டியவர் இல்லாதபொழுதும். ***…

யுக அதிசயம் நீ

பா.சத்தியமோகன் எத்தனை சிறிய மெலிய இறகுகள்எத்தனை மகா ஆவல் உனதுஎத்தனை வனத்தின் புதர்களில்அலைகிறாய் நுழைந்து நுழைந்துஎத்தனை எத்தனை வகையான முட்கள் வகைகுத்தப்பட்டு குத்தப்பட்டுஅல்லதுஒதுங்கி ஒதுங்கிப் பறந்தே அறிந்திருக்கக் கூடும் நீ!முட்கள் கீறினாலும் வலித்தாலும்ஒரே ஒரு தரமேனும்காற்றிடம் கூட புகார் செய்வதில்லை நீயுகம்…

வகைதொகை

குமரி எஸ். நீலகண்டன் உண்மை ஒரு  புள்ளி போல்  தெரிகிறது.  உண்மை ஒரு  சிறிய அளவில்  இருந்தாலும் அது  பிரம்மாண்டமானது.  ஒரு சருகு போல்  மெலிதானதானாலும்  அது ஒரு  பேரண்டத்தையே  எரித்துவிடும் வலுவானது.  உண்மை இருண்டு  அகன்ற வானத்தில்  ஒரு நட்சத்திரம்…

அந்த ஒற்றை வரி

                   பா.சத்தியமோகன் நட்சத்திரங்களை உற்றுப் பார்த்துதன்னுள் அமைதி பெறும்ஒரு கைதியின் கண் கசிவு கண்டேன் மலர்களின் இதழ்களைப் பறிக்கும்போதேநெகிழ்ந்து விடுகிறதுமழலையின் உள்ளங்கைச் சதை போன்ற ஓர் அற்புத செய்திசாலையில் உருளும்போது…

சாவி

குமரி எஸ். நீலகண்டன் பூட்டிக் கொண்டும் திறந்து கொண்டும் கைப் பைக்குள் புதைந்து கொண்டும் காதுகளைக் குடைந்து கொண்டும்தான் இருந்தது அதன் ஒற்றைக்கால்.  கிழிந்த பையிலிருந்து எங்கோ கீழே விழுந்து தொலைந்த போது அதன் ஒற்றைக்கால் ஒடியவில்லை. பூட்டை உடைத்தபோது ஒடியாத…

மகிழ்ச்சி மறைப்பு வயது

                           பா.சத்தியமோகன் நனைகிறேன் பரவசமாய்காதுமடல்,கண் இமை, சட்டைஎல்லாமாக நனைகிறேன்தெரிந்தவர் எவரேனும் எதிர்பட்டு“ஏன் சார் நனையறீங்க?” எனக் கேட்பதற்குள்முழுதுமாய் சொட்டச் சொட்டநீள தார்ச்சாலையில் ஆசையாய் நனைந்தபடிஓடும்…