சுயநலம்

ஆர் வத்ஸலா உன் சோகங்களை பகிர்ந்து கொள்ள  ஒரு நல்ல தோழியாக என்னை‌ தேர்ந்தெடுத்தாய்  நீ உன்னுடைய ஒவ்வொரு சோகத்திலும்  அமிழ்ந்தெழுந்து ஆறுதல் அளித்தேன் உனக்கு நான்   வெகு காலத்திற்கு பிறகு தான் தெரிந்தது - அன்பில் தோய்ந்த எனது அனுதாபம்…

பார்வை

                  வளவ. துரையன் மேகங்களின் உருவங்கள்  காற்றால் மாறுவதைப் போல  மெதுவாக இங்கே  இரக்கமின்றிச்  செல்கிறது கடந்த காலம் அன்று முதல் பார்வையில் நீ தந்த குளிர்மொழிதான்  மனக்குகையில்  உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது நினைத்து நினைத்து  மறக்க முயல்கிறேன் நினைவுகளைப் போட்டுக் …

நம்பிக்கை

                   வெயிலில் நடந்து  வாடும்போதுதான்  நினைவுக்கு வருகிறது தோட்டத்துச் செடிக்கு  நீர் ஊற்றாதது நடும்போதே நான்  சொன்னேன்ல தெனமும் வந்து தண்ணி ஊத்தணும்னு  அம்மா கத்துவார் ஆனால் நம்பிக்கை இருக்கிறது திட்டித் திட்டி எனக்குச்  சோறு போடுவதுபோல  அம்மா அதற்குத் தண்ணீர் ஊற்றி…

அது

வெங்கடேசன் நாராயணஸ்வாமி சொந்தமில்லை பந்தமில்லை. “நான்” விடும் மூச்சுக்காற்றும் “என்” சொந்தமில்லை  பந்தமில்லை. சொந்தமில்லை இவ்வுடல், தாய், தகப்பன், பாட்டன், பாட்டி,  முப்பாட்டன், முப்பாட்டியிடமிருந்து வந்ததென்பார்கள். அவர்களுடலும் அவர்கள் சொந்தமில்லை. நிரை நிரை செறியுமுடம்பு நோய்படு முதுகாயம். கடைசியில் கட்டையில் போய்…

களவு போன அணுக்கப்பை

ரவி அல்லது ஆடை பாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லைதான் தரித்த ஆடைகள் யுவனாக தோற்றமளிப்பதால். மகனின் அம்மா பிறந்த நாளுக்கா இல்லை அதற்கு ஆறு நாள் முன்பான எனது பிறந்தநாளுக்கா என்று யோசிப்பதைவிட மேலாடையில் பையற்ற இடத்திலிருக்கும் இலட்சினைக்குறி பார்க்கத் தோற்ற…
எழுத்தாளனின் முகவரி

எழுத்தாளனின் முகவரி

முகவரி கேட்டு  அலைந்துக் கொண்டிருந்தார்  தபால்காரர்.  அவரா என்று எளனமாக பார்த்தான்  சந்தைக்காரன்.  அதோ மூலையிலுள்ள  புத்தகக் கடையில் தேடுங்கள் என்றான் மார்வாடி பெண்ணின் மூக்குத்தியை  எடைப்போட்டுக் கொண்டே.  அவரா  நேத்து தான்  அந்த மூலை பழைய  புத்தகக்கட்டை தேடிக்கொண்டிருந்தார்.  நாலு …
கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.

கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.

ரவி அல்லது பின்னிரவைத் தாண்டியும் பெய்து கொண்டே இருந்தது மழை. தூக்கமிழந்த மரங்கள் துவண்டது. தலை துவட்டி தழுவிக்கொள்ள தாமதமானதாக நினைத்த காற்று. விருப்பம் கொண்டு சற்று வேகமாக வந்ததது. விபரீதம் நடக்கப்போகிறதென்பதை அறியாமல். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
தொடர் மழை

தொடர் மழை

ஆர் வத்ஸலா விடாமல் பெய்து கொண்டிருக்கிறது மழை ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டு காத்திருக்கிறார் சூடான பலகாரத்திற்காக கவிஞர் மனதில் கவிதை நெய்துக் கொண்டு மின்தூக்கி வேலை நிறுத்தம் செய்த அந்த கட்டிடத்தில் இரண்டிரண்டு படியாக தாவி ஏறுகிறான் மூச்சு வாங்க…

சரித்திர சான்று

பத்மநாபபுரம் அரவிந்தன் - எத்தனையெத்தனை  தலைமுறை  மரபணுக்களின் நீட்சி நான்  என்னுள் நீந்தும்  அவைகள் அத்தனையும்  எத்தனை ஜாதிகள் கொண்டனவோ  எத்தனை மதங்களை ஏற்றனவோ... கள்குடித்துப் பித்தான முப்பாட்டன்  வழி வந்த  சிலவும்..  புகை பிடித்துப் புகையான  பூட்டன் வழி வந்த சிலவும்  போன…
பரிதாபம்

பரிதாபம்

              வளவ. துரையன் அஞ்சல் கொண்டுவந்து தரும் அஞ்சல்காரர் போல ஒரு சில வீடுகளுக்கு முன் ஓயாமல் வந்து நிற்கிறது வெள்ளைப் பசு மாடு. ஒன்றுமே போடாததால் அழைத்தழைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்துவிடும் பரதேசியாய் அதுவும் போகிறது. பாலைக் கறந்துவிட்டு வெளியே விரட்டிவிட்டப்…