ஒரு நன்கொடைத் திரட்டுக்காக அந்த இரவு விருந்தாம் பத்துப் பேர் மேசைக்கு இரண்டாயிரம் வெள்ளி பொரித்த முழு குருவா மீன் எராலுடன் கனவாய் தந்தூரிக் கோழியுடன் முந்திரி வருவல் வறுத்த சேமியா பொரித்த சோறுடன் புரோகோலி சூப் விருந்து நிறைந்தது வீட்டுக்கு வந்ததும் பசியைக் கிளப்பியது விருந்து பொன்னி அரிசிச் சோற்றில் பூண்டு ரசம் விட்டு ஒரு பிடி பிடித்த பின்தான் வயிறு நிறைந்தது அமீதாம்மாள்
ஹெச்.ஜி.ரசூல் கட்சித்தலைவர்களும் தொண்டர்களும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக் கூட்ட அரங்கில் ஸப்புகளில் வரிசையாய் அணிவகுக்க இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன ஹாமீம் ஆலிம்சா இமாமாக நின்று நேற்றைய தொழுகையை நடத்திக் கொண்டிருந்தார் அலைமோதிய மனம் பதைப்புக் கொள்ளத் துவங்கியபோது ஜும்மாமசூதியின் கடைசிவரிசையில் நானிருந்தேன் மிம்பர்படியில் கையிலொரு வாளோடு நூற்றுக்கணக்கில் குழுமியிருந்த தொழுகையாளிகளிடம் தோழர் நல்லக்கண்ணு மார்க்ஸிய வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்
சி. ஜெயபாரதன், கனடா கூடங்குள அணுமின் உலை கூவத்து நதியில் கட்டப் பட்ட குப்பை மாளிகை அல்ல ! இந்தியர் உப்பைத் தின்று வளரும் ஒப்பிலா விஞ்ஞானிகள் உன்னத பொறித் துறை மன்னர்கள் வடித்த மின்சாரப் பிரமிட்கள் ! ஊரே தீப்பற்றி எரிய வீணை வாசித்த நீரோ மன்னன் எழுப்பிய கோர உலைகள் அல்ல ! இவை மூடிக் கிடந்தால் பூனை தூங்கும் பொங்கிய அடுப்பில் ! கணினிகள் மிளகாய்ப் பெட்டிகளாய் கண்ணீர் சிந்தும் ! மின்சார மின்றி […]
தீய எண்ணங்களை தொலைத்துவிட… நல்லெண்ணங்களை நம் நினைவில் நிறுத்த… வரவேற்போம் தீபாவளியை! உணர்வுகளைத் தொலைத்துவிட்ட தீவுகளாகிப் போன நம் வாழ்வில் வசந்தம் வீச… வரவேற்போம் தீபாவளியை! மின்னஞ்சல் அனுப்பி அனுப்பியே உறுதியான நட்பில் தற்காலிகமாய் மறந்துபோன முகங்களை தேடும் முயற்சியாய்… வரவேற்போம் தீபாவளியை! நேற்றுவரை காதலர்களாய்… இன்றுமுதல் கணவன் மனைவியாய்… இல்லற பந்தத்தில் இணைத்த பூரிப்பில் வரவேற்போம் தீபாவளியை! உண்மையான அன்பு நம் குடும்பத்தினரிடம் மட்டுமே கிடைக்கும் என்று உணரவைக்கும் திருவிழா ஆதலால் வரவேற்போம் தீபாவளியை! புத்தாடை […]
நீச்சல்காரன் எரிகிற கொள்ளியில் சுள்ளிகள் எடுத்து எரிக்க முனைந்தால் பொசுங்கியது ஆசை இது தான் வெற்றியென்று முடித்துக் கொள்ள முடியாமல் வெற்றிகரமாக தோல்வி கொள்கிறேன் கொதிக்கும் நீரில் குதித்தாடும் குமிழ்கள் வாய்பிளந்து மரணத்தை குடிக்கும் கற்பூரத்தை சர்க்கரை என நிருபிக்க சொன்ன பொய்கள்தான் அதை காற்றிலே கரைத்துவிட்டது புதிராக இருந்தாலும் ஒரு திசை போதும் மற்றவற்றை காட்டிக்கொடுக்க திறந்திருந்த ஒன்றை திறந்து வைத்தவர் யாரென்கிறது ஆற்றுப் பாலத்து கல்வெட்டு ஊரெல்லாம் தூங்கிக் கொண்டிருக்க மனித இனத்தையே உலுப்பியது […]
1.காலம் ஒரு கணந்தான்…! மெழுகுவர்த்தியாய் உருகி வெளிச்சங்கொடு… “சோனாமாரி”யிலும் அணையாதே! மேக கணங்களாய் உழை… மழைத்துளிகளாக சேவை செய்… பூமியைப்போல பொறுத்திடு… அகழ்வாரை அன்போடு நோக்கு… மின்னலிடம் வெளிச்சங் கேள்… இடியைத் தாங்கும் இதயம் பெறு… காற்றிலே கீதம் அமை… கைப்பிடிக்குள் உலகம் எடு… கால வெள்ளத்தோடு கல்லாக உருளாதே, பாறையாய் நில்லு., சந்தோஷச் சிறகில் பறவையாய்ப் பற… பனித்துளியாய் வாழ இலையிடம் இடங்கேள்… சூரியன் சுட்டாலும் அழியாமல் வாழ்… தேனீயாய் சுற்று… எறும்பாய் உழை… தென்றலாய் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “அறிவுரை தேடிக் கேட்டுக் கொள்ளாதவன் மூடன் ! அவனது மூடத்தனம் உண்மை அறிவதில் அவனைக் குருடாக்குகிறது. மேலும் தீங்குகள் இழைக்க முரடனாய் ஆவான் ! அது சக மக்களுக்கு அபாயம் விளைவிக்கும்.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ காதல் என்பது என்ன ? காதலற்ற வாழ்வு மலரும் கனியும் இல்லா மரம் போல் ! அழகத்துவம் இல்லாக் காதல் வாசனை யற்ற […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா குருநாதரின் ஞான ஒளி பொழியும் போது கூட இருந்த குறை அறிவாளி பேசி மகிழ்ந்து பெருமிதம் அடைவான் ! பிறகு விரைவில் தாறுமாறாய் ஒழுக்க மற்று உரக்க அலறுவான் ! பிரச்சனை இதுதான் தன்மான மற்ற ஒருவனுக்கு விரைவில் வருவ திப்படி மதுவால் ! குடிகாரனுக்குப் பரிவு உள்ளம் இருக்குமே ஆயின் அதனைக் காட்டுவான் குடித்த பிறகு ! ஒளிந்துள்ள சினமும் அகந்தை, […]
குமரி எஸ். நீலகண்டன் மரண தண்டனையை எதிர்த்தும் மனித உரிமைகளுக்காகவும் உண்ணாவிரதமிருந்தான் அவன். எந்த உயிரைக் கொல்வதற்கும் மனிதனுக்கு உரிமை இல்லையென்றே முழங்கினான். அவனைக் கடித்துக் கொண்டே இருந்த கொசுக்களை அடித்து அடித்து இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது அவனுக்கு. குமரி எஸ். நீலகண்டன்
ஆசை இல்லா உலகம் புத்தனின் ஆசை கடிவாளமில்லா கடிவாளம் போகஸ் இல்லா போகஸ் எனது ஆசை. பாசத்திலிருந்து ஆபாசம் ஆபாசத்திலிருந்து பாசம் காதலர்களின் ஆசை. உலகம் வேண்டும் அலெக்சாண்டர் ஆசை வியாபாரம் வேண்டும் ஆப்பிள் ஸ்டீவ் ஆசை. எல்லாம் அடைந்த இவர்கள் வாழவில்லை! எல்லாம் இழந்த புத்தன் இன்றும் வாழ்கிறான். ஆடை துறந்தால் இன்பம் ஆசை துறந்தால் பேரின்பம் Sridhar. China