எனக்கு ஒரு கோப்பை மது கொடுங்கள்

எனக்கு ஒரு கோப்பை மது கொடுங்கள்

ப.மதியழகன் 1 சிறுசிறு துயரங்கள் என்னை வேதனையின் அடிஆழத்திற்கு இழுத்துச் செல்கின்றன ஒரு கோப்பை மதுவோடு ஒரு துளி விஷத்தைக் கலந்து எனக்குக் கொடுங்கள் என்னை மறந்திருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நான் செய்து கொள்கிறேன் எனது பகுத்தறிவு எப்போதும்…

மொகஞ்சதாரோ 

மனிதர்கள்  சந்தித்துக்கொள்ளும்  பாதையில்  சுவர்ண பட்சிகள்  வருவதில்லை. வறண்டு போன  நதிகளின் கண்ணீர்  கதையை  அவைகள் கேட்ட பிறகு  மனித வாடை  துர்நாற்றம் வீசுவதாக  புகார் கூறுகின்றன.  இடிந்து போன  அரண்மனையின்  கடைசி செங்கல்லில்தான்  பட்சி வளர்த்த கடைசி மன்னனின்  சமாதி…

திளைத்தலின் உன்மத்தம்

ரவி அல்லது இப்பெரு மழையினூடாகவரும்உன் நினைவுகளின்கதகதப்புதான்பார்க்குமாவலைத் தடுத்துபரவசம் கொள்ள வைக்கிறதுஎனக்குள்ளானஉன் ஆதுரத்தில்வெயிலானாலும்மழையானாலும்வெளுக்காமல். -ரவி அல்லது.ravialladhu@gmail.com

ஒரு தாம்பத்தியத்தின் தன்னிழப்பு

வெங்கடேசன் நாராயணஸ்வாமி  எப்போதுமுள்ள மௌனமே  நம்மிடையே - நாம் நம்முள் உறைவதின் அத்தாக்‌ஷியாய், நம்மிருப்பே இடையறாத  சொற்பொழிவாய், வாழ்வாய், நாமொருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும்,  பார்க்காத மாதிரிதான், பார்க்காது இருந்தாலும், பார்த்துக் கொண்டிருப்பது போல்தான். ஒன்றாயிருப்பது என்பதென்ன? நீயில்லை என் ஆழ்துயிலில். உன்…

சித்தம் ஒருக்கி

வெங்கடேசன் நாராயணஸ்வாமி  பக்கத்து வீட்டுச் சாளரக் கதவு திறக்கும் ஓசை . . . இறுக மூடினேன் என் வீட்டுச் சாளரக்கதவை, சிகரெட் புகையுள்ளே வராமலிருக்க. காற்றைக் குறை கூறுவானேன்?
கவிதை

கவிதை

குடைபிடி ஞாபகங்களில்  எச்சரிக்கின்றது  வயோதிகம்.  குழந்தையின்  மழலைப்போல  போய்விடுகின்றது  கால்கள்.  குளிரில்  அணைத்தப்படி செல்லும்  இளசுகளின்  உரசலில்  என் வாலிபத்தின்  விலாச முத்திரை தெரியும்.  எங்கோ  போய்விட்ட  அறுந்த  காத்தாடியின்  நூலை பிடிக்க  அலையும்  மனசு.  பள்ளிக்கூட  மணி ஓசையில்  மகிழ்ந்து…
விலாச குறிப்பு

விலாச குறிப்பு

இறக்கிவிட்ட ரயில்  வெகுதூரம் சென்றுவிட்டது  சில  ஞாபக விலாசங்களோடு.  "ஏதோ நினைவுகள் மலருதே...," பாடிய  குருட்டு பிச்சைக்காரனை  கைத்தடியில்  அழைத்து செல்லும்  சிறுமி . கடலை பர்பி  கைக்குட்டை  விற்று செல்லும்  நொண்டி அண்ணன்.  கைத்தட்டி  உரிமையோடு  காசு கேட்கும்  அனார்…

சுயநலம்

ஆர் வத்ஸலா உன் சோகங்களை பகிர்ந்து கொள்ள  ஒரு நல்ல தோழியாக என்னை‌ தேர்ந்தெடுத்தாய்  நீ உன்னுடைய ஒவ்வொரு சோகத்திலும்  அமிழ்ந்தெழுந்து ஆறுதல் அளித்தேன் உனக்கு நான்   வெகு காலத்திற்கு பிறகு தான் தெரிந்தது - அன்பில் தோய்ந்த எனது அனுதாபம்…

பார்வை

                  வளவ. துரையன் மேகங்களின் உருவங்கள்  காற்றால் மாறுவதைப் போல  மெதுவாக இங்கே  இரக்கமின்றிச்  செல்கிறது கடந்த காலம் அன்று முதல் பார்வையில் நீ தந்த குளிர்மொழிதான்  மனக்குகையில்  உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது நினைத்து நினைத்து  மறக்க முயல்கிறேன் நினைவுகளைப் போட்டுக் …

நம்பிக்கை

                   வெயிலில் நடந்து  வாடும்போதுதான்  நினைவுக்கு வருகிறது தோட்டத்துச் செடிக்கு  நீர் ஊற்றாதது நடும்போதே நான்  சொன்னேன்ல தெனமும் வந்து தண்ணி ஊத்தணும்னு  அம்மா கத்துவார் ஆனால் நம்பிக்கை இருக்கிறது திட்டித் திட்டி எனக்குச்  சோறு போடுவதுபோல  அம்மா அதற்குத் தண்ணீர் ஊற்றி…