மணமான அந்தப் பெண்களின் பெயரில்…

This entry is part 26 of 32 in the series 1 ஜூலை 2012

  உருது மூலம் – இஸ்மத் சுக்தாய் ஆங்கிலம் வழித் தமிழில் – ராகவன் தம்பி மாலை நான்கு அல்லது நாலரை மணி இருக்கலாம். வாசலில் அழைப்பு மணி அலறியது.  வேலைக்காரன் ஓடிச்சென்று கதவைத் திறந்தவன் கலவரமான முகத்துடன் ஓடிவந்தான். “யார் அது?” “போலீஸ்”.  இந்தத் தெருவில் ஏதாவது ஒரு வீட்டில் களவு போனால் இங்குள்ள எல்லா வீடுகளின்  வேலைக்காரர்களிடம் முதலில் விசாரணை நடக்கும். “போலீஸ்?” என்று எரிச்சலுடன் கேட்டுக் கொண்டே பரபரப்புடன் எழுந்தார்  ஷாஹித். “ஆமாம் […]

துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி

This entry is part 25 of 32 in the series 1 ஜூலை 2012

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் ஏப்ரல் ஒன்றாம் தேதி பிற்பகல்  அண்ட்டல்யாவின் பழைய நகரத்தோடு கழிந்தது. ஒரு தேசத்தைப்போலவே    ஊர் அல்லது நகரத்திற்கும் நெடிய வரலாறுகளுண்டு. இலக்கியம் போன்று பாடல் போன்று இசைபோன்று கடந்த காலத்திய நீங்காத நினைவுகளை மீட்கவென்று ஊரின் ஒரு தோப்போ, குளமோ நகரத்தின் கோபுரமோ, கோட்டை மதிற்சுவரோ காலக் கறையானுக்கு இரையாகமல் நிற்கலாம். இம்மகிழ்ச்சியும், களிப்பும் அந்தி நேரக் காற்றுபோல மனதோடு சலசலப்பவை கல்வெட்டுபோல காலத்தை எதிர்கொள்ளும் எச்சங்கள்  அவை வரலாற்றின் […]

அஞ்சுவன்னங்களும் அரபுக் குதிரைகளும்

This entry is part 23 of 32 in the series 1 ஜூலை 2012

  தமிழகத்தின் தொன்மையான வரலாற்றில் அரேபிய வணிகர்களுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.  தமிழகத்தில் முத்தும் பவளமும், பொன்னும், மணியும், அகிலும் சந்தனமும் ஏற்றுமதி செய்யப்பட்டன.  தமிழக அரேபியத் தொடர்பை “நீரின் வந்த நிமிர்ப்பரிப் புரவி’ என்ற பட்டினப்பாலைப் பாடல் சுட்டிக்காட்டுகிறது தமிழகத்தின் கிழக்கு கடற்கரை சோழ நாட்டின் ஆட்சிஎல்லைக்கு உட்பட்டிருந்தது. அரேபியர் சோழமண்டலக் கரையை மாபார் என்று குறிப்பிடுகின்றனர்.  கடலூர், பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், கோவளம், காயல்பட்டினம், பாண்டிச்சேரி, கீழக்கரை, தூத்துக்குடி என இதன் துறைமுகப்பகுதிகள் விரிவடைந்து […]

கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -3 நிறைவுப் பகுதி)

This entry is part 20 of 32 in the series 1 ஜூலை 2012

“ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி” என்பது பிரசித்தமான சினிமாப் பாடல் வரி. வளர்ச்சி முழுமையடைய ஒரு பக்கம் பாடத் திட்டக் கல்வி, மறுபக்கம் விளையாட்டு, பேச்சுத் திறன், போட்டியிட்டு வெல்லும் தன்னம்பிக்கை, தலைமைக் குணங்கள் ஆகிய பலவும் மாணவனின் வளர்ச்சியின் அடையாளம். பாடத் திட்டங்கள் குறித்து வல்லுனர் மட்டுமே விவாதிக்க முடியும். ஒவ்வொரு துறையிலும் ‘பிஹெச்டி’ பட்டம் பெற்ற பெரிய கல்வியாளர் பணி அது. ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாடத் திட்டம் மாற்றி […]

நினைவுகளின் சுவட்டில் (91)

This entry is part 4 of 32 in the series 1 ஜூலை 2012

நாங்கள் அடுத்து பயணம் சென்றது கல்கத்தாவுக்கு. பஞ்சாட்சரம், மணி, இருவரைத் தவிர எங்களில் வேறு யாரும் பெரிய நகரத்தைப் பார்த்திராதவர்கள். அந்த நாட்களில் அப்படித்தான். எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் தஞ்சாவூர், திருநெல்வேலி, மாயவரம் போன்ற டவுன்கள் தான். வாஸ்தவம். சென்னை என்ற பெரு நகரம்  ஹிராகுட்டுக்கும் எங்கள் அவரவரின் சொந்த கிராமம் அல்லது ஊருக்குமான இடையில் இருந்தது தான். அதைக் கடந்து தான் ஹிராகுட் வந்தோம். ஆனால் யார் சென்னையைக் கண்டது? எக்மோர் ஸ்டேஷன் தெரியும், செண்ட்ரல் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 19

This entry is part 2 of 32 in the series 1 ஜூலை 2012

  ஊறெரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டில் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்   நாட்டுக்காக விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் அதன் எழுச்சியின் வேகம் கூட்டுப் பறவையாக இருந்த பெண்ணை வெளியில் எட்டி பார்க்க வைத்தது. “பெண் விடுதலை” என்ற புதுப்பாட்டும் ஒலிக்க ஆரம்பித்தது. அப்படியென்றால் அவள் வாழ்ந்து வந்தது சிறைக்குள்ளா? வேறு பெயர் வைத்திருக்கலாமோ ? பெண் கல்வி, பெண் சுதந்திரம் என்று ஆரம்பித்தால் இதிகாசமும் இலக்கியமும் வரலாறும் போட்டி போட்டுக் கொண்டு சில நிகழ்வுகளைக் காட்டி […]

எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2

This entry is part 43 of 43 in the series 24 ஜூன் 2012

மரபு பற்றியும், மரபு நமக்குச் சுமையா அல்லது நாம் மரபுக்குச் சுமையா என்பதையும் பற்றி பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது பாரவியின் நீள் கட்டுரை. “மரபு எது? மரபுக்கு பொருள் உண்டா? மரபு தளம் உண்டா? உண்டெனில் அது என்னவாக இருக்கிறது? ” தொடர்ந்து பல கேள்விகளை இதச் சுற்றியே பின்னுகிறார் பாரவி. “இங்கு இன்று நான் எதுவாக இருக்கிறேன். நீ என்னவாக உள்ளாய்? எதன் அர்த்தம்/ பொருள் இயங்கு தளங்களாக நாம் பயணப் படுகிறோம். தேடலின்றியே […]

கம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )

This entry is part 42 of 43 in the series 24 ஜூன் 2012

இரா. குணசேகரன். நடவு வெளியீடு, 269 காமராஜ் நகர், ஆலடி ரோடு, விருத்தாசலம் – 606 001 நவீன இலக்கியம் தனிமனிதர்களை மையமாகக் கொண்டிருக்கும். இதற்கு எதிர்வினையாக பிறந்த புதுவகை இலக்கியம் சமூகத்தை மையமாகக் கொண்டிருக்கும். நவீன எழுத்தில் அழுத்தமான ஒரு திருப்பம் உண்டு. மனிதன் சுயம்பு ஆனவன் இல்லை.அவனுக்குப்பின்னால் நீளும் நிழல் உண்டு. கானல்காடு ஆறுமுகம் என்ற தனித்த ஆளுமையை மட்டும் கூறவில்லை, அந்த ஆளுமைக்கு பின்னால் நிழலான மனிதர்கள் மூலம் சமூகத்தைப் பற்றி விமர்சிக்கும் […]

இசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்

This entry is part 38 of 43 in the series 24 ஜூன் 2012

கஜாலா ஜாவேத் அவர்களது கொலை தாவூத் கட்டக்   ஜூன் 18 ஆம் தேதி பிரபலமான பஷ்தோ பாடகி கஜாலா ஜாவேத் சுட்டுக்கொல்லப்பட்டார். அமைதியான சட்டத்தை மதிக்கும் குடிமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய அரசாங்கம் சட்டத்தை மதிக்காத தீவிரவாதிகள்,  கடத்தல் கொள்ளையர்கள் முன்னால் கையாலாகாத அரசாங்கமாக இருக்கிறது என்பதைத்தான் இசையையும் கலைகளையும் விரும்பும் மக்களுக்கு இன்னொரு எச்சரிக்கையாக காட்டுகிறது.   கஜாலாவின் வயது 24. பெஷாவரின் தாப்காரி கார்டன் பகுதியில் உள்ள அழகு நிலையத்திலிருந்து ஒரு கச்சேரிக்கு செல்லும் […]

நீட்சி சிறுகதைகள் – பாரவி

This entry is part 35 of 43 in the series 24 ஜூன் 2012

ரேவதி வர்மா இயல் வெளியீடு 34/ 98     நாட்டு 1 சுப்பராயன் தெரு, மயிலாப்பூர் சென்னை.4 இவ்வுலகையும், அதன் மனித மனங்களையும் சொற்களின் ஆழங்கள் பெயர்ச்சிகளும் சொற்களிலே பிரித்துப் பகுத்து வெளிப்படுகின்றன. சுதந்திரங்களும், ஆழங்களும் வெளிமுழுவது அர்த்தங்களைத் தேடியலைகின்றன. பாரவிக்கு தன் படைப்புகளின் வழியே நிகழும் அகம் சார்ந்த அல்லது சுயம் சார்ந்த இடப்பெயர்ச்சி தான் பிடித்த மானதாயிருக்கிறது. நீட்சி அவரது நாற்பதாண்டு கால இலக்கிய வாழ்வின் தொகுப்பு என்னும் அர்த்தங்களின் நீட்சியையும், தனிமையின் நெருக்கடிகளையும்,மௌனங்களின் ஆழங்களையும் […]