இப்படி ஒரு தடாலடி வேலையை எலி என அறியப்படும் ராமகிருஷ்ணன் செய்துவிடுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருமுறையும் எப்படியோ என்னை அறியாது கூட இருக்கும் நண்பர்கள் செய்துவிடும் திருட்டு அல்லது சில்மிஷங்களில் மனசே இல்லாமல் தலையைக்கொடுத்துத் துன்பம் ஏற்கிற ஜன்மமாகவே ஏன் இருந்திருக்கிறேன் என்று தெரியவில்லை. ராமகிருஷ்ணன், கூட இருந்தே குழிபறிக்கிறவன் என்பதால் காரணப்பெயராக எலி என்று மிகச்சரியான பெயர் வாங்கி, அப்படி அழைக்கப்படுவதால் எந்தவித கோபமும் கொள்ளாதவனாகவே இருந்தான். அவர்கள் வீட்டிலேயே கூட அவனை எலி […]
1927 மார்ச் 6 அக்ஷய மாசி 22 ஞாயிற்றுக்கிழமை காரசாரமான வெங்காய சாம்பாரும், கத்தரிக்காய் எண்ணெய்க் கறியும், ஆனையடி அப்பளமுமாக ராஜ போஜனம் போல ஒரு சாப்பாடு. இருபது சொச்சம் வருஷத்துக்கு முன்பு இந்த பாக்கியம் கிடைத்து அப்புறம் சொப்பனத்தில் மட்டும் கிடைக்கிறதாக மாறிப் போன சுகம் திரும்ப சித்தித்திருக்கிறது. அதை அனுபவிக்க விடாமல், போக வேளையில் வாசல் கதவைத் தட்டி மூட்டு வலித் தைலம் கேட்கிற அண்டை வீட்டுக்காரன் போல் இந்த மனுஷர்கள் […]
x ஆறடி உயரத்தில் வெண்நிற ஆடையுடன் நின்றிருந்த அவ்வுருவத்தைப் பார்த்தபோது செல்லம்மாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.ஏதோவொரு வெப்பம் தனிச்சையாக வந்து தாக்கியது.மேனி முழுவதும் சிலிர்த்தது.அத்தருணத்தில் தனக்குத் தோன்றிய உணர்வு எத்தகையானது என்பதை அவளால் பகுத்துப் பார்க்க இயலவில்லை. அவ்வுருவத்தை தொடந்தாற்போல் சில நொடிகள் பார்க்கமுடியாமல் மெல்ல தலையைக் குனிந்துக்கொண்டாள்.சேலைத்தலைப்பை நன்கு இழுத்து முக்காடைச் சரி செய்தாள்.இதுவரையில் அதுபோன்ற ஒளிப்பொருந்திய கண்களை அவள் சந்தித்ததில்லை.தூரத்தில் இருந்து பார்த்தபோது அவை நட்சத்திரங்களாய் மின்னின…சற்று நெருங்கிய போதோ நிலவைப் போன்று […]
தோட்டத்தில் மகிழ மரத்தில் கூடுகட்டி வாழும் அந்த புள்ளிப்போட்ட புள் கூட்டம் தான் வைத்த அந்த ஒரு பிடி சோற்றில் உயிர் வாழுவது போல ஒரு மன நிறைவில் இன்பமாக இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி அங்கையற்கண்ணி, சமயலறை சன்னல் வழியாக. வழக்கம் போல. அன்றாடம் இரவு ஒரு பிடி சோறு தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும், பாத்திரத்தை சுத்தமாக கழுவி கவிழ்க்கக் கூடாது, காரணம் இறந்து போன நம் முன்னோர்கள் சில நேரங்களில் […]
“மனிதர்கள் என்றால் கவலைகள் இல்லாமலா? கேள்விகள் இல்லாமலா? ஏராளமாக இருந்தன. கூண்டுவண்டியிலும், கட்டைவண்டியிலும் வைக்கோலை தெளித்து ஜமுக்காளத்தை விரித்து, பெண்கள் கால்களை துறட்டுகோல்போல மடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க ஆண்கள் வண்டிக்குப்பின்புறம் அமர்ந்து வார்த்தைகளைக் கோர்த்து கேள்விச் சரடை தயார்செய்துகொண்டுவருவார்கள்.” 25. ‘கிருஷ்ணபுரத்தை காக்கவே மானுடவடிவில் வந்திருக்கிறேன்’ என்ற கமலக்கண்ணியின் வார்த்தைகளைகேட்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மெய்யுருக கைகூப்பி தண்டமிட்டவர்களில் கிருஷ்ணப்ப நாயக்கரும் ஒருவர். கமலக்கண்ணியின் பேச்சு அவரைக் கட்டிபோட்டது. தம்மை தெய்வமென்று அவள் அறிவித்துக்கொள்ளாதிருக்கும் பட்சத்தில் கல்யாணமகாலில் அவளுக்கென்று […]
இங்கே, காக்கைகளும், ஆந்தைகளும் என்ற மூன்றாவது தந்திரம் ஆரம்பமாகிறது. அது போரும், சமாதானமும் பற்றியது. அதன் முதற் செய்யுள் பின்வருமாறு: ஏற்கனவே பகைவர்களாயிருந்து பின்னால் நேசம் பாராட்டுகிறவர்களை நம்பவேண்டாம்! ஆந்தைகள் கூடிவாழ்ந்த குகைக்குக் காக்கைகள் நெருப்பு வைத்து எரித்துவிட்டன. ‘’அது எப்படி?’’ என்று அரசகுமாரர்கள் கேட்க, விஷ்ணு சர்மன் சொல்லத் தொடங்கினார்: தென்னாட்டில் பிருதிவிப்பிரதிஷ்டானம் என்றொரு நகரம் இருக்கிறது. அதன் அருகாமையிலே பல கிளைகளுள்ள பெரிய ஆலமரம் ஒன்றிருக்கிறது. அதில் மேகவர்ணன் என்ற காக்கையரசன் இருந்து வந்தது. […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா நான் சல்வேசன் அணியில் சந்தோசமாக இருந்தேன் சில மாதங்கள் ! அதைக் கெடுத்தவர் என் தந்தை ! இப்போது அவருக்கு உடந்தை என் காதலன் அடால்·பஸ் ! ஆன்மீக வாழ்வை விட்டு நான் ஆயுத உலகில் சிக்கிக் கொண்டேன் ! என் ஆன்மீகப் பணியிலிருந்து நான் துரத்தப் பட்டேன் ! இப்போது பியர் கம்பேனியும், பீரங்கித் தொழிற்சாலையும் சல்வேசன் […]
தெலுங்கில் : ரங்கநாயகம்மா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com கோடி! கோடி!! என்ன கோடி? பணம்! சொத்து ! ரூபாய்க்கள் ! கோடி ரூபாய் !! வரதட்சிணை !! பெரியபடிப்பு படித்த அந்த இளைஞன் கேட்டான் வரதட்சிணை ! கோடி ரூபாய் வரதட்சிணை !! வியப்பாக இல்லையா? “வியப்பு எதற்கு? கொடுப்பவர்கள் இருந்தால் கேட்பதற்கு என்ன வந்தது? ஒரு கோடி என்ன, இரண்டு கோடி கேட்கலாம்! நான்கு கோடிகள் கூட கேட்கலாம்! நூறு கோடியும் […]
இரண்டு கால் கட்டை விரல்களையும் இணைத்துக் கட்டியிருந்த கயிற்றை அருவாள் வெட்டியது. உடலின் மீது கட்டைகளை அடுக்கிப் பின் வரட்டிகளை அடுக்கினார்கள். நெய்ப் பந்தத்தை ஏந்தியிருந்த சிறுவனால் வரட்டிகள் மீது கற்பூரம் இருந்த இடம் எது என்று காண இயலவில்லை. ஒருவர் அவனைப் பின் புறத்திலிருந்து அணைத்துத் தூக்கிக் கொண்டார். கற்பூரத்தில் பந்தம் பற்றியதும் அது கொழுந்து விட்டு எரிந்தது. திரும்பிப் பார்க்காமல் ஒவ்வொருவராய் கொள்ளிடம் நோக்கி நடந்தார்கள். ராஜேந்திரனும் அவர்கள் பின்னேயே சென்றான். ஒவ்வொரு திக்கில் […]
காலையில் ஜம்மென்று வீட்டிலிருந்து கிளம்பிப் போன மணிஅய்யர் ..வருவதற்குள் மிதுக்க வத்தல் மாதிரி துவண்டு போய் வீட்டுக்குள் நுழைந்தார்.இந்த உடம்புக்குள்ள கடல் போன்ற பரந்த மனசு இருப்பது யாருக்குமே தெரியாது… என்னன்னா…இப்படி வேகாத வெய்யில்ல அலைஞ்சுட்டு வரேளே…..உடம்பு என்னத்துக்காறது….ஒருநாளப்போல இதற்கு வா…இங்க வா…அங்க வா…ன்னு அவா உங்களை இப்படி….அலைக்கழிக்கறாளே..! வயசானவாளாச்சேன்னு கொஞ்சம் கூட கரிசனம் இல்லாத…அக்ரீமென்ட்டைப் போட்டோம்மா…. கையெழுத்தப் வாங்கினோமான்னு விடாமல்…வெய்யில் எல்லாம் உங்க தலைலன்னு எழுதி வெச்சா மாதிரி….! வாங்கோ…. நாழியாறது….வந்து சாப்பிடுங்கோ…பவானி மனைப்பலகை யைப் போட்டு…இலையை […]