author

காடு சொல்லும் கதைகள்

This entry is part 9 of 17 in the series 6 டிசம்பர் 2015

  ஆதிகால மாந்தன் இயற்கையைக் கண்டுதான் முதலில் அச்சப்பட்டான். அதனால்தான் அதைத் தெய்வமாக வணங்கத் தலைப்பட்டான். இறைவன்தான் இயற்கையின் வடிவாய் இருக்கின்றான் என்று பல சமயச் சான்றோர்கள் கருதியதால்தான் “வானாகி, மண்ணாகி, வளியாகி ஒளியாகி” என்று பாடினர். நிலம், நீர், தீ, காற்று, மண் என்று எல்லாமே நமக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம்தான் அவற்றை முழுக்கச் சுரண்டும் பணியை மெதுவாகச் செய்து கொண்டிருக்கிறோம். குறிப்பாகக் காடு நமக்கு இயற்கை அளித்த […]

பூவைப்பூவண்ணா

This entry is part 13 of 18 in the series 15 நவம்பர் 2015

  மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா!உன் கோயில்நின்[று] இங்கனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்[து] அருளேலோ ரெம்பாவாய்! கடந்த 22- ஆம் பாசுரத்தில் ஆயர் சிறுமிகள் “சங்கமிருப்பார் போல் வந்தோம்” என்றார்கள். அதாவது ”அகங்காரங்கள் ஏதுமின்றி அகதிகள்போல் உன் திருவடியின் கீழ் வந்தோம்” என்று சரணாகதி செய்தார்கள். […]

நிச்சயம்

This entry is part 1 of 24 in the series 25 அக்டோபர் 2015

  ”இந்த மூணு மாசத்துல நீங்க இப்ப போறது நாலாவது தடவை; இந்தத் தடவையாவது ஒரு நிச்சயம் பண்ணிட்டு வந்துடுங்க. ஆமா சொல்லிட்டேன்” என்றாள் சகுந்தலா. அவள் முகத்தைப் பார்த்தேன். மிகத் தீவிரமாய் இருந்தது. “எத்தனை மொறை போய் வந்திருக்கேன்னு சரியா கணக்கு வச்சிருக்கியே?” என்றேன் சிரித்தபடி. அவளுக்குக் கோபம் வந்ததுபோல் தெரிந்தது. “ஆமாம், இந்தக் கிண்டலுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல; நீங்க சரியாப் பேசிட்டு வரீங்களா? இல்ல, நானும் வரட்டுமா?” என்று கேட்டாள் அவள். “வேணாம், […]

திருமால் பெருமை

This entry is part 15 of 18 in the series 18 அக்டோபர் 2015

    திருமாலின் பெருமையை யாராலும் அளவிட்டுக் கூற இயலாது. அந்தப் பெருமை இப்படித்தான் என்று அறுதியிட்டும் சொல்ல முடியாது. மேலும் அவருக்கு உவமை கூற உலகில் எதுவுமே இல்லை. அதனால் நம்மாழ்வார் அவரை “உயர்வற உயர்நலம் உடையவன்” என்று அருளிச்செய்கிறார். அதாவது அவருடைய உயர்வின் முன்னால் மற்ற உயர்வுகள் எல்லாம் அற்றுப்போகும் அளவுக்கு அளவிட முடியாத பெருமை கொண்டவர் அவர். உவமையே காட்ட இயலாப் பெருமை கொண்டவர் அவர். இந்த உலகின் உள்ள எல்லா ஆத்மாக்களையும் […]

செங்கண் விழியாவோ

This entry is part 22 of 23 in the series 11 அக்டோபர் 2015

  அங்கண்மா ஞாலத்[து] அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேற் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்! ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் இருபத்திரண்டாம் பாசுரம் இது. கடந்த பாசுரத்தில் “மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து” என்று தாங்கள் போக்கற்று வந்ததைச் […]

ஊற்றமுடையாய்

This entry is part 23 of 23 in the series 4 அக்டோபர் 2015

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்! ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில் தோற்ற மாய்நின்ற சுடரே! துயிலெழாய்! மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் 21- ஆம் பாசுரம் இது. கடந்த பாசுரத்தின் இறுதியில் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினார்கள். அவளும் எழுந்தாள். “என்னை வந்து எழுப்பிப் பற்றிய பின் உங்களுக்குக் […]

பணிமனையில் ஒரு பயணம் [கண்மணி குணசேகரனின் நாவல் “ நெடுஞ்சாலை “ யை முன்வைத்து]

This entry is part 10 of 16 in the series 20 செப்டம்பர் 2015

வளவ. துரையன் ஒரு படைப்பாளன் ஒரு படைப்பை எழுத நினைக்கும்பொழுது அவன் முன்னே இரு வழிகள் காத்திருக்கின்றன. ஒன்று தன் அனுபவத்தை அப்படியே எழுதுவது அல்லது சற்று கற்பனை கலந்து எழுதுவது. மற்றொன்று பிறரது அனுபவத்தை உள்வாங்கி எழுதுவது. இந்த இரண்டாவது வழியில் பயணம் செய்வது கொஞ்சம் கடினம். ஆனால் தேர்ந்த படைப்பாளன் எல்லாவழிகளையுமே தனக்குச் சாதகமாக்கிக் கொள்வான். இரு வழிகளிலும் பயணம் செய்து தங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெற்ற படைப்பாளர்கள் பலர் உண்டு. ஆனால் […]

பாவப்பட்ட ஜென்மங்களின் கதை [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’

This entry is part 4 of 24 in the series 13 செப்டம்பர் 2015

வளவ. துரையன் [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’ உலகம் நாம் நினைப்பதுபோல் இல்லை. பெரும்பாலும் நாம் எண்ணுவதற்கு நேர்மாதிரியாகத்தான் இருக்கிறது. அதிலும் முரண்கள் வழிப்பட்டதாகத்தான் அது நடந்து செல்கிறது. அது போகும்போது அதன் காலடிகளில் சிக்கி நசுங்கித் தம் வாழ்வை இழப்பவர்கள் பெரும்பாலும் ஒன்றுமே அறியா அப்பாவிகளாகவும் கிராமத்து மக்களாகவும்தாம் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு  வாழ்வின் திரும்பிய பக்கமெல்லாம் சோகம் […]

குடிக்க ஓர் இடம்

This entry is part 6 of 27 in the series 6 செப்டம்பர் 2015

வளவ. துரையன் “நாளை இந்த இடத்தை மாத்திட வேண்டியதுதான்” என்றான் வேலு. குடித்து முடித்த தன் தம்ளரைக் கீழே வைத்த மோகன் நிமிர்ந்து பார்த்தான். வேலு தன் கையில் இருந்த தம்ளரில் பாதிதான் காலி செய்திருந்தான். பக்கத்தில் இருந்த பாட்டிலில் சரிபாதி இன்னும் இருந்தது. ஆளுக்கு இரண்டு தம்ளர்; அதுதான் அவர்கள் கணக்கு; கண்கள் சிவக்காமல், கால்களைத் ,தடுமாற வைக்காமல், யாரையும் சந்தேகம் கொள்ள வைக்காமல் இருக்க அந்த அளவுதான் சரியாக இருக்கும் என்று அந்த அளவைக் […]

மைத்தடங்கண்ணினாய்

This entry is part 4 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்          மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்          கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்          வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்          மைத்தடங் கன்ணினாய் நீஉன் மணாளனை          எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்          எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்          தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய் இது திருப்பாவையின் பத்தொன்பதாம் பாசுரம். இந்தப் பாசுரம்தான் பட்டரின் ‘நீளாதுங்க ஸ்தநகிரி’ எனும் தனியன் ஸ்லோகம் உருவாகக் […]