டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் : 42 சங்கப் பெண்கவிகளின் கவிதைகள் ஆங்கிலத்தில்

This entry is part 2 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

Tamil Sangam Women Poets In Translation Translated by Dr.K.S.Subramanian Published by NCBH Price : Rs.210 தற்காலத் தமிழ்க் கவிதைகள் – சங்ககாலம் தொட்டு இன்றுவரை, பாரதியார் கவிதைகள், ஜெயகாந்தனின் படைப்புகள், கவிஞர் உமா மகேஸ்வரியின் கவிதைகள் என பல தமிழாக்கங்களைத் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் 42 சங்கப் பெண்கவிகளின் 180க்கும் மேற்பட்ட கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த் திருக்கிறார். சங்க இலக்கியங்களை முழுமையான தொகுப்புகளாக வெளியிட்டிருக்கும் என்.சி.பி.எச் நிறுவனம் இந்த […]

நமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.

This entry is part 3 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

Posted on August 5, 2017    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா https://youtu.be/8Ddt8xnnGGA http://www.space.com/22729-voyager-1-spacecraft-interstellar-space.html நாற்பது ஆண்டுகள் பயணம் செய்து நாசாவின் விண்வெளிக் கப்பல் இரண்டு பரிதி மண்ட லத்தின் விளிம்பு அரணைக் கடந்து தொடர்ந்து முன்னேகும் ! பக்கத்து விண்மீன் மண்டலத்தில் பாய்ந்து நுழையும்  ! நேர்கோட் டமைப்பில் வந்த சூரியனின் வெளிப்புறக் கோள்களை விண்கப்பல்கள் ஆழ்ந்து உளவுகள் செய்யும் ! நெப்டியூனின் நிலவை, கருந் தேமலை, பெரும் புயலைக் காணும் […]

அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

This entry is part 4 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமா எழில்மேனி அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு! நாகசாகியும் அணுப் பேரிடியால் நாசமாகி மட்டமாக்கப் பட்டது! திட்ட மின்றி தென்னாலி ராம மூடர்கள் அணு உலையைச் சூடாக்கி வெடிப்புச் சோதனை அரங்கேறி நிர்வாண மானது, செர்நோபில் அணு உலை ! மாய்ந்தனர் மக்கள், மடிகிறார் ! மேலும் மரிப்பார் ! மரிப்பார்! நாடு […]

கவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)

This entry is part 5 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

கவிஞர் தேவேந்திர பூபதியின் கவியுலகம் குறித்த கருத்தரங்கம் 29-07-2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு அவரின்,’முடிவற்ற நண்பகல்’, கவிதை நூல் குறித்து உரையாற்றினேன். அந்த உரையின் கட்டுரை வடிவமாக இதனைக் கொள்ளலாம். சமகாலத்தில், நான் சந்திக்கிற சமூகப் பிரச்சனைகளைத் தானும் சந்திக்கிற, நான் எதிர்கொள்கிற அரசியல் சூழல்களால் ஏற்படும் சிக்கல்களைத் தானும் எதிர்கொள்கிற, பண்பாடு, சாதி, மதம் இன்ன பிற கட்டமைப்புகளால் நிகழும் சம்பவங்களுக்குச் சாட்சியாக நான் புழங்கும் மொழியிலேயே கவிதைகள் எழுதும் சமகாலக் […]

தொடுவானம் 181. பதிவுத் திருமணம்

This entry is part 6 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

காலையில் சீனனின் வாடகை ஊர்தியில் ஜோகூர் பாரு புறப்பட்டோம். நானும் பெண்ணும் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டோம்.அவளின் தந்தை ஓட்டுநர் அருகில் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.அவள் குட்டை பாவாடை ( Skirt ) அணிந்திருந்தாள். .நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.மூன்று மணி நேரப் பிரயாணம். அந்தப் பகுதி முழுதும் செம்பனை மரங்ககளால் நிறைந்து பச்சைப்பசேல் என்று காட்சி தந்தது. இடையிடையே சிறு சிறு ஊர்களில் கடைத்தெருக்கள் காணப்பட்டன. அவை பெரும்பாலும் சீனர்களின் கடைகளாகவே தென்பட்டன. அவற்றின் பெயர்ப்பலகைகளில் சீன எழுத்துகள் காணப்பட்டன.இங்குமட்டுமல்ல. […]

தமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 7 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

தமிழ்மணவாளனின் ‘ அதற்குத் தக ‘ தொகுப்பில் 112 கவிதைகள் உள்ளன. பல கவிதைகள் எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டவை; சில அடர்த்தியான வெளியீட்டு முறை கொண்டவை. ‘ எதையும் கவிதையாக்கலாம் ‘ என்னும் அணுகுமுறை தெரிகிறது. ‘ தொலைந்து போன கவிதைகள் ‘ — ஒரு படைப்பாளியின் தவிப்பைக் கருப்பொருளாகக் கொண்டது. இது பலரை உஷார்ப்படுத்தும். ஒரு சிறுகதையில் , வைக்கம் முகம்மது பஷீர் ஒரு ஓய்வூதியரின் பாஸ் புத்தகம் தொலைந்து போன தவிப்பைச் சொல்லியிருப்பார். இக்கவிதை […]

வார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு

This entry is part 8 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

  சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் – ஆங்கில மொழிபெயர்ப்பில் – கோவை புத்தக்க் கண்காட்சியின் இறுதி நாளில் வெளியிடப்பட்டது. இளஞ்சேரல் தலைமை தாங்கினார். The hunt –Shortstories ( Trans. Ramgopal) நூலை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஆரம்பகால நிறுவன்ரும், கேர் தன்னார்வக்குழுவின் இய்க்க்குனருமான பிரித்விராஜ் வெளியிட்டுப் பேசினார்: சாயத்திரை போன்ற நாவல்கள் முதல் சுப்ரபாரதிமணியன் நாவல்கள், சூழலியல் கட்டுரைத் தொகுப்புகள் மூலம் சுற்றுச்சூழல் அக்கறையைப் படைப்பிலக்கியத்தில்   வெளிப்படுத்தி வருகிறார். சமூக சூழலியல் விசயங்கள் படைப்பிலக்கியத்திற்குள் வர […]

பெருந்துயர்

This entry is part 9 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     கடுமை யாக நடத்திய தென்னை இவ்வையகம் ! பெருந்துயரே ! என்றும் அழாத குணத்தவன் நான் ! தாழ்வாக மதித்த தென்னை இவ்வையகம் ! பெருந்துயரே ! இப்போ தவளை நான் இழந்து விட்டேன் நிச்சயமாய் ! இனிக் காணப் போவ தில்லை. இழுத்து வர வேண்டும் என்னிடம் இனி அவளை ! பெருந்துயரே !   நினைவுக்கு வரும் […]

கவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)

This entry is part 10 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

அமிர்தம் சூர்யா என் நெடு நாளைய நண்பர். எங்கள் இலக்கிய நட்பிற்கு வயது இருபது ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். அனேகமாக அவரின் தொடக்க கால இலக்கியச் செயல் பாடுகளில் இருந்து தொடர்ந்து பயணித்து வருகிறேன்.  அவரின் அண்மைக்காலக் கவிதைகளில் குறிப்பாக காதல் சார்ந்த கவிதைகளைத் தொகுத்து ,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, என்னும் நூலினை வெளியிட்டிருக்கிறார். வெற்றியாளர்கள் பெரும்பாலும் வித்தியாசமாக யோசிக்கக் கற்றவர்கள். நூலின் தலைப்புக்குக் கீழே,’காதலியக் கவிதைகள்’, என்று குறிப்பிட்டிக்கிறார். ’காதல் கவிதைகள்’, என்பது அறிந்தது.  அதென்ன […]

விளக்கேற்றுபவன் – சிறுகதை

This entry is part 1 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

  ”சிவராசனுக்கு கறன்ற் அடிச்சு பெரியாஸ்பத்திரியிலை இருக்கின்றாராம். நாங்கள் எல்லாரும் பாக்கப் போறம். கெதியிலை வெளிக்கிடு. அப்பா சந்தியிலை கார் பிடிக்கப் போயிட்டார்” அம்மா சொன்னார்.   நாங்கள் குடும்பமாக போவது என்றால் தான் அப்பா கார் பிடிப்பார். முன்னர் ஒரு தடவை ‘அன்னையும் பிதாவும்’ படம் பார்க்க அப்படிப் போயிருந்தோம்.   அமரசிங்கம் அண்ணையின் கார் வந்துவிட்டது. அப்பா சைக்கிளை காரின் மேல் போட்டுக் கொண்டுவந்தார்.   நான் காரின் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தேன். அப்பா முன் […]