கவிதையின் வாழ்வு

This entry is part 6 of 7 in the series 3 நவம்பர் 2019

கைநிறையக் கற்களை வைத்துக் கொண்டிருப்பதால் கருங்கல் வீடு கண்ணாடியால் கட்டப் பட்டதாகிவிடுமா? கல்லும் கருங்கல்லும் கண்ணாடியும் நானும் நீங்களும் நாடுவதும் தேடுவதும் நல்லதோர் நவீனத் தமிழ்க் கவிதையாக…

கவிதைக்கப்பால்

This entry is part 5 of 7 in the series 3 நவம்பர் 2019

நான்கு ’லைக்கு’களை குறைந்தபட்சம் நாற்பதாகவேனும் அதிகரிக்க – அதிகபட்சம் 400க்கும் அதிகமாக்க – நாலாபக்கங்களிலிருந்தும் கைத்தட்டல்களைக் கிளம்பவைக்க – நாக்கு மேல பல்லு போட்டு நாலையும் பற்றி நன்கு தாளித்து நான்கைந்து திறனாய்வுப் பார்வைகளைத் தர வல்லவர் என்று ‘ஃபிலிம்’ காட்டுவதற்காய், நானோ நீவிரோ – யார் எழுதினாலும் அது கவிதைபோன்றதே யன்றி கவிதை யன்று.

கவிதையின் காலம்

This entry is part 4 of 7 in the series 3 நவம்பர் 2019

நாமெல்லோருமே நவீன கவிதையைத் தான் எழுதுகிறோம்; அல்லது, எழுத நினைக்கிறோம் அல்லது, எழுத முனைகிறோம் அல்லது எழுதப் பழகுகிறோம், அல்லது எழுத விரும்புகிறோம்…. இருந்தும், நவீன கவிதையையே ஏன் நையாண்டி செய்கிறோம்?

நாசாவின் வாயேஜர் – 2 விண்கப்பல் நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ப் பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்புகிறது

This entry is part 3 of 7 in the series 3 நவம்பர் 2019

NASA VOYAGERS 1 AND 2 ARE NOW IN INTERSTELLAR ZONES+++++++++++++++++++1.  https://youtu.be/8yHcBaI70E8 சூரிய மண்டலம் கடந்த வாயேஜர் -2 விண்கப்பல் சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா+++++++++++++++++++++++++ NASA VOYAGERS 1 AND 2 ARE NOW IN INTERSTELLAR ZONEShttps://www.space.com/42680-voyager-2-reaches-interstellar-space.html It’s Official! NASA’s Famed Voyager 2 Spacecraft Reaches Interstellar Space By Meghan Bartels , Science & Astronomy [December 10, 2018] நாசாவின் வாயேஜர் -2  விண்கப்பல்  அண்டைப் பரிதி […]

மொழிவது சுகம் நவம்பர் 1 2019

This entry is part 2 of 7 in the series 3 நவம்பர் 2019

அ. கேள்வியும் பதிலும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில் நண்பர் நான்சில்நாடனும், இறுதியில் இரண்டு நாட்கள் காலசுசுவடு பதிப்பாளர்நண்பர் கண்ணனும் அவர் துணைவியாரும் எங்கள் இல்ல விருந்தினர்களாக வந்திருந்தனர். நாஞ்சிலாருடன் நிறைய உரையாடினேன். அதிகார அரசியல், எழுத்து அரசியல், கட்சி அரசியல் என இடைச்செருகல்களாகச் சிலவற்றை அவ்வப்போது விவாதித்தபோதும்,  அகத்தியரின் கமண்டலக் கங்கை நதி வற்றினாலும் நாஞ்சிலார் மனக்குடத்தில்அடைத்துவைத்திருந்த சொல் நதி   வற்றாத து என்பதைப் புரிந்துகொள்ள அனேகச் சந்தர்ப்பங்கள். போதாதென்று கம்பநாட்டானின் கவித்தேனை அள்ளி […]

முடிவை நோக்கிய பயணத்தில் ….

This entry is part 1 of 7 in the series 3 நவம்பர் 2019

   ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அம்மாவின் இளஞ்சூட்டுக் கையேந்தலில் தொடங்கும் வாழ்க்கை கவிழ்த்துக் கொட்டிய தேன் மெல்ல மெல்லப் பரவி மனப்பிராந்தியத்தைக் இனிக்கச் செய்யும் … தீயின் தகிப்பாகி பாதங்கள் கொப்பளிக்கலாம் . மாறி மாறி வந்து நிழலின் அருமையை வெயிலில் உலர்த்திப் போகும் வாழ்க்கை குலுக்கிய நட்புக்கரம் நம் கையைப் பதம் பார்க்கலாம் பற்றி நெரித்த மென் விரல்கள் மௌனமான காதல் கோலம் போடலாம் உறவுகளின் இணைப்புச் சங்கிலி மெல்ல விலகிச் செல்லலாம் நாவின் சுவை நீங்கி […]

6. பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து

This entry is part 7 of 7 in the series 3 நவம்பர் 2019

             6. பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து முல்லை நிலத்துக்கே உரியது கார்காலம். அக்காலத்தில் தலைவன் தன் வினை முடித்து வருவதாகச் சொல்லிச் சென்றான். ஆனால் அவன் வரவில்லை. அவனை நினைத்து நினைத்து அவள் வருந்தும் பகுதி இது. இதில் உள்ளப் பத்துப் பாடல்களும் தலைவி உரைப்பதாக இருப்பதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. ============= 1.கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர் தேர்தரு விருந்தின் தவிர்குதல் யாவது? மாற்று அருந்தானை நோக்கி ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே!   […]