பகல் கனவு ( ஒரு குறுகுறுங்கதை)

This entry is part 1 of 9 in the series 7 அக்டோபர் 2018

என் சித்தி மகள் கதறிகொண்டிருக்கிறாள். நான் கண்டுகொள்ளவே இல்லை. என்னுடைய சித்தி மகளின் கணவன் காரை கார் சத்தியமங்கலத்திலிருந்து சாமராஜபுரம் போகும் ஹேர்பின் வளைவில் வேகமாக ஓட்டிகொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் ஹாரனும் அடிக்காமல், வண்டியின் வேகத்தையும் குறைக்காமல் அவன் வேகமாக வண்டியை திருப்பும்போது என் சித்தி மகள் இன்னும் கூச்சல் போட்டு அலறினாள். அந்த அலறலை, அவன் கண்டுகொள்ளவே இல்லை. அல்லது அவன் கண்டுகொண்டாலும் அது அவனுக்கு இன்னும் வேகத்தை கொடுத்தது போல சிரித்துகொண்டே இன்னும் தூண்டும் […]

முட்டைக்கோஸ் வதக்கல்

This entry is part 2 of 9 in the series 7 அக்டோபர் 2018

நேரம் 25 நிமிடம்   தேவையான பொருட்கள் 1/4 கோப்பை துருவிய தேங்காய் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் 1 தேக்கரண்டி கடுகு 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு (உளுந்தும் எடுத்துகொள்ளலாம்) 1 அல்லது 2 காய்ந்த மிளகாய் 1 சிறிய முழு முட்டைக்கோஸ் பொடிப்பொடியாக நறுக்கியது (எட்டு கோப்பை ) 3/4 தேக்கரண்டி உப்பு 2 மேஜைக்கரண்டி கொத்துமல்லி 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு செய்முறை எண்ணெயை ஒரு வாணலியில் சூடாக்கி அதில் […]

நரேந்திரன் குறிப்புகள். (சத்குரு ஜக்கி வாசுதேவ், காலேஸ்வரம் )

This entry is part 3 of 9 in the series 7 அக்டோபர் 2018

சத்குரு ஜக்கி வாசுதேவ் சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்தியப் பல்கலக்கழகங்களில் நடத்திக் கொண்டிருக்கும் Youth and Truth நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலான இந்தியப் பல்கலைக்கழகங்கள் இன்னும் அரதப் பழசான மார்க்ஸீயர்களின் கைகளில்தான் இருக்கின்றன என்று தெரியவருகையில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் வருவதனைத் தவிர்க்க இயலவில்லை. இன்னமும் கல்லூரியில் படிக்கும் இந்திய இளையதலைமுறை மார்க்ஸிய மூளைச் சலவையிலிருந்து விடுபட இயலவில்லை என்பது பரிதாபம்தான். சத்குருவிடம் விவாதிக்கும் ஒவ்வொருத்தனிடமும் தெறிக்கும் வெறுப்பு மிகவும் கவலைக்குரியது. ஜக்கியின் ஆணித்தரமான பதில்களால் அவர்களின் […]

மருத்துவக் கட்டுரை- புட்டாளம்மை ( MUMPS )

This entry is part 4 of 9 in the series 7 அக்டோபர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் புட்டாளம்மை என்பதை அம்மைக்கட்டு நோய், கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி என்றும் அழைப்பார்கள். இது காதின் கீழ் புறமுள்ள பேரோட்டிட் சுரப்பியின் ( Parotid Gland ) வீக்கமாகும். பேரோட்டிட் சுரப்பி என்பது செவிமடலுக்குக் கீழ் உள்ளெ அமைந்துள்ள உமிழ் நீர் சுரப்பியாகும். இந்த சுரப்பி வீங்குவதால் வலி உண்டாகிறது. அதனால் வாயைத் திறப்பதிலும் , உணவு உண்பதிலும் சிரமம் ஏற்படலாம். இந்நோய்க்கான காரணம் தெரியாத காலத்தில் இதை ஒருவகை அம்மை நோயாகக் […]

  தொடுவானம் 243. பத்து பெர்சன்ட் 

This entry is part 5 of 9 in the series 7 அக்டோபர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்                     புதிய நிர்வாகத்தின் கீழ் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சிறப்புடன் இயங்கியது. பேராயர் மாமறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் அவர்களும் புதிய செயலர் அதிஷ்டம் பிச்சைப்பிள்ளையும் மைத்துனர்கள். அதனால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக செயல்படலாயிற்று. எனக்கு இருவரும் பழக்கம் என்பதால் நல்ல சலுகையும் இருந்தது. மருத்துவமனையில் தலைமை மருத்துவருக்கு இது தெரிந்ததால் அவரும் என்னிடம் எச்சரிக்கையுடன் இருந்தார். மருத்துவமனை ஊழியர்களும் […]

நாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்.

This entry is part 6 of 9 in the series 7 அக்டோபர் 2018

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா ++++++++++++++++++ https://youtu.be/rl1gtC6kuPg https://youtu.be/L4hf8HyP0LI https://youtu.be/prYDgWDXmlQ https://youtu.be/AbZ-6CcKw5M https://youtu.be/seXbrauRTY4 https://youtu.be/rl1gtC6kuPg https://voyager.jpl.nasa.gov/ https://www.nasa.gov/mission_pages/voyager/index.html ++++++++++++ நாற்பதாண்டுகள் பயணம் செய்து நாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு சூரிய மண்ட லத்தின் காந்த விளிம்புக் குமிழைக் கடக்கும் ! அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்  ! நேர்கோட் டமைப்பில் வந்த சூரியனின் வெளிப்புறக் கோள்களை விண்கப்பல் இரண்டும், உளவுகள் செய்யும் ! நெப்டியூனின் நிலவை, கருந் தேமலை, பெரும் புயலைக் காணும் […]

நானோர் இழப்பாளி  ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 7 of 9 in the series 7 அக்டோபர் 2018

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கன டா ++++++++++++++++   நானோர் இழப்பாளி !  நானோர் இழப்பாளி ! வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை ! நேசித்த பெண்டிரில் நான்  வென்றது, நேசித்த வனிதரில் நான் இழந்தது, எல்லோரிலும் ஒருத்தியை மட்டும் இழந்தி ருக்கக் கூடாது நான் ! கோடியில் ஒருத்தி அவள் ! எனக்குத் தெரிந்திருக்க வேண்டும், இறுதியில் அவளே  வென்றாள். தோற்றது நான் ! நானோர் இழப்பாளி ! ஒட்டி இருந்தவளை இழந்தேன் ! நானோர் இழப்பாளி […]

ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

This entry is part 8 of 9 in the series 7 அக்டோபர் 2018

  ஒன்றின் பல   *சிறுவனாகவே இருக்கப் பிரியப்படும் கவிதை என்னைச் சிறுமியாக்கிச் சிரித்து மகிழ்கிறது. **தெருநாய்களுக்கு உணவூட்டக் காத்திருக்கும் இரவு யாசகன் எதிரில் நானும் குரைக்க மறந்து அமர்ந்துகொண்டிருக்கிறேன். ***இருளின் கதையைக் கேட்க எனக்கும்தான் கொள்ளை ஆசை. ****கருப்புப் பூனை நான் தேடிய கதையின் மீது பாய்ந்த பின் முடிவுற்ற கதையை இன்னமும் வாசித்துக்கொண்டிருக்கிறேன் முடிவற்று. *****வானவில் ஒவ்வொரு மனசிலும் தேடியது தொலைந்த தன் ஏழு வண்ணங்களையா? அல்லது அவற்றில் அங்கிருப்பதுபோக இல்லாத ஒன்றையா? ******மனதுக்குள் […]

கவிஞர் வைதீஸ்வரனின் மூன்று புதிய நூல்கள்

This entry is part 9 of 9 in the series 7 அக்டோபர் 2018

(1) CITY WALLS POEMS BY VAIDHEESWARAN Rendered in English கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில 2000த்தில் THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் வெளியாகியது. அதில் இடம்பெற்றிருந்த ஏழெட்டு மொழிபெயர்ப்பாளர்களில் _ எழுத்தாளர்கள் அசோகமித்திரன், எம்.எஸ்.ராமஸ்வாமி என அவர்கள் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள்; அறிஞர்கள். கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள், எழுத்தாக்கங் கள் மீது மரியாதையும் அபிமானமும் கொண்டவர்கள். இப்போது, கவிஞர் வைதீஸ்வரனுடைய பிறந்தநாளை முன்னிட்டு (1935 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் நாள் […]