___ ரமணி நானறிந்த நிகரற்ற நட்சத்திரங்களின் ஞாபகத்தோடு வானின் தொலைதூரத்திலெரியும் சூரியனை என் ஒளியிழந்த கண்கொண்டு பார்க்க விழைகிறேன். நீண்ட வெளியின் மையத்தையும் முடிவையும் காணத்துடிக்கும் மனதின் வீண்முயற்சியின் அடித்தளத்தில் தகிக்கும் அடையாளமற்ற வெற்றுப்பார்வையில் என் சிறகுகள் கட்டவிழ்கின்றன. ஆனந்தத்தின் அடர்த்தியில்லாது கடந்துபோன வாழ்வை எரித்து என் கல்லறையாகக் காத்துக்கிடக்கும் பள்ளத்தாக்கிற்கு என் பெயரைச் சூட்ட நினைக்கிறேன்.
__ ரமணி இரவின் மிச்சம் இன்னும் ஜன்னல் கண்ணாடிகளுக்குப்பின் மயங்கிக் கொண்டிருக்கிறது. எது எரிந்து இப்படி சாம்பலாய்ப் பூத்துக்கொண்டிருக்கிறது? கண்களுக்குள் இன்னும் கனவு முட்டைகள் உடையாதிருக்கின்றன. முட்டைகள்! துராக்ருத முட்டைகள்! ஒரு கோப்பை காப்பித்திரவத்தால் அவற்றைக் கலைத்துவிடமுடியாது! பகலின் நெரிசலில் வாழ்க்கை வர்த்தகங்கள் சிதறடித்து விரட்ட எங்கோ மாயமறைவில் ஓடி ஒளிந்தாலும் இருளின் பதுங்கு குழிக்குள் எப்படியோ மீண்டும் சூல்கொண்டுவிடும் ஒவ்வொரு பொழுதிலும் மனக்கண்ணாடி உடைந்து அவஸ்தையாய் உயிர்த்திரவம் பெருகும்.
தொழுகைத் தொப்பி புனிதநூல் பிரதி பேரரசன் உடுப்பிற்கும் உணவிற்கும் நெய்தபடி இருந்தார். மலை எலிகளை விரிந்த நாகங்களை விக்கிரங்களை உடைத்து பள்ளிகளை எழுப்பினார். டாரா ஷிக்கோ புறச்சமயியானான், அவனோடு ஷூஜா, முராட், சர்மட்டை சிதைத்தார் வாழும் புனிதர். மதமெனும் மதுவில் மூழ்கியவர் வீராபாயையும் இழந்தார் தந்தையின் அன்பையும். தீன் இலாஹியோடு கிளைத்தார், டாரா ஷிக்கோவின் வழித்தோன்றலாய் மனித நேயர். — நன்றி குஷ்வந்த்சிங்கின் ஔரங்கஷீப் ஆலம்கீர் ஹிந்துஸ்தான் பேரரசர்.
ஒரு முறை தோல்வியின் வலி உயிரின் வேரை பிடுங்கிவிட்டு திரும்பும் போது தோல்வியோடு வலியும் மனப்பாடமாகி போவதில் ஆச்சரியமில்லை இரவை தோற்று பகல் அழிவதில் மழை தோற்று வெயில் அழிவதில் இரைச்சல் தோற்று மௌனம் அழிவதில் கனவுகள் தோற்று வாழ்க்கை அழிவதில் பிணி தோற்று உடல் அழிவதில் முதுமை தோற்று அழகு அழிவதில் துன்பம் தோற்று இன்பம் அழிவதில் உலகமயமாக்கல் தோற்று விவசாயம் அழிவதில் அரசியல் தோற்று மக்கள்ஆட்சி அழிவதில்.. வறுமை தோற்று ஆசை அழிவதில் ஆணவம் […]
ரிஷி ஆரம்பமும் முடிவும் காணலாகா வாழ்க்கையொன்று என் கண் முன். அன்புமயமான அந்தத் தகப்பனின் கைபிடித்திருக்கும் பிள்ளையோடு பிள்ளையாய் போகத் தொடங்குகிறேன். அவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவியாகி மீண்டும் அவனைத் தேடிவந்து முத்தமிடுகிறேன். அந்தக் கண்களில் குத்திநிற்கும் முட்களையெல்லாம் வலிக்காமல் ஒவ்வொன்றாய் பிடுங்கியெறியும் வழிதான் தெரியவில்லை. விரையும் வேகத்தில் ‘ராணுவ வீரனின் பொம்மை கைநழுவி சாலை நடுவில் விழுந்து விபத்துக்குள்ளாக, பேருந்திலிருந்து ஏங்கித் திரும்பும் சிறுவனின் விழிகளில் நிறையும் நிராதரவில், குற்றவுணர்வில், உறவைப் பிரிந்த தவிப்பில் இன்றும் […]
_கோபால்தாசன் எனக்கான வீடு இது. என் சிந்தனையின் பட்டறை என்றுகூடச் சொல்லலாம். தோற்றம் பழைய கட்ட்டிடமாக இருந்தாலும் உள்ளிருக்கும் ஒவ்வொரு அறையும் என்னுள்ளிருக்கும் உறுப்புகளாய்… மிளகாய் விதை இட்டு முளைத்த செடிகளும் உண்டு. திருட்டுத்தனமாய் பிடுங்கி வந்து நட்ட பூச்செடியும் உண்டு. அப்பா அம்மா இருந்தும் இல்லாத அந்தப் பருவம் அவிழ்த்து விட்ட கன்று போன்றது. பக்கத்து வீட்டிற்கும் என் வீட்டிற்கும் மதிற்சுவர் பொது என்பதால் அடிக்கடி அம்மாவும் பக்கத்துவீட்டு அக்காவும் தலையை நீட்டிப் பேசிக்கொண்டிருக்கும் பேச்சில் […]
காத்திருப்பு குற்றங்களுக் கெதிராக உயர்த்தப்படும் சாட்டைகள் விளாசப் படாமலேயே மெதுவாய்த் தொய்கின்றன.. இடக்கையால் பெருந்தொகை வாங்கிக்கொண்டு சட்டங்கள் தன்னிருப்பை சுருக்கவும் விரிக்கவும் கரன்சிப் பகிர்வுகள் தலையசைத்து நடக்கிறது .. நியாயங்களின் பாதைகளில் முள்வேலிப் போட்டு அராஜகப் பெருஞ்சாலை விரிகிறது … ஏதோ நினைவுகளில் அழுத்தப் படுகிறது வாக்குப் பதிவு இயந்திரத்தின் பொத்தான்கள் உள்ளேப் போவதும், வெளியே வருவதுமாய் நகர்கிறது ஐந்தாண்டு… காட்டப்படும் சொத்துக் கணக்குகள் யாருக்குமே குடவோக் குறையவோ இல்லை உட்பூசல்களும், வெளிப்பூசல்களுமாய் உதிர்ந்து கொண்டிருகிறது நாட்கள் […]
பூக்களுக்குள் வாசம் எங்கே தேடினேன் – காம்பு மட்டுமே மீதமாகியது கைகளில்..! வெற்றிகளின் ஓரம் வரை சென்றேன், பெரும் கிண்ணக்குழிகளாய் நின்றன… மழை நாட்களில் “நீர் முத்துக்களை”ப் பிடித்தேன்.., வாழ்வின் நிலையாமை புகட்டின… சாலைகள் தோறும் கற்களைப் பார்த்தேன், மனித இதயங்களின் மறு வடிவம் யாம் என்றன.. கண்ணாடி தேசத்திற்குள் நுழைந்தேன், என் நிழலைத் தவிர மற்றெல்லா நிழல்களும் ஒளிந்து கொண்டன…. உண்மை கொண்டு உலகைநோக்கினேன், பார்வைக்கு முன்னாலுள்ளதெல்லாம் பூஜ்ஜியமாகின.. பார்வை தாண்டி நோக்கும் போது பௌதிகஅதீதம் […]
நாய்க் கொரு நண்பகலில் வாய்த் ததொரு தெங்கம்பழம் தா னுண்ணத் தெரியாமலும் தரணிக் குத் தராமலும் உருட்டியும் புரட்டியும் ஊர்சுற்றி ஊர்சுற்றி ஓய்ந்து போனதந்த நாய் தமக்கும் வாய்த்தது தங்கமானவர் எனும் பட்டம் தரங் கெட்ட தலைக்குப் பின் தெளிவான ஒளிவட்டம் சோளக் காட்டு பொம்மைக்கு சேலையில் பரிவட்டம் சோற்றுக்கு வழி யில்லை மாற்றுக்குத் துணியில்லை இற்றுப்போன கூரை வேய கீற்றுக்கும் காசில்லை தகரத்தின் தரம்கூட தமக்கில்லை என உணர்ந்து தங்கமானவர் எனும் பட்டம் துறக்கவும் முடியவில்லை […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்த மானிடம் விருந்தோம்பும் ! ஒவ்வோர் காலை உதயமும் ஒரு புது வருகைதான் ! உவப்பு, மன இழப்பு, தாழ்ச்சி விழிப்பு யாவும் வரும் எதிர்பாரா விருந்தாளிகள் போல் ! எல்லா ரையும் வரவேற்று உபசரிப்பாய் ! கூட்ட மாய் துயரங்கள் வந்துன் வீட்டைத் தகர்க்கினும், ஆசனங்களைக் காலி செய்யினும் மதிப்புடன் நடத்து அனைத்து விருந்தி னரையும் ! வீட்டுக்கு வரும் விருந்தினர் […]