இரக்கத்தைத் தின்ற இத்யாதிகள்

This entry is part 1 of 7 in the series 23 பிப்ரவரி 2025

ரவி அல்லது வேகமாக சாலைகளில் பறந்து கொண்டிருக்கும் மனிதக் கூடுகளைப் பற்றி  பெரிதாக  அலட்டிக் கொள்ளத்தேவையில்லை அவைகள் நிலையாமையில் கால்கோள்வதால். அவைகளின் நிறம் குணம் பெயர் யாவுமே தனித்த அடையாளத்திற்காக முயன்று கொண்டே இருக்கும் ஏதாவதொரு வகையில். நிலை மாறும் பொழுதினில் ஏதோவொரு  சுய தேவையின் பொருட்டில் யாருமற்ற இடத்தில்  ஏதோவொன்றை வீசி விடுகிறது அற்ப காரணங்களுக்காக அனிச்சைக் கூடுகள் அவ்வப்பொழுது வீசுவதையே வழக்கமாக்கியதால் புரியாதப் புறாக்கள் மட்டும்  இரையிடமென பொருள் கொண்டு தனக்கான தங்குமிடமாக்கியது பார்த்து […]

மனிதக் கோப்பையினாலொரு மானுடப்பருகல்

This entry is part 2 of 7 in the series 23 பிப்ரவரி 2025

ரவி அல்லது யாவைச் சுற்றியும் நிறைந்திருக்கும்  நிம்மதியை திளைக்கப் பழகிடாத துயரத்தில்  கோப்பையைத் தூக்கியபடி கொடுந்துயரில்  பார தூரம் பயணிக்கின்றேன் நிரப்பிவிடுவார்கள் நிம்மதியையென பருகிப் பரவசங்கள் கொண்டுவிட. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அனைவரும் சொர்க்கப் பானமென சுவைக்க நிரப்புகிறார்கள் வழி வழியாக  நம்பியதை இட்டு. மொட்டு குடிக்க வந்தவன் நிரம்பி வழிவதறியாமல். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com

 வாழ்வு

This entry is part 3 of 7 in the series 23 பிப்ரவரி 2025

                                                                                     வளவ. துரையன்                                மீண்டும் மீண்டும்                                 கூடு கட்ட நல்ல                                 குச்சிகள் தேடும் காகம்                                எத்தனை பேர் வந்தாலும்                                 ஏறச்சொல்லி                                 முன்னாலழைக்கும்                                 நகரப் பேருந்து                                கொடுத்ததைப் பாதுகாத்து                                 அப்படியே அளிக்கும்                                 குளிர்சாதனப் பெட்டி                                குழல்விளக்கினைக்                                 கருப்பாக்க நினைக்கும்                                 கரப்பான பூச்சிகள்                                பெட்டியைத் திறந்தாலே                                 ஆள்கடத்தல் தீவிபத்து                                 அரசியல் கூச்சல்கள்                                ஒழுகும் தூறல்களுக்கிடையே                                 ஒதுங்க இடம் தேடும்                                 ஒரு நாய்க்குட்டி                                கிழக்கின் மருத்துவமனைக்கும்                                 மேற்குக் காட்டிற்கும்                                 இடையில்தான் மெதுவாக                                 நகர்கிறது வாழ்வு

கானல் நீர்

This entry is part 4 of 7 in the series 23 பிப்ரவரி 2025

                                 .                                                       வளவ. துரையன்                          மாரியம்மன் கோயில்                          வாசலில் வானம் தொட்டு                           வளர்ந்திருந்த வேப்ப மரங்கள்                          தான் பூத்த மகிழ்ச்சியைத்                           தலையாட்டிக் காட்டி வரவேற்கும்                           கரும்புச் சோலைகள்                           மேதிகள் கூட்டம்                           குளித்துக் கலக்குகின்ற                           குளம் போன்ற குட்டைகள்                          கதிரவனை மறைத்து மறைத்துக்                          கண்ணாமூச்சி காட்டும்                           சிறு குன்று                          களத்தில் தூற்றிய                           நெல் மூட்டைகளைக்                           கழுத்தொடிய இழுக்கும்                           காளைகள்                          மேலிருந்து பட்டென்று                           விழுந்து வாவி மீனை                            வாரியெடுத்துச் சென்று                           வட்டமிடும் கருடன்கள்                          இப்பொழுது எல்லாம்                           இவற்றை வரைந்து பார்த்தால்                           வண்ண […]

தள்ளி வைத்த தயக்கம்

This entry is part 11 of 11 in the series 16 பிப்ரவரி 2025

-ரவிஅல்லது எனக்கான சாத்தியக்கூறுகள் வாழ்க்கை முழுவதும் விரவிக்கிடக்கையில் உன்னிடம் நான் பேசியிருக்கலாம். எத்தனையோ பேரிடம் எத்தனையோ  மணி நேரம் பேசினேன். உன்னிடமும் சிரித்து மகிழ்ந்து என இதில் ஏதோ  ஒரு நிமிடத்தை மன்னிப்பிற்காக நான் மாற்றி இருக்கலாம். தயக்கம் என் வாழ்வின் பல போக்குகளை பலியாக்கி மாறியதை   நான் அறிந்தே இருக்கிறேன். என் தயக்க வியாதி உன்னிடம் தயக்க அச்சமாய் வாழ்வோடு உள் உறுத்தலாய் இதுவரை என்னை கொண்டு வந்துவிட்டது. என் உயிர் அசைவின் இறுதி துடிப்பு […]

வாழும்டைன்ஸ் டே. அல்லது  காதலாகுதல் தினம்.

This entry is part 10 of 11 in the series 16 பிப்ரவரி 2025

ரவி அல்லது பாயோடு பாயாக படுத்துக்கிடப்பனுக்கு பணிவிடைகள் செய்யும் பாட்டி ஒரு பொழுதும் சொன்னதே இல்லை  நான் உன்னைக்காதலிக்கிறேனென எப்பொழுதும். தோல் போர்த்தி துவண்டு கிடக்கும் கிழவனும் மனதாரக் காதலிக்கிறேனென மருகவில்லை வாழ்வில் ஒருபொழுதும். வார்த்தைகளில் வீழாத அவர்களின் வயோதிகத்திலும் நிரம்பி வழிகிறது காதல் அருந்தி மகிழுமாறு அடுத்த தலைமுறைக்கு  நேச நெகிழ்வில். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com

துணை

புத்தகக்கடைக்கு  மனைவியையும்  அழைத்துச்சென்றேன்  வயோதிகத்தில்.  கோயில்,குளமோ போகாமல்  புதுமைப்பித்தனையும்  கி.ரா.வையும், பிரமீளையும்,  ஜெயகாந்தனையும் காட்டியவுடன்  மிரண்டுப்போய்,  மயிலை, கபாலீஸ்வரர் கோயிலுக்கு  வழிக்கேட்டாள்.  அந்த தெய்வம்  இங்கும் இருக்கின்றது  வா, வாங்கிப்படிக்கலாம்.  இனி  படியேறி, முருகனை அடையமுடியாது.  முட்டிவலி, முதுகுவலி,  கைக்கால் குடைச்சல்.  டிவி சீரியல் ஒருபக்கம்,  யுடியூப் மறுப்பக்கம்  பார்த்தது போதும்  படி  இந்த புத்தகங்களையும்  படி.  கடற்கரை காற்று  வீணாகப்போகின்றது  நட்சத்திரங்கள்  நடைக்கட்டி ஆடுகின்றது.  குடிசையில்  கோலமயில் பாடுகின்றது.  வண்ணமயமான வாழ்க்கை  இந்த  புத்தகங்களில் விரிகின்றது.  […]

கவிதைகள்

This entry is part 2 of 11 in the series 16 பிப்ரவரி 2025

எனக்கில்லை                                                                       மத்திய சிறைக்குள்ளே                              நுழைவதென்றாலே                              மனத்தில் ஓர் அச்சம்தான்.                              மாறாத ஒரு நடுக்கம்தான்.                              நான்கைந்து தடுப்பு                              வாசல்களிலும்                              நல்லமுறைச் சோதனைகள்.                              கோரிக்கைகளை வென்றெடுக்க                              ஆசிரியர் போராட்டத்தில்                              அடியேனும் கலந்துகொண்டு                              அங்கிருந்த நாள்கள்                              அசைபோட வந்தன.                              இப்பொழுதும் எதுவும்                              மாறவில்லை.                              பார்வையாளர் சந்திக்குமிடம்                              அதிகாரிகளின் அலுவலகங்கள்                              மிடுக்கான காவலர்கள்                              வானளாவிய சுற்றுச் […]

வசந்தம் வரும்

This entry is part 1 of 11 in the series 16 பிப்ரவரி 2025

அப்போதுதான் வந்தமர்ந்த  புதுப்பறவையை பார்த்தேன்.  இணைக் காண சோகம்  பாடும் தேடலில் கண்டேன்.  எங்கிருந்தோ  வந்த  வண்ணத்துப்பூச்சி  பறவையின்  முகத்தில் அமர்ந்து சென்றது.  அது கொடுத்த  மகரந்த யாழின்  பாடலில்  பல்லாங்குழி வாசித்தது  புதிய பறவை.  தேடி  நிதம் சோறு தின்னும்  எறும்பின் உரசலில்  ஒய்யாரமாக ஆடியது பறவை.  கூடு விட்டு, கிளை வந்த காக்கையாரும்  ஒரு பிடி  அமாவாசை பருக்கைப்போட்டது.  கண்ணீரோடு  தின்ற  புதிய பறவை  தன்  பாட்டியை நினைத்து கண்ணீர் விட்டது.  வந்தமர்ந்த காகம்  […]

சாம்பல்

This entry is part 4 of 5 in the series 9 பிப்ரவரி 2025

வளவ. துரையன் வீடு முழுவதும் உன்பெருஞ்சினத்தைஇறைத்து வைத்திருக்கிறாய்அதன் வெப்பம்வீதியெலாம் கனக்கிறதுஎப்பொழுது அதுஅணையுமென்று சிலபுறாக்கள் காத்திருக்கின்றனவிதையே இல்லாமல்பெரிய மரமாக வந்துநிற்கும் மாயம்உன்னிடம் உள்ளதுஎந்த அறைக்குள்நுழைந்தாலும் உன்வெப்ப வாசனைதான்நாசியைக் கருக்குகிறதுஅணைப்பதற்குஅறுசுவை நீர் தேடிஅலைவதே என்வாழ்வின் பெரும்பயணம்எந்த எரிமலையும்தணிந்துதான் தீரவேண்டும்சாம்பல் எப்போது வரும்?