வாழ்க்கை

This entry is part 4 of 10 in the series 22 டிசம்பர் 2024

அன்று என் முப்பதுவயதுப் பண்டிகையில் ஆயிரம் வெள்ளியில் எனக்கு உடுப்பு ஐம்பது வெள்ளியில் அப்பாவுக்கு உடுப்பு இன்று  எழுபது வயதில் என் பிள்ளைகளின் பண்டிகையில் ஐயாயிரம் வெள்ளியில் அவர்களுக்கு உடுப்பு ஐம்பது வெள்ளியில் எனக்கு உடுப்பு விட்டெறிந்த கல்லாய் வட்டப் பயணமாய் வாழ்க்கை அமீதாம்மாள்

எனக்கு ஒரு கோப்பை மது கொடுங்கள்

This entry is part 3 of 10 in the series 22 டிசம்பர் 2024

ப.மதியழகன் 1 சிறுசிறு துயரங்கள் என்னை வேதனையின் அடிஆழத்திற்கு இழுத்துச் செல்கின்றன ஒரு கோப்பை மதுவோடு ஒரு துளி விஷத்தைக் கலந்து எனக்குக் கொடுங்கள் என்னை மறந்திருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நான் செய்து கொள்கிறேன் எனது பகுத்தறிவு எப்போதும் கடவுளுக்கு இடம் கொடுத்ததில்லை எனது மனதின் அறைகூவல்கள் பிரபஞ்சத்தில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன இவர்களையெல்லாம் சந்திக்க வைத்த விதியை நான் நொந்து கொள்வதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை இறக்கும் வரை பிறரிடம் இரந்து பெறவேண்டிய […]

மொகஞ்சதாரோ 

This entry is part 1 of 10 in the series 22 டிசம்பர் 2024

மனிதர்கள்  சந்தித்துக்கொள்ளும்  பாதையில்  சுவர்ண பட்சிகள்  வருவதில்லை. வறண்டு போன  நதிகளின் கண்ணீர்  கதையை  அவைகள் கேட்ட பிறகு  மனித வாடை  துர்நாற்றம் வீசுவதாக  புகார் கூறுகின்றன.  இடிந்து போன  அரண்மனையின்  கடைசி செங்கல்லில்தான்  பட்சி வளர்த்த கடைசி மன்னனின்  சமாதி இருந்தது.  இரவில்  பட்சிகள் வந்து  மெளன ராகம் பாடி செல்லும்.  வறண்ட நதியின்  கர்ப்பத்தின்  ஆழமான  சதைப்பிண்டங்களை  அள்ளி சென்றனர்  இரக்கமற்ற மனிதர்கள்.  ஒவ்வொரு மணித்துளிகளில்  காசை வலக்கையில் வாங்கி  கஜான ரொப்பினார்கள். மறைந்து […]

திளைத்தலின் உன்மத்தம்

This entry is part 7 of 9 in the series 15 டிசம்பர் 2024

ரவி அல்லது இப்பெரு மழையினூடாகவரும்உன் நினைவுகளின்கதகதப்புதான்பார்க்குமாவலைத் தடுத்துபரவசம் கொள்ள வைக்கிறதுஎனக்குள்ளானஉன் ஆதுரத்தில்வெயிலானாலும்மழையானாலும்வெளுக்காமல். -ரவி அல்லது.ravialladhu@gmail.com

ஒரு தாம்பத்தியத்தின் தன்னிழப்பு

This entry is part 6 of 9 in the series 15 டிசம்பர் 2024

வெங்கடேசன் நாராயணஸ்வாமி  எப்போதுமுள்ள மௌனமே  நம்மிடையே – நாம் நம்முள் உறைவதின் அத்தாக்‌ஷியாய், நம்மிருப்பே இடையறாத  சொற்பொழிவாய், வாழ்வாய், நாமொருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும்,  பார்க்காத மாதிரிதான், பார்க்காது இருந்தாலும், பார்த்துக் கொண்டிருப்பது போல்தான். ஒன்றாயிருப்பது என்பதென்ன? நீயில்லை என் ஆழ்துயிலில். உன் ஆழ்ந்த உறக்கத்திலென்னைக் கண்டாயோ? நம் நிழல்களுறவாடுவதை? பின்னிப் பிணைந்திருப்பதை? நம் நினைவுகள்  முயங்கியிருப்பதை? நம்மிருவுடல்கள் ஓரிடத்தில் இணைவதை? நம்முணர்வுகள் பிணைவதை? விழிப்பில் நாம் ஒருவரையொருவர்  பார்த்துக்  கொண்டிருந்தாலும் பார்க்காத மாதிரிதான். நீ நினைப்பதையே நான் […]

சித்தம் ஒருக்கி

This entry is part 5 of 9 in the series 15 டிசம்பர் 2024

வெங்கடேசன் நாராயணஸ்வாமி  பக்கத்து வீட்டுச் சாளரக் கதவு திறக்கும் ஓசை . . . இறுக மூடினேன் என் வீட்டுச் சாளரக்கதவை, சிகரெட் புகையுள்ளே வராமலிருக்க. காற்றைக் குறை கூறுவானேன்?

கவிதை

This entry is part 3 of 9 in the series 15 டிசம்பர் 2024

குடைபிடி ஞாபகங்களில்  எச்சரிக்கின்றது  வயோதிகம்.  குழந்தையின்  மழலைப்போல  போய்விடுகின்றது  கால்கள்.  குளிரில்  அணைத்தப்படி செல்லும்  இளசுகளின்  உரசலில்  என் வாலிபத்தின்  விலாச முத்திரை தெரியும்.  எங்கோ  போய்விட்ட  அறுந்த  காத்தாடியின்  நூலை பிடிக்க  அலையும்  மனசு.  பள்ளிக்கூட  மணி ஓசையில்  மகிழ்ந்து கொள்ளும்  மனம்.  தொலைதூர  ரயில்வண்டியின்  பயணிகளின்  இரைச்சல்களில்  எனது  பயணங்கள். ஞாபக மரங்கள்  எரியும் தெருக்களில்  கூடு கட்டி வாழும்  எனது  மிச்சமுள்ள  வாழ்க்கை.     – ஜெயானந்தன்.

விலாச குறிப்பு

This entry is part 2 of 9 in the series 15 டிசம்பர் 2024

இறக்கிவிட்ட ரயில்  வெகுதூரம் சென்றுவிட்டது  சில  ஞாபக விலாசங்களோடு.  “ஏதோ நினைவுகள் மலருதே…,” பாடிய  குருட்டு பிச்சைக்காரனை  கைத்தடியில்  அழைத்து செல்லும்  சிறுமி . கடலை பர்பி  கைக்குட்டை  விற்று செல்லும்  நொண்டி அண்ணன்.  கைத்தட்டி  உரிமையோடு  காசு கேட்கும்  அனார் அலி.  டைம் பாஸ்  கடலை விற்கும்  பீடி கணேசன்.  “இறைவனிடம்  கையேந்துங்கள்  அவன் இல்லையென்று  சொல்லுவதில்லை….” ஹார்மோனிய வயோதிகன்.  பழம், பூ  விற்கும் சம்சாரிகள்  நெற்றியில்  பெரிய பொட்டோடு.  கையில்  கல்லூரி நோட்டோடு  காதல் […]

சுயநலம்

This entry is part 1 of 9 in the series 15 டிசம்பர் 2024

ஆர் வத்ஸலா உன் சோகங்களை பகிர்ந்து கொள்ள  ஒரு நல்ல தோழியாக என்னை‌ தேர்ந்தெடுத்தாய்  நீ உன்னுடைய ஒவ்வொரு சோகத்திலும்  அமிழ்ந்தெழுந்து ஆறுதல் அளித்தேன் உனக்கு நான்   வெகு காலத்திற்கு பிறகு தான் தெரிந்தது – அன்பில் தோய்ந்த எனது அனுதாபம் உனக்கு அமிர்தமாய் இனிக்க உனது மகிழ்ச்சித் தருணங்களை என்னிடமிருந்து ஒளித்து வைத்திருந்தாய்  நீயென அன்றறுந்தது வேரோடு எனது பாசம் 

பார்வை

This entry is part 4 of 5 in the series 8 டிசம்பர் 2024

                  வளவ. துரையன் மேகங்களின் உருவங்கள்  காற்றால் மாறுவதைப் போல  மெதுவாக இங்கே  இரக்கமின்றிச்  செல்கிறது கடந்த காலம் அன்று முதல் பார்வையில் நீ தந்த குளிர்மொழிதான்  மனக்குகையில்  உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது நினைத்து நினைத்து  மறக்க முயல்கிறேன் நினைவுகளைப் போட்டுக்  கசக்கிப் பிழிந்து  கரும்பறைக்கும் இயந்திரமாக  மனம் கசப்பு கொள்கிறது எல்லாம் காலியானாலும்  சமையல் பாத்திரத்தின்  அடியில் ஒட்டியிருக்கும்  ஒரு சிறு  சோற்றுப் பருக்கையாய்  நீ அமர்ந்து கொண்டிருக்கிறாய் அதனால் பசியாறாது  என்று தெரிந்திருந்தும்  அதையே […]