ரணம்

This entry is part 8 of 31 in the series 4 நவம்பர் 2012

புத்தகம் வெளியிட்டுத்தரும் பெரிய மனிதர்கள் எல்லோரும்  ஒரு எழுத்தாளனுக்கு சம்பந்திமார்கள். சர்வ ஜாக்கிரதையாய்ப்பழகி வந்தால்தான் உண்டு. உண்டு என்று சொல்லிவிட்டீர்களே அது என்ன என்று  என்னைக் கேட்டால்  எப்படித்தான் நான் சொல்வது.  எழுத்தாளனாய் இருந்து ஒருவன் கொஞ்சம் மொத்துப்பட்டால் மட்டுமே இதுகள் எல்லாம் அத்துப்படி ஆகும். யாருக்கேனும் யான் பட்ட இந்த அவத்தையை உடன் சொல்லிவிடவேண்டும் என்று  உறுத்தலாயிருக்கிறதே பிறகென்ன செய்ய. ஆகத்தான் கதை. புத்தக வெளியீட்டாளர்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் ஒரு எழுத்தாளர் பேசிவிடலாம். அதற்கென்னக் […]

சந்திராஷ்டமம்!

This entry is part 4 of 31 in the series 4 நவம்பர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி – இன்று அவருக்கு சந்திராஷ்டமம். காலையில் டிவியில் இன்றைய ராசி பலன் நிகழ்ச்சியில் சொன்னதைக் கேட்டார். பூபாலனுக்கு எப்போதிருந்து ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வந்தது என்பது அவருக்கு ஞாபகமில்லை. ஆனால் அதன்படிதான் அவருடைய வாழ்க்கையில் எல்லாமே நடக்கிறது என்பதில் அவருக்கு ஆழமான நம்பிக்கை வந்து.விட்டது அதிலும் சந்திராஷ்டமம் என்றால் அவ்வளவுதான். அன்று வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். மாதத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சந்திராஷ்டமம் வந்து விடும். என்னதான் […]

மனித பொம்மைகளும் பொம்மை மனிதர்களும்

This entry is part 2 of 31 in the series 4 நவம்பர் 2012

ஒற்றை ஆளாகப் பரணிலிருந்து பொம்மைப்பெட்டிகளை இறக்கப் போன வருடமே சிரமப்பட்டதை நினைவில் கொண்டு, என்னிடமும் என் தம்பியிடமும்                                                  ” போதும் போதும் உங்க பராக்கிரமமெல்லாம்.  ஓடற காவேரித் தண்ணில லைட் வெளிச்சம் நடுங்கற மாதிரி, பொட்டிய எறக்கிவைக்கிற வரைக்கும் ஒடம்பு முழுக்க நடுங்கித் தவிச்சது ரொம்ப நன்னாயிருந்தது. பொம்மையெல்லாம் பொழைக்குமான்னு பட்ட கவலையெல்லாம் எங்களுக்குத்தான் தெரியும் ” என்று சொல்லி எப்போதும் அவளுடன்  ஒத்துப்போகாத என் சின்னக்காவையும் பிரச்சனைகளைத் தவிர்க்க எப்போதும் ஆமாம் போடும் என் தர்ம […]

மனிதாபிமானம்!!

This entry is part 30 of 34 in the series 28அக்டோபர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி சங்கருக்கு அந்த போன் வந்த போது காலை ஒன்பது மணி இருக்கும். அவருடைய சொந்த ஊரிலிருந்து பால்ய சினேகிதrர் ராமசுப்புதான் பேசினார். அவர் அடிக்கடி போன் பண்ணுபவரல்ல. தென்காசிக்குப் பக்கத்தில் இருக்கும் மங்களபுரம் கிராமத்தில் பத்தாவது வரை சங்கருடன் ஒன்றாகப் படித்தவர். காலேஜ் படிப்புக்காக சங்கர் கோயம்புத்தூர் வந்து, படிப்பு முடிந்ததும் இங்கேயே வேலை கிடைத்து வடவள்ளியில் வீடு வாங்கி குடும்பத்தோடு செட்டிலாகி விட்டார். எப்போதாவது ஊருக்குப் போகும்போது ராமசுப்புவை பார்த்து, பழைய […]

கற்பனைக் கால் வலி

This entry is part 29 of 34 in the series 28அக்டோபர் 2012

டாக்டர். ஜி. ஜான்சன் அன்று நான் உலு திராம் லண்டன் கிளினிக்கில் பகுதி நேர வேலைக்கு சென்றிருந்தேன். அதன் உரிமையாளர்  டாக்டர் நித்தியானந்தா  தலைநகரில் நடைபெறும் மருத்துவ மாநாட்டுக்கு  சென்றிருந்தார். எனக்கு அந்த கிளினிக் பிடித்திருந்தது. உலு திராம் பேருந்து நிலையத்தின் எதிரே அமைந்த கடைகளின் வரிசையில் அது அமைத்திருந்தது. அந்த சிறு டவுனின்   மையப்பகுதியும் அதுவே எனலாம். அங்கு நிறைய தொழிற்சாலைகள் இருந்ததால் வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிந்தனர். அவர்களின் வங்காள தேசிகள்தான் அதிகமானோர். டாக்டர் […]

“தீபாவளி…… தீரா வலி….. !”

This entry is part 25 of 34 in the series 28அக்டோபர் 2012

  “அக்னி வெடிகள் & பட்டாசுகள்”  இரத்தச் சிவப்பில் எழுத்துக்கள் சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்தன. முதலைப்பட்டி கிராமத்திலேயே பெயர் பெற்ற பட்டாசு ஆலையில் நானும்  ஒன்று என்ற கர்வம் அந்தப் பெயர்ப் பலகையின் பிரகாசக் கம்பீரமே சொல்லிவிடும். பட்டாசு ஆலைக்குள் இருக்கும் அறைக்குள்ளே தொழிலாளர்கள் வெகு மும்முரமாக இயந்திர கதியில் பட்டாசுகளை அடுக்கி அட்டைப் பெட்டிக்குள் திணித்து லேபிள்  ஒட்டி, டேப் போட்டு மூடி விற்பனைக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை அவ்வளவு துரிதமாக வேலை […]

வைதேஹி காத்திருந்தாள்

This entry is part 15 of 34 in the series 28அக்டோபர் 2012

கலைச்செல்வி சன்னல் வழியே சுள்ளென்று எட்டிப் பார்த்தது சூரியன்.  சன்னல் தன்னை உள்வாங்கியதால் அதற்கு கட்டுப்பட்ட சூரியன், தனது ஒளியில் சன்னல் வடிவம் காட்டி அதற்கு நன்றி கடன் செய்தது. அதன் வரிவடிவ ஒளியை இரசித்தவாறு படுத்திருந்தாள் வைதேஹி. “வைதேஹி… சன்னமாக காற்றைக் கிழித்த சத்தம். இன்னமா தூங்கறே?’ என்ற கணவர் குரலுக்கு, “ம்ம்ம் … எழுந்திருச்சாச்சு..” பதிலளித்தாள். பிரிந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்தாள். ஒற்றை நாடி சரீரம். மிக லேசான எழும்பிய வயிறு. நெற்றியில் ஒட்டியிருந்த […]

அக்னிப்பிரவேசம் -7

This entry is part 7 of 34 in the series 28அக்டோபர் 2012

அக்னிப்பிரவேசம் -7 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “சார், உங்களுக்குக் கடிதம்” என்று ப்யூன் மேஜை மீது போட்டுவிட்டுப் போய்விட்டான். பைலுக்கு நடுவில் நாளேடை வைத்துக்கொண்டு சீரியஸாய் படித்துக் கொண்டிருந்த பாஸ்கரனுக்கு அந்த உரையைப் பார்த்ததுமே கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்று புரிந்துவிட்டது. பரபரப்புடன் பிரித்தான். ஒரு மாதத்திற்கு முன்னால் ஏதோ பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, தனக்கு பிடித்தமான பூவின் பெயரையும், ஐந்து ரூபாயையும் அனுப்பி இருந்தான். அந்த […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -3 பாகம் -8

This entry is part 5 of 34 in the series 28அக்டோபர் 2012

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம்  அங்கம்  முடிவு) அங்கம் -3 பாகம் -8 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா     பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, […]

நம்பிக்கை ஒளி! (4)

This entry is part 4 of 34 in the series 28அக்டோபர் 2012

உலகமே இருண்டு போய் ஏதோ அதள் பாதாளத்தினுள் அனைவரும் தத்தளிப்பது போல ஒரு படபடப்பு. நாட்கள் சில உருண்டோடியது புரிந்தது. மீண்டு எழ வேண்டியது அவசியம்தான். அடித்துப் போட்டது போன்று உடலும், மனமும் ரணமாகிக் கிடந்தது. வெகு நேரம் கழித்துதான் இரவு தூக்கம் வந்தது…. அன்றாட வழக்கம் போலவே அன்றும் விடியலிலேயே விழித்துக் கொண்டவள், கண்ணைத் திறக்காமல் அப்படியே எழுந்து படுக்கையிலேயே அமர்ந்து கொண்டு தன் தாயாய் இருந்து அன்பு சொரிந்த அந்த அழகு அக்கா முகத்தை […]