சித்ரா சிவகுமார் ஹாங்காங் ஏழாம் நூற்றாண்டில், சீனாவின் சூ மாநிலத்தை மிகவும் திறமை வாய்ந்த அரசர் மியாவ் சுயன் ஆண்டு வந்தார். அவரது ஆணையை எவரும் எதிர்த்தவர் இல்லை. யாரேனும் ஆணைப்படி நடக்கவில்லையென்றால், கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர், குடும்பத்தினர் உட்பட! அரசர் மியாவிற்கு, அழகான மூன்று மகள்கள் இருந்தனர். மூத்தவள் மியாவ் யின். இரண்டாமவள் மியாவ் யான். இளையவள் மியாவ் ஷான். இளையவள் பிறந்த உடன், அவளைக் கண்ட அரசருக்கு, அவளது முகம் பரிசுத்தமாகவும் கருணை மிக்கும் காணப்பட்டதாக […]
– நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 47. வேணுகோபாலை கைத்தொலைபேசியில் பிடித்தேன். நாளை செஞ்சி வருகிறேன் வீட்டில் இருப்பாயா என்றேன். சென்னைக்கு போக வேண்டியிருப்பதாகவும் மாலை நான்கு மணிக்குத் திரும்பிவிடுவதாகவும் உறுதியளித்தான். படித்துமுடித்த செஞ்சி நாவலைக்குறித்து சில சந்தேகங்கள் இருந்தன. உண்மையின் விழுக்காடுகள் எவ்வளவு என தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. சடகோபன் பிள்ளையுடன் விவாதிக்கவேண்டும். முடிந்தால், செஞ்சியின் காவலரண்கள் குறித்து ஆய்வுசெய்த ழான் தெலொஷையும் பிள்ளையையும் சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும். கையெழுத்துப்பிரதியை நூல்வடிவில் கொண்டுவரவேண்டுமென்ற […]
விஜே.பிரேமலதா கறுத்துப் போன தேகத்தோடு, வியர்வை வழிய நெற்றியிலிருந்த நாமம் வழிந்து மூக்கைச் சிவப்பாக்கியிருந்தது. அதை அறியாமல், ஒருவித தளர்வோடு முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் பெரியாழ்வார். கூடத்துத் திண்ணையில் தோழியரோடு மாலை கட்டியபடி அனுமன் பற்றிய கதையைச் சொல்லிக்கொண்டிருந்த கோதை தலைநிமிர்ந்தாள். ஆண்டாளின் கதை நின்றதை அறிந்த தோழியர் பெரியாழ்வாரின் முகத்தைப் பார்த்தளவில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வாய்ப் பொத்தி அவரவர் வீட்டிற்குப் பறந்து போயினர். தந்தையின் வருகை அகத்தில் மகிழ்ச்சியைத்தர, துள்ளிக்குதித்தபடி அன்றலர்ந்த […]
முள்வெளி அத்தியாயம் -22 மாலை மணி ஏழு. ‘லாட்ஜி’ன் தனிமை தற்போதைய மனநிலையில் சற்று கூடுதலாகவே வாட்டுவதாகத் தோன்றியது. இதுவரை கம்பெனி ‘கெஸ்ட் ஹவுஸி’ல் தான் தங்கியிருக்கிறான். சென்னையிலிருந்து அவன் கிளம்பும் போது எப்போதும் ‘கெஸ்ட் ஹவுஸ்’ ‘சூட் நம்பர்’ எதுவென்னும் ‘மெயில்’ தானே வந்து விடும். ஆனால் இந்த முறை சொந்த செலவில் டெல்லி வந்து ‘கரோல் பாக்’கில் தங்க வேண்டிய நிலை. காலையிலிருந்து கண்ணாமூச்சி விளயாடுகிறான் விஷால். ‘எஸ் எம் எஸ்’ ஸுக்கு பதிலில்லை. […]
மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -8 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய […]
‘கோமதி’ பிருந்தா என்று பெயரிட்டதாலோ என்னவோ அவளுக்கு துளசி என்றால் ரொம்பவும் பிடிக்கும். சிறு வயது முதலே துளசிச் செடி வைத்து நீர் ஊற்றி கோலங்கள் போட்டு விளக்கேற்றி தோத்திரம் படித்து பிரதக்ஷினம் நமஸ்காரம் என்று பெரியவர்கள் போல சிரத்தையுடன் செய்வாள். திருமணமாயிற்று. புருஷன் நல்லவர். தெய்வ நம்பிக்கை என்று இல்லாவிட்டாலும் பிருந்தா செளிணிவதை தடுக்க மாட்டார். அவர் வேலையுண்டு அவருண்டு என்ற சுபாவம். நேர்மையுள்ளவர் பிள்ளை ஒருபடி மேலே – பெரியார்தாசன். மூட […]
முகில் தினகரன் நகரின் அந்த பிரதான சாலை ஜன சமுத்திரமாய்க் காட்சியளித்தது. எங்கும் பெண்கள் கூட்டம். பேரணி துவங்கியதும் அதைத் தலைமையேற்று நடத்தும் மாதர் சங்கத் தலைவி சுஜாதா தேவநாதன் முன் நடக்க ஆயிரக்கணக்கிலான பெண்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். ‘பெண் குல எதிரி ‘நிலாஸ்ரீ’….ஒழிக” ‘கேள்…கேள்…மன்னிப்புக் கேள்” ‘தமிழ்ப் பெண்களைக் கேவலமாய்ப் பேசிய தரங்கெட்ட நடிகையே…உடனே ஓடு..உன் மாநிலத்திற்கு” ‘துரத்துவோம்…துரத்துவோம்…தமிழச்சியை இழிவ படுத்திய வட இந்திக்காரியைத் துரத்துவோம்…துரத்துவோம்” ஆவேசப் பெண்களின் ஆக்ரோஷ கோஷம் ஆகாயம் வரை […]
இரு வேடர்கள்! – கலீல் ஜிப்ரான் ஒரு மே மாத பகல் பொழுததனில், ஏரிக்கரை ஒன்றில் வகுமையும், வருத்தமும் சந்தித்தனர். வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டவர்கள், அமைதியான அந்த் நீரோட்டத்தின் அருகமர்ந்து உரையாடினர். சுகம் பூவுலகை நிறைத்திருக்கும் அந்த அற்புத அழகைப் பற்றியும், காடுகள் மற்றும் மலைகளுக்குள்ளேயான, அன்றாட வாழ்க்கையின் அதிசயம் பற்றியும், மேலும் புலரும் பொழுதிலும் மதி மயங்கும் அந்தி வேளையிலும் ஒலிக்கும் அந்த இனிய கீதங்களைப் பற்றியும் உரையாடலானது. சுகம் மொழிந்த […]
தொழிற்சங்கவாதியான பரமானந்தம் மேடையில் ஏறி மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தார் “எனதருமைத் தொழிலாளர் தோழர்களே கதிரவனைப் போன்றவன் தொழிலாளி அவன் தன் இயக்கத்தை ஒரு நாள் நிறுத்தினால் உலகமே ஸ்தம்பித்துப் போகும்.காலம் காலமாக உழைக்கும் வர்க்கத்தை தொழிலாளர் தினத்தன்று மட்டும் புகழ்ந்து பேசிவி்ட்டு மற்ற தினங்களில் அலட்சியப்படுத்தினால்,உழைக்கும் கரங்களெல்லாம் ஒரு நாள் ஒன்று சேரும்,இந்தப் பூமிப்பந்தைக் கூட இரும்புத்தடி கொண்டு நெம்பி எங்களால் புரட்டிப் போட முடியும்.நமது வியர்வைக் கடலிலிருந்து தான் நீ்ர் ஆவியாகிச் சென்று மண்ணை […]
ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம் மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின் நடைக்கு ஜதிபோட,தலையில் சூட்டிய பிச்சிப்பூவின் மணம் அவள் கடந்து சென்ற பாதை முழுதும் மலரின் புகழைப் பரப்பியது. “பார்கவி இன்னும் கொஞ்சம் மெல்ல நடவேன்” என்று காதில் அசைந்தாடிய ஜிமிக்கிகள் ரகசியமாய் எச்சரிக்க மனதைப் பிடுங்கித் தின்ற வெட்கத்தையும் பயத்தையும் ஒதுக்கிவிட்டு பிரார்த்தனையோடு மேடையில் விரித்திருந்த ஜமுக்காளத்தில் அமர்ந்தவளின் மடியில் தலை வைத்தது அவளது அருமை வீணை. அவளின் வரவிற்காகவே காத்திருந்த […]