பூமிதி…..

This entry is part 11 of 37 in the series 22 ஜூலை 2012

தேவையில்லாத எதிர்பார்ப்புகளே ஒருவரை வாழ்க்கையின் அடிமையாக்குகிறது.. இரவு படித்து முடித்து வைத்த புத்தகத்தின் சில வரிகள் பளிச்சென்று நினைவிற்கு வந்தது தூங்கி முழித்தவுடன்…. அழகாக குளித்து முடித்து நார்மலான காலை வழிபாடு முடித்து மதிய உணவிற்கு இரண்டு சப்பாத்தியும் கொஞ்சம் சன்னாவும் ஒரு சிறிய ஆப்பிளும் எடுத்து பேக் செய்து வைத்துவிட்டு காலையில் கார்ன் ஃபிளேக்ஸ் ஒரு பவுல் அதிவேகமாக விழுங்கிவிட்டு உடை மாற்றி லேசான ஒப்பனையுடன், ஏதோ ஒரு டாப்ஸ் ஒரு ஜீன்ஸ் என்று மாட்டிக் […]

‘பினிஸ் பண்ணனும்’

This entry is part 10 of 37 in the series 22 ஜூலை 2012

கார்த்திக் வழக்கமாகச் செல்கிற அதே வழியில் தான் அன்றைக்கும் சென்று கொண்டிருந்தான். இன்னும் ஒரு மாதத்திற்குத்தான். அதன் பிறகு அவன் வேலை எங்கே எப்படி விதிக்கப்பட்டிருக்கிறதோ? அவன் வேலை செய்கிற ஸ்டார் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை அடைய இன்னும் இரண்டு புளோக்குகளுக்குள் புகுந்து பேருந்து நிறுத்தத்தில் சற்று நின்று திரும்பிப் பார்த்துவிட்டுச் சாலையைக் கடக்க வேண்டும். ‘புளோக்’குகளுக்கிடையே இருந்த முதியோர் உடற்பயிற்சி செய்கிற இடத்தில் பெரிசுகள் சிலர் கைகளைக் கால்களை நீட்டி மடக்கித் தங்கள் வாழ்நாளைக் கூட்டிக்கொண்டிருந்தார்கள். அங்கே […]

மாமியார் வீடு

This entry is part 5 of 37 in the series 22 ஜூலை 2012

(திருமதி ஒல்கா அவர்களின் “அத்தில்லு ” என்ற சிறுகதையை ‘மாமியார் வீடு” என்ற தலைப்பில் அனுப்பி உள்ளேன். ஒல்கா வின் புகைப்படத்தை இணைத்துள்ளேன். ‘தொடுவானம் தொட்டுவிடும் தூரம்’ என்ற தொடர் திண்ணையில் வெளிவந்துள்ளது, ஒல்காவின் படைப்புதான்.) தெலுங்கு மூலம் : ஓல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் மின் அஞ்சல் : tkgowri@gmail.com இப்போதுதான் செய்தி வந்தது, ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி அன்று அனுப்பி விடுவார்கள் என்று. சுதந்திர தினத்தன்று எனக்கு சுதந்திரம். சிறுவயதில் பார்த்த வண்ண வண்ண […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35

This entry is part 4 of 37 in the series 22 ஜூலை 2012

40.     மகன் சிக்கம நாயக்கனா, கிருஷ்ணப்ப நாயக்கரா யாரை குற்றம் சொல்வது, ஏதோவொரு அமானுஷ்ய சக்தி ஜீவனுள்ள பொம்மைகளைக்கொண்டு காட்சிகளாக நகர்த்துகிறது. கடந்த சில தினங்களாக தெற்கே யுத்தமென்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் கொலைகளுக்கும், உயிர்ப்பலிகளுக்கும், காட்டு விலங்குகளைப்போல மனிதர்கள் ஒருவரை ஒருவர் மூர்க்கமாக வெட்டிமடிவதற்கும் ராஜகிரிபோல, தில்லை கூத்தபிரான்போல, காவற்காட்டு மரங்களைப்போல இவளுமொரு ஊமை சாட்சி. பசியால் வாடும் வீரர்கள் மீது கடும் வெயிலும் தாக்குதலை நடத்துகிறது. வீரர்களில் பலர் கூர் மழுங்கிய வேல்களை ஏந்தியிருந்தனர்.  உடைந்த […]

விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது

This entry is part 42 of 42 in the series 22 மே 2011

    1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை   அண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. கிச்சிலிப் பழ வர்ணத்துலே அந்தக் குட்டை இருக்கே, போன விசை வந்தபோது பார்த்து மனசில் பதிஞ்சு இருக்கு.   துர்க்கா பட்டன் பரபரப்பாக வேதையனை எழுப்பினான்.   அழுத்தமான மஞ்சள் கலரில் ஜிலேபி பிழிந்து தலையில் கொம்பால் அடித்து நீட்டி வைத்த மாதிரி எழுத்துகளில் வரப் போகும் ஸ்டேஷன் பெயர் எழுதியிருக்கிறது. இது வழக்கமான […]

இழப்பு

This entry is part 31 of 32 in the series 15 ஜூலை 2012

நிலாவண்ணன் எத்தனை ஆண்டுகள் ஆனாலென்ன… அதற்கான சொந்தத்தை மனம் மறக்குமா என்ன…? அந்த மேளத்தை – தொல் தமிழர்களின் அந்த தோல் கருவியை, மிருதுவாயிருந்து இப்போது கொஞ்சமாக முரடேறிப்போயிருந்த அதன் மேற்பாகத்தைத் தடவிக் கொடுக்கும்போது பழைய ஞாபகங்கள் மனதுக்குள் ஓடி வந்து சம்மணம் இட்டுக் கொண்டன. ‘இவ்வளவு நாளா உபயோகிக்காம கெடந்தாலும் கொஞ்ச நாழி அனல்ல சூடு காட்டினா டண்டணக்கு…டண்டணக்குன்னு ஏழூருக்கும் கேக்கற மாதிரி தயாராயிடுமில்ல..!’ அம்மாசி தன் இசைக்கருவியிவின் நாதத்தில் ஆழ்ந்து போனார். “ஏம்பா உங்களுக்கு […]

பஞ்சதந்திரம் தொடர் 52 சமயோசித புத்தியற்ற குயவன்

This entry is part 30 of 32 in the series 15 ஜூலை 2012

சமயோசித புத்தியற்ற குயவன்   ஒரு ஊரில் ஒரு குயவனிருந்தான். அவன் ஒரு சமயம் கவனமில்லாமல் வெகு வேகமாக ஓடி கூர்மையான நுனி உடைய ஒரு உடைந்த பாத்திரத்தின் மேல் விழுந்தான். அதன் கூரிய நுனி அவனுடைய நெற்றிக்கட்டை நன்கு கிழித்து விட்டது. ரத்தத்தினால் நனைந்த உடலுடன் எப்படியோ எழுந்திருந்தான். பிறகு சரியாக அதற்கு வைத்தியம் செய்யாததால் அந்தக் கூர்மையான அடி கோடுமான பெரிய வடுவாக ஆகிவிட்டது.   ஒரு சமயம் ஊர் பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டபொழுது பசியால் […]

உய்குர் இனக்கதைகள் (2)

This entry is part 28 of 32 in the series 15 ஜூலை 2012

3. எப்போது எண்ணலாம்? மதியாளன் மிகவும் செல்வந்தராக இருந்த காலம். எல்லோரும் அவருடைய நெருங்கிய நண்பர்களாக ஆக வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டு, போட்டா போட்டி போட்டிக் கொண்டு, அவருடைய நட்பு வட்டாரத்தில் இருக்க விருப்பினர். அப்போது ஒரு நாள், ஒருவர் அவரிடம், “நசிர்தின்.. அப்பப்பா.. எத்தனை நண்பர்கள்? உங்களால் அவர்கள் எல்லோரையும் எண்ணிச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார். முடியாது என்பதை தலையை ஆட்டிக் காட்டி விட்டு, “எண்ணுவதா? எல்லோரையுமா? இப்போதைக்கு அது சாத்தியமில்லை. […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று எட்டு

This entry is part 26 of 32 in the series 15 ஜூலை 2012

இரா.முருகன் 1938 டிசம்பர் 28 வெகுதான்ய மார்கழி 13 புதன்கிழமை இன்னொரு வாரணாசிக் காலை. பனியும் பழகி விட்டது. பகவதி நடந்து கொண்டு இருக்கிறாள். இருட்டு தான் எங்கேயும். அது விலகி சூரியோதயம் ஆகிறதுக்கு ரொம்ப நேரம் செல்லும். வெளிச்சத்துக்காக சத்திரத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் வேலை நடக்காது. போயே ஆக வேண்டும். போய்க் கொண்டிருக்கிறாள். பகவதிப் பொண்ணே, வேண்டாம்டி, சொன்னாக் கேளு. திரும்பிடலாம் வா. ஆம்பிளைகள் இல்லாம இப்படி புலர்ச்சை வேளையில் தனியா எங்கேயும் போகண்டா, […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 34

This entry is part 24 of 32 in the series 15 ஜூலை 2012

– நாகரத்தினம் கிருஷ்ணா 39. பிள்ளை மனம் குழப்பத்தில் இருந்தது. கிருஷ்ணபுரத்தில் நாளைய தினம் எதுவும் நடக்கலாமென்ற நிலை. இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயநகரத்தில் ஏற்பட்டிருருந்த தலைகீழ் மாற்றம், பேரரசின் கீழிருந்த சிற்றசர்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருந்தது. விஜயநகர சாம்ராச்சியத்தை உரிமைகோரி, இரு அணிகள் மோதிக்கொள்ளும் நிலமை உருவாகியிருந்தது. மன்னர் வெங்கடபதியாருக்குப்பின் விஜய நகர சாம்ராச்சியம் வேறொருவர் கைக்குப் போகக் கூடாதென்றெண்ணி அவருடைய மூத்ததாரமும் கோபுரி வம்சாவளியைச் சேர்ந்தவளுமான வையாம்பிகாவும் அவள் சகோதரர் ஜெகராயரும் எங்கோ பிறந்த சிக்கமராயனை […]