– ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இரண்டு தொகுப்புகளாக வெளியாகியிருக்கவேண்டிய என் கவிதைகள் ஒரே தொகுப்பாக ‘தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பில் என் ‘குட்டி’ பதிப்பக முயற்சியாய் வெளியாகியுள்ளது. இதில் இடம்பெறும் முக்கால்வாசிக் கவிதைகள் நீங்கள் வாசித்தவையே. மொத்தம் 170 கவிதைகள்(அவற்றில் எவ்வளவு உண்மையான கவிதைகள் என்பது வாசகருக்கு வாசகர் மாறக்கூடிய கணக்கு!) 250போல் பக்கங்கள். விலை ரூ.200. விற்பனை உரிமை புதுப்புனல் பதிப்பகம். எத்தனை முயன்றும் அச்சுப்பிழைகள் இடம்பெற்றுள்ளன. 100 பிரதிகளே […]
கோ. மன்றவாணன் சென்னைப் பல்கலைக் கழகம் இருபெரும் அகராதிகளை உருவாக்கயது. ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அறிவதற்கான இருமொழி அகராதி. அடுத்தது, தமிழ்ப்பேரகராதி என்ற தமிழ்ச்சொற்களுக்குப் பொருள்தரும் தமிழ் அகராதி. இதனைத் தமிழ் லெக்சிகன் என்று பரவலாகக் குறிப்பிடுவார்கள். இன்றுவரை இந்த இரு அகராதிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமான- ஆதாரப்பூர்வமான- மேம்பட்ட அகராதிகளாகக் கருதப்படுகின்றன. நாளுக்கு நாள் ஆங்கிலத்தில் புதுச்சொற்கள் வந்தபடியே இருக்கின்றன. அவற்றை அவ்வப்போது ஆங்கில அகராதிகள் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/Uiy67s8zqHU https://youtu.be/Xp_ZODcQcx8 https://youtu.be/5f6fMI5DiOA எனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து. ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக் கூடம் எப்படி அமைப்ப தென்று பயிற்சி பெறாமல், நாம் செவ்வாய்க் கோளில் ஆய்வு தளம் கட்ட முடியாது. நிலவுதான் செவ்வாய்க் கோளை ஆராய ஒரு தளப்படமாய்ப் பயன்படும். கிரிஸ் மெக்கே [ ஆசிரியர், புதிய விண்வெளி […]
சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! [Miss me, But let me go] ++++++++++++++ [32] மானுடப் பிணைப்பு [Human Bondage] “மானுடம் பூத்தது வாழ்வதற்கு ! மன்மத ராகங்கள் காதலுக்கு !” என்று கனடா கவிஞர் புகாரி கவிதை எழுதி வைத்தார். முன்புறம் ஒரு கதவு மூடினால் பின்புறம் மறு கதவு திறக்கிறது ! இறுதியில் பிரிந்து செல்லும் கை […]
பாவண்ணன் சிறுகதைகள் பேசும் சித்திரம் போன்றவை.தெளிந்த நடை அவருக்கு இயல்பாகவே எழுத்தில் உருக்கொள்கிறது.படித்த வரியை மீண்டும் ஒரு முறை படித்து மட்டுமே பொருள் கொள்வது என்கிற பேச்சுக்கு இங்கே இடமில்லை.கதையின் கரு நம்மோடு ஒட்டிகொண்டு விடுகின்றது. ஒரு வாசகன் கண்கள் பனிக்காமல் அவர் எழுத்துக்களை படித்துவிடமுடியாது. பாவண்ணனின் அந்தப் படைப்பு மனம் அது தானாக எழுதிக்கொண்டு போவதை வாசகன் படிக்கும்போது உண்ரமுடியும்.பாசாங்குத்தனம் அறியா எழுத்துக்கள் அவை. சாதாரண ஒரு எளிய மனிதனின் உள்ள நெகிழ்வை […]
லதா ராமகிருஷ்ணன் Dr.V.V.B. ராமாராவ் S.R. தேவிகா டாக்டர். வி. வி.பி ராமாராவ் எழுதிய 22 சிறுகதைகளடங்கிய தொகுப்பு. ஆங்கிலத்திலிருந்து தமிழில் எஸ்.ஆர்.தேவிகா. சுமார் 300 பக்கங்கள். விலை: ரூ230. வெளியீடு அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்; விற்பனை உரிமை – புதுப்புனல் பதிப்பகம் – பாத்திமா டவர் முதல் மாடி(ரத்னா கபேக்கு எதிரில்), 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை. சென்னை 600 005. தொலைபேசி : 9884427997 ; மின்னஞ்சல் pudhupunal@gmail.com நூலாசிரியர் ராமாராவ் தெலுங்கிலும் ஆங்கிலத்திலுமாக […]
ஒரேயொரு இறைச்சித்துண்டு அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டனின் நீண்ட சிறுகதை ஆங்கிலத்திலிருந்து தமிழில் – லதா ராமகிருஷ்ணன் தன் சாம்பியன்ஷிப் நாட்களைக் கடந்துவிட்ட குத்துச்சண்டைவீரன் தோற்போம் என்று தெரிந்தும் தோற்றவனுக்குக் கிடைக்கக்கூடிய சிறுதொகைக்காக போட்டியில் கலந்துகொள்ள கால்நடையாச் செல்வதும், களத்தில் அவனுடைய உடல், மன இயக்கங்களும் இந்த நீள் சிறுகதையின் கருப்பொருளாக அமைந்துள்ளன. பக்கங்கள் சுமார் 90. விலை ரூ.100. புதுப்புனல் வெளியீடு.(தொடர்புக்கு : தொலைபேசி – 9884427997. மின்னஞ்சல் முகவரி : pudhupunal@gmail.com) இதில் ஒரு […]
தலைவன் பொருள்தேடப்பிரிந்து போனதால் தலைவி அவனையே நினைத்து வருந்துகிறாள். தனக்கு இன்பமும், தாய்மைப் பேறும் தந்த அவனையே எண்ணி உருகும் அவளின் துயரையே இப்பகுதிப் பாடல்கள் விளக்குவதால் இப்பெயர் பெற்றது. ==================================================================================== தலைவி இரங்கு பத்து—1 அம்ம வாழி! தோழி! அவிழ்இணர்க் கருங்கால் மராஅத்து வைகுசினை வான்பூ அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள இனிய கமழும் வெற்பின் இன்னாது என்பஅவர் சென்ற ஆறே! [அவிழ்இணர்=முறுக்கவிழ்ந்த பூக்கள் விளங்கும் பூங்கொத்து; கால்=அடிமரம்; மராஅம்=கடம்ப மரம்; வான்பூ=வெண் பூ; […]
பி.ஆர்.ஹரன் அன்புள்ள ரஜினிகாந்த் வணக்கம் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு, அந்த ஆண்டவனையும் ஆதரவானவர்களையும் நம்பி, அமைதியான முறையில், அழுத்தமான அறிமுக உரையுடன், அரசியலில் நுழைந்திருக்கிறீர்கள். வரவேற்கிறேன். பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!! எனக்குத் தேவை “தொண்டர்கள்” அல்ல; “காவலர்கள்” என்று கூறியதன் மூலம் உங்களை வாழவைத்த தெய்வங்களான உங்கள் ஆதரவாளர்கள் தமிழகத்தைக் காவல் காக்கும் தெய்வங்களாக விளங்க வேண்டும் என்று உணர்த்தியுள்ளீர்கள். உங்களுடைய மந்திரமாக “உண்மை, உழைப்பு, உயர்வு” என்று உச்சரித்துள்ளீர்கள். உண்மையாக உழைத்தால் உயர்வு கிட்டும் என்று […]
இந்தப் பகுதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இந்தத் துறையைப் பற்றிய விரிவான விடியோ தொடர் உன்களுக்கு பயனளிக்கும் என்று தோன்றினால். உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள். இந்த விடியோவில் சொன்னதை சற்று விரிவாக நான் எழுதிய கட்டுரைகளை இன்கே நீங்கள் படிக்கலாம்: