வசந்த தீபன்
__________________________
காலங்களைப்
பட்டைகளாக
தரு
அணிந்து இருக்கிறது
கனவுகளைக்
கிளைகளாக
திசை எட்டும்
நீட்டுகிறது.
இலைகளாக
கிளைத்திருக்கின்றன
அதன்
நூறு இருதயங்கள்.
மண்ணில் ஊன்றியிருக்கும்
ஆணிவேர் வாயில்
சல்லிவேர்களாய்
ஆயிரம் நாவுகள்
நீர்மையை சேகரிக்கின்றன.
தொடர் நிலங்களுக்கு ஊடாக
செழிப்பை பரத்துகிறது.
பச்சையின் குளிர்மையாக
உயிர்களுக்குள்
ஊடுருவுகிறது.
காற்றின் மாசுகளை
உள்வாங்கி
அமுதத்தை
வெளிகளில் நிரப்புகிறது.
நிழலிட்டு
ஆற்றுப்படுத்தி
கனிகளால்
உயிர்களுக்கு உயிரூட்டுகிறது.
கோடாரிகளும்
ரம்பங்களும்
அரிவாள்களும்
அறுத்தெடுப்பது
தருவையல்ல
இகத்தின்
வாழ்வை.
- மழை புராணம்: 28
- என்றும் இதே நிலைகள்
- உயிர்மையின் நாடி
- நளபாக நாஜிக்கள் !
- மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல்: 8
- ‘ரிஷி’ [லதா ராமகிருஷ்ணன்]யின் கவிதைகள்
- வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் சிறுகதைக் கலந்துரையாடலில், அடுத்து ஜெயந்தன் எழுதிய “மனச்சாய்வு”
- க. மோகனரங்கன் படைப்புகளைக் குறித்த ஓர் அரிய களஞ்சியம் – இந்தப் புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும்?