author

தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்

This entry is part 5 of 23 in the series 14 ஜூன் 2015

தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட் [ ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் – வளவ.துரையன் ] தரையைப் பெருக்கும் பையன் வந்து வாசல் வழியில் இருந்த தரை விரிப்பில் தண்ணீரை விசிறியடிக்கக் காற்று இப்போது குளிர்ச்சியாக வீசத் தொடங்கியது. நான் என் படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாகத் தெருவை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். மதிய வெயிலில் பிரகாசித்துக் கொண்டிருந்த புழுதி மண்ணாலான தெருவைப் பார்த்துக் கொண்டே யோசனை செய்து கொண்டிருந்தேன். ஒரு கார் வேகமாகப் போக புழுதி […]

கண்ணப்ப நாயனார்

This entry is part 10 of 24 in the series 7 ஜூன் 2015

வளவ. துரையன் ”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்ட பின்” என்று மாணிக்க வாசகர் கண்ணப்ப நாயனாரைப் புகழ்ந்து பாடுகிறார். மண்ணுலகின் ஆடவர்களில் கண்ணப்பர் மிகச் சிறந்தவர் என்ற பொருளில், ”கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்” என சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாராட்டுகிறார். திருஞான சம்பந்தரோ, ”வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன், மலராகு நயனம் காய் கணையினால் கிடந்[து] ஈசன் அடிகூடு காளத்தி மலையே” என்று கண்ணப்பரின் வழிபாட்டு முறயைப் போற்றுகிறார். முற்றும் துறந்த பட்டினத்து அடிகளோ, […]

முழுக்கு

This entry is part 14 of 25 in the series 17 மே 2015

கைப்பேசி ஒலித்தது. எடுத்து யாரென்று பார்த்தேன். கோவிந்தராசனின் அழைப்புதான் அது. ”வணக்கம் கோவிந்து, சொல்லுங்க” என்றேன். ”ஒண்ணுமில்ல, அதான் நேத்திக்கு சொன்னேன்ல; சரியா மதியம் மூணு மணிக்கு வண்டி ஒங்க வீட்டுக்கு வந்திடும். நாலுபேருக்கும் ஒங்க வீட்ல டிகிரி காப்பி. அதைக் குடிச்சிட்டு கெளம்பறோம். ஆறரை மணிக்கெல்லாம் சமயபுரம். அங்கே ஆத்தாளக் கும்பிடணும். அதுக்கப்புறம் சீரங்கம். அங்க பெருமாளச் சேவிக்கறோம். ராத்திரி அங்கியே தங்கிட்டு காலைல திண்டுக்கல் போறோம்” “சரி கோவிந்து, பயணத் திட்டமெல்லாம் சரியாய்த்தான் இருக்கு. […]

நற்றமிழ்ச்சுளைகள் – [நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]

This entry is part 25 of 25 in the series 3 மே 2015

  [நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து] நவீன எழுத்தாளர்களில் சங்க இலக்கியம் போன்ற மரபிலக்கியப் பயிற்சி உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களிலும் சிற்றிலக்கியங்கள் பற்றியப் புரிதல் உள்ளவர்கள் மிக மிகக்குறைவு என்று உறுதியாகக் கூறலாம். அவர்களில் நாஞ்சில் நாடன் குறிப்பிடத் தக்கவர் ஆவார். தமது படைப்புகளில் ஆங்காங்கே சங்க இலக்கியவரிகளை எடுத்தாள்வது அவருக்கு மிக இயல்பாக வருகிறது. யாருமே அதிகம் படித்தறியாத, அவரே சொல்வதுபோல் பள்ளிகளில், கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களாக, தமிழ் விரிவுரையாளர்களாக, […]

இரவீந்திர பாரதியின் “காட்டாளி” – யதார்த்தமான சம்பவங்களின் பின்னல்

This entry is part 19 of 26 in the series 26 ஏப்ரல் 2015

  [       இரவீந்திர பாரதியின் “காட்டாளி” நாவலை முன்வைத்து] நாவல் என்னும் வகைமை சார்ந்த இலக்கியம் பலவிதங்களில் இன்று ஆளப்படுகிறது. மிகப்பெரிய ‘மெகா’ நாவல்களின் காலமாக இது இருந்து வருகிறது. ஒரே ஒரு முடிச்சு வைத்து அதைக் கூறுவதாக இருப்பது சிறுகதை என்றும் பல முடிச்சுகள் கொண்டது நாவல் என்றும் முன்பு கூறினார்கள். இவற்றில் கூட முடிச்சை அவிழ்த்துக் காட்டி அதற்கு ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும் என்றும், வேண்டாம், வேண்டாம் வாசகனே முடிச்சை அவிழ்த்துப் பார்க்கட்டும் […]

மறுவாசிப்பில் வண்ணதாசனின் “மனுஷா………மனுஷா……..”

This entry is part 13 of 19 in the series 19 ஏப்ரல் 2015

  [1999—இல் வெளிவந்த வண்ணதாசனின் “மனுஷா..மனுஷா…” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] வண்ணதாசனின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு மௌனம் ஒளிந்து கொண்டே இருக்கும். அது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுக்கும். பல வாசகர்களுக்கு அந்த மௌனம் பேசாதவற்றை எல்லாம் பேசும். அந்த மௌனத்தின் ஊடே புகுந்து பயணம் செய்து புதிய வழிகளைக் கண்டறிவதுதான் வாசகருக்குப் பெரிய சவால். அந்த சவாலில் வாசகன் வெற்றி அடையும் போது படைப்பாளருடன் அவனும் ஒன்றிப்போய் விடுகிறான். அவர் கதைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் எஸ்தரில் […]

பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்

This entry is part 17 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  தலைவர், இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர் 607002 [டாக்டர் குமார. சிவா எழுதிய “திரிகூடராசப்பக் கவிராயர்—ஓர் இலக்கியப் போக்கு” எனும் நூலை முன் வைத்து] சிற்றிலக்கியங்கள் எனப்படுபவை பேரிலக்கியங்களுக்கு நிகரான யாப்பமைதியும், இலக்கிய வளமும், கருத்தாழமும் கொண்டவை. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை சமயச் சார்பு நோக்கில் கடவுளர் பற்றி எழுதப்பட்டுள்ளன என்றாலும் அவற்றில் காழ்ப்புணர்ச்சி இல்லை எனலாம். இன்னும் கூடத் துணிந்து சொல்ல வேண்டுமாயின் சில சிற்றிலக்கியங்கள் அப்போது ஆண்ட குறுநில மன்னர்களைப் புகழ்வதற்காகத் தோன்றியவையாகக் […]

செங்கண் விழியாவோ

This entry is part 18 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  அங்கண்மா ஞாலத்[து] அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்[டு] எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேற் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்! ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் இருபத்திரண்டாம் பாசுரம் இது. கடந்த பாசுரத்தில் “மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து” என்று தாங்கள் போக்கற்று வந்ததைச் […]

உலகம் வாழ ஊசல் ஆடுக

This entry is part 26 of 28 in the series 22 மார்ச் 2015

  வளவ. துரையன் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரனான கோனேரியப்பனையங்கார் பாடிய “சீரங்க நாயகியார் ஊசல்” எனும் நூலின் முதல் பாடல் சீரங்க நாயகிப் பிராட்டியை இந்த நிலவுலக மக்கள் சிறப்புடன் வாழ அருள் செய்யும் வண்ணம் ஊசல் ஆடுவீராக என்று வேண்டுகிறது. ”தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய” என்று ஆண்டாள் நாச்சியார் பாடியதுபோல் இப்பாடலும் அடியவர் நலத்தையே எண்ணுகிறது. ”நீராழி நிறத்த ரங்கர் அடிகள் வாழ நெடுமகுடப் பணிவாழக் கருடன் வாழப் பேராழி செலுத்திய சேனையர்கோன் […]

நப்பின்னை நங்காய்

This entry is part 4 of 22 in the series 8 மார்ச் 2015

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறு மருங்கல் நப்பின்னை நங்காய் திருவே! துயிலெழாய்! உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்! ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் 20- ஆம் பாசுரமாகும் இது. கடந்த பாசுரத்தில் ‘தத்துவம் அன்று, தகவும் அன்று’ என்று நப்பின்னையைப் பிராட்டியைக் குறை கூறி விட்டோமே. அவளுக்குச் […]