ஹிந்தியில் : முஸாபிர் பைட்டா தமிழில் : வசந்ததீபன் ______________________________ நான் எங்கும் சுற்றித் திரிய விரும்பமில்லை இங்கே வரை என எனது பிறந்த பூமி பங்க்ராஹா வீட்டின் அருகே தான் அமைந்துள்ளது சொல்லப்படும் சீதாவின் பிறந்த இடம் சீதாமடீயும் ( தோதி வந்தனை சிறந்தாக இல்லை சமூக காரியங்களின் சம்பந்தத்தில் தான் இருக்கிறது ) நான் ஊனமுற்ற நம்பிக்கையில் விசுவாசம் வைப்பதில்லை . என்னுடைய இரண்டு கைகள் பாதுகாப்பானதாக இருக்கின்றன ஆதாராமாக இருக்கின்றன ஆனால் இவைகள் […]
ஆர் வத்ஸலா தள்ளாடி தள்ளாடித் தான் நடக்க முடிகிறது இப்போதெல்லாம் என் கால்களின் வழியே ஏற முயற்சித்துக் கொண்டிருக்கிறது தள்ளாமை அதனை தோற்கடிக்கும் முயற்சியில் தீவிரமாக நானும் எதற்கும் இருக்கட்டும் என்று என்னவர் வாங்கி வைத்த சக்கர நாற்காலி அமர்ந்திருக்கிறது எங்கள் அறையின் ஒரு மூலையில் என்னை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு வீட்டுக்குள் நடக்கிறேன் அடி கணக்கு ஒப்பிக்கும் கருவியை சுமந்தபடி தினமும் மும்முறை மருத்துவர் சொன்னபடி மைல் கணக்கில் நடந்தாலும் இரண்டாயிரம் அடிகளே நடந்ததாக கூறுகிறது […]
சசிகலா விஸ்வநாதன் அள்ளி எடுக்கத் தான் ஆசை.கிள்ளி விளையாடத் தான் ஆவல்.துள்ளிக் துதிக்கையில் இன்பம்.ஒளிந்து விளையாடுவதில் பேரின்பம்.விசையோடு ஓடி விளையாடவும்;இசைந்து பலதும் பேசிடவும்;நேசத்துடன் கேலி பேசிடவும்;பாசத்துடன் கட்டி அணைக்கவும்;மடி மீது கண்மூடி உறங்கிடவும்;மென்மையாய் தலை கோதிடவும்;*மகனே* !நீ என்றும் என் சேலை மடிப்பில் சிறு மதலையாய்;என் மனதில் சிறு பிள்ளையாய்;என் கனவில் கள்ளம் கபடற்ற பாலகனாய்இருக்க;என் கண்ணெதிரில் மட்டும்;முற்றிலும் வேறு ஒருவனாய்;நினைவில் முதிர்ச்சியடைந்தஆண்மகனாய்வளர்ந்த பெரியவனாய் நிற்கும் விந்தைதான்என்னே! என்னே! அள்ளி எடுக்கத் தான் ஆசை.கிள்ளி விளையாடத் தான் […]
வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.
வளவ. துரையன் என் அம்மா அதிகமாகச்சிரிக்கமாட்டாள்.அவர் சிரித்துநான் பார்த்தது இல்லை.தொலைக்காட்சி நகைச்சுவைகள்அவருக்குத் துளிக்கூடச்சிரிப்பை வரவழைக்காது.என் அப்பா மிகவும்சத்தம் போட்டுச் சிரிப்பார்.என் அண்ணனோஎப்பொழுதும் புன்சிரிப்புதான்.அக்காவோஆடிக்கொண்டே சிரிப்பாள்.தாங்க இயலாமல்ஒருமுறை கேட்டதற்குஅம்மாசொன்னார்“நான்தான் சிரிப்பாசிரிக்கறேனே போதாதா?”
பெங்காலியில் : சுனில் கங்கோபாத்யா ஹிந்தியில் : ரண்ஜீத் ஸாஹா தமிழில் : வசந்ததீபன் (1) எழுதுவதும் எழுதியபடி வாழ்வதும் ____________________________________________ புத்தகங்கள் பயமுறுத்த தொடங்கியிருக்கின்றன இப்போது நான்கரை ஆண்டுகளின் வயதில் தான் எழுத்துக்களின் அறிமுகம் மற்றும் அதற்கு பிறகு கடவுளே…… தெரியவில்லை எத்தனை யுகமும் நித்தியமும் கழிந்து அச்சடிக்கப்பட்டது எழுத்துக்களும்… எழுத்துக்களும் தான் கண்களுக்கு முன்னால் முறைத்துப் பார்த்துக் கொண்டு ஆயிரம் _ ஆயிரம் பக்கங்கள் மற்றும் எத்தனை படிக்கப்பட்டு இருக்கிறது என்ன அதைவிட அதிகமாக […]
ஆர் வத்ஸலா காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து அம்மா தந்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு ஒரு நிமிடம் கண்ணாடியில் முகம் பார்த்து அவசரமாக தலை வாரி லேசாகக் கோதிக் கொண்டு கட்டிக் கொடுக்கப் பட்ட சாப்பாடு திருத்தப்பட்ட மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களுடன் ஸ்கூட்டரை உதைத்தான் எதிர்வீட்டுப் பெண் அப்போது தான் கிளம்புவாள் பணிக்கு என்றும் தெருக் கோடி வரை அவள் பின் போகலாம் என்றும் அறிந்ததனால் அவள் பெரிய அழகியல்ல என்றும் இவன் முகத்தை அவள் பார்த்ததில்லை […]
ஹிந்தியில் : ஹேமந்த் தேவ்லேகர் தமிழில் : வசந்ததீபன் நம் இருவருக்கு நடுவே ஒரு ஹார்மோனியம் ________________________________________ ஹார்மோனியத்தின் அந்தப் பக்கம் சுரங்களை தனது விரல்களின் அமுக்குதலிருந்து விழித்தெழுகிற நீ அமர்ந்து இருக்கிறாய் மற்றும் இந்த பக்கம் உன்னுடைய சுரங்களில் நாதம் நிரப்பி திரைச்சீலையால் காற்றை வீசுகிறேன் நான் ஹார்மோனியம் _ சந்தோஷ ஆரவாரம் நிரப்புகிறது ,கை_ கால்கள் நடக்கச் செய்கிறது. ஒரு புதிய பிறந்த குழந்தை இருக்கிறது கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் ஆனது நாம் இருவரும் அதற்கு […]
வளவ. துரையன் மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது கடந்த காலம் அன்று முதல் பார்வையில் நீ தந்த குளிர்மொழிதான் மனக்குகையில் உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது நினைத்து நினைத்து மறக்க முயல்கிறேன் நினைவுகளைப் போட்டுக் கசக்கிப் பிழிந்து கரும்பறைக்கும் இயந்திரமாக மனம் கசப்பு கொள்கிறது எல்லாம் காலியானாலும் சமையல் பாத்திரத்தின் அடியில் ஒட்டியிருக்கும் ஒரு சிறு சோற்றுப் பருக்கையாய் நீ அமர்ந்து கொண்டிருக்கிறாய் அதனால் பசியாறாது என்று தெரிந்திருந்தும் […]
வளவ. துரையன் வெயிலில் நடந்து வாடும்போதுதான் நினைவுக்கு வருகிறது தோட்டத்துச் செடிக்கு நீர் ஊற்றாதது நடும்போதே நான் சொன்னேன்ல தெனமும் வந்து தண்ணி ஊத்தணும்னு அம்மா கத்துவார் ஆனால் நம்பிக்கை இருக்கிறது திட்டித் திட்டி எனக்குச் சோறு போடுவதுபோல அம்மா அதற்குத் தண்ணீர் ஊற்றி இருப்பார் நான் என்னை நம்பியா வைத்தேன் அம்மாவை நம்பித்தானே அம்மா இல்லையா?