காலடிவிஷம்
இந்த இடம் இன்னும்
கொஞ்சநேரம் அமைதியுடனிருக்கும்
ஆம்
இரவை நனைத்து காற்றைத் தடவி
குருடனாய் நடந்த நேற்றிரவு மழையின்
மிக விசித்திரமுள்ள மண் கையெழுத்தை
மணல் வரிகளை எவரும்
கலைக்க வராத கால்களால்
இப்பிரதேசம் இன்னும் மெளனம் சூழ்ந்துள்ளது
அதோ பேச்சு சப்தம் கேட்கிறது
கால் புதைய புதைய அவை மணல் நோக்கி நடந்து வருகின்றன
இனி வேலையில்லை
இரசனை கொண்ட மணல் வரிகள் எழுதிய இரவு மழைக்கும்
அது கண்டு கவி வரிகள் எழுதிய எனக்கும் என நினைக்கின்றேன்
ஒரு வேளை தப்பவும் வாய்ப்புண்டு.
– பா.சத்திய மோகன்