தந்தையர் தினம்

அச்சாணிக் கெதற்கு ஆராதனை அச்சாணி தந்தை ஆழ் கடலுக் கெதற்கு ஆரவாரம் ஆழ்கடல் தந்தை வேர்களுக் கெதற்கு வெளிஅழகு வேர்கள் தந்தை அஸ்திவாரங்கள் ரசிக்கப்படுமோ? அஸ்திவாரங்கள் தந்தை விதை காக்கும் உமிகள் விரும்பப்படுமோ? உமிகள் தந்தை ருசி தரும் உப்பு ருசிக்கப்படுமோ?…

அண்ணே

நீ பதித்த தடத்தில் நான் பாதம் பதித்தேன் நடை வேகமானது வியர்வைப் பூ தூவி நுரை தள்ள நீ எனைத் தள்ள மிதிவண்டி கற்றேன் மூச்சடக்கி நீ முதுகு விரித்ததில் நீச்சல் கற்றேன். ராவுத்தர் குளத்தில் மீன் பிடித்தது கொலுசம்பீ சுவரேறி…

சொல்லாமலே சொல்லப்பட்டால்

அமீதாம்மாள் தொட்டிக் கடியில் துளைகள் இல்லையேல் துளசி அழுகும் மிதப்பவைகள் ஒருநாள் கரை ஒதுங்கும் பூமிக்கு எதற்கு பிடிமானம்? உருவாக்கிய மரத்தையே உருவாக்க முடியுமென்று விதைக்குத் தெரிவதில்லை மலரப் போகும் நாளை குறித்துக் கொண்டுதான் பிறக்கிறது மொட்டு ஆயுளுக்கும் தேவையான பிசினோடுதான்…

கொதிக்கிறது மக்கள் வெள்ளம்

சூரியப்பெண்ணின் ஆட்சியில்.......   ஒளி யருவியில் குளித்தனர் மக்கள் பிரகாச வெளியில் பறந்தன குருவிகள் வெளிச்சம் பார்த்தன குஞ்சுகள்   சூரியப்பெண்ணுக் கஞ்சி பொய்க்காமல் பெய்தது மழை மறக்காமல் மாறின பருவங்கள்   ஆட்சி சூரியப்பெண்ணிடம் ஆதிக்கமோ சந்திரப்பெண்ணிடம்   சூரியப்பெண்ணின்…

ஈரத் தீக்குச்சிகள்

  சிறந்த சாதனையாம் சீரிய தலைமையாம் எடுசேவ் விருதப்பா எனக்கு இது மகனின் பெருமை   நன்னடத்தையில் நான்தான் முதலாம் எடுசேவ் விருது எனக்கும் தானப்பாப்பா இது மகளின் பெருமை   பெற்ற பெருமையை அப்பாவிடம் பகிர்வது பிள்ளைக்குப் பெருமைதானே  …

வெண்ணிற ஆடை

  மரணத்திடம் நீ தோற்றாயாம் பொய் மரணத்திடம் தோற்றிருந்தால் ஒரு மனிதச் சுனாமிக்கு நீ மையமானது எப்படி?   உன் கரைகளைக் கடக்கும்போதுதான் புல்லாங்குழல் ஊதுகின்றன புயல்கள்   பூகம்பங்கள் பூக்களைச் சொரிந்தன உன் பாதங்களில்   உன் மின்னல் சொடுக்கில்…

சந்ததிக்குச் சொல்வோம்

செரித்தது சேர்த்தது வந்தது வாழ்ந்தது இருப்பது தொலைந்தது இன்னும் தொப்புள் கொடிச் சேதியும் அடையாள அட்டை அறியும் உடம்புச் சேதிகள் ஊசிமுனை இரத்தம் அறியும் சல்லடைகள் இத்தனைக்கும் சிக்காத சங்கதிகளான நாம் மறைத்த உண்மையையும் தொடுத்த அநீதியையும் இரகசிய ரொக்கத்தையும் நம்…

தீபாவளி

பூங்காவனமானது புக்கித்தீமா ஆறு   பூங்காவனம் பாட புள்ளிமயில்கள் ஆட வண்ண மயில்கள் வணங்க அழகு மயில்கள் ஆரத்தி சுற்ற கொள்ளை அழகாய் விரிகிறது - நம் மரபுகளின் திறவுகோலாம் தேக்கா   நகைக்கடை பூக்கடை பலகாரம் பட்டாசு துணிகள் தோரணங்களாய்…

கவிதையாக ஒரு கதை தாத்தாக்கள் வாழும் இல்லங்கள்

    தாத்தாவுக்கின்று எண்பது வயது   ‘சொந்தக் காலில் நிற்கிறார்’ என்று சொல்லவைத்த ‘கால்’கள் தன் காலை மறந்து ‘கல்’ லாக மறத்து   இன்று உள்ளங்கால் ஊன்றினால் உச்சந்தலை இறங்குது சுத்தியடி வலி   அந்தக் கால்களுக்கின்று காலவரையற்ற…

வண்டுகள் மட்டும்

  அந்த மரம் கனி செய்தது   வேர்கள் கிளைகள் இலைகள் எல்லாமும் கனிக்காகவே உழைத்தன   வண்டுகள் மட்டும் கூலிக்காக உழைத்தன   அமீதாம்மாள்