வசந்ததீபன் ஞானஸ்தானம் பெறுகிறார்கள் தண்ணீரில் மூழ்கி எழுந்தால் பரலோகராஜ்யம் தரித்திரம் வாசற்படியில் படுத்துக் கிடக்கிறது நொய்யல் அரிசியை கஞ்சி வைக்கிறாள் கிழவி நீண்ட நாள் பட்டினி முடிவாகும் நாயுக்கு கொஞ்சம் ஊற்ற நினைத்தாள் பூசணிக்கூடால் ஆன தம்பூரா மீட்டி வருகிறான் குறி சொல்லி பண்டாரம் தெருக்களில் இரந்து பாடுகிறான் தோளில் ஊசலிடும் துணித்தொங்கலில் காற்றுதான்நிரம்புகிறது ஆட்டை உரிக்கிறார்கள் தூரத்தில் கொட்டுச்சத்தம் கேட்கிறது ஜனங்கள் சாப்பிட பறக்கிறார்கள் பக்குவமற்ற அவனால் பிரச்சனை பக்குவமான இவனால் குழப்பம் அலைகள் ஓய்வதில்லை […]
நவநீத கிருஷ்ணன் லட்சம் கோடி காதல் கண்ட கரை கொண்டவள் நீ காதலர் கொஞ்சும் காட்சியின் சாட்சி நீ நுரை தள்ள திரும்பத் திரும்பக் கரை வந்து நோகிறாய் நீ பேர் ஆழம் பெரு அகலம் கொண்டு பேரன்பு என்ன என்று புத்தி சொல்கிறாய், அதை கத்தி சொல்கிறாய் கேளா காதும் பாரா கண்ணும் கொண்ட மானுடர் நாங்கள் என்றறியாத நீ
இரா. ஜெயானந்தன் அவள் அவனின் இருட்டை சுமந்து சென்றாள் பண்ணிரண்டு வயதில் . சொல்ல முடியா வலி இதயம் முழுதும் ஊர்ந்து செல்ல நான்கு கால்கள் மிருகத்தை விட கேவலமாக பார்க்கப்பட்டாள் சமூகப்பார்வையில். இருட்டில் மறைந்த ஆணை பார்க்க மீண்டும் அவள் முயலவில்லை. ஏனோ எல்லா ஆண்களின் முகங்களிலும் காம விலாசம் பார்த்து பயந்தாள் சிறுமி. இருட்டைக்கண்டு அலறினாள் அலறினாள். மசூதிக்கு சென்றார்கள். மாரியம்மன் கோயில் பேச்சி அம்மனிடம் வேண்டினார்கள் பெண்ணை பெற்றவர்கள். சிறுமியின் கண்கள் இருட்டைக்கண்டால் […]
வசந்ததீபன் (1) ஒரு வண்ணத்துப்பூச்சியின் புலம்பல்____________________________________________ வழிபாடுகள் இடர்பாடுகள்தொடருது துயர் பாடுகள்ஆறு கடந்து போகிறதுகாற்று கடந்து போகிறதுகாலமும் கடந்து போகிறதுவாடிய மலர்கள் இயற்கைக்கு சொந்தம்வாடாத மலர்கள் மனிதனுக்கு சொந்தம்வாடியும் வாடாமலும் பூத்தபடி மலர்கள்பாதைகள் நிறைய போகின்றனஊருக்குள் போகும் பாதையை கண்டுபிடிக்க முடியவில்லைபாதைகளுக்கு முன்னால் நின்றிருக்கிறேன்நெருப்பை தொட்டுப் பார்த்தான்நெருப்பாயிருந்ததுநெருப்பு நெருப்பாய் இல்லாமல் வேறு எதுவாக இருக்கும்இருக்கும்பெருங்கதையாடல்பெருந்திணைப்பாடல்பெருஞ்சூறையாய் வீசுகிறதுஇழப்பதற்கு எதுவுமில்லைபெறுவதற்கு ஏராளம் உள்ளதுஅடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிவோம்.மழை பொழியட்டும்மனங்களெங்கும்மானுடம் செழிக்கட்டும்விண்மீன்களை பார்க்கிறேன்தேவதைகள் கண்கள் சிமிட்டுகிறார்கள்சாமரம் வீசுகிறது காற்றுமவுனங்களுக்கும்வார்த்தைகளுக்கும்இடையே தீராத உரையாடல்கள். (2) இணக்கமற்ற […]
(1) வீட்டின் வாசலில்- வெளி உள் நுழைகிறதா? அல்லது வீடு வெளியேறுகிறதா? அல்லது ஒரே சமயத்தில் வெளி உள் நுழைந்தும் வீடு வெளியேறவும் செய்கிறதா? அல்லது வாசலில் வீடும் வெளியும் கைகுலுக்குகின்றனவா? அல்லது வாசலில் வெளியை சுவாசிக்கிறதா வீடு? (2) பிறகு கட்டினேனா வீட்டை முன்னமேயே வெளி வீடு வடிவில் தன்னைத் தகவமைத்து உள்ளொளித்து வைத்து பிறகு அனுமதிக்க? ஓர் ஐயம் எனக்கு (3) சன்னல்- சுவருக்கல்ல- வீட்டுக்கு. வீட்டுக்கு மட்டுமல்ல- வீட்டுக்குள் வசிக்க வெளிக்கு. வெளிக்கு […]
ரவி அல்லது சொட்டுச் சொட்டாக நிறைகிறது நம்பிக்கை பாத்திரத்தில் துருப்பிடித்திருந்தாலும். யாரோ விதைத்த வினைக்கு அறுவடைகள் செய்யும் எமக்கு வாய்க்கிறது மண் கவலமாக மகசூல்கள். வெந்து தணிந்ததில் வெறுப்புகள் கொண்டு உயராத நீர் மண்டத்திற்கு ஒரு மரக் கன்று நடலாம்தான் எம் கண்ணீரில் அது துளிர்த்தால். கருப்பின தேசத்தில் காகிதத்தைக் காட்டியே கனிம வளங்களை களவாடிச் செல்லுங்கள் கேப் டவுன்களை கிரீடமாக தருவித்து. நீங்கள் வீணாக்கும் தண்ணீர்த் துளிகளின் விலைகள் அறியாதபொழுதில் நாங்கள் விண் நோக்கிக் கையேந்துகிறோம் […]
ஆர் வத்ஸலா கவிதைப் பட்டறையில் கலந்து கொள்ள தலையை, மன்னிக்கவும், பெயர் கொடுத்து விட்டேன், பார்வையாளர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாததாலும் அதில் என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் எனத் தோன்றியதாலும் அச்சத்துடன் போலி வீரப் புன்னகையுடன் மெய்நிகர் கூட்டத்தில் நுழைந்தேன் பிரபல கவிஞர்களின் கவிதைகளை வாசித்தார் பட்டறை நடத்துபவர் அவர் முகம் ஒரு கோணத்தில் சதா பிரம்புடன் நிற்கும் (அதை அவர் அதிகம் பயன்படுத்தாவிட்டாலும்) எனது இரண்டாம் வகுப்பாசிரியர் கிட்டு […]
வசந்ததீபன் (1) உதிர்ந்த இலை உலர்ந்த கனவு உடைந்து சிதைகின்றன கல் தீபத்தை ஏற்ற முனைந்தேன் துளிர்த்த ஒளி சட்டென்று காணாமல்போகிறது காற்றை தின்றிட துடிக்கிறேன் பேருந்து புறப்பட்டு விடும் நீர்ததும்பும் விழிகளோடு நினறிருக்கிறாய் நிரப்ப முடியாத இடைவெளிகள் பெருக்கெடுக்கிறது ஆதியில் வார்த்தை இருந்தது அப்புறம் காணாமல் போனது மீண்டும் ஆடுகளின் பேச்சாய் மீண்டது பாடல்களின் வரிகளில் புதைந்து போன கவிதையே…! இசையின் அலைகளுக்களுக்குள் கரைந்து போனதேன்…? பாம்பு நல்லதாம் கொன்றவர்கள் கணக்கில்லை அது இறந்ததற்கு வருத்தப்படணுமா […]
ரவி அல்லது உடைகள்மாறும் பொழுதுஅதுஉலவுவதற்கு சாத்தியமாக அமைந்தது.உணவுகள் மாறும்பொழுதுஉற்சாகமாக இருந்தது.நினைவுகளைஞாபகிக்க முடியாமல்நடப்பவைகள்யாவும்நிரம்பியபொழுதுநாகரீகமெனத் தோன்றியது.அழுத்த விசைகளுக்குஆட்கொண்டபொழுதுஅடுத்த தலைமுறைவளர்ந்து நின்றுஅயலகனாகஆச்சரியம் தந்தது.அவ்வப்பொழுதுதானஊர்ப் பயணங்கள் அங்கேயும்ஒன்ற முடியாதஅவஸ்தைகளைக் கொடுத்தது.அயலகத்தின் பிரஜையாகமாறிப்போன பொழுதும்அவர்கள்அந்நியராகவேப்பார்த்ததுஅச்சத்தைக் கொடுத்தது.ஆதிச் சரடைஅடையும் ஆசைகள்துளிர்த்த போதுபெயர் மட்டுமேதங்கிகண்ணாடிக்குள்சிக்கிய மீன்காவந்தில் இருப்பதான பொழுதாகநீந்தி நீந்திவெளிவர முடியாதுவாழ்க்கையாவருக்கும்மாறிப்போனது.இப்பாடுகளுக்கிடையில்‘மாப்ளை வேலை என்னாச்சு.’ ‘மகளுக்கு மாப்பிள்ளை என்னாச்சு ‘ போன்றகேள்விகளுக்குபதில் சொல்லியேமத்திய வயதைக்கடந்தவர்களுக்குவெளிச் சொல்ல முடியாதவேதனையில்அன்றாடங்கள்மிகைஅலுப்பைக் கூட்டுகிறது. -ரவி அல்லது.ravialladhu@gmail.com நன்றி:அயலக வாழ்க்கையைஅங்கலாய்த்து அங்கிருக்கும்நண்பர் தேனி பாபு அவர்கள் கவிதை எழுதச்சொன்னதற்கு.
ரவி அல்லது ஆசையாக எட்டிப் பார்க்கிறது. சுவை மொட்டுக்கள் உள் நாக்கிலும் எச்சிலூற. குரலெடுத்து கூவினாலும் குயிலை ரசிக்க முடியவில்லை கண்ணி வைக்கும் மனதைத் தாண்டி கறியின் சுவை கண் முன் நிழலாடுவதால். *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com