அச்சாணி…

This entry is part 43 of 45 in the series 4 மார்ச் 2012

அச்சாணி… ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு செல்ல சார்மினார் எக்ஸ்பிரசில் ஏறி அமர்ந்து ..வண்டியும் கிளம்பியாச்சு… பிரயாணம் முன்னோக்கி நகர….மனசு மட்டும் லக்ஷ்மி குடும்பத்தை சுற்றி பின்னோக்கி சென்றது .பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால்….நடந்நிகழ்ச்சிதான்…..இருந்தாலும்…இன்று நினைத்தால்……கூட….எல்லாம்…. நேற்று நடந்தது போல் இருக்கு. வாசல் தெளித்துக் கோலம் போட பக்கெட் தண்ணீரோடு கதவைத் திறக்கும்போது…..அதற்காகவே காத்திருப்பது போல…ஒரு இளம் பெண் அவள் அருகில் கிழிந்த பாவாடையைக் கட்டிக் கொண்டு மேல்சட்டை கூட இல்லாமல் ஒரு ஐந்து வயதுப் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 13

This entry is part 39 of 45 in the series 4 மார்ச் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “கடவுள் கொடுத்த கையிலிருந்து மனிதன் ஆயுதத்தைப் பறிக்கக் கூடாது !  போரிட எல்லாருக்கும் உரிமை உள்ளது.  எவருக்கும் நியாயப் பற்றிப் பேச உரிமை கிடையாது.  மானிடம் என்பது ஆயுத பலம் !  சொர்க்கம் என்பது வெற்றியின் சிகரம்.  பிரிட்டீஷ் மாமன்னர் மூன்றாம் ஜார்ஜுக்குக் கீழிருந்தவர் நெப்போலியனுக்குப் பீரங்கிகள் விற்றார்.  வாளின்றி அமைதி விளையாது வையகத்தில் !  என் குருவான […]

”சா (கா) யமே இது பொய்யடா…!”

This entry is part 38 of 45 in the series 4 மார்ச் 2012

ஞானசுந்தரம் தன் எல்கையைச் சுருக்கிக் கொண்டு வெகு காலமாயிற்று. எல்கையை என்றால் எதுவென்று நினைக்கிறீர்கள்? அவர் உறவுகளுடனான எல்கையையா அல்லது அவரது வாழ்விட எல்கையையா? இரண்டையுமே என்பதுதான் சரி. தன்னுடைய இயல்பே தன்னை இப்படி மாற்றி விட்டதோ என்பதாக அவர் நினைப்பதுண்டு. அதுவாகவே சுருங்கிப் போயிற்றா அல்லது அவராகச் சுருக்கிக் கொண்டாரா? தானேதான் சுருக்கிக் கொண்டோம் என்பதே விடையாக இருந்தது. அதில் ஏதோ பெரிய நிம்மதி இருப்பதாக அவர் உணர்ந்தார். இருக்குமிடமே சொர்க்கம். அதிலும் சும்மா இருப்பதே […]

பஞ்சதந்திரம் தொடர் 33- பாருண்டப் பறவைகள்

This entry is part 37 of 45 in the series 4 மார்ச் 2012

ஹிரண்யனின் மனவருத்தம் தென்னாட்டில் பிரமதாருப்யம் என்றொரு நகரம் இருக்கிறது. அதன் அருகாமையில் ஒரு சிவன்கோயில் உண்டு. அதை ஒட்டினாற்போல் இருந்த ஒரு மடாலயத்தில் பூடகர்ணன் என்றொரு சந்நியாசி இருந்து வந்தான். சாப்பிடுகிற வேளையில் பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவன் நகரத்திற்குப் போவான். சர்க்கரையும் வெல்லப் பாகும் மாதுளம் பழமும் கலந்த, வாயில் வைத்தவுடன் கரைகிற, பல இனிய தின்பண்டங்களைப் பாத்திரத்தில் நிறைத்துக் கொண்டு மடத்துக்குத் திரும்பி வருவான். பிறகு விதிமுறைப்படி அவற்றை உண்பான். மிகுதி உணவை வேலைக்காரர்களுக் […]

விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தொன்பது

This entry is part 36 of 45 in the series 4 மார்ச் 2012

1916 ஜனவரி 30 ராட்சச வருஷம் தை 17 ஞாயிற்றுக்கிழமை குட்மார்னிங் மேடம். தொப்பியைக் கழற்றிக் கையில் மரியாதையாகப் பிடித்துக் கொண்டு குனிந்து கும்பிடு போட்டான் ஜேம்ஸ். நானும் அந்த துரைசானிக்கு அபிவாதயே சொல்லாத குறையாக எண்சாணும் ஒரு சாணாகக் குறுக ஒரு அவசர நமஸ்காரம் செய்தேன். திருவாளர் மக்கென்ஸி உன் மேல் வெகு கோபமாக இருக்கிறார் என்று தெரியுமா? ஜேம்ஸை பாதி சிரிப்பும் பாதி கண்டிப்புமாக விசாரித்தாள் துரைசானி. அவள் என்னை யாரென்று லட்சியம் கூடச் […]

முன்னணியின் பின்னணிகள் – 30

This entry is part 35 of 45 in the series 4 மார்ச் 2012

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> மறுநாள் காலை குளிராக பாந்தமற்றமாகவே இருந்தது. மழை வேறு பிடித்துக் கொண்டது. மேட்டுத் தெருவில் விகாரேஜை நோக்கி நடந்தேன். வழியில் தென்பட்ட கடைகளின் பெயர்கள் எனக்கு ஞாபகம் இருந்தது. அந்த கென்ட் பிரதேசத்துக்கேயான பேர்கள், கால காலமாக, நூற்றாண்டு காலமாகப் புழங்கி வரும் பெயர்கள் அவை… கான். கெம்ப். கோப். இகல்தன்… ஆனால் கடைகளில் எனக்கு அடையாளந் தெரிகிறாப் போல யாரும் சிக்கவில்லை. அட இங்கே ஒரு காலத்தில் […]

நீ, நான், நேசம்

This entry is part 33 of 45 in the series 4 மார்ச் 2012

நிவேதாவிற்கு, எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இதனை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான இவ்வெழுத்தில் வடிக்க முடியவில்லை. ஆனால் ஏதேனும் உனக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் மட்டும் உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது. எழுத்தின் முதுகினில் அத்தனை பாரங்களையும் இறக்கிவைக்க வேண்டுமெனவும் தோன்றுகிறது. எத்தனையோ எழுதுகிறேன்.ஆனால் உனக்கு எழுத முடியவில்லை. […]

பருந்தானவன்

This entry is part 31 of 45 in the series 4 மார்ச் 2012

இந்த கதையின் கதாநாயகன் நான் தான் என்பதாய் நினைத்து கொண்டால் என்னை விட அறிவற்றவர் எவரும் இந்த உலகில் இல்லை என்றே நீங்கள் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.அபூர்வத்தெறிப்புக்கள் போலன்றி நான் எப்போதும் வெளியே தெரிவதில்லை.நன்கு உலர்ந்த துணியின் மீது விழும் நீர்த்துளி சற்று நேரத்திற்கு மட்டுமே தனது இருப்பை உணர்த்திவிட்டு மறைவது போன்றது தான் எனது தெறிப்பும் இருத்தலும்.தாமரை இலை மீது உருண்டு திரண்ட துளிகளாய் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் எனது விழைவு கூட என்னை உங்களிலிருந்து தனித்துக்காட்டுவதாய் படலாம்.ஆனால் […]

ஷிவானி

This entry is part 27 of 45 in the series 4 மார்ச் 2012

ரிஷ்வன் ராம் ஒரு கணம் அதிர்ச்சியில் சிலையாகிவிட்டான், அவன் அதைப் பார்த்த பொழுது, . அந்த எட்டுக்கு எட்டுக்கு அலுவலக அறையில், நான்கு சேர்கள் இருக்க, அதில் மூன்று சேர்கள் காலியாக, அதில் ஒன்றில், ஷிவானி அமர்ந்திருந்தாள், இல்லை இல்லை அப்படியே பின்புறம் சரிந்து, மேல் கூரையைப் பார்த்தபடி, அணிந்திருந்த துப்பட்டா விலகி, நாடு மார்பில் குத்திய கத்தியு டன், ரத்தம் சேரில் வழிந்து, மார்ப்லஸ் தரை எங்கும் ஒரே ரத்தமயமாய், கண்கள் மேலே பார்க்க, நிறைய […]

கசீரின் யாழ்

This entry is part 26 of 45 in the series 4 மார்ச் 2012

இளவரசன் கசீர் போர்களத்திலிருந்து குதிரையில் திரும்பிக் கொண்டிருந்தான். அவன் வகடு பழங்குடியினரை ஆளும் நகம்பாவின் மகன். வகடு பேரரசை ஆள வேண்டும் என்று போர்டுமா பழங்குடியினர் அவர்கள் மேல் போர் தொடுத்திருந்தார்கள். வகடு இனத்தவரும் சற்றும் மனந்தளராமல் அவர்களை எதிர்த்து வந்தார்கள். வெற்றி அல்லது செத்து மடி என்ற உறுதியான கொள்கையிடன் இருந்தான் இளவரசன். நகம்பா வயதான போதும், எட்டு குழந்தைகளுக்குத் தந்தையான கசீருக்கு பட்டத்தை கொடுக்காமல், போர் தொடுக்க அவனை அனுப்பிய வண்ணம் இருந்தார். இந்தப் […]