முன்னணியின் பின்னணிகள் – 27

This entry is part 28 of 31 in the series 19 பிப்ரவரி 2012

    சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> ”நாம எல்லாரும் எட்வர்டுக்கு எப்படி உதவ முடியுமோ செய்யணும்ப்பா” என்றாள் திருமதி பார்த்தன் திரஃபோர்டு. என்னை யோசனையுடன் பார்த்தாள். அதாவது, நீதான் உதவணும் என்கிற குறிப்பா இது. ”இப்ப அந்த கெம்ப் ரோசியோட ஓடிப் போயிட்டார்னால், அவர் தன் மனைவியை விட்டுப் பிரிஞ்சிருக்கணும், இல்லியா?” ”இருக்கலாம்” என்றேன் நான். ”யப்பா, நீ ஒரு உபகாரம் பண்ணேன்?” ”சொல்லுங்க, முடிஞ்சா செய்யிறேன்.” ”நீ பிளாக்ஸ்டேபிள் வரை ஒரு […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 11

This entry is part 26 of 31 in the series 19 பிப்ரவரி 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா தொழிற்சாலை பரம்பரைச் சொத்தாய் இருக்கலாம்.  ஆனால் அங்குள்ள மேஜை நாற்காலிகள், பெஞ்சுகள், மேஜை விரிப்புகள், தோரணத் துகில், பூங்கா, பூத்தோட்டம், உணவகம் எல்லாம் எங்களுக்குச் சேர்ந்தவை !  மெய்யாகச் சொன்னால் எனக்குச் சேர்ந்தவை.  நான் உனக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன் அவற்றை ! பெர்னாட் ஷா (மேடம் பிரிட்னி)   மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் […]

பட்டறிவு – 1

This entry is part 20 of 31 in the series 19 பிப்ரவரி 2012

– எஸ்ஸார்சி (குறுநாவல்) அவனும் அவளும் மும்பை சென்று வந்தார்கள். விடுப்புச்சலுகைப்பயணம் என்கிற அந்த வசதியை பயன்படுத்திக்கொண்டுதான். மைய அரசின் ஒரு அலுவலகத்தில் அவன் பணி புரிவதாலே அவர்கள் தந்த சலுகை. நான்காண்டுகளுக்கு ஒரு தடவை பறந்து விரிந்த இந்த இந்திய தேசத்தில் எங்கேயாவது ஒரு ஊருக்கு குடும்பத்தோடு சென்று திரும்பலாம். குடும்பம் என்பது எது என்கிற வினாவுக்கு ச்சரியாக விடை தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் கூட அப்படி ஒன்றும் பாதகம் இல்லை. நீட்டி முழக்கி வியாக்கியானங்கள் […]

பஞ்சதந்திரம் தொடர் 31- பாருண்டப் பறவைகள்

This entry is part 10 of 31 in the series 19 பிப்ரவரி 2012

ஒரு ஏரிக்கரையில் பாருண்டப் பறவைகள் என்று சொல்லப்படும் பறவைகள் இருந்து வந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வயிறும், இரண்டு தனித்தனி கழுத்துகளும் இருந்தன. அந்தப் பறவைகளில் ஒன்று இங்கும் அங்கும் திரிந்துகொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு இடத்தில் அதன் ஒரு கழுத்துக்கு அமிர்தம் கிடைத்தது. அப்போது அதைப்பார்த்து ‘’அதில் எனக்குப் பாதி கொடு’’ என்று இரண்டாவது கழுத்து கேட்டுக்கொண்டது. முதல் கழுத்து மறுத்துவிடவே இரண்டாவது கழுத்துக்குக் கோபம் வந்துவிட்டது. எங்கோ விஷத்தைத் தேடிப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டது. இரண்டுக்கும் வயிறு […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –

This entry is part 6 of 31 in the series 19 பிப்ரவரி 2012

15. தாசி மீனாம்பாள் வீடு அமைதியாககிடந்தது. வழக்கம்போல தீட்சதர் அதிகாலையில் புறப்பட்டுபோனபோது திறந்து மூடிய கதவு. பொழுது துலக்கமாக விடிந்து, வீடு பகற்பொழுதுக்கு இணங்கிக்கொண்டிருந்தது, கூரையில் இன்னமும் அதிகாலைப் பனியின்வாசம் நீரில் நனைத்த துணிபோல வீடு முழுக்க நிறைந்திருந்தது. வீடு கூட்டவில்லை என்பதன் அடையாளமாக ஆங்காங்கே அதது வைத்த இடத்திற்கிடந்தது. குளத்து நீர் தவலை இருந்த இடத்தில் அசையாமலிருக்க, அதன் மஞ்சள் நிறத்தில் சோகை வழிந்துகொண்டிருந்தது. மனிதர் நடமாட்டமின்மை, அது ஏற்படுத்தியிருந்த அமைதி. அந்திநேர வயற்காடுபோல மீனாம்பாள் […]

பஞ்சதந்திரம் தொடர் 30- முட்டாள் நண்பன்

This entry is part 37 of 40 in the series 12 பிப்ரவரி 2012

நட்பு அடைதல் இங்கே நட்பு அடைதல் என்னும் இரண்டாம் தந்திரம் தொடங்குகிறது. அதன் முதன் செய்யுள் பின்வருமாறு: சாதனமும் செல்வமும் இல்லாமற் போனாலும் அறிவாளிகளும் கல்விமான்களும் – காக்கை, எலி, மான், ஆமை செய்ததுபோல் – எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிக்கின்றனர். ‘’அது எப்படி?’’ என்று அரசகுமாரர்கள் கேட்கவே, விஷ்ணுசர்மன் சொல்லத் தொடங்கினார்: தென்னாட்டில் பிரமதாரூப்யம் என்றொரு நகரம் இருக்கிறது. அதற்கு வெகு சமீபத்திலேயே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதன் அடி மரம் பெருத்தும், கிளைகள் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 10

This entry is part 33 of 40 in the series 12 பிப்ரவரி 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா     பிரம்மாண்டமான தோற்றம் !  பெருமை மிக்க சாதனைகள் !  பல பேருக்கு ஓரிடத்தில் வேலைகள் !  நவீனத் தொழிற் புரட்சியின் வெற்றி விளைவுகள் !  மனந் திறந்து சொல்லப் போனால் என்னருமை அப்பா !  நானொரு மூடனாய் இருந்திருக்கிறேன் !  இந்த வெடிமருத்துச் சாலையின் விந்தை தெரியாமல் புறக்கணித்திருக்கிறேன் !  முன்னூகத்துடன் திட்டமிட்ட ஆக்கவினைகள் !  கட்டி […]

எருதுப் புண்

This entry is part 28 of 40 in the series 12 பிப்ரவரி 2012

ந பிரபாகரன் “உன்னைப் பத்தி அந்த சோடாப்புட்டி கணேசன் என்ன சொன்னான் தெரியுமாடி” என்று பாகியாவின் வலது தோளைத் தட்டி கேட்டாள் வசந்தி. “என்ன சொன்னானாம்?” என்று வேண்டா வேறுப்பாக கேட்டாள் பாக்கியா. “அவன் நெனச்சா உனக்கு ஹோட்டல்ல ரூம் போட முடியும்னு அவன் பிரெண்ட்கிட்ட அளந்துகிட்டு இருந்தான்” பாக்கியாவுக்கு கண்கள் மறைக்க ஒரு நீர்ப் படலம் எழுந்தது உதடு துடி, துடித்தது . அவன் சட்டையை பிடித்து, தலை கலைய, முகத்தில் நான்கு அரை விட்டால் […]

“வரும்….ஆனா வராது…”

This entry is part 27 of 40 in the series 12 பிப்ரவரி 2012

“என்னங்க…என்ன பேசாம நின்னுட்டிருக்கீங்க…போங்க…போங்க…போய்க் கூப்பிடுங்க…” – என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக என்னை வாசலை நோக்கி விரைவு படுத்தினாள் சாந்தி. இவள் எதற்காக இப்படிப் பரத்துகிறாள் என்பது எனக்குத் தெரியும். அறையிலிருந்தே மேனிக்கே ஜன்னல் வழியாகப் பார்த்தேன். ராஜப்பாதான் போய்க் கொண்டிருந்தார். ‘பாவம், அவரே இந்த வீட்டைக் கடக்கும்போது தன்னைக் கூப்பிட்டு விடக் கூடாதே என்று பயந்தவராய்ச் சற்று வேகமாகக் கடப்பது போல் இருந்தது. “போகட்டும் விடு…” என்றேன். சாந்தியின் முகத்தில் சாந்தம் இல்லை. கோபம்தான் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -60)

This entry is part 21 of 40 in the series 12 பிப்ரவரி 2012

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ சுதந்திர மனிதன் +++++++++++++ செல்வம் சேமித்துக் கணக்குக் கூட்டாத – செல்வந்த னாய்க் கொழுத்துத் தோன்றாத – செல்வத்தை இழக்க நெஞ்சம் அஞ்சாத – சிறிதும் தன் மேனி ஒப்பனை செய்யாத எவனோ ஒருவனை எடுத்துக் கொள் ! அவனே சுதந்திரம் அடைந்தவன் ! +++++++++++ என் சந்திப்பு +++++++++++ தப்புத் தவறான செயல் களுக்கும் அப்பால் ஒருவர் சிந்தனைக்கும், செம்மை […]