நீண்ட நாட்களின் பின்பு அஞ்சலியிடமிருந்து ராகவனுக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. நீண்ட நாட்கள் என்பது இங்கே நான்கு வருடங்களைக் குறிக்கும். அஞ்சலி ராகவனிற்கு மருமகள். முன்பெல்லாம் ஆறு ஆண்டுகளாக தினமும் மின்னஞ்சல் வரும். எள்ளளவும் பிரயோசனமில்லாத அந்த அஞ்சல்களை குறைந்தது முப்பது நாற்பது பேருக்காவது ‘·போர்வேட்’ பண்ணாமல் விடமாட்டாள் அஞ்சலி. அப்பொழுதெல்லாம் இருவரும் ‘மெசஞ்சரில்’ (Messenger) செய்திப் பரிவர்த்தனைகள் செய்திருக்கின்றார்கள். எல்லாம் ஒருநாள் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிட்டன. எல்லாம் அவரவர் விருப்பம். அந்த இடைவெளிக்குள் ராகவன் மூன்று […]
மனிதர்கள் இயல்பிலேயே சண்டைப்பிரியர்கள், அவர்களுக்குச் பிறருடன் கட்டிபுரள ஏதேனும் ஒரு காரணம் வேண்டும். இங்கே அவர்களுக்கு மதம் ஒரு காரணம். 18. பல்வேறு அளவினதாய்க் கதம்பக் குரல்கள். அக்குரல்களில் மனிதர்கூட்டத்தின் எல்லாவயதும் இருப்பதாகப்பட்டது. ஆண்கள், பெண்களென்று குரல்களைப் பிரிந்துணர முடிந்தது. நீர்ப்பாசிப்போல அத்தனை சுலபமாக பிரிக்கவியலாத நிராசையும், தவிப்பும், விரக்தியும் ஏமாற்றமும், அவமானமும் அவற்றில் படிந்திருப்பதை பாதரே பிமெண்ட்டா சிறிது நேரம் படுத்தபடி கேட்டார். அவை எங்கிருந்து வந்ததென்பதை யூகிக்க ஒரு சில நொடிகள் பிடித்தன. அநேகமாக […]
செய்யாறு தி.தா.நாராயணன் குப்பை…குப்பை..,.தெருவோரங்களில்,காலிமனைகளில்,முச்சந்திகளில், எங்கும்..எங்கும் குப்பைகள்.. நம்ம மக்களுக்கும் பொது நல சிந்தனைகளோ,போராட்டகுணங்களோ அறவே கிடையாது .. குப்பைகளை நடுத்– தெருவிலா கொண்டு வந்துக் கொட்டுவார்கள்?கெட்டுப் போன உணவுகள்,அழுகிப்போன காய்கறிகளும், ,பழ்ங்களும், ஊசிப்போன பிரியாணிப் பொட்டலங்கள்,, எலும்புத்துண்டுகள்,செத்த எலி,பிளாஸ்டிக் குப்பைகள்,பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட குழந்தைகளின் மலங்கள்,இன்னும் சொல்லக் கூசும் எல்லாக் கழிவுகளும் வீதியோரங்களில். கொட்டப்படுகின்றன. தெருவே நாறுகிறது. நாலு தூறல் போட்டுவிட்டதோ குப்பென்று கிளம்பும் கவிச்சை வாடையில் உவ்வே ! குடலைப் புரட்டும். இதுதான் எட்டாம் வார்டில் […]
டிடிங்….டிடிங்…..டிடிங் ….அழைப்பு மணி அடித்தது…. யாராயிருக்கும்…..? மனதின் கேள்வியோடு…கதவைத் திறந்தேன்… நீல வண்ண சுடிதாரில்..அழகி….பத்மா நின்று கொண்டிருந்தாள்…ஆனால்….அவள் முகம்….வழக்கத்துக்கு மாறாக வாடி இருந்தது…. இதே பிளாட் ல் ஐந்தாவது மாடியில் வசிக்கும் பத்மா…இந்த நேரத்தில் எதற்காக வந்திருப்பாள்.? . அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வெறும் வாய்களுக்கு மெல்லும் அவல்….அவள்… தான்..! உள்ளே வா…பத்மா.. இல்ல ஆன்ட்டி..வெளியில் கிளம்பறீங்க போலத் தெரியுது… ம்ம்…வாக்கிங் போகத் தான்……கிளம்பியிருக்கேன்.. சரி…போயிட்டு வாங்க….நான் போறேன்…! ம்ம்ம்….சொல்லு பத்மா…என்ன விஷயம்? அவள் தயங்கினாள்……திரும்பிப் […]
ரிஷ்வன் அன்று சனிக்கிழமை, சனிக்கிழமை வந்தாலே எப்பொழுதும் என் மனதில் ஒரு குதுகூலம் பிறந்துவிடும், ஏனென்றால், மறுநாள் விடுமறை என்பதால் அல்ல, அன்று ஆபீஸ் அரைநாள் மட்டுமே, அரைநாள் என்றால், ஏதோ மதியம் ஒரு மணிக்கு வேலை முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டாம், எப்படியும் எல்லா வேலையும் முடிக்க மணி மூன்று ஆகிவிடும், அதற்குப்பிறகு வீட்டுக்கு சென்று சாப்பிட்டு, சிறிது நேரம் மனைவிடம் சல்லாப்பித்து, மாலை ஒரு சினிமாவுக்கோ அல்லது வெளியில் எங்கேயாவது அழைத்துச் சென்று சுற்றிவிட்டு, […]
அச்சாணி… ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு செல்ல சார்மினார் எக்ஸ்பிரசில் ஏறி அமர்ந்து ..வண்டியும் கிளம்பியாச்சு… பிரயாணம் முன்னோக்கி நகர….மனசு மட்டும் லக்ஷ்மி குடும்பத்தை சுற்றி பின்னோக்கி சென்றது .பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால்….நடந்நிகழ்ச்சிதான்…..இருந்தாலும்…இன்று நினைத்தால்……கூட….எல்லாம்…. நேற்று நடந்தது போல் இருக்கு. வாசல் தெளித்துக் கோலம் போட பக்கெட் தண்ணீரோடு கதவைத் திறக்கும்போது…..அதற்காகவே காத்திருப்பது போல…ஒரு இளம் பெண் அவள் அருகில் கிழிந்த பாவாடையைக் கட்டிக் கொண்டு மேல்சட்டை கூட இல்லாமல் ஒரு ஐந்து வயதுப் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “கடவுள் கொடுத்த கையிலிருந்து மனிதன் ஆயுதத்தைப் பறிக்கக் கூடாது ! போரிட எல்லாருக்கும் உரிமை உள்ளது. எவருக்கும் நியாயப் பற்றிப் பேச உரிமை கிடையாது. மானிடம் என்பது ஆயுத பலம் ! சொர்க்கம் என்பது வெற்றியின் சிகரம். பிரிட்டீஷ் மாமன்னர் மூன்றாம் ஜார்ஜுக்குக் கீழிருந்தவர் நெப்போலியனுக்குப் பீரங்கிகள் விற்றார். வாளின்றி அமைதி விளையாது வையகத்தில் ! என் குருவான […]
ஞானசுந்தரம் தன் எல்கையைச் சுருக்கிக் கொண்டு வெகு காலமாயிற்று. எல்கையை என்றால் எதுவென்று நினைக்கிறீர்கள்? அவர் உறவுகளுடனான எல்கையையா அல்லது அவரது வாழ்விட எல்கையையா? இரண்டையுமே என்பதுதான் சரி. தன்னுடைய இயல்பே தன்னை இப்படி மாற்றி விட்டதோ என்பதாக அவர் நினைப்பதுண்டு. அதுவாகவே சுருங்கிப் போயிற்றா அல்லது அவராகச் சுருக்கிக் கொண்டாரா? தானேதான் சுருக்கிக் கொண்டோம் என்பதே விடையாக இருந்தது. அதில் ஏதோ பெரிய நிம்மதி இருப்பதாக அவர் உணர்ந்தார். இருக்குமிடமே சொர்க்கம். அதிலும் சும்மா இருப்பதே […]
ஹிரண்யனின் மனவருத்தம் தென்னாட்டில் பிரமதாருப்யம் என்றொரு நகரம் இருக்கிறது. அதன் அருகாமையில் ஒரு சிவன்கோயில் உண்டு. அதை ஒட்டினாற்போல் இருந்த ஒரு மடாலயத்தில் பூடகர்ணன் என்றொரு சந்நியாசி இருந்து வந்தான். சாப்பிடுகிற வேளையில் பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவன் நகரத்திற்குப் போவான். சர்க்கரையும் வெல்லப் பாகும் மாதுளம் பழமும் கலந்த, வாயில் வைத்தவுடன் கரைகிற, பல இனிய தின்பண்டங்களைப் பாத்திரத்தில் நிறைத்துக் கொண்டு மடத்துக்குத் திரும்பி வருவான். பிறகு விதிமுறைப்படி அவற்றை உண்பான். மிகுதி உணவை வேலைக்காரர்களுக் […]
1916 ஜனவரி 30 ராட்சச வருஷம் தை 17 ஞாயிற்றுக்கிழமை குட்மார்னிங் மேடம். தொப்பியைக் கழற்றிக் கையில் மரியாதையாகப் பிடித்துக் கொண்டு குனிந்து கும்பிடு போட்டான் ஜேம்ஸ். நானும் அந்த துரைசானிக்கு அபிவாதயே சொல்லாத குறையாக எண்சாணும் ஒரு சாணாகக் குறுக ஒரு அவசர நமஸ்காரம் செய்தேன். திருவாளர் மக்கென்ஸி உன் மேல் வெகு கோபமாக இருக்கிறார் என்று தெரியுமா? ஜேம்ஸை பாதி சிரிப்பும் பாதி கண்டிப்புமாக விசாரித்தாள் துரைசானி. அவள் என்னை யாரென்று லட்சியம் கூடச் […]