மெர்சியின் ஞாபகங்கள்

This entry is part 29 of 30 in the series 15 ஜனவரி 2012

குழல்வேந்தன் அன்பு தோழர்களே, நமக்கெல்லாம் பெண்களைப் பற்றிய செய்திகளோ அல்லது தகவல்களோவென்றால் விருப்பமானதன்றோ? பெண்களைப் பற்றிய சித்திரங்கள்,  வண்ணப் படங்கள், சிற்பங்கள், கவிதைகள், காவியங்கள், நாடகங்கள், என எங்கும் பெண்கள் எதிலும் பெண்களென்பதன்றோ நம்மவர்களின் விருப்பமும் தேர்வும். ஆடவர்களின் ஜட்டி விளம்பரம் தொடங்கி முகச் சவரம் செய்துகொள்ள ாடவர்கள் பயண்படுத்தும் பிலேடு விளம்பரம் வரை  எல்லாவற்றிர்க்கும் நமக்கு ஒரு பெண்ணின் பிம்பமன்றோ வேண்டி  இருக்கிறது. எனவே தோழர்களே நானும் உங்களோடு பெண்ணைப் பற்றியே பேசுவதென்று தீர்மானித்துள்ளேன். பெண்கள் […]

பஞ்சதந்திரம் தொடர் 26 யோசனையில்லாத உபாயம்

This entry is part 24 of 30 in the series 15 ஜனவரி 2012

யோசனையில்லாத உபாயம்   ஒரு காட்டில் ஆலமரம் ஒன்றிருந்தது. அதில் நாரைகள் கூடு கட்டி இருந்து வந்தன. மரத்தின் ஒரு பொந்தில் ஒரு கருநாகம் இருந்தது. நாரைகளின் குஞ்சுகளுக்கு இறக்கை முளைப்பதற்குமுன்பே அவற்றை தின்று காலங்கழித்து வந்தது.  அப்படியே ஒருநாள் ஒரு நாரையின் குஞ்சுகளைப் பாம்பு தின்றுவிட்டது. அதனால் அந்த நாரை துக்கத்தோடு ஏரிக்கரைக்குப் போய் தாரை தாரையாகக் கண்ணீர் விட்டு அழுது தலையைத் தொங்க விட்டுக்கொண்டு நின்றது.   அதைப் பார்த்த ஒரு நண்டு, ‘’மாமா, ஏன் இப்படி […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 6

This entry is part 23 of 30 in the series 15 ஜனவரி 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ஸ்டீஃபன் !  உனக்கு வாணிபத்தில் ஈடுபாடு இல்லை.  வழக்காடும் திறமை இல்லை ! கலை, இலக்கிய நாடகத்தில் இச்சை துளியும் இல்லை !  வேதாந்தம் உனக்கு விளங்காதது !  ஆனால் மனிதர் பலருக்குத் தெரியாத நல்லது கெட்டது நியாயம் மட்டும் உனக்கு எப்படிப் புரியுது ? பெர்னாட் ஷா (ஸ்டீஃபன் அண்டர்ஷாஃப்ட்) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 9

This entry is part 15 of 30 in the series 15 ஜனவரி 2012

தீட்சதிரின் மகனை மனதில்வரித்துக்கொண்டு அவன் தந்தையுடன் சம்போகம் செய்வதுகூட ஒரு தாசியின் தர்மத்திற்கு உகந்ததுதானென்ற மனப்பக்குவத்தை பெண்ணிடம் மீனாம்பாள் ஏற்படுத்தியிருந்தாள். 11 இளவேனிற் காலமென்பதால் வெப்பம் முன்னிரவு நேரத்திலும் மூட்டம்போல கவிந்திருந்தது. நீர்ப் பாசி போல கரிய இருள் இரவு நீரில் கலந்தும் கலவாமலும் மிதந்துகொண்டிருந்தது. மரங்கள் காற்றை எதிர்பார்த்து அசைவின்றி இருந்தன. தொழுவத்தில் கட்டத் தவறிய பசுவொன்று வெகுநேரமாக இருட்டில் நிற்கின்றது. மரகதப்பச்சையில் ஒளிறும் அதன் விழிகளின் காட்சியில் பள்ளி அறையின் சன்னல் கம்பிகளைப் பிடித்தபடி […]

பாசம் பொல்லாதது

This entry is part 7 of 30 in the series 15 ஜனவரி 2012

– கே.எஸ்.சுதாகர் சிவசம்பு தனது தங்கையின் திவசதினத்திற்குப் போக வேண்டும் என்ற நினைப்பில் அயர்ந்து தூங்கி விட்டார். சிவசம்புவிற்கு அறுபத்தைந்து வயதாகிறது. தனது மகன் மருமகளுடன் கனடாவில் ரொறன்ரோவில் இருக்கின்றார். கடந்த வருஷம் அவரது தங்கை பரமேசு அகால மரணமடைந்துவிட்டாள். உறக்கத்தில், சிவசம்புவிடம் தங்கை கதைத்தாள். “அண்ணா! உங்கை இருந்து என்ன செய்யுறாய்? நீயும் கெதியிலை மேலை வாப்பா. சும்மா ஜாலியா பாக்கு வெத்திலையும் போட்டுக் கொண்டு ஊர்க்கதையள், வயல்வம்புகள் கதைச்சுக் கொண்டு இருக்கலாம்.” “அது சரி. […]

ஞானோதயம்

This entry is part 3 of 30 in the series 15 ஜனவரி 2012

பழநிக்கு அருகில் நெய்க்காரப்பட்டி என்று ஓர் ஊர் இருக்கிறது. அங்கே ஒரு பெரிய மிராசுதார். நெய்க்காரப்பட்டி மைனர் என்றால் தெரியாதவர்களே கிடையாது. பெயருக்கேற்ற மாதிரி ஐந்து சவரனில் வடக்கயிறு போன்ற மைனர் செயின் அவரது பொன்னிற மேனியில் தவழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் நெற்றியில் மட்டும் பட்டைப்பட்டையாக விபூதி. பெரிய முருகபக்தர். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் “முருகா! முருகா!” என்று வாய் முனகிக்கொண்டே இருக்கும். முருகன் பெயரை எப்போதும் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக ‘முருகன்’ என்ற […]

முன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்

This entry is part 48 of 48 in the series 15 மே 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் எட்வர்ட் திரிஃபீல்ட் இரவில் தான் எழுதுவார். ரோசிக்கு ஆகவே ராத்திரியில் சோலி கீலி எதுவுங் கிடையாது. ராத்திரியானால் அவள் யாராவது சிநேகிதர்களுடன் ஹாயாக வெளியே கிளம்ப சௌகர்யமாய் இருந்தது. வசதியாய் வாழ அவளுக்கு இஷ்டம். குவன்டின் ஃபோர்டின் கையில் துட்டுச் சக்கரம் தாராளமாய்ப் புழங்கியது. அவன் வாடகைக்காரை வரவழைத்து, இராத்திரி விருந்துக்கு என்று கேட்னருக்கோ சவாய்க்கோ அவளை அழைத்துப் போவான். அவளும் இருந்ததில் படாடோபமான உடையை அணிந்து அவனுடன் கிளம்பினாள். அந்த ஹாரி […]

முடிச்சு

This entry is part 39 of 40 in the series 8 ஜனவரி 2012

“வாடா சூரி…என்ன டூரெல்லாம் போயிட்டு வந்தாச்சா?” – உறாலில் அமர்ந்து தினசரிச் செய்தியில் ஆழ்ந்திருந்த கணேசலிங்கம் கேட்டார். தயக்கத்துடனேயே நுழைந்த சூரிய நாராயணன் என்ற சூரிக்கு முதலாளியின் யதார்த்தமான அழைப்பு சற்று தெம்பைக் கொடுத்தது. என்னடா ஒரேயடியா பதினைஞ்சு நாள் லீவு கேட்குற? அப்புறம் கடையை யார் பார்த்துக்கிறது? என்று சலித்துக் கொண்டவர் இன்று சாதாரணமாய் அழைப்பது சற்று நிம்மதியைக் கொடுத்தது. கடையைப் பார்த்துக் கொள்ள என்று இன்னும் சில பேர் இருக்கிறார்கள் என்றாலும் அவனின் இருப்பு […]

முன்னணியின் பின்னணிகள் – 21 சாமர்செட் மாம்

This entry is part 38 of 40 in the series 8 ஜனவரி 2012

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்   … எது எப்பிடியானாலும் நம்ம ஜாஸ்பர் கிப்சன் தான் முதன் முதலில் ஓபரா மற்றும் உச்சஸ்தாயி பாடகரின் முகவரி அட்டைகளிலும் ‘அட் ஹோம்’ என கூட இடம் பிடித்த முதல் எழுத்தாளர். ஆக அவர் நமது திருமதி பார்த்தன் திரஃபோர்டின் பிரதம விருந்தாளி என அழைப்பு பெறாமல் எப்படி? அவர் கலந்துகொள்ளும் ஓபரா நிகழ்ச்சிகளின் முன்வரிசையில் அவள் இடம்பிடித்தாள். என்றாலும் அது கௌரவ நுழைவுச்சீட்டு அல்ல, கைக்காசு கொடுத்துப் போய் அமர்ந்தாள். […]

பஞ்சதந்திரம் தொடர் 25 முட்டாளுக்குச் செய்த உபதேசம்

This entry is part 37 of 40 in the series 8 ஜனவரி 2012

முட்டாளுக்குச் செய்த உபதேசம்   ஒரு காட்டுப்பிரதேசத்தில் குரங்குக் கூட்டம் ஒன்றிருந்தது. அவை குளிர் காலத்தில் அசாத்தியக் குளிரால் வாடிக்கொண்டிருந்தன. இரவில் ஒரு மின்மினிப் பூச்சியைக் கண்டன.. ‘அது நெருப்புத்தான்’ என்று அவை எண்ணி அதைச் சிரமப்பட்டுப் பிடித்து, காய்ந்த புல்லையும் இலைகளையும் போட்டு அதை மூடிவிட்டன. பிறகு தங்கள் கைகளையும், வயிற்றையும், மார்பையும், விலாப்புறத்தையும் அதன்முன் நீட்டிக் காட்டிச் சொறிந்துகொண்டபடியே மானசீகமான உஷ்ணத்தை அனுபவித்து இன்படைந்தன. அவற்றில் ஒரு குரங்கு குளரில் ரொம்பவும் வாடியதால் அதிலேயே […]