அழகின் சிரிப்பு

This entry is part 33 of 40 in the series 8 ஜனவரி 2012

 கே.எஸ்.சுதாகர் ஷோபனா நிலைக்கண்ணாடி முன் நிற்கின்றாள். தன் ஆடைகளை சரி செய்தவாறே அழகு பார்க்கின்றாள். பிறை நிலவிற்குள் செந்நிறப்பொட்டு. முகமெங்கும் மெல்லிதாக அரும்பி நின்று மினுப்புக் காட்டும் வியர்வைத் துளிகள். லிப்ஸ் ஸ்டிக்கில் கூரிய செவ்வாய். நீலநிற சுடிதாரில் அழகாய்த்தான் தெரிந்தாள். சரி! பார்த்தது போதும் என்று தனக்குள் எண்ணியவாறே பின்னால் திரும்புகின்றாள். “எப்படிடா செல்லம்! நான் வடிவா இருக்கிறேனா?” பதில் இல்லை. ஆடைகளைக் களைந்துவிட்டு அடுத்த உடுப்பை மாட்டுகின்றாள். எல்லாம் புத்தம் புதிதான பளிச்சென்ற விலையுயர்ந்த […]

மண் சுவர்

This entry is part 32 of 40 in the series 8 ஜனவரி 2012

அருண் காந்தி   ஆத்தா…ஆத்தோவ்…ஓவ்…என்னடீ…? எலி என்னத்தையோ கரண்டுது பாரு… இந்த எலிப் பண்ணையள என்னவன்றதுனே தெரியலடீ.குருதுதெல்லாம் வேற மொட்டயாக் கெடக்குறது அதுகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமாக் கெடக்கு.   நானும் எவள நாளாத்தான் உனக்கிட்ட எலிப்பொறி வக்கச் சொல்லிக்கிட்டு  இருக்கேன்.கேக்குறியா நீ?   யேட்டி!யேட்டியோவ்…வாணி…   ஓவ்…என்ன த்தா… ? அங்குன யாரு மீனுக்காரனா போறான்?   இல்லத்தா கூனிப்பொடி..நிக்கச் சொல்லவா?   அடிப் போடி!”அவன் நால அள்ளிப் போட்டு 10 ருவா ம்பான்…சின்னப்பய கடத்தெருவுக்கு பொய்த்து வரும்போது வாங்கிட்டு வரச் […]

பஞ்சரத்னம்

This entry is part 25 of 40 in the series 8 ஜனவரி 2012

அவனுக்குத் தியாகையன் என்று பெயர் வைத்ததால் சங்கீதத்தில் ஆர்வம் வந்ததா அல்லது சங்கீதம் அவனுக்கு நன்றாக வரும் என நினைத்து அவன் அப்பா பஞ்சரத்னம் அப்படி ஒரு பெயரை அவனுக்குச் சூட்டினாரா என்று தெரியவில்லை. அவன் அம்மா நாகரத்தினம்மாவிற்குப் பையனின் நாமகரணத்தில் எந்தவித பங்கும் இல்லையென்றாலும், பையன் அழும்போதுகூட கலப்படமே இல்லாத சுத்தமான முஹாரி ராகத்தில்தான் அழுவதாகப் பெருமைப் பட்டுக்கொண்டிருந்தாள். பஞ்சரத்தினமும் சங்கீத ஆர்வலெரெல்லாம் ஒன்றும் இல்லை. அவரின் தாத்தா திருவையாறில் குடியிருந்தபோது இவர் பிறந்ததால் முதல் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 5

This entry is part 24 of 40 in the series 8 ஜனவரி 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “அம்மா ! தயவு செய்து என்னை நீங்கள் இன்னும் குழந்தையாக நடத்த வேண்டாம் !  நேற்றிரவு நீங்கள் சொன்னதை நான் கவனமாக எடுத்துக் கொள்ள வில்லை.   இப்போது புரிகிறது.  பல வருடங்களுக்கு முன் சொல்ல வேண்டியதை இப்போது நீங்கள் சொல்லி என்னை ஆழமாய்க் காயப் படுத்தி விட்டீர்.  இனி நானும் அப்பாவும் நேராகப் பேசிக் கொள்ள வேண்டும் உங்கள் மூலமாக […]

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் (துருக்கி நாட்டுச் சிறுகதை)

This entry is part 9 of 40 in the series 8 ஜனவரி 2012

அஸீஸ் நேஸின் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். அவர் சிறையிலிருந்த போது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார். அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டு செல்லப் போதுமான பணம் கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக் கொண்டு, அமைதியான […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –

This entry is part 6 of 40 in the series 8 ஜனவரி 2012

தாங்கள் அறுவடை செய்த செல்வத்தை தான தருமம் செய்வதைக் காட்டிலும் தாசிக்கு தருவதனூடாக தங்கள் ஆண்மையை வெளியுலகிற்கு உறுதிபடுத்து நினைக்கிறார்கள், அவ்வளவுதான். 10. சீர்காழியிலிருந்து திரும்பிய முதல் நாள் இரவு தூக்கமின்றி கழிந்தது. உப்பரிகையின் கைப்பிடி சுவரிலமர்ந்து வானத்தை வெகு நேரம்பார்த்தாள். நட்சத்திரங்களில் இளைஞனைத் தேடினாள். விரல்கொண்டு அவளது முழங்கையையை தடவிப்பார்த்துக்கொண்டாள் இளைஞைனின் விரல் தீண்டிய இடங்களில் வெது வெதுப்பினை உணர்ந்தாள். மயிற்கால்கள் சிலிர்த்தன. ஓர் ஆணின் ஸ்பரிஸம் இதற்கும் முன்பும் சித்ராங்கிக்கு நேர்ந்துள்ளது. இவள் வயது […]

சில்லறை நோட்டு

This entry is part 2 of 40 in the series 8 ஜனவரி 2012

சந்துருவுக்கு பெரும் பணக்காரனாக வேண்டும் என்று ஆசை! எப்படி பணக்காரனாக ஆவது? உழைத்துச் சம்பாதிப்பதென்றால் – அது அன்றாட உணவுக்குக்கூடப் போதாது! லட்சம் லட்சமாக – கோடி கோடியாகச் சிலரிடம் பணம் இருக்கிறதே – அவர்களெல்லாம் உழைத்துத்தான் சம்பாதிக்கிறார்களா? அவனுக்கென்னவோ நம்பிக்கையில்லை! அவனுக்குத்தான் நன்றாக தெரியுமே – உழைத்து உழைத்துக் களைத்ததுதான் மிச்சம்! கோடீசுவரனாக வேண்டாம் – ஒரு நூறீசுவரனாகவாவது அவனால் ஆக முடிந்ததா? இல்லையே! பின் ஏன் உழைத்து உழைத்து ஓடாகப் போக வேண்டும்? சந்துருவின் […]

பஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்

This entry is part 40 of 42 in the series 1 ஜனவரி 2012

பாம்பை மணந்த பெண்   ராஜக்கிருஹம் என்கிற ஊரில் தேவசர்மா என்றொரு பிராமணன் இருந்தான். அவன் மனைவிக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் அண்டை அயலார்களின் குழந்தைகளைப் பார்த்துவிட்டு அவள் ரொம்பவும் அழுதாள். ஒருநாள் பிராமணன் அவளைப் பார்த்து, ‘’அன்பே, கவலைவிடு. நான் குழந்தைப் பேறு பெறுவதற்காக யாகம் செய்யும்போது ஏதோ ஒரு அசரீரி, ‘பிராமணனே, மற்றெல்லா மனிதர்களைக் காட்டிலும் மிகுந்த அழகும், குணமும், பலமும் உள்ள குழந்தை உனக்குப் பிறக்கும்’ என்று தெளிவாகச் சொல்லிற்று’’ என்றான்.   […]

முன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்

This entry is part 39 of 42 in the series 1 ஜனவரி 2012

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் நான் போய்வந்தேன். ஆகாவென்றிருந்தது. மீண்டும் போனேன் அங்கே. இலையுதிர்காலம் கடந்தது. புனித லூக் மருத்துவப் பள்ளியில் குளிர்கால வகுப்புகள் துவங்க, நான் லண்டன் திரும்பிவந்தேன்… இப்போதெல்லாம் சனிக்கு சனி நான் அங்கே ஆஜர். அதுதான் எனது கலை மற்றும் எழுத்து உலகத்தின் சாளரம். நான் அறையில் ரொம்ப மும்முரமாய் எழுதிக் குவித்தேன், ஆனால் சனி மதியங்களில் யாரிடமும் அதைப்பற்றி மூச்சு காட்டவில்லை. இந்தக் காலகட்டத்தில் எழுதிக்கொண்டிருக்கிற பிற எழுத்தாளர்களைச் சந்திப்பதில் எனக்கு ஒரு […]

சிந்தனைச் சிற்பி

This entry is part 36 of 42 in the series 1 ஜனவரி 2012

மாமேதைகள் பிறந்த கிரேக்க நாடு! அங்கே மஞ்சு சூழ் மலைப் புறத்தில் ஒரு சிற்றூர்! அங்கிருந்து கூட்டங் கூட்டமாக வந்து கொண்டிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் பேசிக் கொள்கிறார்கள். “ஆஹா! என்ன மேதா விலாசம்! வாய் திறந்தால் போதும் சத்தான சிந்தனைகளை வாரித் தெளிக்கிறார்! முத்தான கருத்துக்களை கொட்டிக் கொடுக்கிறார்!” யார் இந்தப் புகழ்ச்சிக்குரிய சிந்தனைச் சிற்பி? மக்களின் சிந்தை கவர்ந்து மிதிப்பைப் பெற்ற மாமேதை! எல்லோரும் அவரை டயாஜெனிஸ் என்று அழைக்கிறார்கள்.  அவர் குடியிருந்த குடிசை வீட்டிற்கே […]