அத்தை வீட்டுக்கு வந்திருந்தான் ஒரு சாமியாடி. அந்த சாமியாடிக்கிட்ட தங்களோட கஷ்ட்டங்களச் சொல்லி விடிவு காண வந்திருந்த கூட்டத்துல எப்படியும் ஒரு நூறு பேராவது இருந்திருப்பாங்க. சரி. இந்த சாமியாடிய கூட்டிட்டு வந்தது யாரு தெரியுமா? அவருதான் அத்தையோட மாமனாரு குட்டிக் கவுண்டரு. சாமி சொல்லரதெல்லாம் நெசமா இருக்குதாம். காணாம போன பொருட்கள கண்டுபிடிச்சுத் தருதாம் சாமி. தீராத வியாதிகளையெல்லாம் தீர வைக்குதாம். கேட்டவங்களுக்கு கேட்ட வரமெல்லாம் தருதாம். புள்ள வரம், பொண்டாட்டி வரம், புருஷன் வரம், […]
ஸ்ரீதர் சதாசிவன் Twitter: @shrisadasivan நடுநிசியில் கண்விழித்த அதிதி, பக்கத்தில் படுக்கையில் ராமை தேடினாள். எதிர்பார்த்தது போலவே படுக்கை காலியாய் இருந்தது. மெல்ல எழுந்து லிவிங் ரூமிற்கு வந்தாள். ராம் இருட்டில், கவுச்சின் ஒரு ஓரத்தில் அமர்ந்து அணைத்து வைத்திருந்த டி.வீயை வெறித்துக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் வந்து, குனித்து முழங்கால் போட்டு உட்கார்ந்தாள் அதிதி. அவன் தலை முடியை, தனது கைகள் கொண்டு வருடினாள். “ஏம்ப்பா தூங்கலையா?” என்று பரிவாய் கேட்டாள். “………..” பதில் சொல்லாமல் […]
1 செல்லச்சாமிக்கு வழக்கம் போல் ஐந்தரை மணிக்கு முழிப்பு வந்து விட்டது . மாடித் தரையில் படுத்திருந்தவரின் கண்கள் மேலே சிமிட்டிக் கொண்டிருந்த வானத்தின் எண்ணற்ற கண்களைச் சந்தித்தன . நீலமும் வெள்ளையுமாக வானில் தெரிந்த புரிபடாத சித்திரங்களில் எதையாவது தேடிக் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்த்தார். அவர் சிறுவனாக இருந்த போது இம்மாதிரி வானில் காணப்படும் ஓவியங்கள் முந்தின ஜன்மத்தில், இதே நாளில் நடந்த காட்சிகளைத்தான் தீட்டிக் காண்பிக்கப் படுவதாக நினைத்ததுண்டு . வெட்ட […]
அந்தப் படம் லண்டன் மாநகரில் ஆயிரமாவது நாளாக ஓடிக் கொண்டிருந்தது. அதைச் சிறப்பிக்கும் வகையில் அந்தக் கொட்டகையில் பெரிய விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். படத்தின் கதாநாயகி நேரிலே மேடையில் தோன்றுகிறாள் என்பதால், ஒரு பவுண்ட் டிக்கெட் ஐம்பது பவுண்டுக்குக்கூட, கள்ளமார்க்கெட்டில் கிடைக்கவில்லை. கொட்டகை முழுதும் கூட்டம் பொங்கி வழிந்தது. இந்த விழாவில் இன்னொரு சிறப்பு. அகில உலக மேதை பெர்னாட்ஷா தலைமை தாங்குகிறார். அவர்தான் அந்தப் படத்திற்கு கதை அமைத்து உரையாடல்களை எழுதியிருந்தார். நடிகை மேடைக்கு வந்ததும் […]
¬¬¬ ம.காமுத்துரை அல்லியூர் அந்தப்புரத்திலிருந்தபோதுதான், சூ கூ சுகுமாறன் நம்பியாருக்கு அதிஅற்புதமான யோசனை உதித்தது. அதன்பிறகும், ஆசை நாயகிகள், அசின்பத்மினி, நயனாதிகா, த்ரிசாம்பிகா, குஷாலினி மற்றும் ஸ்ரேயாரஞ்சனி களோடு சல்லாபிக்க முடியவில்லை. அந்தப்புரமண்டபத்தின் ஆலோசனைக் கூடத்திற்குப் பின்னால் அமைக்கப்பட்டிருந்த பஞ்சதீர்த்த வாவியில் நீட்டாமல் நெளிக்காமல் படாரெனக்குளித்து, யோசனை உலருமுன், பட்டாடை வஸ்திரங்களை உடலில் பூட்டிக் கொண்டார். பாதரட்சை அணிந்து, உடைவாளை இடுப்பில் மாட்டியபோது வாசனைத் திரவியங்களோடு சேடிபெண்கள் ஓடிவந்தனர். தாமதமாக வந்த அவர்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அளிக்கும்படி […]
மலையென்றால் அது ஒன்றும் பெரிய மலையல்ல. ஒரு குன்றுதான். அதன் பின்புறம் ஒரு பெரிய தண்ணீர் டேங்க் உண்டு. ரயில்வே க்வார்டர்ஸ் முழுவதற்கும் குடிதண்ணீர் சப்ளை இதிலிருந்துதான். மலைக்குன்றின் முன்புறம் மேலே வழக்கம்போல முருகனும் கீழே பொன்னேஸ்வரி அம்மனும் அருள்பாலித்துக்கொண்டிருப்பார்கள். ஆஸ்திகப் பெருமக்களுக்கு தெய்வீகமாகவும் இளைஞர்களுக்கு ‘லவ்’கீகமாகவும் சிறுவர்களுக்கு விளையாடவும், வாழ்க்கையை வெறுத்தவர்களுக்கு முடிவாகவும் அந்தக் கோவிலும் டேங்கும் திகழ்ந்துகொண்டிருந்தன. கிறிஸ்தவர்களுக்கு மூன்று அழகிய தேவாலயங்கள் ஊரின் நடுவிலும், மேற்கிலும் மற்றும் வடக்குக் கோடியிலும் வழிபாட்டுக்கென இருந்தன. […]
ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா நமது புதல்வனால் புரிந்து கொண்டு நடத்த முடியாது ! நாற்காலியில் அமர்ந்து மேற்பார்வை செய்வான் பீரங்கித் தொழிலைப் புரிந்து கொள்ளாது ! அவனுக்கு அந்தத் தகுதி இல்லை. அவன் இல்லாமல் தொழிற்சாலை இயங்கும் ! அவன் நடத்தினால் அது முடங்கும் ! நான் […]
அந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறார்களோ? வானமே கூரை!பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர்தான் ஒரே சுவர்; நான்கு பக்கச் சுவரெல்லாம் இந்தக் குடித்தனத்துக்கு கிடையாது. அந்தச் சுவரில் எப்படியோ போட்ட கள்ளத்தனமான துளையில் ஒரு குச்சியைச் செருகி பழைய கந்தல் சாக்கை ஒட்டுப்போட்டு தைத்து முன் பக்கம் நடப்பட்ட இரண்டு குச்சிகளில் இணைத்துக் கட்டியிருப்பதுதான் அவர்களுக்குரிய இடம் என்பதைத் தெரிவிக்கும் அடையாளம்! இப்போது ஓரளவுக்கு உங்களுக்கு இது யாருக்குச் சொந்தமான குடித்தனம் என்று யூகித்திருப்பீர்கள். […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் திரிஃபீல்ட் தம்பதிகளை மறுபடி சந்திக்கிறதுக்கு ஒரு ரெண்டு வருஷம் முன்னால், நான் திருமதி ஹட்சன் இல்லத்தில் தங்கியிருந்தேன். வாழ்க்கை அப்போது சீராய் ஓடிக்கொண்டிருந்தது. பகலெல்லாம் மருத்துவமனையில் இருப்பேன். ஒரு ஆறு மணிப்போல வின்சென்ட் சதுக்கத்துக்கு நடந்து திரும்புவேன். லம்பத் பாலத்தருகில் ‘ஸ்டார்’ பத்திரிகை வாங்கிக்கொள்வேன். வந்து ராத்திரி சாப்பிட அழைப்பு வரும்வரை வாசிப்பேன் அதை. சாப்பாடு ஆனதும் ஒருமணி, ரெண்டுமணி தீவிர இலக்கிய வாசிப்பு. மனப்பயிற்சி அது. நான் ஒரு கடும் முயற்சி […]
கோசல ராஜ்யத்தில் அயோத்தி என்ற நகரம் இருக்கிறது. அதை சுரதன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். பல சிற்றரசர்கள் வந்து அவனுக்குத் தலைவணங்கி மரியாதை செய்யும்போது அவர்களின் மணி மகுடங்கள் வீசும் ஒளியிலே சுரதனின் பாதங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும். ஒருநாள் காடுகளைக் காவல் செய்பவன் அரசனிடம் வந்தான். ‘’அரசே! காட்டிலுள்ள எல்லா அதிகாரிகளும் கொந்தளித்துக் கலகம் செய்யும் நிலைமையில் இருக்கின்றனர். அவர்களிடையே விந்தியகன் என்ற தலைமை அதிகாரிக்கு அரசர்தான் மரியாதையாக நடக்கப் பாடம் கற்பிக்க வேண்டும்’’ என்று […]