எங்கள் தீபாவளி

This entry is part 17 of 17 in the series 12 பெப்ருவரி 2023

ஆர் வத்ஸலா எனது‌ உடலின் வயதும்  காலி வயிற்றில் அதன் இனிப்பும் எண்பதும் இரு நூறும் என்பதாலும் பிள்ளைகள் பெரியவர்களாகி என்னைப் போலல்லாமல் பேரறிவுடன் இப்போதிருந்தே ‘டயட்’டில் என்பதாலும் பேத்தி ‘ஸ்விக்கி’ சரணம் என்பதாலும் பல ஆகாரங்கள் எங்கள் வீட்டில் ‘ஆதார்’ தொலைத்தன  சுற்றுப்புற சூழல் மாசைக்‌ கருதி பட்டாசு‌க்கு வீட்டில் தடை  ‘கொலாஸ்ட்ரால்’ அச்சத்தில் காசி செல்லாமலேயே வடையை‌  விட்டோம் தலைவலிக்கு பயந்து எண்ணெக்குளி  ‘ஷாம்பு’ குளியாகி ‘கீசர்’ குழாயில் கங்கை கண்டோம் மற்றவர்  புது […]

பொறாமையும் சமூகநீதியும்

This entry is part 16 of 17 in the series 12 பெப்ருவரி 2023

தாமஸ் சோவெல் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக பொறாமை கருதப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அது முக்கியமான அரசியல் அறமாக ஆகியிருக்கிறது. அதற்கு தற்போதைய புதிய பெயர் “சமூக நீதி” வரலாற்று ரீதியில் நடந்த அநீதிகளால் சில குழுவினர் ஏழையாக இருப்பதை வைத்து எழையாக இருக்கும் எல்லா பேருக்கும் வரலாற்று ரீதியான அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று பொத்தாம்பொதுவாக அடித்துவிடுகிறார்கள். உலகத்தின் பல பகுதிகளில் ஆரம்பத்தில் மிகுந்த ஏழையாக இருந்த பல குழுவினர், கடுமையான உழைப்பின் காரணமாகவும், வலி நிறைந்த […]

நாவல்  தினை             அத்தியாயம் இரண்டு    CE 300

This entry is part 15 of 17 in the series 12 பெப்ருவரி 2023

இரா முருகன் அந்தியோடு மிழவும் உயிர்த்தது மலையில். கடல்கோள் துயரம் பாடிக் கேட்க கணியனைச் சுற்றி பத்து பேர் அமர்ந்திருந்தார்கள்.  நாகன் கணியன் கடல்கோளின்    பதினெட்டாம் ஆண்டு   நிறைவாகி,  சூரிய மண்டல கிரகங்கள் திரும்ப நிலைக்கும் தினம் இன்று எனக் கணித்திருந்தான். கடல்கோள் தினத்தன்று சமவெளியில்    கடல் பொங்கி உயர்ந்து உள்ளே புகுந்து எல்லாவற்றையும் எல்லாரையும் அலைகளில் பொதிந்து அடித்துப்போய் கடலில் உயிர் நீக்கச் செய்தது. மலைப் பிரதேச மக்கள் எந்த உதவியும் செய்ய இயலாமல் மலை […]

33 வருடங்களாக அஞ்னாத வாசம் செய்த தமிழர்கள்

This entry is part 14 of 17 in the series 12 பெப்ருவரி 2023

குரு அரவிந்தன் இராமாயணத்தில் இராமபிரான் 14 ஆண்டுகள் அஞ்னாத வாசம் இருந்ததாகச் சொன்னபோது பக்தர்கள் கதிகலங்கிப் போனார்கள், இந்தக்கதை பழைய வரலாற்றில் இடம் பெற்றிருந்ததால் அந்த சம்பவம் முக்கியம் பெற்றிருந்தது. ஆனால் அதைவிட அதிக காலம் அதாவது 33 வருடங்கள் வடஇலங்கைத் தமிழ் மக்கள் அஞ்னாத வாசம் இருந்ததைக் கேள்விப்பட்ட போது யூரியூப் தொலைக்காட்சி நண்பரான தணூரன் என்பவர் கண்கள் கலங்கி நின்றதைக் காணமுடிந்தது. ‘முதன் முதலாக இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்திருக்கின்றேன், காரணம் நான் […]

இல்லாத இடம் தேடி

This entry is part 13 of 17 in the series 12 பெப்ருவரி 2023

மீனாட்சி சுந்தரமூர்த்தி நாங்கள் இரயில் நிலையம் வந்தபோது  மணி  12.45 ஆகிவிட்டிருந்தது. அவசர அவசரமாக உடைமைகளை வண்டியிலிருந்து எடுத்துக் கொண்டு மூன்றாம் நடைமேடைக்கு விரைந்தோம்.பெண்கள் நாங்கள் கைப்பைகளை மட்டும் எடுத்துக் கொண்டு படியேறுவதற்கே  சிரமப்பட்டோம். ஆடவர்கள் இரண்டு கைகளிலும் சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு ஏறினார்கள். ஒரு வழியாக இரண்டாம் வகுப்பு  ஏ.சி கோச்சில் ஏறி  இருக்கைகளில் அமர்ந்த பத்து நிமிடத்தில் சரியாக. 1.20 க்கு இந்த ஜெஸித் -சென்னை விரைவு வண்டி  புறப்பட்டு விட்டது.. 11 மணிக்கே […]

காதல் ரேகை கையில் இல்லை!

This entry is part 12 of 17 in the series 12 பெப்ருவரி 2023

குரு அரவிந்தன் (சேராவிடினும் நான் துன்புற மாட்டேன் இந்த அணையை நான் என்று எண்ணிடுவாய்..!) எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா என்று நினைத்துப் பார்த்தேன். திரும்பத் திரும்ப அவளையே பார்க்கத் தூண்டிய மனசு அவளைச் சுற்றிச் சுற்றியே வந்தது. மனசும் ஒரு தேனீ போலத்தான் இருக்குமோ என்ற நினைத்தேன். மொட்டாக இருந்தால் உதாசீனம் செய்வதும், மலரப் போகிறது என்று தெரிந்தல் சுற்றிச் சுற்றி […]

அகழ்நானூறு 14

This entry is part 11 of 17 in the series 12 பெப்ருவரி 2023

சொற்கீரன் ஆறலை கள்வர் கொடுமைக் கொலையின் வீழ்படு பைம்பிணம் குடற் படர்க் கொடுஞ்சுரம் கற்பரல் பதுக்கை கொடிவிடு குருதியின் காட்சிகள் மலியும் கொடும் பாழாறும் இறந்து நீண்டார் நீளிடை நில்லார் நின் முறுவல் ஒன்றே மின்னல் காட்டும். விலங்கிய குன்றின் சிமையமும் தாண்டி பன்மொழி தேஅத்து பகைப்புலம் அறுத்து பொருள் குவை பலவும் கையொடு ஆர்த்து மீள்வரும் ஆற்றின் முள்ளிய முழையில் வரியொடு சினத்த வாலெறி விழியின் பொறிகிளர் வேங்கை பாய்தலும் உவக்க‌ கூர்வேல் கையன் அகலம் […]

தமிழா! தமிழா!!

This entry is part 10 of 17 in the series 12 பெப்ருவரி 2023

சொற்கீரன்  என்ன அழைப்பு இது? யாருடைய குரல் இது? உன் குரல்  உனக்குத் தெரியவில்லை. உன் இனம் உனக்கு உணர்வு இல்லை. அயல் இனத்தானின் வாளும் கத்தியும் உன் இனத்தானின்  நெஞ்சில் செருகுவதற்கும் உன் கைகள் தான் உதவிக்கு வருகின்றன‌ என்னும்  ஓர்மையும் உனக்கு இல்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக‌ நீ இறந்து போன படுக்கையில் தான் இருந்து கொண்டு அட்டைக்கத்தியை சுழற்றிக்கொண்டிருக்கிறாய். உன் முன்னோன் வில் கொடி ஏற்றினான் என்று ஒலி பரப்பிக்கொண்டு இந்த இமயத்தை  […]

நானே நானல்ல

This entry is part 9 of 17 in the series 12 பெப்ருவரி 2023

ஆதியோகி நான் எப்போதும் ஒரேநானல்ல.சில நேரங்களில், நீங்கள்‘யாரைப்போல வாழக் கூடாது’என்று நினைப்பவர்களில்ஒருவன் நான்.சில நேரங்களில் நீங்கள்‘யாரைப்போல வாழ’நினைப்பவர்களில்ஒருவன் நான்.எப்போதும்  அதேநானல்ல நான்.                         –  ஆதியோகி

இருப்பதும் இல்லாதிருப்பதும்

This entry is part 8 of 17 in the series 12 பெப்ருவரி 2023

ராம் ஆனந்த் மக்கள் கூட்டமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் நடத்தல் ஒன்றே யாயினும்  நடத்தலுக்கான காரணங்கள் வேறு வேறு. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு மொழிகளில் பேசிக்கொண்டாலும்  ஒன்றிணைப்பது தேவையின் புள்ளி. கிராமத்தான் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஓடும் நடையோடு  தனக்குத்தானே பேசிக்கொண்டு  குனிந்த தலை நிமிராமல்  முணுமுணுத்தவாறு போய்க் கொண்டிருக்கிறான். யாசிப்பவர்கள் மெய்மறந்து  வழியெங்கும்  தூங்கிக் கொண்டும் விழித்துக் கொண்டும் சூடம் விற்றுக் கொண்டிருக்கும்  கைவிடப்பட்ட பாட்டிகள் தாத்தாக்கள் தொலைத்த வாழ்க்கையை […]