திண்ணையின் இலக்கியத் தடம் -18

This entry is part 25 of 27 in the series 19 ஜனவரி 2014

ஜூலை 7, 2002 இதழ்: சதங்கை ஆசிரியர் வானமாமலை மறைவு: -எம்.வி. குமார்- குமார் தமது அஞ்சலியில் வானமாமலை புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்ததையும், தளராத அவரது இலக்கியப் பணியையும் குறிப்பிடுகிறார்.(என் குறிப்பு: தொண்ணூறுகளில் என் ஆரம்பக் காலத்தில் என் கவிதையை வெளியிட்டு அவர் ஊக்குவித்தார். அது மிகவும் உற்சாகமளித்தது. அவரை நான் என்றும் நினைவு கூறுவேன்). (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20207071&edition_id=20020707&format=html ) (அம்பானி) அரசியல் -ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழாக்கம்- பி.கே.சிவகுமார்- நாம் அரசியல் உத்வேகங்களுக்கும் மத ரீதியான உணர்வுகளுக்கும் அடிமையாகிப் போயிருக்கிறோம். […]

‘ஆத்மாவின் கோலங்கள்’ – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

This entry is part 27 of 27 in the series 19 ஜனவரி 2014

அன்பின் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கங்கள். இது நாள் வரையில் ‘திண்ணை’ எனக்களித்த ஆதரவின் பேரில் வெளிவந்துள்ள எனது சிறுகதைகள் தொகுப்பாக கவிதா பதிப்பகத்தின் மூலம் ‘ஆத்மாவின் கோலங்களாக’ வெளிவந்துள்ளது என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. மேலும் தங்களது நல்லாதரவை நாடும், ஜெயஸ்ரீ ஷங்கர்.

தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

தாயகம் கடந்த தமிழ் என்ற பொருளில், ஓர் அனைத்துலக மாநாடு  ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிகழவிருக்கிறது . கோவையிலுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆதரவில் நிகழவிருக்கும் இந்த மாநாட்டில் 11 நாடுகளிலிருந்து 16 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் வல்லுநர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள் அரசு அல்லது அரசியல் அமைப்புக்களைச் சாராத எழுத்தாளர்களால் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. மாலன் (இந்தியா) ரெ.கார்த்திகேசு (மலேசியா) சேரன்(கனடா) […]

கமலா இந்திரஜித் கதைகள்

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

திரை விலக்கும் முகங்கள்   வெகுஜன இதழ்களின் முக்கிய பரிசுக்கதைகள் மூலம் என் கவனத்திற்கு வந்தவர் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள். இவர்  பரிசு பெற்ற  ஒரு கதை ரூ 50,000 பரிசை பெற்ற போது ஒவ்வொரு வார்த்தையும் நூறு ரூபாய் சன்மாம் பெற்றிருப்பதாய் கணக்கிட்டு எழுத்தாளனுக்கு கிடைத்த  அங்கீகாரத்தை  எண்ணிப் பூரித்துப் போயிருக்கிறேன்.சக எழுத்தாளர்கள் பரிசும் பாராட்டும் பெறுவது மகிழ்ச்சியே தருகிறது. (ஆனால் பரிசுக் கதைகளுக்கான் பார்முலாவில் தொடர்ந்து இயங்குகிற எழுத்தாளர்களின் உலகம் உவப்பானதாக இல்லை […]

நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

  ”ஸ்ரீநிதி.. ஸ்ரீநிதி…  என்ன காரியம் செய்திருக்கிறாய் நீ?  எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புத்தியில் உறைக்கிறதே இல்லை.  நான் பாட்டுக்கு பயித்தியம் மாதிரி கத்திட்டிருக்கேன். நீ கொஞ்சமாவது  சட்டை பண்றயா?  இன்னும் என்ன சொல்லி உன்னை திருத்தறதுன்னு தெரியல.. கடவுளே”   “எதுக்கும்மா இப்படி தேவையில்லாம கூப்பாடு போடற நீ? இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி சீன் போடற. போம்மா, போய் வேற ஏதாவது வேலை இருந்தா போய்ப்பாரு”   “அடிப்பாவி. நான் இவ்ளோ சொல்லியும் […]

முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லை

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

எங்கள் வீடுதான் நடு. இடப்பக்கம் சித்தப்பா வீடு.. வலப்பக்கம் பெரியப்பா வீடு. சித்தப்பா வீட்டில் இரண்டு தம்பிகள் பெரியப்பா வீட்டில் இரண்டு அண்ணன்கள், நான் என் தம்பி ஆக  ஆறு பேரும் ஒரே துவக்கப்பள்ளியில்தான் படிக்கிறோம். காலை 8.30க்கு எங்கள் தெருவில் இருக்கும் மின்கம்பத்தின் கீழ் கூடிவிடுவோம். வேறு இரண்டு பையன்களும் சேர்ந்துகொள்வார்கள். நாங்கள் ஏழெட்டுப்பேர் ஒன்றாக பள்ளிக்குச் செல்வோம். எங்கள் தெரு தாண்டி பட்டுநூல்காரத் தெரு தாண்டி பழைய ஆஸ்பத்திரி தாண்டினால் எங்கள் பள்ளிக்கூடம். கிட்டத்தட்ட […]

மருமகளின் மர்மம் – 12

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

‘டெலிகிராம்’ என்று பொய்க் குரலில் அறிவித்துவிட்டு, தான் கதவைத் திறந்ததும்  நொடிப் பொழுதுக்குள் உள்ளே பாய்ந்து கதவைத் தாளிட்டுவிட்டு அதன் மீது சாய்ந்தவாறு நின்று தன்னைப் பார்த்து வெற்றிப் பெருமிதத்துடனும் நக்கலாகவும் இளித்த அர்ஜுனைப் பார்த்ததும் சகுந்தலா வெலவெலத்துப் போனாள். ஆயினும் மறு கணமே தனது மன நிலை அவனுக்குத் தெரியக் கூடாது என்பதில் கவனமாகி அவனை ஆத்திரத்துடன் பார்த்தாள். ‘சாரி, சக்கு! குரலை மாத்திக்கிட்டு டெலிக்ராம்னு சொன்னதுக்கு!’ ‘இந்தா! சக்குன்னு என்னைக் கூப்பிடாதேன்னு எத்தினி வாட்டி […]

நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

  —————————————————————- 26/01/2014 ஞாயிறு காலை 10 மணி நரசிம்ம நாயுடு உயிர்நிலைப்பள்ளி மரக்கடை, கோவை தலைமை: இளஞ்சேரல் உரைகள்: கோவை ஞானி, நித்திலன், சுப்ரபாரதிமணியன், பொன்.இளவேனில், சி.ஆர் ரவீந்திரன், க.வை.பழனிச்சாமி            ( நவீன அரபு இலக்கியம், ஆர். பீர்முகம்து கட்டுரைகள் தொகுப்பு , வெளியீடு , எதிர் பதிப்பகம், பொள்ளாச்சி )                   செய்தி: இளஞ்சேரல்  (  99427 88486 )    

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

க்ருஷ்ணகுமார்   அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி யென்னும் அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி* வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுது முயக்கொண்ட வீரன் தன்னை* செங்கணெடுங் கருமுகிலை யிராமன் தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் தன்னை என்றுகொலோ! கண்குளிரக் காணும் நாளே           4. க்ரிடிகல் எடிஷன் முயற்சியும் இந்த முயற்சியில் ஈடுபட்ட பதிப்பாசிரியர் குழுவின் பார்வைகளும்.   வால்மீகி ராமாயணத்தின் க்ரிடிகல் எடிஷன் ஓரியண்டல் […]

அண்டார்க்டிகாவின் பூதப்பெரும் பனிமதில் [Glacier] சரிந்து மீளா நிலைக்குத் தேய்கிறது

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=suqptBOs2Yg http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=QQn3kdCHPwM [January 12, 2014] சூட்டு யுகப் பிரளயம் காட்டுத் தீ போல் பரவுது ! வீட்டைப் பாதிக்க வருகுது ! வான்தொடும் பனிச்சுவர்  இடிந்து கூன் விழுந்து குறுகிப் போனது ! யுக யுகமாய் வந்து போகும் பருவ கால நிகழ்ச்சிகள் விதி மாறிச் சுற்றியக்கம் சுதி மாறிப் போயின ! பழைய பனிச்சிகரம் உருகிக் குளிர்  காலத்தில் புதுச் சிகரம் வளர வில்லை ! […]