மூவாமருந்து

This entry is part 26 of 37 in the series 27 நவம்பர் 2011

பொதிப்பொதியாக மேகங்களைக் காற்று சுமந்துகொண்டு போகிறது. கண்ணுக்குத் தெரியாத யாரோ பொத்துவிட மேகம் உடைந்து மழை கொட்டுகிறது. இப்படித்தான் அக்கா சொல்லிக்கொடுத்தாள். இதற்குமேல் சொன்னால் எனக்குப் புரியாது என்று அவள் நினைத்துச் சொன்னதில் நான் அவ்வளவாகத் திருப்திப்படவில்லை. மழையின் வெவ்வேறு தாளகதியில் அமைந்த இசையும், ஜன்னலின்பின் தங்கமாய் நெளிந்து கலைடாஸ்கோப் ஜாலம் காட்டும் மின்னலும் மழை இரவுகளுக்காக மனதை ஏங்கவைக்கும். மழைக்கு அடுத்த நாள் காளான்கள் வாமனரின் குடைகளாக முளைத்து நிற்பதையும், புற்களெல்லாம் பற்றியெரிகிறப் பச்சையைப் பூசிக்கொண்டு […]

பேர்மனம் (Super mind)

This entry is part 25 of 37 in the series 27 நவம்பர் 2011

பரிணாம வளர்ச்சியில் மனிதன் அடைந்த மிகப்பெருமாற்றல் மனமாகும். சில உளவியலாளர்களின் கருத்துப்படி மனமானது நமது மூளையில் உருவாகும் ஒட்டுமொத்த சிந்தனைகளின் மையமாக கருதப்படுகிறது. ஆனால் உடலில் இதன் அமைவிடத்தையோ அதன் உருவத்தையோ இதுவரை எவராலும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. மேலும் சில பெளதீகவியலாளர்களின் கருத்துப்படி மனமானது எம்மைச் சுற்றியுள்ள கோளவடிவான சிந்தனைவெளி என்றும் கொள்ளப்படுகிறது. அந்தவகையில் அவ்வெளியின் கனவளவானது அவரவர்களின் எண்ணங்களின் பரிமாணங்களிற்கேற்ப சுருங்கி விரியும் தன்மையுள்ளதென்றும் அதன் கனவளவு குறுகும்போது மனதின் ஆற்றல் பெருமளவு அதிகரிக்கின்றதென்றும் நம்பப்படுகிறது. […]

மாயை

This entry is part 24 of 37 in the series 27 நவம்பர் 2011

கபிலவஸ்து நாட்டின் அருகாமையில் காட்டிலுள்ள ஒரு குடில் தன் மகன் ராஜ்யத்தின் மீது பற்று இல்லாமல் இருப்பதைக் கண்ட மன்னர் சுத்தோதனர் காட்டிலுள்ள துறவியிடம் சித்தார்த்தனை அனுப்பிவைத்தார். குருவின் முன்பு பத்மாசனத்தில் நன்றாக நிமிர்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தான் சித்தார்த்தன்.எதிரில் தியானத்தில் ஆழ்ந்திருந்த குரு கண்களைத் திறந்து சித்தார்த்தனை கருணையுடன் நோக்கினார்.தியானத்தில் மூழ்கியிருந்த போதே உணர்ந்திருந்தார் சித்தார்த்தனின் எண்ண ஓட்டத்தை .பல பிறவிகாய் உண்மையின் வாசல் வரை வந்த சித்தார்த்தன் இம்முறை மெய்யாகவே உள்ளே நுழைந்து விடுவானா? […]

சென்ரியு கவிதைகள்

This entry is part 23 of 37 in the series 27 நவம்பர் 2011

பரமனுக்குதெரியாதது பாமரனுக்குதெரிந்தது……… பசியின் வலி. ஊர் சுற்றும் பிள்ளையின் வேலைக்காக…….. கோயில் சுற்றும் அம்மா மனிதர்களில் சிலர் நாற்காலிகளாய் ……….. பலர் கருங்காலிகளாய் அடிக்கடி வருவார் அம்மாவின் வார்த்தைகளில்…… இறந்துபோன அப்பா தேவாலயமணியோசை கேட்கும்பொழுதெல்லாம்…. சாத்தானின் ஞாபகம் தேர் வராதசேரிக்குள் தேசமே வரும் தேர்தல் நேரம் நம்பிக்கை விதைகளை எங்கு விதைப்பது……….. வரண்ட பூமியாய் மனசு சலனமில்லாத குளம் தூண்டிலில் மீன்சிக்குமா……. சலனத்துடன் மனம் எப்பொழுதும் அலங்காரத்துடன் வாழ்கிறார்கள் திருநங்கைகள் சாயம்போன வாழ்க்கை கர்த்தர் நம்மைக்காப்பாற்றுவார்… சிலுவையில் […]

வள்ளுவரும் பட்டுக்கோட்டையாரும்

This entry is part 22 of 37 in the series 27 நவம்பர் 2011

E. Mail: Malar.sethu@gmail.com தமிழ்ப் புலவர்களில் காலந்தோறும் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் திருவள்ளுவர் ஆவார். தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது அடுத்தடுத்து வரும் காலங்களிலும் திருவள்ளுவரின் கருத்துக்கள் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வது நோக்கத்தக்கது. காப்பியங்களிலிருந்து தற்காலம் வரை தோன்றியுள்ள இலக்கியங்கள் அனைத்திலும் திருக்குறட் கருத்துக்கள் விரவிக் காணப்படுவது கண்கூடாகும். ஒவ்வொரு புலவரும் திருவள்ளுவர்மேல் தணியாத பற்றுக் கொண்டிருந்தனர் என்பதற்கு திருக்குறளையும் அதன் கருத்துக்களையும் உள்ளடக்கி அவர்கள் படைத்த இலக்கியங்களே சான்றுகளாக அமைந்திலங்குகின்றன. காலந்தோறும் திருக்குறள் தாக்கத்தை ஏற்படுத்தி […]

பிறைகாணல்

This entry is part 21 of 37 in the series 27 நவம்பர் 2011

பிறையின் முகங் காண தினந்தோறும் ஆசை அது தேயும்போதும் வளரும் போதும் இரவின் தனிமையில் மேகங்கள் விலகியும் விலகாமலும் அதன் மெளனப்பார்வை என்னில் பதிவதாய் உணர்வேன். மழைநேரம் தூறலின் அசட்டுத்தனம் துயர்ப் படுத்தும்போது பார்க்கமுடிவதில்லை. மீறி மழையில் நனைந்து பார்த்தாலும் வானில் நெளியும் மின்னலைமட்டும் காணமுடிகிறது. இருள் சூழ்ந்து மழையைத்தவிர எதுவுமற்றிருக்கும் வானம்.

வா

This entry is part 20 of 37 in the series 27 நவம்பர் 2011

உலக மக்கள் தொகை அனைவருக்கும் செல்போன் கையில் இருந்தாலும் மன இணைப்பில்லாமல் தன்னுள் சுழல்கிறது தனி உலகம் “தான்” எனும் செருக்குடன் சதா செருமிக் கனைக்கும் உலகம் பக்கத்து மனிதரை அக்கறையின்றிப் பார்க்கிறது அடுத்தவர் வலியை அறிய மறுக்கிறது நிலாவைப் பற்றி அரசியல் பற்றி முல்லையாறு பங்கீடு பற்றி இன்னும்பலப்பல கோடி வெளிஉலகச்சங்கதிகள் பேசி தன் உள்சத்தம் மறைக்க வெளிச்சத்தம் போட்டு அலைகிறது! –

வாழவைக்கும்[ஆ!]ஓவியக்கலை! (ஓவியர் தர்மேஷ் குறித்த ஒரு சிறு அறிமுகம்)

This entry is part 19 of 37 in the series 27 நவம்பர் 2011

பசும்புல்வெளியும் மலையும் ஓடையுமாய் பார்க்க அத்தனை இதமாக இருந்தது சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்த இயற்கைக்காட்சி! அடர் தேன்நிறத்தில் சட்டமிடப்பட்டிருந்த அந்த ஓவியத்தில் காணப்பட்ட பொன்னிறச் சூரியவொளியின் இளஞ்சூட்டை உணரமுடிந்தது என்றுகூடச் சொல்லலாம். Seeing is Believing! அதை வரைந்தவர் ஓவியர் தர்மேஷ். கெல்சன் என்கிற பெயரில் கடந்த பதினைந்தாண்டுகளாக நிலக்காட்சிகளை மட்டுமே ஓவியங்களாகத் தீட்டிவருகிறார். ஏன் இயற்கைக்காட்சிகளை மட்டுமே ஓவியமாகத் தீட்டுகிறீர்கள்? ”ஒன்று, இயற்கைக்காட்சிகள் மனதை அமைதிப்படுத்தும். இரண்டாவது, எனக்கு அதுதான் வரையத்தெரியும்” _வெகு இயல்பாக உண்மைபேசுகிறார் […]

யாருக்கும் பணியாத சிறுவன்

This entry is part 18 of 37 in the series 27 நவம்பர் 2011

சித்ரா சிவகுமார், ஹாங்காங் தென் அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் சமூகத்தினர், மழைக்கடவுளாக சேக்கை நம்பினார்கள். அவர் மேகங்களுக்கு அப்பால், வானத்தின் மத்தியில், மிகவும் உயர்ந்த இடத்தில் அழகான தோட்டத்தின் நடுவே அமைந்த வீட்டில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டில் அதிகம் தங்க மாட்டார். சூரியன் எங்கெல்லாம் தன் முழுச்சக்தியைக் காட்டி வரண்டு போகச் செய்கிறாரோ, அங்கெல்லாம் சென்று, தன் மழைக்குடுவையைத் திறந்து, மழை பெய்யச் செய்து, செடி கொடி, விலங்குகள் மனிதர்களுக்கு இதம் அளிப்பார். அதனால் இரக்கம் […]

இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? கட்டுரை : 2

This entry is part 17 of 37 in the series 27 நவம்பர் 2011

கட்டுரை -2 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலிகளைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது. டாக்டர் ஹோமி பாபா (1944) சுருங்கித் தேயும் நிலக்கரிச் சுரங்கங்கள், குன்றிடும் ¨ஹைடிரோ-கார்பன் எரிசக்தி சேமிப்புகளைக் கொண்டு, விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவளத்தை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய […]