வால்ட் விட்மன் வசனக் கவிதை -14 என்னைப் பற்றிய பாடல் – 7 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++ மனிதன் என்பவன் யார் ? நான் யார் ? நீ யார் ? என்னைப் பற்றிக் குறிப்பாய்ச் சொல்வேன் தனித்து நீ உன்னைப் பற்றி உரைத்திடு ! இன்றேல் வீணாய்ப் போகும் நேரம் என்னை மட்டும் அறிந்து ! எதற்கு நான் வழிபட வேண்டும் ? எதற்கு மதிப்பளித்து நான் மதச் சடங்கைப் […]
தாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனது மனதில் இருப்ப தென்ன உனக்குத் தெரிந்தி ருக்கு மென்று எனக்குத் தெரியும் ! உன்னிட மிருந்து அதை ஒளித்து வைக்க விழைகிறேன் ! அதைக் கவர்ந்து கொண்டன அந்தக் கண்கள் ! அப்படி இல்லை யெனின் நான் செப்புவ தொன்றும் […]
உதயசூரியன் கண்ணீரும் , துக்கமும் இருளை நோக்கி ஓடுகின்றன அவளுக்கு பெற்றோர் இருந்தனர் அண்ணன் இருந்தான் அன்று என் செல்பேசியில் மட்டும் அவளின் அழுகை கேட்டது சில நிமிட மௌனங்கள் சில சமயங்களில் விளங்குவதில்லை நான் இருளை நோக்கி ஓடினேன் இன்று அவளின் இருப்பிடம் தெரியவில்லை என் செல்பேசியில் அவளின் அழுகை கேட்டுக்கொண்டே இருக்கிறது ——————————————— எனக்கு தெரியும் விளக்குக்கும் தெரியும் பூதம் வரப்போவதில்லை என்று நப்பாசைதான் தேய்த்துக் கொண்டிருக்கிறேன் என் பக்கத்தில் கால் மேல் […]
வால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++ இவை யாவும் மெய்யாய் எல்லா மனிதரின் சிந்தனைதான் ! எல்லா காலங் களிலும், எல்லா நாடுகளிலும் உதித்தவை தான் ! எனது மூலப் படைப்புகள் அல்ல உன்னைச் சேரா தாயினும் அவை என்னைச் சேரா தாயினும் ஒன்றும் பயனில்லை ! புதிரில்லை யாயினும், அவை புதிரை விடுவிக்கா திருப்பினும் மதிப்புறுவ தில்லை ! […]
எஸ்.எம்.ஏ.ராம் 1. என் நிழலில் என் சாயல் இல்லை, யாருடைய நிழலிலும் அவர்களின் சாயல் இல்லை. என் நிழலில் என் நிறம் இல்லை, யாருடைய நிழலிலும் அவர்களின் நிறம் இல்லை. எல்லாம் சாயல் அற்று, அல்லது ஒரே சாயலாய்- எல்லாம் நிறம் அற்று, அல்லது ஒரே நிறமாய்- எதையோ உணர்த்தும் நிழல்… 2. நானும் அவளும் விலகி நிற்கிற நிலையிலும் எங்கள் நிழல்கள் கூடிச் சல்லாபிக்கின்றன. நிழல்களுக்குக் கற்பில்லை. […]
வே.ம.அருச்சுணன் – மலேசியா மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘சிவாஜி போஸ்’ இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்…..! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல்,வீரவேல் என்றே கொடிபிடித்து […]
இரகசியங்கள் பொதிந்துள்ள மனத்தோர் மட்டுமே பொத்தி வைத்த நம் இரசியங்களையும் புனிதமாக்க இயலும். எவரொருவர் உமது துக்கங்களையன்றி, சுகங்களை மட்டுமே பகிருகிறாரோ அவர் சுவர்கத்தின் ஏழு வாயில்களின் ஒன்றின் திறவுகோலை இழந்தவராகிறார்.. ஆமாம் நிர்வாணம் என்ற ஒன்றுள்ளது.; உமது ஆடுகளை பசிய மேய்ச்சலில் ஓட்டிச்செல்லும் போதிலும், உம் குழந்தைகளை உறங்கச் செய்யும் தாலாட்டிலும், மற்றும் உமது கவிதையின் இறுதி வரிகளை அலங்கரிப்பதிலுமே இருக்கிறதந்த நிர்வாணம்.. நாம் அதை அனுபவிக்கும் வெகு […]
*********** முகத்தை வருடிய தென்றல் வண்ண வண்ண இளநிறங்கள் ஏற்று சின்னஞ்சிறு இருதய வடிவங்களில் அமர்ந்தது மேசையில் கிடந்த குறிப்பேட்டின் அட்டையில் .. கைபேசி,கணினி,மடிகணினியின் மின்னூட்ட கயிறுகள் நெரிக்கும் மேசைக்கு – உயிர் தெளித்து மார்கழி கோலம் … – சித்ரா (k_chithra@yahoo.com)
காலத்தின் கண்ணியில் இன்னொரு இரவு கூடியிருக்கும். மழையின் இடைவிடா மோகத்தில் மையிருள் இன்னும் குழைந்திருக்கும். மின்னல் வெட்டி மழை கொளுவி நிலம் எரிவதாய்த் தோன்றும். சரமென இடி இடித்து கடித்துக் குதறும் குகையை யார் புரட்டிப் போடுவது? வெளவால்கள் கதறும். தெரிந்த முடிவிலிருந்து தெரியாத கேள்விக்கு தயாராகாது பழகிய இருளில் பரபரக்கும். இருள் கூடி இனி இடி மின்னல் கேள்வி இல்லையென்று தளர்த்திக் கொண்டு தளர் மேனி […]
கோசின்ரா பார்வையாளர்களே கண்களை மூடாதீர்கள் அவைகள் திறந்தே இருக்கட்டும் பதற்றமான மனம் ஆறுதல் கொள்ளட்டும் மன்னிப்புகளை வீட்டில் விட்டு வந்திருப்பீர்கள் என நம்புகிறோம் யாரவது தவறுதலாக கொண்டு வந்திருந்தால் இலவசமாக மன்னிப்புகள் வைக்குமிடம் வெளியே இருக்கிறது அங்கே வைத்துவிட்டு டோக்கன் பெற்றுக்கொள்ளுங்கள் போகும் போது ஞாபகமாக எடுத்துச் செல்லுங்கள் ஏனெனில் உங்கள் மன்னிப்புகள் நீங்கள் யாரென்பதை காட்டிக்கொடுத்து விடும் அப்புறம் இதே இடத்தில் நீங்களும் இருக்க நேரலாம் மேலும் யாரிடமாவது இரக்கம் கருணை அன்பு […]