இரா முருகன் பயணத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து முடிப்பது ஒரு சுறுசுறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்ததாக குயிலிக்கும் வானம்பாடிக்கும் மனதில் பட்டது. ஆரம்ப வேகம் அப்புறம் இல்லை. ஏழு மணி காலை நேரத்தில் வந்தவர்கள் பத்தரை மணி ஆகியும் புறப்படவில்லை. பயண அலுவலகத்தின் புறப்பாடு பகுதியில் ஆரஞ்சு நிற விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்குப் பயணம் இருக்கிறது என்று மட்டும் சொல்கிறவை இந்த விளக்குகள். குயிலியின் உள்ளங்கையில் டிஜிட்டல் திரை ஒளிர்ந்தது. பொருள் வயின் பயணம் என்று எழுதிய […]
பூமியில் உயிரின மூலவிகள் தோற்றம்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html ******************************* சட்டியில் ஆப்பம் ஒன்றைச்சுட்டுத் தின்னஅண்டக்கோள் ஒன்றை முதலில்உண்டாக்க வேண்டும் !அண்டக்கோள் தோன்றப்பிரபஞ்சத்தில் ஒருபெருவெடிப்பு நேர வேண்டும் !உயிரினம் உருவாகசக்தி விசையூட்ட வேண்டும் !கோடான கோடி யுகங்களில்உருவான இப்பூமி ஓர்நுணுக்க அமைப்பு !தனித்துவப் படைப்பு !அகிலாண் டத்தில்நிகரில்லை அதன் படைப்பிற்கு !நாமறிந்த பிரபஞ்சத்தில்பூமியைப் போல் கடல்சூழ்ந்தபாறைக் கோள் ஒன்றைவேறெங்கும் கண்டிலோம் இதுவரை !நீர் ஆவியாய் நீங்காமல்வைத்திருப்பதுவாயுக் குடை ! அஃதில்லையேல்மாயும் உயிரினங்கள் !அகிலப் பிரமாண்டத்தைநுணுகி நோக்கமனிதரினம் தோன்றியபுனித […]
புதிய குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு
ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 26/03/2023 மாலை 6.30 மணிஅளவளாவல் தொடர்ந்து புதிய குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு நிகழ்வில் இணையZoom Meeting ID: 6191579931 – passcode kuvikam123 அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38
நாவல் தினை – அத்தியாயம் ஆறு- CE பொ.யு 5000
இரா முருகன் பொது யுகம் 5000 புறப்படுங்கள். மூன்றாம் நூற்றாண்டு சென்றடைவீர் இருவரும். நீலன் மருத்துவரை நம் காலத்துக்கு அழைத்து வருக. அன்பால் அழைத்து வருக. வருவார். சென்று வருக. பெருந்தேளர் குயிலியையும் வானம்பாடியையும் அனுப்பி வைத்தார். நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் பின்னே போகும் காலப் பயணம். ஒரு வினாடி நேரத்தில் ஒரு வருடம் பின்னால் போகத் தொழில்நுட்ப வசதி இருந்தாலும் அதை முழுக்கச் சார்ந்து பயணப்படாமல் மெல்ல மெல்லப் பயணப்படுவதை இந்தப் பெண்கள் தேர்ந்தெடுத்தார்கள். […]
புதிய குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு
ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 12/03/2023 மாலை 6.30 மணிஅளவளாவல்நிகழ்வில் குவிகம் குறும்புதினம் 2023-24 போட்டியில் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மற்றும் முதல் மூன்று பரிசுகள் பெறும் குறும்புதினங்கள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் தொடர்ந்து புதிய குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு நிகழ்வில் இணையZoom Meeting ID: 6191579931 – passcode kuvikam123 அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 9
இடம் : அரசவை மன்றம் நேரம் : இரவு வேளை பங்கு கொள்வோர் : வெனிஸ் நகர டியூக், செனட்டர்கள், விளக்கேற்றிய மாளிகை. [முன் பக்கத் தொடர்ச்சி] மோனிகா: கருமூர் இனத்தவ ஜெனரலை நான் நேசித்து திருமணம் செய்து கொண்டது, அவருடன் இல்வாழ்வு நடத்தப் போவதைை வெனிஸ் நகர மக்களுக்கு அறிவிக்கத்தான். என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது, அவரது கண்ணியப் பண்பாடும் உன்னத தோற்றமும் தான். ஒத்தல்லோவின் மெய்யான தோற்றத்தை நான் அவரது உள்ளத்தில் கண்டேன். அதற்காக என் ஆத்மா, என் […]
நாவல் தினை – அத்தியாயம் மூன்று
இரா முருகன் CE 300, CE 5000 கூத்து ஆடி முடித்துப் போகிற பெண்கள் இலைக் கிண்ணங்களில் உதிர்த்த புட்டும், தேன் பொழிந்து பிசைந்த தினையும் எடுத்துக்கொண்டு அரமர என்று சிரிப்பும் பேச்சுமாகப் போனார்கள். ஆடிய தரையில் தேனும் பழமும் புரட்டிய மாவுத் துகள்களைத் தேடிக் கருநீல எறும்புகள் மொய்க்கத் தொடங்கின. சீனர், ஆட்டத்தையும் பாட்டையும் அணுவணுவாக ரசித்துப் பார்த்து அந்த அனுபவத்திலேயே மனம் தொடர்ந்து சஞ்சரிக்கக் கொஞ்சம் கண்மூடி மரத் துண்டில் அமர்ந்திருந்தார். அவர் முன்னும் […]
நாவல் தினை அத்தியாயம் இரண்டு CE 300
இரா முருகன் அந்தியோடு மிழவும் உயிர்த்தது மலையில். கடல்கோள் துயரம் பாடிக் கேட்க கணியனைச் சுற்றி பத்து பேர் அமர்ந்திருந்தார்கள். நாகன் கணியன் கடல்கோளின் பதினெட்டாம் ஆண்டு நிறைவாகி, சூரிய மண்டல கிரகங்கள் திரும்ப நிலைக்கும் தினம் இன்று எனக் கணித்திருந்தான். கடல்கோள் தினத்தன்று சமவெளியில் கடல் பொங்கி உயர்ந்து உள்ளே புகுந்து எல்லாவற்றையும் எல்லாரையும் அலைகளில் பொதிந்து அடித்துப்போய் கடலில் உயிர் நீக்கச் செய்தது. மலைப் பிரதேச மக்கள் எந்த உதவியும் செய்ய இயலாமல் மலை […]
நெய்வேலி பாரதிக்குமாரின் மனித வலியுணர்த்தும் எழுத்துகள்
எஸ்ஸார்சி ’நட்சத்திரங்களைத்துணைக்கு அழைப்பவள்’ என்னும் சிறுகதை நூல் நெய்வேலி பாரதிக்குமார் ஆக்கத்தில் வெளிவந்துள்ளது. கதை சொல்லும் நேர்த்தியில் பாரதிக்குமாரின் சிறுகதைகள் வாசகனை நெகிழ்ச்சியுற வைக்கின்றன. பாரதிக்குமார் தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அரங்குகளில் தனது இலக்கியப்பங்களிப்புக்காகப் பாராட்டப் பட்டுள்ளார். அவர் தொடர்ந்து எழுத்துலகில் சாதித்துக்கொண்டிருப்பவர். வெற்றியாளர். பாரதிக்குமாரின் ‘நடசத்திரங்களைத்துணைக்கழைப்பவள்’ 23 சிறுகதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பு. இதனை இருவாட்சி( இலக்கியத்துறைமுகம்) பெரம்பூர் சென்னை11 வெளியிட்டுள்ளது. இந்நூலை தனது சகோதரர் குறியாமங்கலம் செல்வத்திற்கும் திருமதி மீனாட்சி செல்வத்திற்கும் பாரதிக்குமார் சமர்ப்பித்துள்ளார். தனது வாழ்வில் அரிய மகிழ்வான நெகிழ்வான தருணங்களை உருவாக்கித்தந்தவர்கள் அவர்களே என்று எழுத்தாளர், வாசகர்க்கு அறிவிக்கிறார். பின்புலமாகி […]
படித்தோம் சொல்கின்றோம்: மதுரையின் முழுமையான வரலாற்றை பேசும் அ. முத்துக்கிருஷ்ணனின் தூங்கா நகர் நினைவுகள்
முருகபூபதி தனது வாழ்நாட்களில் பெரும்பாலான பொழுதுகளை பயணித்துக்கொண்டே கடந்து செல்லும் எழுத்தாளர், களப்பணியாளர், மனித உரிமை ஆர்வலர், மொழி பெயர்ப்பாளர், தேர்ந்த வாசகர், தானும் இயங்கி, மற்றவர்களையும் இயங்கவைக்கும் ரஸவாதம் கற்றவர், அ. முத்துக்கிருஷ்ணன். எங்கள் அவுஸ்திரேலியாவின் நிரந்தர இலக்கிய விருந்தினர். மெல்பனில் வாசகர் வட்டம் அமைப்பதற்கு தூண்டுகோளாகவிருந்தவர். இன்றளவும் அதன் பணிகளில் இணைந்திருப்பவர். உறவாடுவதற்கு எளிமையானவர். இத்தனை சிறப்பியல்புகளை கொண்டிருப்பவரின் மற்றும் ஒரு வரவு, தூங்கா நகர் நினைவுகள். மதுரையின் முழுமையான வரலாற்றையே இதனைப் படித்து […]